Tuesday, June 30, 2009

பிரபாகரனை சாகடிக்க முயலும் பச்சோந்திகள்.

PIRABAKARAN_Page1
பிரபாகரன் இறந்ததை ஏற்றுக்கொண்டால் மட்டுமே, 3ஆம் கட்ட ஈழப் போராட்டத்தில் நாம் இணைந்து கொள்வோமென அடம் பிடிப்பவர்கள், அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்.
மிகத் தெளிவாக, பல விடயங்கள் எமது அறிவுக்குத் தெரிகிறது. தேசியத் தலைவர் கொல்லப்பட்டார் என்கிற விடயத்தை நிரூபிப்பதற்கு, சிங்களம் பல முயற்சிகளை மேற்கொண்டது.
சூரன் போரில், தலையைத் திருப்புவது போன்று, முதலில் ஒரு நாடகத்தை பேரினவாதம் அரங்கேற்றியது.
சிங்களவர்களே அதை நம்பமறுத்தார்கள். பின்னர் நந்திக் கடலோரத்தில், பிரபாகரன் அவர்களின் உடலைக் கண்டு எடுத்தோமெனக் கூறும்போது, அதனையும் நம்பமறுப்பார்கள் என்பதற்காக, கருணாவையும் தயா மாஸ்டரையும் சாட்சிக்கு அழைத்தது சிங்களம்.
சாட்சிக்கு அழைத்துவரப்பட்ட ஓணான்கள், வேலிக்கு சாட்சியாக இருப்பார்கள் என்பது எமது சிற்றறிவிற்கு தெளிவாகத் தெரியும்.
காலநேரம் கரைந்துசெல்ல, திறந்திருந்த விழிகள், பாதியாக மூடத்தொடங்கியது. சவரம் செய்யப்பட்ட முகத்தில் வெண்ணிற மயிர்கள் முளைக்கத் தொடங்கின.
10 நாள் மரபணுப்பரிசோதனை ஒரே நாளில் முடிக்கப்பட்டு, எரிக்கப்பட்ட உடலத்தின் சாம்பல், கடலிலும் கரைக்கப்பட்டது.
உடலம் புதைக்கப்படவில்லை, எரிக்கப்பட்டது என்கிற விவகாரம், மீண்டும் தோண்டி எடுத்து பிண அரசியலை முன்னெடுத்து விடுவார்களோ என்கிற அச்சத்தால், அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டது போல் தெரிகிறது.
தமது இன அழிப்புப் போரின் முழுமையான வெற்றியைப் பிரகடனம் செய்யவேண்டுமாயின், பிரபாகரன் அவர்கள் உயிருடன் இல்லையயன்பதை தெளிவு படுத்து வேண்டிய தேவை சிங்களத்திற்கு உண்டு.
தேசியத் தலைவர் இறந்த செய்தியை 53வது படையணித் தளபதி, சரத் பொன் சேக்காவிடம் தெரிவித்தபோது, அதனை உறுதி செய்யுமாறு கூறியதாக கொழும்புச் செய்திகள் வெளிப்படுத்தின.
ஆனாலும் இராணுவத் தளபதியோ அல்லது கோத்தபாய இராஜபக்சவோ அந்த உடலத்தைச் சென்று பார்க்க அக்கறை கொள்ளவில்லை.
19ஆம் திகதி பேசிய மனிதர், 17 ஆம் திகதி இறந்ததாக புதியகதையயான்றும் உலா வந்தது. அவர் இறந்துவிட்டாரென்று, வன்னியிலிருந்து யார் தகவல் கூறியது என்கிற விடயம் இன்னமும் எமது அறிவுக்குத் தெளிவாகவில்லை.
சற்றலைட் தொலைபேசியில் உரையாடியவர், தனது தொடர்பினை துண்டித்துக்கொண்டால், அவர் இறந்துவிட்டதாக ஏற்றுக்கொள்ளும் யதார்த்தத் தெளிவு, சிலருக்கு ஏற்படுகிறது.
இறுதியாக நடைபெற்ற ஆனந்தபுர பெரும் சமரில், வெடிகுண்டுகளை நெஞ்சில் கட்டி களமாடிய தேசியத் தலைவர், முற்றுகையை உடைத்துக்கொண்டு வெளியேறுகையில், எதிரிகளிடம் அகப்படக்கூடிய வாய்ப்புக்களையும் அனுமானித்திருப்பார்.
பக்கத்திலிருந்து பார்த்தவர் போன்று, கட்டிய வெடி குண்டுகளை, பொட்டம்மான் அகற்றிவிட்டாரென புதிய விளக்கங்களும் தெரிவிக்கப்படுகின்றன.
சமரின் இறுதி நாட்களில், களத்தில் நின்ற பலர், முகாம்களுக்குள்ளும், சிலர் வெளியிலும் இருக்கின்றார்கள்.
அவர்கள் தெரிவிக்கும் தகவல்களின் அடிப்படையில், மே 13 ஆம் திகதிக்கு முன்பாகவே தேசியத் தலைவர் முற்றுகைக்குள் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டாரெனத் தெரிகிறது.
அவர் அங்கிருந்தும் பேசலாம். பொதுவாகவே, அவர் சற்றலைட் தொலைபேசி ஊடாக பேசுவதில்லையயன்று உடனிருந்த பலர் உறுதிபடத் தெரிவிக்கின்றனர்.
முகாமில் இருக்கும் மக்களுடன் வெளியுலகத் தொடர்பு ஏற்பட அனுமதித்தால், பல திடுக்கிடும் உண்மைகள் கசியலாமென்பதால், எவரையும் உள்நுழைய விடாமல் தடுக்க முனைகிறது சிங்களம்.
ஆனாலும் அதனையும் மீறி, இறுதி நாட்களில், பேரினவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு கோரத்தாண்டவம் குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன.
வீழ்ந்து கிடந்த உடலங்களை ஏறி மிதித்து, வெளியே தப்பி ஓடி வந்த கொடூரச் சம்பவங்களை, 18ஆம் திகதியன்று முற்றுகைக்குள் இருந்து வந்த மக்கள் தெரிவித்தார்கள்.
சிங்களப்படைகள் மீது ஏராளமான கரும்புலித்தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு, குறுகிய நிலப்பரப்பெங்கும் புகை மண்டலங்களால் நிரம்பி வழிந்தது.
இதேபோன்று நந்திக் கடல் ஊடறுப்புச் சமரில், மேற்குக்கரையோரம் கடற்கரும்புலிகளால் கைப்பற்றப்பட்டதோடு, முற்றுகையை உடைத்து வெளியேறிய முதல் அணியினர் ஒட்டிசுட்டான் காட்டுப் பிரதேசத்தை நோக்கித் தப்பிச் சென்றதாக, கொழும்பிலிருந்து வெளிவரும் சண்டே ரைம்சின் இராணுவ ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.
இந்த முற்றுகையிலிருந்து வெளியேறிச் சென்றவர்கள் யார் என்பது குறித்த தகவல்கள், இன்னமும் மர்மமாகவே இருக்கிறது.
33 வருடகால தேசிய விடுதலைக்கான ஆயுதப் போராட்டமானது, மூன்று நாட்களில் முடிந்து விட்டதென சிங்களமும், இந்திய புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து மேற்கொள்ளும் பரப்புரைகளில், பல அரசியல் சூத்திரங்கள் ஒளிந்திருக்கின்றன.
தேசியத் தலைவருக்கு அஞ்சலி செலுத்தாதோர் வரலாற்றுத் துரோகிகள் என்று நம்மில் சிலர் அவசர அறிக்கைகளை வெளியிடுகின்றனர்.
வருடந்தோறும், விதைக்கப்பட்ட மாவீரர்களுக்கு, அஞ்சலி செலுத்தும் வரலாற்றுப் பாரம்பரியம் மிக்கவர்கள் தமிழ் மக்கள்.
பிரிகேடியர் தமிழ் செல்வனும், தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களும், பல அரசியல் வரலாற்றுத் தவறுகளைப் புரிந்ததாகவும் இவர்கள் நிறுவ முற்படுகிறார்கள்.
பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டு, தாயகம் திரும்பிய தமிழ்ச்செல்வன், உலகநாடுகளின் உண்மையான நிலைப்பாட்டினை, தலைவருக்குத் தெளிவுபடுத்தாமல் தவிர்த்து விட்டாரென்னும், புதியதொரு குற்றச்சாட்டினை முன்வைக்கிறார்கள்.
பேச்சுவார்த்தை மூலம், ஒரு மண்ணும் நடைபெறாதென, தலைவருக்கு மட்டுமல்ல முழுத் தமிழினத்திற்கே தெரியும்.
சர்வதேச அளவில், எமது போராட்ட நியாயப்பாட்டினைக் கொண்டு செல்லும் தளமாகவே, இப்பேச்சுவார்த்தை மேடை பயன்படுத்தப்பட்டது.
திம்புவில் முன்வைக்கப்பட்ட நான்கு அம்சக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாத சிங்களம், ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் அன்ரன் பாலசிங்கம் அவர்களால் பரிசீலனைக்காக மேசையில் போடப்பட்ட, உள்ளக சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டையும் ஏற்றுக்கொள்ளாதென்பதை தேசியத் தலைவர் புரிந்துகொள்வார்.
ஏதோ, இப்பூவுலகின் புதிய ஒழுங்கினைப் புரியாமல், பிரபாகரன் போராட்டம் நடாத்தினார் என்பது போன்று சித்தரிக்க முனைபவர்கள், இனி என்னசெய்யலாம் என்பதைக் கூறவேண்டும்.
பூகோள அரசியலானது, உலகப் பொருளாதாரச் சீரழிவோடு புதியதொரு ஒழுங்கினை நோக்கிக் காலடி வைக்கிறது. அதில் சீனாவின் வகிபாகம் முன்னிலைப்படுத்தப்படுகிறது.
ஆயுதப் போராட்ட, இன அழிப்புச் சூத்திரதாரிகளின் பங்கு, தென்னாசியாவில் எவ்வகையில் பிரயோகிக்கப் படுகிறதென்பதை, விடுதலைப்புலிகள் புரிந்து கொள்ளவில்லையயன்று எண்ணுவதும் தவறான பார்வையாகும்.
ஆனாலும் இவர்கள் நிறுவ முற்படும் 3ஆம் கட்ட ஈழப்போராட்டத்தில், இந்திய வகிபாகம் தவிர்க்கப்படமுடியாத சக்தியாக இருக்கப் போகிறதென்று இனி இவர்கள் கூறப் போகிறார்கள்.
கொழும்பு, தமிழ்நாடு, புதுடெல்லி என்கிற அச்சினுள், மறுபடியும் எமது ஈழப்போராட்டத்தை இழுத்துச் செல்லும் காய்நகர்த்தல்களின், பங்குதாரர்களாக இவர்கள் மாறுவார்கள்.
தலைவர் இல்லையயன்பதை அழுத்திக் கூறுவதன் ஊடாகவே, இத்தகைய இந்திய உள்நுழைவு சாத்தியமாகுமென்பது இந்த அறிவியலாளர்களின் கணிப்பு.
மகிந்த இராஜபக்ச, என்ன முடிவெடுத்தாலும், அதனை இந்தியா உறுதியாக ஆதரிக்குமென்று சிவசங்கர் மேனன் தெரிவிக்கும் கருத்தினை உன்னிப்பாக அவதானித்தால், இந்தியா இல்லாமல் ஈழப் பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியாதென அடம்பிடிக்கும் புலம்பெயர்ந்த தமிழ் அறிஞர்களின் உள்நோக்க நிகழ்ச்சி நிரலைப் புரிந்துகொள்ளலாம்.
இனப்படுகொலை, யுத்தக்குற்றம் போன்றவற்றிலிருந்து தப்பிச் செல்லும்வரைதான், இந்தியாவின் உதவி மகிந்தருக்குத் தேவை.
அதற்கு முன்பாக, சிறீலங்காவைத் தனது கட்டுப்பாட்டினுள் கொண்டுவரும் வகையில், இந்திய - சிறீலங்கா பாதுகாப்பு ஒப்பந்தமொன்றினை உரு
வாக்க, மேனன் முயற்சிகளை மேற்கொள்கிறார்.
ஆகவே தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க, இந்தியா உறுதுணையாக நிற்கும் என்கிற கற்பனை அரசியலில் காலத்தை கடத்தாமல், சிங்களத்தின் இன அழிப்பு நடவடிக்கைகளை அம்பலமாக்கும் செயற்பாடுகளில், புலம்பெயர்ந்த ஈழத் தமிழினம் முழு மூச்சாக ஈடுபடவேண்டும்.
- இருக்கிறாரா? இல்லையா?- என்கிற உளவியல் அறிக்கைப் போர்களில் காலத்தைச் செலவிட்டால், சிங்களம் செய்த இனப்படுகொலைகளும், செய்து கொண்டிருக்கும் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளும் மூடி மறைக்கப்படும். இரத்தக்கறை படிந்த கைகளோடு, புதிய புத்தர்களும் உருவாகிவிடுவார்கள்.
பிரபாகரன் இறந்ததை ஏற்றுக்கொண்டால் மட்டுமே, 3ஆம் கட்ட ஈழப் போராட்டத்தில் நாம் இணைந்து கொள்வோமென அடம் பிடிப்பவர்கள், அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்.
மக்களைத் துரோகிகளாகச் சித்தரிப்பவர்கள், மக்களிடமிருந்து அந்நியமாகிச் சென்ற வரலாறுகளை, முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.
மக்களால் உருவாக்கப்படும் தலைவர்கள் அழிவதில்லை, சராசரி மானிட வயதெல்லை, 100 ஐயும் தாண்டி, அவர்கள் மக்கள் மனங்களில் நீடித்து நிலைப்பார்கள்.ஆகவே, புதிய தலைமுறை மாணவ, இளைஞர்கள், இதுவரை முன்னெடுத்த போராட்டங்களைத் தொடர்ந்து நடாத்தவேண்டும். 2008ஆம் ஆண்டு மாவீரர்தினச் செய்தியும் அதுதான்.
-இதயச்சந்திரன்
நன்றி:ஈழமுரசு


இனம் தின்னும் ராஜபக்சே: கவிஞர் வைரமுத்து.

இனம் தின்னும் ராஜபக்சே: கவிஞர் வைரமுத்து
சொந்த நாய்களுக்குச்
சொத்தெழுதி வைக்கும் தேசங்களே!
ஓர் இனமே
நிலமிழந்து நிற்கிறதே
நிலம் மீட்டுத் தாருங்கள்
பூனையொன்று காய்ச்சல் கண்டால்
மெர்சிடீஸ் கார் ஏற்றி
மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே!
ஈழத்து உப்பங்கழியில்
மரணத்தை தொட்டு
மனித குலம் நிற்கிறதே!
மனம் இரங்கி வாருங்கள்!
வற்றிய குளத்தில் செத்துக் கிடக்கும்
வாளை மீனைப்போல்
உமிழ்நீர் வற்றிய வாயில்
ஒட்டிக்கிடக்கும் உள்நோக்கோடு
ரொட்டி ரொட்டியென்று
கைநீட்டிடும் சிறுவர்க்குக்
கைகொடுக்க வாருங்கள்!
தமிழச்சிகளின் மானக்குழிகளில்
துப்பாக்கி ஊன்றித் துளைக்கும்
சிங்கள வெறிக் கூத்துக்களை
நிரந்தரமாய் நிறுத்துங்கள்!
வாய்வழி புகட்டிய தாய்ப்பால்
காதுவழி ரத்தமாய் வடிவது கண்டு
கண்வழி உகுக்கக் கண்ணீரின்றிக்
கண்ணீரை மாற்றுங்கள்!
அடுக்கி வைத்த உடல்களில்
எந்த உடல் தகப்பன் உடல் என்று தேடி
அடையாளம் தெரியாத ஒரு பிணத்துக்கு
அழுது தொலைக்கும் பிள்ளைகளின்
அவலக்குரல் போக்குங்கள்!
எனக்குள்ள கவலையெல்லாம்
இனம் தின்னும்
ராஜபக்சே மீதல்ல..
ஈழப்போர் முடிவதற்குள்
தலைவர்கள் ஆகத்துடிக்கும்
தலையில்லாப் பேர்வழிகள் மீதல்ல
எம்மைக் குறையாண்மை செய்துவைத்த
இறையாண்மைமீதுதான்!
குரங்குகள் கூடிக்
கட்டமுடிந்த பாலத்தை
மனிதர்கள் கூடிக்
கட்ட முடியாதா?
போரின் முடிவென்பது
இனத்தின் முடிவல்ல
எந்த இரவுக்குள்ளும்
பகல் புதைக்கப்படுவதில்லை
எந்த தோல்விக்குள்ளும்
இனம் புதைக்கப்படுவதில்லை
அழிந்தது போலிருக்கும் அருகம்புல்
ஆனால்
கண்ணுக்குத் தெரியாத வேர்கள்
அங்கே
சிந்திய துளிகள்
சிவப்பு விதைகள்
ஒவ்வொரு விதையும் ஈழமாய் முளைக்கும்
பீரங்கி ஓசையில்
தொலைந்து போன தூக்கணாங்குருவிகள்.


இளமையை தொலைத்து… இன விடுதலை தேடி… பெருமிதம் கொள்ளச் செய்யும் பெண் புலிகள்.

p83a
‘அபிதா’…
- இது இலங்கை அரசுக்குச் சொந்தமான கப்பல். காங்கேசன் துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த இந்தக் கப்பலைத் தாக்கி அழிக்க வேண்டும் என்பது புலிகளின் திட்டம். ஏற்கெனவே ஒருமுறை புலிகளின் தாக்குதலில் இருந்து தப்பிய கப்பல்தான் இது.
”நான் கப்பலை அடிக்கறப்ப… நல்லூர் முருகனுக்கு திருவிழா நடக்கும் காலமாய் இருக்கவேணும். ஏனெண்டால், அப்பத்தான் கடலை வித்து காசு வைச்சிருப்பா அம்மா. நீங்க என் சாவு செய்தியை அவகிட்ட சொல்லும்போது அவாளால ஒழுங்கா சோறு சமைச்சு சாப்பாடு போட முடியும்…”
- ‘கேப்டன் அங்கயற்கண்ணி’ என்றழைக்கப்படும் புஷ்பகலா துரைசிங்கம், தன் தோழிகளிடம் இப்படி சொல்லிக்கொண்டே இருப்பாள். சொன்னது போலவே 94-ம் வருடத்தின் ஆகஸ்ட் மாதத்தில் உடல் முழுக்க வெடிகுண்டுகளோடு நெடுந்தூரம் கடலில் நீந்திச்சென்று, அந்தக் கப்பலை மோதித் தகர்த்தாள். அவள்தான், தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றில் முதல் பெண் கடற்கரும்புலி!
1985 ஆவணி 18… விடுதலைப் புலிகளின் மகளிர் படையணி அதிகாரப்பூர்வமாக கொடியேற்றித் தொடங்கப்பட்ட நாள். அதற்கு முன்பு புலிகளுக்கு மருத்துவ உதவிகள் செய்வது, இயக்கத்துக்கு ஆட்களை சேர்க்க நாடகங்கள் போடுவது என்ற அளவில் மட்டும் உதவிக் கொண்டிருந்தனர் பெண்கள்.
அன்றிலிருந்துதான் ஆயுதம் ஏந்தி நேரடியாக களத்துக்கு வந்தனர். வாழ்வைக் கொண்டாட வேண்டிய பதினெட்டு, இருபது வயது பருவத்தில், இளமையை தொலைத்து ‘எம் இனத்துக்கு ஒரு தேசம் வேண்டும்’ என்று தாயகக் கனவுகளை நெஞ்சில் சுமந்து, கையில் ஆயுதம் ஏந்திய பெண்கள் அவர்கள்.
இந்தப் பெண்களின் பெருமுயற்சியால் மட்டுமே விடுதலைப் புலிகள் வென்ற போர்கள் உண்டு. அவற்றில் முக்கியமானது ‘ஜெயசிக்குறு’ என்று அழைக்கப்படும் போர். நிலப்பகுதியை இரண்டாகப் பிரிக்கும் ஏ-9 நெடுஞ்சாலையைக் கைப்பற்றும் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான சிங்களப் படையினரும், ஆயிரக்கணக்கான புலிகளும் ஈடுபட்டனர். அதில் ஏராளமானனோர் பெண் புலிகள்.
அது ஓரிரு நாளில் முடிந்த போரல்ல… ஒன்றரை வருடங்களைத் தாண்டியும் நீண்ட போர். மழைக் காலங்களில் பதுங்கு குழிகளுக்குள் தண்ணீர் நிறையும். கழுத்தளவு தண்ணீரில் நாள் கணக்கில் நின்று எதிரிக்கு குறி வைக்க வேண்டும்.
நூற்றுக்கணக்கான பதுங்குக்குழிகளை பெண்களே வெட்ட வேண்டும். இறுதியில் ஏ-9 நெடுஞ்சாலை புலிகளின் வசமானது. அந்த வெற்றியின் முழுப் பெருமையும் பெண் புலிகளையே சேரும்.
p83b
இவை, பெண் புலிகளின் தரைப்படை தாக்குதல்கள். இதுதவிர… பெண் கடற்புலிகள், பெண் வான்புலிகள் என்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சகல பலங்களிலும் பெண்கள் சம பங்குடன் இருந்தார்கள்.
இன்றைக்கு விடுதலைப் புலிகள் பெருமளவில் சிதறடிக்கப்பட்டிருக்கும் நிலையில், புலிப்பெண்களின் உடல்கள், வெள்ளைமுள்ளி வாய்க்கால் பகுதியிலும் நந்திக்கடல் பகுதியிலும் பிணங்களாக மிதந்து கொண்டிருக்கின்றன – கனவு ஒரு நாள் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு!


காங்கிரஸ்காரர்களே...! -ஜெகத் கஸ்பர்.

ஜூன் 21, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்க்டிக் பனிக்கண்டத்தில் தமிழ் ஈழ மக்களுக்கு நம்பிக்கை தரும் அரசியல் நிகழ்வொன்று நடந்தது. 300 ஆண்டுகளாய் டென்மார்க் நாட்டின் காலனியாதிக் கத்திலிருந்து விடுதலைபெறப் போராடி வரும் கிரீன்லாந்து தன்னாட்சி உரிமை கொண்ட நாடாக அறிவிக்கப்பட்டது. வெகுவிரைவில் முழு விடுதலை சாத்தியப்படும் என்பதும் தெரிகிறது. 22 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கிரீன்லாந்து நாட்டின் மொத்த மக்கள்தொகை எவ்வளவு தெரியுமா? வெறும் 57,000 பேர். ஒரு லட்சம் குடிமக்கள் கூட இல்லாத கிரீன்லாந்து தனிநாடாக மாறமுடியுமென்றால் தமிழ் ஈழம் எப்படி மலராமல் போய்விடும்?! நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும், நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்.
நாடிழந்து நாடோடிகளாய் ஆன யூதர்கள் 1948-ல் தமக்கென ஓர் தாயகம் அமைக்க ஈராயிரம் ஆண்டுகள் ஆயிற்று. தன்னுரிமை இழந்த அயர்லாந்து இனத்தவர் மீண்டும் தமக்கான குடியரசை 1920-ல் அமைக்க 700 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. தென் அமெரிக்கா வின் அனைத்து நாடுகளுமே தன்னிச்சையாகச் சுதந்திரப் பிரகடனம் செய்துகொண்டு உருவான நாடுகள்தான். பின்லாந்து, எஸ்தோனியா, இந்தோனேஷியா என தன்னிச்சையாகச் சுதந்திரப் பிரகடனம் செய்து உருவான நாடுகள் உலக வரைபடத்தில் பல உண்டு.
உலக வரைபடம் அடித்தல், திருத்தல், புதிய உரு வாக்கல்களுக்கு உள்ளாக்கப்பட முடியாத இறுக்கம் கொண்டதல்ல. கடந்த 50 ஆண்டுகளில் மட்டுமே நாற்பதுக்கும் மேலான புதிய நாடுகள் இப் பூமிப் பந்தில் உருவாகியுள்ளன. தேசிய இனங்களுக்கு அரசியல் சுயநிர்ணய உரிமை உண்டு என்பது உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு நிலைபெற்று நிற்கும் அரசியல் ஒழுங்கு, தேசிய இனமாக இருக்கத் தகுதியுடையோர் யார்? ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில், நீண்ட காலம் பொதுமொழி, பொதுப் பண்பாடு, பொது வாழ்க்கை முறை, பொது வரலாறு ஆகியவற்றைக் கொண்டு வாழும் எந்த ஒரு இனமும் "அரசியல் சுய நிர்ணய உரிமை கொண்ட தேசிய இனம்' என்பதே கோட்பாடு. அந்த அடிப்படையில் தான் ஈழத்தமிழ் மக்களும் ஓர் தனித்துவமான தேசிய இனம், அவர்களுக்கு பிரிந்து போகும் உரிமை உண்டு என வாதிடுகிறோம்.
தேசிய இனங்களின் அரசியல் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்டால் இந்தியா பல் வேறு நாடுகளாக சிதறுண்டு போகாதா என்ற கேள்வியை சிலர் கேட்கலாம். உண்மை என்ன வென்றால் ஓர் ஜனநாயகக் கூட்டாட்சியாக, எத்தனையோ குறைபாடுகள் இருந்தாலும், இந்தியாவின் பயணம் நாம் பெருமை கொள்ளத் தக்கதாவே இருந்து வருகிறது. ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், அழகிரி, ஆ.ராசா இவர்களெல் லாம் வேஷ்டி கட்டிக் கெண்டு கேபினட் அமைச் சர்களாக பாராளுமன்றத்திற்குள் வரும்போது தமிழகமும் இந்திய ஆட்சி அமைப்பில் பங்கேற்கிறது என்ற உணர்வு உண்மையாகவே ஏற்படுகிறது. பணம் படைத்தவர்கள், சில ஜாதிகள், சில மொழி பேசுகிறவர்களின் மேலாதிக்கம் பல்துறைகளிலும் நிலவுகிற போதும் கூட சமூக நீதிக்கான அரசியற் சக்திகள் உறுதியாக இயங்குகின்ற சமூக அரசியற் களத்தினை இந்திய ஜனநாயகம் உறுதி செய்துள் ளது. மாநில சுயாட்சி என்ற கோரிக்கையினை முன்வைக்கிற உரிமையினையும், அதனை அடைவதற்கான வன்முறையற்ற ஜனநாயக வழியிலான நடைமுறைகளையும் இந்திய ஆட்சி அமைப்பு அனுமதித்துள்ளது.
ஆனால் ஸ்ரீலங்கா அவ்வாறானது அல்ல. அது ஒற்றையாட்சி அமைப்பு. தேசிய இனங் களின் கூட்டாட்சிக்கான ஏற்பாடு அரசியல் சட்ட அடிப்படையில் இல்லை. அந்நாட்டின் அரசு மதம் பௌத்தம். இந்து, கிறிஸ்தவ, இஸ் லாமிய மதங்களுக்கு இரண்டாம், மூன்றாம் இடங்கள்தான். அந்நாட்டின் அரசு மொழி சிங்களம். இன்று அந்நாட்டின் ராணுவத்தில் 100% பேர் சிங்களர்கள். தமிழ் மக்களை பல் லாயிரக்கணக்கில் கொன்றழித்து, தமிழீழ தாயக நிலப்பரப் பினை ஆக்கிரமித்து நிற்பது பெயருக்கு ஸ்ரீலங்கா ராணு வம் என்றாலும் உண் மையில் அது சிங்கள ராணுவம். ஸ்ரீலங்கா காவல்துறையில் 96% பேர் சிங்களர்கள். அப்படியானதொரு நாட்டை எப்படி எல்லா மக்களுக்குமான நாடு என்று நாம் கருதமுடியும்?
யாவிற்கும் மேலாய் கடந்த ஜனவரி முதல் மே-18 வரை ஸ்ரீலங்கா சுமார் 4 லட்சம் தமிழ் மக்களை ஒரு குறுகிய நிலப்பரப்பிற்குள் விரட்டிக் கூட்டி முற்றுகையிட்டு நடத்திய கொலைவெறி தாக்குதலும், கடைசி மூன்று நாட்களில் மட்டுமே சுமார் 30,000 தமிழர்களை கொன்றழித்த கொடுமையும், இன்று மூன்று லட்சத்திற்கும் மேலான அப்பாவித் தமிழர்களை மரண முகாம்களில் அடைத்து வைத்திருக்கும் அராஜகமும்- தமிழ் மக்களின் பிரிந்து போகும் உரிமையை அனைத்துலக சட்டங்கள், அரசியற் தார்மீகம், மானுட ஒழுக்கம் என சகல அடிப்படைகளில் நின்றும் உறுதி செய்கிறது.
வவுனியாவிலிருந்து வந்திருக்கிற செய்தி களின்படி அகதி முகாம்களில் இருக்கும் சுமார் 24,000 பேருக்கு அம்மை நோய் கண்டிருக்கிறதாம், 4,000 பேர் மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள் ளார்களாம். அடையாளம் தெரியாமல் வாரத்திற்கு சராசரி 60 பிணங்கள் முகாம்களுக்கு வெளியே அழுகிக் கிடக்க நாய்களால் இழுக்கப்படுகிறதாம். மாதத்திற்கு சராசரி நூறு இளம் தமிழ் பெண்கள் அனுராதபுர ராணுவத்தினரின் பாலியல் தேவைகளுக்காக கொண்டு செல்லப்படுகிறார் களாம். நாம் இப்போதும் நம்ப வேண்டுமாம்- விடுதலைப்புலிகள் என்ற பயங்கரவாத இயக்கத்தின் பிடியிலிருந்து தமிழ்மக்களை விடுவித்து சுபிட்சம் தருவதற்குத்தான் இந்த யுத்தத்தை ஸ்ரீலங்கா நடத்தியதென்று.
இன அழித்தல் யுத்தத்துக்கு ஸ்ரீலங்கா கொடுத்த முழக்கம்: அதாவது மனித குல வரலாற்றி லேயே மிகப்பெரும் எண்ணிக்கையில் கடத்தி வைக்கப்பட்டி ருந்த மக்களை மீட் கும் நடவடிக்கை. இந்தியாவின் சஉபய, பஒஙஊநசஞர, ஈசசலிஒஇச உள்ளிட்ட அத்தனை ஆங்கில ஊடகங்களும் இந்த மோசடி முழக்கத்தை இரவு பகலாய் இந்திய மக்களுக்கு கூவிக் கூவி விற்றன. இவர்கள் மீட்டு வந்த மக்கள் இன்று வதை முகாம் களில் என்ன பாடுபடுகிறார்களென்பதை சென்று எட்டிப் பார்த்து வரச் சொல்லுவோம். ஆனால் அவர்கள் இதனை தெரியாமலொன்றும் செய்யவில்லை என்பதே உண்மை. தெரிந்தே செய்தார்கள். மேற்குறிப்பிட்ட ஆங்கில ஊடகங்கள் இந்தியாவில் எழுந்து வரும் புதியதொரு மேலாதிக்க பாசிசத்தின் முகங்களாகவே பார்க்கப்பட வேண் டும். பர்காதத், ராஜ்தீப், அர்னாப் எல்லோரும் அழகாக ஆங் கிலம் பேசலாம்- ஆனால் அவர்கள் ஆபத்தான அரசியல் வியா பாரிகளும் கூட என்பதை தமிழ் மக்களின் தேசிய உரிமைச் சிக்கலை பயங்கரவாதமாய் விற்ற யுக்திகளில் கண்டோம்.
பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன் சஉபய நடத்திய இண்ஞ் எண்ஞ்ட்ற் நிகழ்ச்சி பற்றி நான் முன்பு எழுதியிருந்தேன். அந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பங்கேற்றவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயந்தி நடராஜன். விவாதத்தின் ஊடே ஒரு கேள்விக்கு அவர் சொன்ன பதில் அவர் மீதான என் தனிப்பட்ட மதிப்பை உயர்த்தியது. நிகழ்ச்சியை நெறி செய்த விக்ரம், ""ஸ்ரீலங்காவில் நடப்பது தமிழ் இன அழித்தல் என்ற குற்றச்சாட்டினை ஒத்துக் கொள் கிறீர்களா?'' என்று கேட்டபோது, ""ஆம், அங்கு நடப் பது இன அழித்தல்தான்'' என்று ஒத்துக் கொண்டார்.
இரு வாரங்களுக்கு முன் கூடிய நடப்பு பாராளுமன்றத்தின் முதல் அமர்வில் உரையாற்றிய போது கூட ஜெயந்தி நடராஜன் அவர்கள் அகதி முகாம்களில் வாடும் தமிழ்மக்கள் மீள் குடியமர்வு செய்யப்பட வேண்டிய அவசரத்தையும், நீதியான அரசியற்தீர்வுக்கான தேவையையும் வலியுறுத்தினார். இதனை இங்கு குறிப்பிடக் காரணம் ஈழத் தமிழ் மக்களுக்கு நேர்ந்த இன அழித்தலின் இரத்தப் பழியிலிருந்து காங்கிரஸ் கட்சி தப்பித்துவிட முடியாது. அதேவேளை ஒட்டுமொத்த அழிவி னின்று எஞ்சியிருக்கிற மக்களையேனும் காப்பாற்றி, அவர்களது சுயநிர்ணய உரிமையை உறுதி செய்து, விரும்பினால் அவர்களுக்கு தனிஈழம் அமைத்து தரும் வல்லமையோடு இன்று இருக்கிற ஒரே கட்சியும் காங்கிரஸ் கட்சிதான்.
நாம் யாவரும் நேசித்த ஒரு முன்னாள் பிரதம ரின் இழப்பிற்குப் பழிதீர்க்க வேண்டி இத்துணை கொடுமையான இன அழித்தலுக்குத் துணை நின்றது நியாயமா என்ற தீர்ப்பினை வரலாறு எழுதி விட்டுப் போகட்டும். அதே வேளை எனது அனுபவத்தில் தமி ழகத்தின் காங்கிரஸ் கட்சியினர் ஈழத் தமிழர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அடிமட்ட தொண்டர்கள் தனி ஈழம் அமைவதையே விரும்புகின்றார்கள். யுத்த நிறுத்தம் கேட்டு தீக்குளித்த தமிழர்களில் காங்கிரஸ் பேரியக்கத்தை சேர்ந்தவரும் ஒருவர். கடந்த ஜனவரி மாதம் யுத்த நிறுத்தம் கொணர வேண்டுமென தமிழக காங்கிரஸ் பெரியவர் ஒருவர் எடுத்த நேர்மையான முயற்சிகளையும், அம்முயற்சி வெற்றிபெறாமல் தடுத்த உணர்வாளர்களையும் அறி வேன். வேண்டுதல் என்ன வெனில் இன்றிருக்கும் நிலையில் ஈழத் தமிழ் மக்கள் தொடர்பான சில கோரிக்கைகளை தமிழக காங்கிரஸ் வலுவாக தமது தலைமைக்கு வைக்க வேண்டும் என்பதுதான். இலங்கைக்கு இந்தியா வழங்கிய 500 கோடி நிதி உதவியை செயற்படுத்த 20 பேர் கொண்ட குழுவினை ராஜபக்சே அமைத்துள்ளார். அதில் 19 பேர் சிங்களர்கள்- ஒருவர் இஸ்லாமியர். குறைந்தபட்சம் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரைக் கூடவா சேர்த்துக் கொள்ளக் கூடாது? இப்படியான குறைந்தபட்ச கேள்விகளைக் கூட நாம் எழுப்பவில்லை யே என்றுதான் அங்கலாய்ப்பாக இருக்கிறது.
கடந்த ஜூன் மாதம் 7-ம் நாள் இலங்கை ராணு வத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் ராஜபக்சே சகோதரர்களின் நெருங்கிய நண்பரான ஜெயசூரியா என்பவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.
""அதிகாரப் பகிர்வின் மூலம் இனப் பிரச்சனை உருவாக காரணமாக இருந்த அம்சங்களை இலங்கை அகற்ற வேண்டுமென எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார். நான் கேட்கிறேன், எஸ்.எம்.கிருஷ்ணாவே... இறை யாண்மை கொண்ட ஒரு தேசமாகிய எங்களுக்கு அறிவுரை சொல்ல நீ யார்? உனது வேலையை மட்டும் நீ பார். அல்லது ஐ.நா. மனித உரிமை குழுவில் நவிபிள்ளை சூடு பட்டது போல் நீயும் சுருக்கிக் கொள்ள வேண்டிவரும். இந்தியாவே நன்றாகக் கேட்டுக்கொள். எவ்விதமான அதிகாரப் பரவலும் தமிழர்களுக்கு நாங்கள் தரப் போவ தில்லை. அதுமட்டுமல்ல இந்திய மேலாதிக்கத்தின் கடைசி எச்சமான இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தத் தையும் தூக்கித் தூர வீசி எங்கள் தேசத்தை உங்கள் மேலாதிக்கத்திலிருந்து தூய்மை செய்வதுதான் எங்கள் இலக்கு. எங்கள் நாட்டை இந்தியாவுடன் இணைக்க வேண்டித்தான் விடுதலைப்புலிகளை நீங்கள் உருவாக்கி னீர்கள். நீங்கள் உருவாக்கியதை நாங்கள் அகற்றினோம். எங்கள் நாட்டை கைப்பற்றுவதை விட சந்திரனை உங்கள் நாட்டோடு இணைப்பது எளிதாக இருக்கும்''.
இக்கட்டுரை வெளிவந்தது இலங்கை ராணுவத் தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் எழுதியது ராஜபக்சே சகோதரர்களின் நெருங்கிய நண்பர். இவை யெல்லாம் ஏன் அதிகாரத்தில் இருப்போரின் கண்களுக் குப் படவில்லை. இத்துணை கொடுமைகளுக்குப் பின்ன ரும் கூட என்றானாலும் தமிழர்கள்தான் இந்தியா வின் நண்பர்கள் என்பதை இந்தியா உணரும் காலம் ஒருநாள் வரும்.
(நினைவுகள் சுழலும்)


Monday, June 29, 2009

தலைவரை சாகடிப்பதனூடாக எதையுமே சாதிக்க முடியாது.


மக்களின் உளவியலை புரிந்து கொண்டு மக்கள் போராட்டத்திற்கு வழி விடுங்கள்

தமிழ் மக்களின் விடுதலைப்போர் அறுபத்து ஒரு வருடங்களை பல பரிணாமங்களின் ஊடாக கடந்த போதும், அது தற்போது ஒரு நெருக்கடியான கட்டத்தை அடைந்துள்ளது.

விடுதலைப்புலிகளின் மரபுவழியிலான படைபலத்தை பிராந்திய வல்லரசுகளின் துணையுடன் சிறீலங்கா அரசு முறியடித்த பின்னர் தமிழ் மக்களின் உரிமைக்கான போரின் அடுத்த கட்டத்தை நகர்த்துவதில் தமிழ் சமுதாயம் பல நெருக்கடிகளை எதிர் நோக்கி நிற்கின்றது.

விடுதலைப்போர் சந்தித்த மிகப்பெரும் மனிதப்பேரவலத்தின் இறுதி நாட்களில் வீறுகொண்டு எழுந்த புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் எழுச்சிகள் தமிழ் மக்களின் உரிமைகள் கிடைக்கும் வரை தொடர வேண்டும். அதன் மூலம் தான் எமது இனம் சந்தித்த இழப்புக்களையும், துன்பங்களையும், பேரழிவுகளையும் உலகின் பதிவுகளில் இருந்து அழியாது பேணமுடியும்.

கடந்த ஏப்பிரல் மற்றும் மே மாதங்களில் உலகில் வாழும் ஒட்டுமொத்த தமிழினமும் ஏற்படுத்தியிருந்த பெரும் எழுச்சிக்கு கடந்த 20 ஆம் நாள் பிரித்தானியா தமிழ் மக்கள் மீண்டும் ஒருமுறை செயல்வடிவம் கொடுத்திருந்தனர்.

எமது எழுச்சிகள் அடங்கிப்போனால் எமது உரிமைகளும் அதனுடன் அடங்கி போய்விடும் என்ற சிறீலங்கா அரசின் எதிர்பார்ப்புக்கு அவர்களின் இந்த எழுச்சி மீண்டும் ஒரு பேரிடியை கொடுத்துள்ளது.

போராட்டம் அடுத்து பயணிக்கப்போகும் பாதைக்கு அனைத்துலகத்திலும் பரந்து வாழும் ஒட்டுமொத்த தமிழினத்தின் ஆதரவுகள் தேவை. ஆனால் அதனை சிதைத்துவிடுவதில் இந்திய - சிறீலங்கா அரசுகள் முனைப்பாக செயற்பட்டு வருகின்றன.

அவர்களின் தற்போதைய நடவடிக்கைகள் முழுவதும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களை மையமாக கொண்டே நகர்த்தப்பட்டு வருகின்றன. அதனை உறுதிப்படுத்துவது போலவே வன்னியில் படை நடவடிக்கைகயை மேற்கொண்ட பல படை அதிகாரிகளை வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் சிறீலங்கா அரசு பணிகளில் அமர்த்தியுள்ளது. அவர்களின் மூலமும் பல ஊடுருவல்களை மேற்கொள்ள அரசு முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

ஆனால் அவற்றை எல்லாம் புறம்தள்ளி நாம் மேற்கொள்ளப்போகும் தொடர் போராட்டங்கள் மூலமே காத்திரமான அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்வதற்கான அழுத்தங்களை ஏற்படுத்த முடியும்.

கடந்த வாரம் பிரித்தானியாவில் அணிதிரண்ட ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட உறவுகளை போல எதிர்வரும் 28 ஆம் நாள் பிரான்ஸிலும், ஏனைய நாடுகளிலும் நாம் ஒன்று திரண்டு எமது பலத்தை மீண்டும் மீண்டும் நிருபிக்க வேண்டிய கட்டயாம் உள்ளது.

எமது மக்கள் தாயகத்தில் சந்தித்த பேரழிவுகளுடன் எமது போராட்டமும் முடிவுக்கு வந்துவிட்டது என்ற கருத்தை நாம் தான் மாற்ற வேண்டும். ஆனால் எமது மக்களின் உளவுரைனையும், போராடும் மனவலுவையும் சிதறடிப்பதற்கு பல புறச்சூழல்கள் எம்மை சுற்றி உருவாக்கப்டுகின்றன.

பல அறிக்கைகளும், நேர்காணல்களும் எமது மக்களின் மனஉறுதியை தகர்க்கும் நோக்கங்களை மையமாக கொண்டு வெளியிடப்படுகின்றன. இது பெரும் உளவியல் சிதைவுக்குள்ளாகியிருக்கும் ஒரு இனத்தின் உளவியலை மேலும் பல மடங்கு சிதைப்பதற்கே உதவும்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை எதிரி ஒரு முறைதான் தனது ஊடக வலிமையை கொண்டு சாகடித்தான்;

ஆனால் எம்மில் சிலர் மீண்டும் மீண்டும் அந்த மாமனிதனை தமது ஊடகச்சமரில் சாகடித்து வருகின்றனர். மேலும் எத்தனை முறை அவரை சாகடிக்கப்போகிறார்களோ தெரியாது.

இந்த ஆதாரமற்ற தகவல்களால் ஒரு இனம் எவ்வளவு தூரம் உளவியல் சிதைவுக்குள்ளாகியிருக்கிறது என்பதை யாருமே உணரத் தயாராக இல்லை. தலைவரை சாகடிப்பதனூடாக எதையுமே சாதிக்க முடியாது. அதை வரலாறு தெளிவாகப் பதிவு செய்து விட்டது.

எமது இனத்தைப் பொறுத்த வரையில் அவர் அந்த மக்களின் மனங்களில் இரத்தமும் சதையுமாக வாழ்கிறார். நாடு கடந்த அரசாங்கம் என்றாலும் இழந்த எமது உரிமைகளை மீளப்பெறுவதாக இருந்தாலும் அதற்கு பின்னால் மக்கள் அணிதிரள வேண்டுமானால் அந்த மக்களின் உளவுரனையும், மனவுறுதியையும் நாம் உயர்வாக பேணவேண்டும்.

மக்கள் ஆதரவு இல்லாத எந்த போராட்டமும் வெற்றியடைந்ததாக சரித்திரம் இல்லை. புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் போராட்டம் வினைத்திறன் வாய்ந்தது. ஆனால் அவர்களுடைய உழைப்பையும் சக்தியையும் சில சம்பவங்களை வீணடித்து விடுகின்றன.

ஆதாரங்கள் இன்றி தொடர்ந்து வலியுறுத்தப்படும் சில நிகழ்வுகள் கேலிக்கூத்தாக்கப்போவதை வரலாறு பதிவு செய்யக் காத்திருக்கிறது. எனவே மக்களின் உளவியலை புரிந்து கொண்டு மக்கள் போராட்டத்திற்கு வழி விடுங்கள்.


ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்...

காலை,
தாமரை பூக்கும் நேரம் அல்ல,
இரவு,
அல்லி மலரும் நேரம் அல்ல.
ஈழத்தில்,
நாள்களை
சிங்களக்குருவிகளின் அலகுகள்
திறக்கின்றன, மூடுகின்றன.
அவற்றின்
இறுக்கமான இரும்பு நகப்பிடிகள்
நேரங்களை
நிரப்புகின்றன தமிழப்பிணங்கள் கொண்டு

கறுப்புக் கனவுகளின்
பாதை நெடுகிலும் காயப்பசியுள்ள
ஈட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

நனவுகளின்
மார்பிலிருந்து இரத்தம்
பவுத்த நெடியோடு பாய்கிறது
குறுக்கும் நெடுக்குமாய்
ஈழத்தில்.

தமிழ்மொழி பதைக்கிறது
தமிழ் இயல், தமிழ் இசை தமிழ்நாடகம்
எல்லாமே-
போராடும் தமிழன் கைகளில்
ஆயுதங்களாயிடத் தவிக்கின்றன.
இங்கோ
தமிழனின் பதைப்பும் தவிப்பும்.

வேவு பார்க்கப்படுகின்றன
விசாரணைக்குக்குள்ளாகின்றன.
அர்த்தங்கள் மாற்றி வைக்கப்பட்டுத்
தடை செய்யப்படுகின்றன.

பூண்டோடு
தமிழினம் வேரறுக்கப்பட்டதாக
அறிவிப்பைத்
தயாரித்து வைத்து வெளியிட
அவசரப்படுகின்றன ஊடகங்கள்.

ஆதிக்க வல்லாண்மைகள்
இரத்த தாகமுள்ள வரலாற்றின்
பக்கங்களில்
உள்நாட்டுப் பிரச்சினை
இதுவென்று
தமிழினப் படுகொலைகளைச்
சலனமற்ற எழுத்துக்களால் முடித்துவிடத்
தீர்மானிக்கின்றன.

கடைசியாகப்
பிறக்கப்போகும் ஈழத் தமிழ் குழந்தை
எதைச் சொல்லி அழும்? எப்படி அழும்?
இறந்துபோன
தமிழினத்தின் இறுதிச் செய்தியாக
எதைப் பெறும்
அந்தக் குழந்தை?

மிஞ்சப்போகும் அந்தக் குழந்தை
தமிழினத்தின் விடுதலையாக இருந்தாலும்
நடந்த மரணங்களை
இழப்புகளின் பட்டியலில் இருந்து
வாழ்க்கைகளாய் விடுவிப்பது எப்படி?
அது,
நம்பிக்கையை உறுதிசெய்தாலும்
புதைந்து போன
நட்சத்திரங்களை மீட்பது எப்படி?


Sunday, June 28, 2009

முள்வேலிக்குள் மூச்சுவிட மட்டுமே சுதந்திரம் : மெனிக் முகாம் சொல்லும் கதை

camp_vavuniyajpg refugecamp
விடுதலைப் புலிகளுடனான இறுதி மோதலின்போது முல்லைத்தீவுப் பிரதேசத்திலிருந்து வெளியேறிய மூன்று இலட்சம் மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மெனிக் முகாமுக்கு தனது உறவினரைப் பார்ப்பதற்காகச் சென்ற ஒரு வயதானவர்தான் அங்கு கண்டவற்றை இங்கு விவரிக்கிறார். வவுனியாவிலிருந்து 30 கி.மீ. தொலைவில் மெனிக் முகாம் அமைந்துள்ளது. இராணுவத்தால் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய முகாம் இது. 160000 ற்கு மேற்பட்ட இடம் பெயர்ந்த மக்கள் இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட கடும் எறிகணைத் தாக்குதலிலிருந்து தப்புவதற்காக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து இறுதி நேரத்தில் வெளியேறிய மக்கள் இவர்கள்.Image
மெனிக் முகாமுக்குள் செல்லும் ஒருவர் பல்வேறு இராணுவ சோதனைச் சாவடிகளுள் மேற்கொள்ளப்படும் சோதனைகள், கெடுபிடிகள் விசாரணைகளைத் தாண்டியே செல்ல முடியும். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், காயமடைந்தோர் என அனைவரையும் கொண்ட ஒரு திறந்த வெளிச்சிறைச்சாலையாகவே இது உள்ளதை உள்ளே செல்லும் ஒருவர் காண முடியும். இம் முகாமைச் சுற்றி கடும் பாதுகாப்புடைய முட்கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, ஆயுதம் தாங்கிய படையினரும் காவலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நீண்ட வரிசையாக சிறிய ரென்ட்லீல் ஆன அறைகள் அலுமினியத் தகடுகள் கொண்டு பிரிக்கப்பட்டு, இம் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அடிப்படைத் தேவைக்கான தண்ணீரும் சுகாதார வசதிகளும் மிகவும் பற்றாக்குறையாகவே உள்ளன.
ஒரு அறைக்குள் அல்லது ஒரு தரப்பாளுக்குள் ஆகக் குறைந்தது இரண்டு குடும்பங்கள் வாழ்கின்றன. காற்றடிக்கும் போதோ அல்லது வாகனம் ஒன்று செல்லும் போதோ ஏற்படும் புழுதியால் அவற்றில் உள்ள மக்கள் குளிப்பாட்டப்படுகிறார்கள். இந்த மெனிக் முகாமுக்குள் இராமநாதன் முகாம், கதிர்காமர் முகாம், அருணாச்சலம் முகாம், ஆனந்தக்குமாரசாமி முகாம் ஆகிய நான்கு முகாம்கள் உள்ளன. ஒவ்வொன்றும் நாற்பதாயிரம் மக்களைக் கொண்டுள்ளது. முகாம் பகுதியில் இராணுவ வாகனங்கள் எந்நேரமும் சுற்றிக்கொண்டே இருக்கும். ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமுக்கு நடந்து செல்ல மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் அதற்கு ஓட்டோக்களையே பயன்படுத்த வேண்டும். அதற்கு நூறிலிருந்து நூற்றைம்பது ரூபாய்வரை அறவிடப்படுகிறது.
முகாமுக்கு அருகில் உள்ள இரண்டு புறமும் முட்கம்பிகளால் ஆன சிறிய வழி ஒன்றினூடாகவே முகாமுக்குச் செல்பவர் நடந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். முகாமிலுள்ளவரைச் சந்திப்பதற்காகச் சிறிய குடில் ஒன்றில் காத்திருக்கவேண்டும். நூற்றுக்கு மேற்பட்டவர்கள் தமது அன்புக்குரிய உறவினர்களைச் சந்திக்கக் காத்திருக்க அக்குடில் போதுமானதாக இல்லை. இதனால் அவர்கள் குடிலுக்கு வெளியே எரிக்கும் வெய்யிலில் காத்திருக்க நேர்கிறது. அங்கு மலசலகூடவசதிகளோ எவையும் இல்லை. ஒவ்வொரு குடிலுக்கும் ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் பரல் வைக்கப்பட்டுள்ளது. வெளியேயுள்ள சிறிய கடைகளில் தேநீரும், சில குளிர்பானங்களும் கிடைக்கின்றன.
பொலிஸ் அதிகாரிகள் காலை ஒன்பது மணிக்குப் பின்பே வருகை தருகிறார்கள். அவர்கள் உங்களது விபரங்களையும், நீங்கள் சந்திக்கவுள்ள உறவினருடைய யுனிட் இலக்கம், புளொக் இலக்கம் என்பவற்றையும் உள்ளடக்கிய விபரங்களையும் பதிந்து கொள்கிறார்கள். கைத்தொலைபேசிகளும், கமெராக்களும் உள்ளே கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. அவற்றை அங்குள்ள கடைகளில் ஒன்றில் கொடுத்துவிட்டே உள்ளே செல்ல வேண்டும். சில கடைக்காரர்கள் ஒரு கைத்தொலைபேசியை வைத்திருந்து தருவதற்கு ஐம்பது ரூபாய் வரை அறவிடுகிறார்கள்.
என்னுடைய பல உறவினர்கள் மெனிக் முகாமிலிருந்தார்கள். நான் முதலில் இராமநாதன் முகாமிலிருந்த எனது சகோதரியையும் அவருடைய மகன்களையும் பார்க்கச் சென்றேன். தமிழ் பேசும் ஒருவர் சிவில் உடையில் வந்து நாங்கள் ஒவ்வொருவரும் யார் யாரைச் சந்திக்கவுள்ளோம் என்ற விபரங்களை எல்லாம் எடுத்துச் சென்றார். நான் என்னுடைய விபரங்களை அவரிடம் கொடுத்தேன். அவர் கடும் தொனியில் சொன்னார் நான் இன்று எனது உறவினர்களைச் சந்திக்க முடியாதென்று. ஒவ்வொரு முகாமுக்கும் அவர்கள் வௌ;வேறு நாட்களை ஒதுக்கியுள்ளார்கள்.
எனினும் நான் இதற்காகவே கொழும்பிலிருந்து வந்ததாகத் தர்க்கித்தேன். அவர் சொன்னார் அதனாலென்ன அதற்கும் கூட ஒன்றும் செய்வதற்கில்லை என. அவருடைய சிரேஸ்ட அதிகாரிகளைச் சந்தித்து முறையிடுவதற்குக் கூட அவர் அனுமதிக்கவில்லை. அம் முகாமிலிருந்த எனது உறவினரைப் பார்க்க முடியாதவாறு நான் தடுக்கப்பட்டேன். பின்னர் நான் கதிர்காமர் முகாமுக்குச் சென்று முன்னரைப் போல எனது விபரங்களையும் நான் சந்திக்க வேண்டியவர்களின் விபரங்களையும் கொடுத்தேன்.
அவர்கள் எனது சகோதரரை அழைத்தனர். ஆனால் அவர் முட்கம்பி வேலிக்கு அப்புறத்தில் நின்றார். அவர் என்னைக் கண்டதும் அழுதார். தங்களுடைய உறவினரைக் கண்டதும் அங்கிருந்த பலர் அழுததை நான் கண்ணுற்றேன். சிலர் தங்களுடைய பெற்றாரிடமிருந்து பிரிக்கப்பட்டிருந்தனர். இன்னும் சிலர் தங்களுடைய கணவன் அல்லது மனைவியிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளனர். உறவினருடன் பேசுதல் என்பது ஒரு சிறைக் கைதியுடன் பேசுவதைப் போன்றதாகும். உங்களுக்கு 15 அல்லது 30 நிமிடங்கள் வழங்கப்படும். அங்கு காவலிருக்கும் பொலிசார் வந்து உங்களுடைய நேரம் முடிவடைந்து விட்டது எனத் தெரிவிப்பார்கள். எவருக்கும் மேலதிக நேரம் வழங்கப்பட மாட்டாது. நீங்கள் உணவு அல்லது உடுதுணியை மட்டுமே அவர்களுக்குக் கொடுக்க முடியும். அதனையும் அங்குள்ள பொலிசார் முழுவதும் பரிசோதித்து விட்டே கொடுப்பார்கள். நீங்கள் கதைத்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு கணமும் அங்கிருக்கும் பொலிசார் உங்களை அவதானித்துக்கொண்டே இருப்பர்.
கடந்த டிசம்பரிலிருந்து ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு எவ்வாறு தாங்கள் இடம் பெயர்ந்து சென்றதாக எனது சகோதரர் எனக்கு விளக்கினார். இறுதியாக முல்லைத்தீவிலுள்ள மாத்தளனை அடைந்ததாக அவர் தெரிவித்தார். அங்கு ஏற்கெனவே ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சேர்ந்திருந்தனர். அவர்களுக்கு உணவு போதுமானதாக இருக்கவில்லை. உடுத்த உடையுடனேயே அவர்கள் வந்து சேர்ந்திருந்தனர். கடும் எறிகணைவீச்சுக் காரணமாக அவர்கள் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு ஓடிக்கொண்டிருந்தனர். பலர் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டனர்.
இறுதியாக ஏப்ரலில் அங்கிருந்து வெளியேறுவதென அவர்கள் முடிவு செய்தார்கள். அவர்கள் 8 கிலோ மீற்றர்கள் கால்நடையாக நடந்தார்கள். இராணுவத்தினர் முதலில் அவர்களைச் சுட முயன்றார்கள். பின்னர் அவர்கள் அங்கு பல மணி நேரம் காத்திருக்க வைக்கப்பட்டார்கள். பின்னர் இறுதியாக அவர்கள் மெனிக் முகாமுக்கு அழைத்து வரப்பட்டார்கள். முதலில் இரண்டு வாரங்களுக்கு அவர்களுக்குச் சமைத்த உணவு வழங்கப்பட்டது. இப்போது அவர்களுக்குச் சில பாத்திரங்களும் கரண்டிகளும் வழங்கப்பட்டன. ஒவ்வொருவருக்கும் மாதமொன்றுக்கு 3 கிலோ மாவும், 300 கிராம் சீனியும், கொஞ்சம் பருப்பும் வழங்கப்பட்டுள்ளன.
இராணுவத்தினர் சில கடைகளைத் திறந்து மரக்கறி வகைகளையும் சில உணவுப் பொருட்களையும் விற்பனை செய்கிறார்கள். பணம் இல்லாத காரணத்தால் பெரும்பான்மையான மக்களுக்கு எவற்றையும் வாங்க முடியவில்லை. அவர்களுக்கு வழங்கப்படும் உணவுப்பொருட்களைக் கொண்டு அவர்கள் எவ்வாறு உயிர்வாழ்கிறார்கள் என்று கற்பனை பண்ணவே முடியவில்லை.
லொறிகளில் குடிதண்ணீர் கொண்டு வந்து வழங்கப்படுகிறது. ஆனால் அது போதுமானதாக இல்லை. அப்பகுதியிலுள்ள சிறிய குளம் ஒன்றில் குறைந்தளவு தண்ணீரே குளிப்பதற்கு இருக்கிறது. அவர்களுக்கு குளிப்பதற்கு சோப் எதுவும் இல்லை. மலசலகூடங்களின் கூரைகள் பொலித்தீனினால் அல்லது அலுமினியத்தகடுகளால் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் மலசலகூடங்கள் போதுமானதாக இல்லை.
சிவில் உடையிலுள்ள பொலிசாரும் இராணுவத்தினரும் அங்கு சுற்றிக்கொண்டே இருக்கின்றனர். அவர்கள் மலசலகூடங்களைக் கூடப் பரிசோதிக்கின்றனர். குடில்களுக்கு வெளியே எவரும் நிற்க அனுமதிக்கப்படுவதில்லை. இளம் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர் இரவில் நித்திரை கொள்வதில்லை. தங்களுடைய மகனோ மகளோ கடத்தப்பட்டு விடுவார்கள் என அவர்கள் அஞ்சுகிறார்கள்.
இளைஞர்கள் யுவதிகளுடைய பெயர்கள் ஒலிபெருக்கியில் அழைக்கப்பட்டு அவர்கள் முகாமுக்கு வருமாறு அழைக்கப்படுகிறார்கள். அந்த இளைஞர்கள் விசாரணைக்குள்ளாக்கப்பட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிலர் மீளத் திரும்பி வருகிறார்கள், பலர் திரும்புவதேயில்லை. பெற்றாருக்குக் கூட அவர்கள் எங்கே கொண்டு செல்லப்படுகிறார்கள், ஏன் கொண்டு செல்லப்படுகிறார்கள், எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்று அறிவிக்கப்படுவதில்லை.
சோதனைச் சாவடிகளுள் மேற்கொள்ளப்படும் சோதனைகள், கெடுபிடிகள் விசாரணைகளைத் தாண்டியே செல்ல முடியும். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், காயமடைந்தோர் என அனைவரையும் கொண்ட ஒரு திறந்த வெளிச்சிறைச்சாலையாகவே இது உள்ளதை உள்ளே செல்லும் ஒருவர் காண முடியும். இம் முகாமைச் சுற்றி கடும் பாதுகாப்புடைய முட்கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, ஆயுதம் தாங்கிய படையினரும் காவலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நீண்ட வரிசையாக சிறிய ரென்ட்லீல் ஆன அறைகள் அலுமினியத் தகடுகள் கொண்டு பிரிக்கப்பட்டு, இம் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அடிப்படைத் தேவைக்கான தண்ணீரும் சுகாதார வசதிகளும் மிகவும் பற்றாக்குறையாகவே உள்ளன. ஒரு அறைக்குள் அல்லது ஒரு தரப்பாளுக்குள் ஆகக் குறைந்தது இரண்டு குடும்பங்கள் வாழ்கின்றன. காற்றடிக்கும் போதோ அல்லது வாகனம் ஒன்று செல்லும் போதோ ஏற்படும் புழுதியால் அவற்றில் உள்ள மக்கள் குளிப்பாட்டப்படுகிறார்கள். இந்த மெனிக் முகாமுக்குள் இராமநாதன் முகாம், கதிர்காமர் முகாம், அருணாச்சலம் முகாம், ஆனந்தக்குமாரசாமி முகாம் ஆகிய நான்கு முகாம்கள் உள்ளன. ஒவ்வொன்றும் நாற்பதாயிரம் மக்களைக் கொண்டுள்ளது. முகாம் பகுதியில் இராணுவ வாகனங்கள் எந்நேரமும் சுற்றிக்கொண்டே இருக்கும். ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமுக்கு நடந்து செல்ல மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் அதற்கு ஓட்டோக்களையே பயன்படுத்த வேண்டும். அதற்கு நூறிலிருந்து நூற்றைம்பது ரூபாய்வரை அறவிடப்படுகிறது.
முகாமுக்கு அருகில் உள்ள இரண்டு புறமும் முட்கம்பிகளால் ஆன சிறிய வழி ஒன்றினூடாகவே முகாமுக்குச் செல்பவர் நடந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். முகாமிலுள்ளவரைச் சந்திப்பதற்காகச் சிறிய குடில் ஒன்றில் காத்திருக்கவேண்டும். நூற்றுக்கு மேற்பட்டவர்கள் தமது அன்புக்குரிய உறவினர்களைச் சந்திக்கக் காத்திருக்க அக்குடில் போதுமானதாக இல்லை. இதனால் அவர்கள் குடிலுக்கு வெளியே எரிக்கும் வெய்யிலில் காத்திருக்க நேர்கிறது. அங்கு மலசலகூடவசதிகளோ எவையும் இல்லை. ஒவ்வொரு குடிலுக்கும் ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் பரல் வைக்கப்பட்டுள்ளது. வெளியேயுள்ள சிறிய கடைகளில் தேநீரும், சில குளிர்பானங்களும் கிடைக்கின்றன.
பொலிஸ் அதிகாரிகள் காலை ஒன்பது மணிக்குப் பின்பே வருகை தருகிறார்கள். அவர்கள் உங்களது விபரங்களையும், நீங்கள் சந்திக்கவுள்ள உறவினருடைய யுனிட் இலக்கம், புளொக் இலக்கம் என்பவற்றையும் உள்ளடக்கிய விபரங்களையும் பதிந்து கொள்கிறார்கள். கைத்தொலைபேசிகளும், கமெராக்களும் உள்ளே கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. அவற்றை அங்குள்ள கடைகளில் ஒன்றில் கொடுத்துவிட்டே உள்ளே செல்ல வேண்டும். சில கடைக்காரர்கள் ஒரு கைத்தொலைபேசியை வைத்திருந்து தருவதற்கு ஐம்பது ரூபாய் வரை அறவிடுகிறார்கள்.
என்னுடைய பல உறவினர்கள் மெனிக் முகாமிலிருந்தார்கள். நான் முதலில் இராமநாதன் முகாமிலிருந்த எனது சகோதரியையும் அவருடைய மகன்களையும் பார்க்கச் சென்றேன். தமிழ் பேசும் ஒருவர் சிவில் உடையில் வந்து நாங்கள் ஒவ்வொருவரும் யார் யாரைச் சந்திக்கவுள்ளோம் என்ற விபரங்களை எல்லாம் எடுத்துச் சென்றார். நான் என்னுடைய விபரங்களை அவரிடம் கொடுத்தேன். அவர் கடும் தொனியில் சொன்னார் நான் இன்று எனது உறவினர்களைச் சந்திக்க முடியாதென்று. ஒவ்வொரு முகாமுக்கும் அவர்கள் வௌ;வேறு நாட்களை ஒதுக்கியுள்ளார்கள்.
எனினும் நான் இதற்காகவே கொழும்பிலிருந்து வந்ததாகத் தர்க்கித்தேன். அவர் சொன்னார் அதனாலென்ன அதற்கும் கூட ஒன்றும் செய்வதற்கில்லை என. அவருடைய சிரேஸ்ட அதிகாரிகளைச் சந்தித்து முறையிடுவதற்குக் கூட அவர் அனுமதிக்கவில்லை. அம் முகாமிலிருந்த எனது உறவினரைப் பார்க்க முடியாதவாறு நான் தடுக்கப்பட்டேன். பின்னர் நான் கதிர்காமர் முகாமுக்குச் சென்று முன்னரைப் போல எனது விபரங்களையும் நான் சந்திக்க வேண்டியவர்களின் விபரங்களையும் கொடுத்தேன்.
அவர்கள் எனது சகோதரரை அழைத்தனர். ஆனால் அவர் முட்கம்பி வேலிக்கு அப்புறத்தில் நின்றார். அவர் என்னைக் கண்டதும் அழுதார். தங்களுடைய உறவினரைக் கண்டதும் அங்கிருந்த பலர் அழுததை நான் கண்ணுற்றேன். சிலர் தங்களுடைய பெற்றாரிடமிருந்து பிரிக்கப்பட்டிருந்தனர். இன்னும் சிலர் தங்களுடைய கணவன் அல்லது மனைவியிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளனர். உறவினருடன் பேசுதல் என்பது ஒரு சிறைக் கைதியுடன் பேசுவதைப் போன்றதாகும். உங்களுக்கு 15 அல்லது 30 நிமிடங்கள் வழங்கப்படும். அங்கு காவலிருக்கும் பொலிசார் வந்து உங்களுடைய நேரம் முடிவடைந்து விட்டது எனத் தெரிவிப்பார்கள். எவருக்கும் மேலதிக நேரம் வழங்கப்பட மாட்டாது. நீங்கள் உணவு அல்லது உடுதுணியை மட்டுமே அவர்களுக்குக் கொடுக்க முடியும். அதனையும் அங்குள்ள பொலிசார் முழுவதும் பரிசோதித்து விட்டே கொடுப்பார்கள். நீங்கள் கதைத்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு கணமும் அங்கிருக்கும் பொலிசார் உங்களை அவதானித்துக்கொண்டே இருப்பர்.
கடந்த டிசம்பரிலிருந்து ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு எவ்வாறு தாங்கள் இடம் பெயர்ந்து சென்றதாக எனது சகோதரர் எனக்கு விளக்கினார். இறுதியாக முல்லைத்தீவிலுள்ள மாத்தளனை அடைந்ததாக அவர் தெரிவித்தார். அங்கு ஏற்கெனவே ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சேர்ந்திருந்தனர். அவர்களுக்கு உணவு போதுமானதாக இருக்கவில்லை. உடுத்த உடையுடனேயே அவர்கள் வந்து சேர்ந்திருந்தனர். கடும் எறிகணைவீச்சுக் காரணமாக அவர்கள் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு ஓடிக்கொண்டிருந்தனர். பலர் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டனர்.
இறுதியாக ஏப்ரலில் அங்கிருந்து வெளியேறுவதென அவர்கள் முடிவு செய்தார்கள். அவர்கள் 8 கிலோ மீற்றர்கள் கால்நடையாக நடந்தார்கள். இராணுவத்தினர் முதலில் அவர்களைச் சுட முயன்றார்கள். பின்னர் அவர்கள் அங்கு பல மணி நேரம் காத்திருக்க வைக்கப்பட்டார்கள். பின்னர் இறுதியாக அவர்கள் மெனிக் முகாமுக்கு அழைத்து வரப்பட்டார்கள். முதலில் இரண்டு வாரங்களுக்கு அவர்களுக்குச் சமைத்த உணவு வழங்கப்பட்டது. இப்போது அவர்களுக்குச் சில பாத்திரங்களும் கரண்டிகளும் வழங்கப்பட்டன. ஒவ்வொருவருக்கும் மாதமொன்றுக்கு 3 கிலோ மாவும், 300 கிராம் சீனியும், கொஞ்சம் பருப்பும் வழங்கப்பட்டுள்ளன.
இராணுவத்தினர் சில கடைகளைத் திறந்து மரக்கறி வகைகளையும் சில உணவுப் பொருட்களையும் விற்பனை செய்கிறார்கள். பணம் இல்லாத காரணத்தால் பெரும்பான்மையான மக்களுக்கு எவற்றையும் வாங்க முடியவில்லை. அவர்களுக்கு வழங்கப்படும் உணவுப்பொருட்களைக் கொண்டு அவர்கள் எவ்வாறு உயிர்வாழ்கிறார்கள் என்று கற்பனை பண்ணவே முடியவில்லை.
லொறிகளில் குடிதண்ணீர் கொண்டு வந்து வழங்கப்படுகிறது. ஆனால் அது போதுமானதாக இல்லை. அப்பகுதியிலுள்ள சிறிய குளம் ஒன்றில் குறைந்தளவு தண்ணீரே குளிப்பதற்கு இருக்கிறது. அவர்களுக்கு குளிப்பதற்கு சோப் எதுவும் இல்லை. மலசலகூடங்களின் கூரைகள் பொலித்தீனினால் அல்லது அலுமினியத்தகடுகளால் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் மலசலகூடங்கள் போதுமானதாக இல்லை.
சிவில் உடையிலுள்ள பொலிசாரும் இராணுவத்தினரும் அங்கு சுற்றிக்கொண்டே இருக்கின்றனர். அவர்கள் மலசலகூடங்களைக் கூடப் பரிசோதிக்கின்றனர். குடில்களுக்கு வெளியே எவரும் நிற்க அனுமதிக்கப்படுவதில்லை. இளம் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர் இரவில் நித்திரை கொள்வதில்லை. தங்களுடைய மகனோ மகளோ கடத்தப்பட்டு விடுவார்கள் என அவர்கள் அஞ்சுகிறார்கள்.
இளைஞர்கள் யுவதிகளுடைய பெயர்கள் ஒலிபெருக்கியில் அழைக்கப்பட்டு அவர்கள் முகாமுக்கு வருமாறு அழைக்கப்படுகிறார்கள். அந்த இளைஞர்கள் விசாரணைக்குள்ளாக்கப்பட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிலர் மீளத் திரும்பி வருகிறார்கள், பலர் திரும்புவதேயில்லை. பெற்றாருக்குக் கூட அவர்கள் எங்கே கொண்டு செல்லப்படுகிறார்கள், ஏன் கொண்டு செல்லப்படுகிறார்கள், எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்று அறிவிக்கப்படுவதில்லை.

நன்றி: http://www.paristamil.com/


தமிழீழ கரும்புலிகளின் வரலாறு.

'ஒப்பிரேசன் லிபரேசன்" எனப்பெயரிட்டு வடமராட்சியில் இராணுவ நடவடிக்கை தொடங்கிய அன்று ஜே.ஆர் கொழும்பில் இலங்கை வங்கியில் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போது விடுதலைப் புலிகளை அழிக்கும் வரை இந்தப்போர் ஓயாது என்றார். அக்காலத்தில் லலித் அத்துலத் முதலி பேட்டி ஒன்றில் தீவிரவாதிகளைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்த காலம் போய்விட்டது.

 

இன்று போருக்கு அழைக்கும் காலம் நெருங்கிவிட்டது என்றார். இவ்விரு தலைவர்களின் செருக்கு நிறைந்த கூற்றை கப்டன் மில்லர் தன்னை ஒரு உயிராயுதமாக்கி முறியடித்தான். இதுவே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்து விட்டது. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் ஆக்கிரமிப்பு இராணுவமாக நிலை கொண்டிருந்தபோது அவ்வாறு இருக்க முடியாது என்ற செய்தியை மில்லரின் தாக்குதல் உணர்த்தி நின்றது.

 

வடமராட்சி நெல்லியடி மகாவித்தியாலத்தில் சிங்களப்படை குவிக்கப்பட்டிருந்தது. வடமராட்சியில் 'லிபரேசன் ஒப்பிரேசன்" இராணுவ நடவடிக்கையால் எழுந்த வெற்றியை சிங்கள இராணுவம் உருசி பார்த்துக் கொண்டிருந்தது. வடமராட்சி மக்கள் அகதிகளாக வெளியேறியிருந்தனர். சிங்களத்தலைவர்கள் இன்றுபோல் அன்றும் கொழும்பில் வெற்றி முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். நெல்லியடிப் படைத்தளத்தை அழித்து இந்த வீணர்களின் இறுமாப்பை அடக்க வேண்டுமென தேசியத்தலைவர் வே.பிரபாகரன் விரும்பினார். அது வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

 

நெல்லியடிப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு அனைத்தும் தயார்படுத்தப்பட்டன. அத்தாக்குதல் வீரனாக கப்டன் மில்லர் தேர்வு செய்யப்பட்டிருந்தான். சரியாக யூலை 5ஆம் நாள் இரவு 7.00மணி 3 நிமிடத்திற்கு கப்டன் மில்லருடைய வாகனம் முகாமிற்குள் மோதி வெடித்தது. நூற்றுக்கணக்கான இராணுவம் கொல்லப்பட்டும் பலநூறு படையினர் காயமடைந்தும் இருந்த அந்த வரலாறு எழுதப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் போரியல் வரலாற்றில் இவ்வாறான தாக்குதல் ஒன்று முதன் முதலாக நிகழ்த்தப்பட்டது.

 

கப்டன் மில்லரின் அந்த உன்னதமான தியாகத்திற்கு இலங்கை அடிபணிய நேரிட்டது. இத்தாக்குதலின் பின் ஜே.ஆர் சண்டே ரைம்ஸ்க்கு பேட்டி அளிக்கையில் நெல்லியடியில் புலிகளின் கரும்புலித் தாக்குதலுக்குப் பின் இனப்பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு சரிப்பட்டு வராது அரசியல்த் தீர்வு ஒன்று தான் ஒரேவழி என்ற முடிவை நான் எடுத்தேன். அதன் பின்னரே இந்தியாவுடன் பேச்சு நடாத்தி ராஐீவ் காந்தியுடன் ஒப்பந்தம் செய்தேன் என்றார். அப்போது சனாதிபதியாக இருந்த ஜே.ஆர் ஜெயவர்த்தனா உண்மையிலேயே பயந்து போனார். இதுபோன்ற தாக்குதல்கள் மேலும் நடந்தால் பேரழிவை இராணுவம் சந்திக்கும் என எண்ணினார்.
இந்தியாவிற்கு ஓடிப் போனார். புலிகளால் இருக்க முடியவில்லை. வாருங்கள் வந்து பிரச்சனையைத் தீருங்கள். என அப்போதைய பிரதமர் ராஐீவ் காந்தியின் காலில் வீழ்ந்தார். அதற்கு முன்னர் திம்பு பேச்சுவார்த்தையாகட்டும் அல்லது இந்தியா சிறப்புத் தூதுவர்களுடன் இலங்கை அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளாகட்டும் தமிழர்களிற்கு எந்த உரிமைகளையும் வழங்கத் தயாராக இல்லாமல் இருந்த ஜே.ஆர் இப்போது மட்டும் ஏதாவது கொடுக்கத் தயாராக இருந்தார். ஜே.ஆரை வழிக்கு கொண்டு வருவதில் கரும்புலி கப்டன் மில்லர் வெற்றி கண்டான்.

 

இந்த மாவீரர்களை எவ்வாறு நெஞ்சம் மறக்கும். இதுவரை 379கரும்புலிகள் வீரகாவியமாகியுள்ளனர். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் புதிய திருப்பு முனையாக அமைந்தது கடற்புலிகளின் பிரவேசமாகும். அதிலும் கடற்கரும்புலிகளின் வரவு மேலும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தி நிற்கிறது. 1990ஆண்டு யூலை 10ஆம் திகதி தமிழீழக் கடற்பரப்பில் நன்கூரம் இட்டு நின்ற 'எடித்தரர்" என்ற ஆயுதக் கப்பல் கடற்கரும்புலிகளான காந்தரூபன், வினோத், கொலின்ஸ் ஆகிய வீரர்களால் தகர்க்கப்பட்டது. இதில் எதிரிகளுக்கு பெரும் உயிரிழப்பும், ஆயுத தளபாட இழப்பும் ஏற்பட்டது.

 

இதுபோன்று 1991வைகாசி 4ஆம் நாள் எஸ்.ஐ.என்.எஸ் அபிதா என்ற கப்பல் கடற்கரும்புலிகளான சிதம்பரம், ஜெயந்தன், ஆகிய வீரர்களால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இது சிறிலங்காக் கடற்படைக்கு மட்டுமல்லாது அரசிற்கும் ஒருபெரும் நெருக்கடியைக் கொடுத்தது. இது அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஐயரத்தினவிற்கு விழுந்த அடியாகக் கொள்ளலாம் 1988, 1989ஆண்டுகளில் ரோஹணவிஐய வீர , உபதிஸ்ஸ திஸாநாயக்கா போன்ற ஜே.வி.பி தலைவர்களை அழித்தது போல விடுதலைப் புலிகளின் தலைவர்களையும் கைது செய்து அழித்திடுவேன் என ரஞ்சன்விஐயரத்தினா கூறியிருந்தார்.
இந்தக் கடற்புலிகளின் தாக்குதலுக்குப்பின் ரஞ்சன்விஐயரத்தினா பத்திரிக்கையாளர்களிடம் சாவுக்கஞ்சாத விடுதலைப்புலிகளின் தொடர்தாக்குதல்களால் சிறிலங்காப் படைகளுக்கு பெரும் தாக்குதலை ஏற்படுத்துகிறது என்றார். தேசிய விடுதலைப் போராட்டத்தில் மகளிர் பங்கு இன்று முக்கியத்துவம் பெறுகிறது. 1984ஆம் ஆண்டு தொட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண் போராளிகளை பின் களப்பணிக்கு உள்வாங்கிக் கொள்ளப்பட்டது அதற்கான கட்டமைப்பு இருந்தது. முதல் பொறுப்பாளராக மேஐர் சோதியா விளங்கினார். 1987அக் 10 அன்று இந்திய இராணுவத்துடனான தற்காப்புச் சமரில் 2ஆம் லெப் மாலதி வீரச்சாவடைந்தார்.

 

இவர் மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் இவரது நினைவு நாளையே பெண்கள் எழுச்சி நாளாக தமிழீழத் தேசியத் தலைவரால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கப்டன் அங்கயற்கண்ணி கடலில் எதிரிகளை அழித்து காவியமானவர் இவரே முதற்பெண் கடற்புலியுமாவார். இவர்களை தமிழினம் மறக்குமா? இதுவரை 4894 மகளிர் மாவீரர்களையும் நெஞ்சங்களில் நிறைந்துள்ளனர். 3ஆம் கட்ட ஈழப்போர் 19ஏப்பிரல் 1995 அன்னை பூபதி நினைவு நாளன்று தொடங்கியது. சமாதானத்தை கூறி ஆட்சியைப் பிடித்தவர் ஆனால் பதவிக்கு வந்தவுடன் இராணுவத் தீர்வே ஒரே வழிஎன போர் தெடுத்தவர்கள் இவர்களின் காலத்தில் புலிகள் மிகப் பெரும் வளர்ச்சியைப் பெற்றார்கள்.

 

18.07.1996 அன்று ஓயாத அலைகள் 1 எனப்பெயரிட்டு முல்லைத்தீவு கூட்டுப் படைத்தளம் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு முற்றாக அழிக்கப்பட்டது. 1100 படையினர் கொல்லப்பட்டதாக வெளிவுவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார். இத்தொகையை விட இன்னும் கூடுதலான படையினர் கொல்லப்பட்டனர் என்ற கருத்தும் உள்ளது. இத்தாக்குதலை முறியடிக்க அளம்பிலில் சிங்களப் படை இறக்கப்பட்ட போதும் அது அழிவையே சந்தித்தது. விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச அரங்கில் பெரும் மதிப்பை ஏற்படுத்தி இருந்தது.

 

ஓயாத அலைகள் 1 இல் 315வேங்கைகள் வீரச்சாவை எய்தினர். இந்த வீரர்களை எப்படி மறப்போம். எதிரியின் போர் வெறி அடங்காத நிலையில் ஜெயசிக்குறு தொடங்கியது. 1997.05.13 அன்று தொடங்கி 18மாதங்கள் நடந்தன. ஏ 9 வழியில் வேலி அமைப்பதே இராணுவத் திட்டம் இத்திட்டத்தை விடுதலைப் புலிகள் 6 நாட்களில் முறியடித்தனர். இராணுவத்திற்கு பேரிழப்பு ஏற்பட்டிருந்தது. இந்த முறியடிப்புத் தாக்குதலில் 2146 விடுதலைப் புலிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்திருக்கிறார்கள்.

 

இம் மாவீரர்களின் அற்பணிப்பு காலத்தால் அழிக்க முடியாதவை. சத்ஜெய 1, 2 இராணுவ நடவடிக்கை மூலம் பரந்தன் -கிளிநொச்சியை வன்பறிப்புச் செய்த இராணுவத்தை ஓயாத அலைகள் இரண்டின் மூலம் விடுதலைப் புலிகள் முறியடித்தனர். 403 போராளிகள் உயிரை ஈகம் செய்துள்ளனர். மாங்குளத்தைக் கைப்பற்றி கிளிநொச்சியை வந்தடைய முற்பட்ட வேளை ஓயாத அலைகள் 2நடந்து முடிந்தது. இராணுவத்திற்கு உளரீதியான பின்னடைவை ஏற்படுத்தின. இதன் காரணமானவர்கள் இந்த மாவீரர்களே.

 

ஓயாத அலைகள் 3 ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையால் 30,000 இராணுவம் ஈடுபட்டிருந்தது. அது 18 மாதங்கள் விழுங்கியிருந்தது. ஆனால் ஓயாத அலைகள் 3 இல் விடுதலைப் புலிகள் மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு 6 நாளில் முடிவுக்குக் கொண்டு வந்தார். 1999 நவம்பர் 1 தொடங்கியது. 1336வேங்கைகள் வீரச்சாவடைந்தனர். விடுதலைப் போராட்ட களநிலைகளில் ஓயாத அலைகள் 3 இன் வெற்றி என்பது தமிழ் மக்களிற்கு மிகுந்த உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி நின்றது. இம்மாவீரர்கள் என்றும் நினைவில் கொள்ளத் தக்கவர்கள். இலங்கைத் தீவில் இரு இராணுவக் கட்டமைப்பின் இராணுவ சமநிலையிலும் இது மாற்றத்தை உண்டாக்கியது.

 

விடுதலைப் புலிகள் சார்பான இராணுவ வலு அவர்களுக்கு சாதகமானதாகவே எழுந்து நிற்பதாகவே உலகம் கருதியது. இராணுவ ஆய்வாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்திய மற்றுமொரு தாக்குதல் தரையிறக்கத் தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் 3 இன் தொடர்ச்சியாக டிசம்பர் 12 வெற்றிலைக்கேணி, புல்வெளி போன்ற பகுதிகளில் இராணுவ முகாம்கள் புலிகளிடம் வீழ்ந்தன. 1999 டிசம்பர் 17அன்று பரந்தனும், தெற்கு ஆனையிறவும் வீழ்ந்தன. இதனைத் தொடர்ந்து சில இராணுவத் தந்திரோபாயங்களைக் கையாண்டு ஆனையிறவு வடக்கே இயக்கச்சியை 2000 ஆம் ஆண்டு ஏப்பிரல் 22அன்று கைப்பற்றினர் 2000.04.23 அன்று ஆனையிறவு புலிகளிடம் வீழ்ச்சியடைந்தது.

 

இந்த ஆனையிறவைக் கைப்பற்ற புலிகள் அதிக விலை கொடுத்துள்ளனர். இதற்கு அரிய தியாகம் செய்த மாவீரர்களை மறப்போமா? 25.04.2001இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தீச்சுவாலை இராணுவ நடவடிக்கை முறியடிப்புச் சமரில் புலிகள் வெற்றிவாகை சூடினர். அப்போது இராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்பே அவர்களை அமைதிவழிக்கு திரும்ப வேண்டி ஏற்பட்டது. அதற்குக் காரணமாக 141 வேங்கைகள் தங்களை ஈகம் செய்திருக்கிறார்கள். இதற்குப் பின் சந்திரிக்கா அரசின் இராணுவத் தோல்விகளால் தென்னிலங்கையில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. அந்த அரசியல் மாற்றங்கள் கூட தமிழர்களிற்கு எதுவும் தந்துவிடவில்லை. சர்வதேச அனுசரணையோடு நோர்வேயின் சமரசத்துடன் அரசு- புலிகளிடையே போர்நிறுத்த உடன்பாடுகைச்சாத்திடப்பட்டத
 
அதனைக்கூட நிராகரித்துவிட்டு மஹிந்தராஐபக்ச போர் புரிகிறார். இதன்நடுவே இந்தப் போரை தமிழ் மக்கள் எதிர் கொண்டுள்ளனர். விடுதலைப் புலிகள் இராணுவத்தின் முன்னேற்ற முயற்ச்சியை முறியடிக்க தற்காப்புச் சமரில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் மக்களின் விடுதலைக்காக தனது இன்னுயிரை போராளிகள் வழங்கி வருகின்றனர். இந்த வீரர்களின் இலட்சியக்கனவு ஒருநாள் நிறைவேறும்.
இந்நேரத்தில் கடந்த ஆண்டில் அனுராதபுர கூட்டுப்படைத்தள தாக்குதலில் 23கரும்புலிகள் செப்டெம்பரில் வவுனியா படைமுகாம் தாக்குதலின் 10கரும்புலிகளும் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்திருக்கிறார்கள். இவர்கள் இப்போதும் எம்மனதில் நிற்கிறார்கள். இந்த வேளையில் போரின் அனைத்து வழிகளிலும் நம்முடன் நின்ற பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வனும், பிரிகேடியர் பால்ராஐ்சுக்கும் இந்தப் போரில் வீரகாவியமான அனைத்துப் போராளிகளுக்கும் இந்த மாவீரர்கள் நாளில் எங்கள் வீரவணக்கத்தை வழங்கி நிற்போம். இந்தத் தேசம் விடியும் என்ற கனவுடன் சென்ற அந்த மாவீரர்களின் இலட்சியத்தைப் பின்தொடர்வோம்.


யுத்த துரோகம்! -ஜெகத் கஸ்பர்

ஆயிரம் வீரர்கள் தீயினில் போயினர்
ஆயினும் போரது நீறும், புலி
ஆடும் கொடி நிலம் ஆறும்.
பேயிருள் சூழ்ந்திடும் கானகம் மீதினில்
பாசறை ஆயிரம் தோன்றும், கருப்
பைகளும் ஆயுதம் ஏந்தும்.
மத்தளம், பேரிகை, கொட்டு புலிப்படை
மாபெரும் வெற்றிகள் சூடும், அந்த
சிங்கள கூட்டங்கள் ஓடும்.
-இணையத்தில்இன்று காலை நான் கண்ட கவிதை இது. எழுதியவர் புதுவை இரத்தினதுரையாக இருக்க லாம். படித்துச் சிலிர்த்து நின்ற வேளை தொலைபேசி அழைப்பொன்று வந் தது. கடந்த நான்கு நாட்களாய் தொலைபேசிய அந்த முக்கியமான வரை தொடர்பு கொள்ள நூறு முறையேனும் முயன்று மனக் களைப்புற்றிருந்தேன். களநிலை பற்றின பொய்யும் புனைவுமிலா உண்மையை தரவல்ல நிலையில் உள்ளவர் அவர். வானகத்தின் தூதுவன் நேரிடை வந்தது போல வந்தது அந்த அழைப்பு. அவர் சொன்னார்: ""கவலை ஏதும் வேண்டாம். தலைவர் பாதுகாப்பாக உள்ளார். அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக உறுதி செய்யப்பட்டபின் உலகோடு அவர் பேசு வார்''. தமிழீழ எல்லைகளின் காவலன் நல் லூர் முருகனும் எனது லூர்து மாதாவும் துணையிருந்தார்கள். படித்த கவிதை சந்தம் கட்டி என் மனதில் பாடலாய் துள்ள லாயிற்று. "பேயிருள் சூழ்ந்திடும் கானகம் மீதினில் பாசறை ஆயிரம் தோன்றும், கருப்பை களும் ஆயுதம் ஏந்தும்'.
எட்டு பத்து ஆண்டுகளுக்கு முன் இதே புதுவை ரத்தினதுரை எழுதிய கவிதையின் மறக்க முடியாத சில வரிகள் நினைவு வெளியில் கை வீசி நடந்தன.
""வா பகையே... வா...
வந்தெம் நெஞ்சேறி மிதி.
பூவாகவும் பிஞ்சாகவும் மரம் உலுப்பிக் கொட்டு.
வேரைத் தழித்து வீழ்த்து.
ஆயினும் அடிபணியோம் என்பதை மட்டும்
நினைவில் கொள்!''
புதுவை ரத்தினதுரையின் கவிதைகள்பால் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது 1995-ம் ஆண்டு. அதிபர் சந்திரிகா குமார துங்கே யுத்த வெறி கொண்டு முப்படைகளையும் அவிழ்த்து விட்டு யாழ்ப்பாணத்தை சிறைப்படுத்திய காலம். யாழ்ப்பாணத்தில் சிங்க முத்திரை பொறித்த சிங்களக் கொடியை ஏற்ற அன்றைய ராணுவ அமைச்சர் அனுருத்த ரத்வத்தே வந்தார். அக்கொடியை சுமந்து வந்தது யாழ்ப்பாணத்து மேயராக இருந்த தமிழர். பெயர் மறந்துவிட்டேன். வடதமிழீழத்து இதயமாம் யாழ்ப்பாணத்திற்கு சிங்கக் கொடி சுமந்து வந்த மேயர் மீது புதுவைக்குச் சீற்றம். நீண்ட கவிதையொன்று எழுதியிருந்தார். இரண்டு வரிகள் மட்டும் அடித்த ஆணிபோல் நினைவில் பதிந்து நிற்கின்றன.
""மேயர் அவர்களே
நீவிர் சிங்கக் கொடியை சுமந்து வந்தபோது
மின்னும் ஜரிகை கரை கொண்ட
பட்டு வேஷ்டி கட்டி வந்ததாய் அறிந்தேன்.
கக்கூஸ் வாளிக்கு தங்க முலாம் பூசுவதில்லையே?!
-அறுபதாயிரத்திற்கும் மேலான அப்பாவித் தமிழ் உயிர்களை கொன்றழித்து, இரண்டரை லட்சம் பேரை சொந்த மண்ணில் அகதிகளாக்கி, முப்பதாண்டு கால விடுதலைப் போராட்டத்தை நீசத்தனமாய் நிர்மூலம் செய்த ராஜபக்சே கும்பலுக்கு வன்னிப்பரப்பில் சிங் கக் கொடி தூக்க நாக்கை தொங்கவிட்டுக் காத்திருக்கும் ஆனந்தசங்கரி வகையறாக்கள் ஒரு கணம் நினைவுக்கு வந்தபோது புதுவையின் கவிதையும் உடன் சேர்ந்து வந்தது. ""கக்கூஸ் வாளிகளுக்கு தங்க முலாம் பூசுவதில்லையே...?! ராஜபக்சேக்களுக்கு லாவணி பாடும் ஆனந்த சங்கரிகளே இருக்கிறவரை ஏதேனும் நாற்காலியில் இருந்துவிட் டுப் போங்கள். தங்க முலாம் பூசிய கக்கூஸ் வாளிகளுக்கும் கருணை செய்து ஓய்வூதியம் தர வேலுப்பிள்ளை பிரபாகரன் விரைவில் வருவான். உங்களுக்காக வரவில்லையென்றாலும் முல்லைத்தீவு முற்றுகையின் கடைசி நாள் நடந்த மன்னிக்க முடியா துரோகத்திற்கு நீதி செய்யவேனும் அவன் வருவான்.
கடைசி நாளில் -அதாவது கடந்த சனிக்கிழமை நடந்தது இதுதான். வேலுப்பிள்ளை பிரபாகரனும் எதிர்காலத்தில் போராட்டத்தையும் இயக்கத்தையும் மீள் கட்டமைப்பு செய்வதற்கு முக்கியமானவர்களான சில தளபதியர்களும் பாதுகாப்பாக அகன்றபின் களத்தின் இறுக்கம் தணிகிறது. கை ஒடிந்து, கால் முறிந்து, உடலின் சில பகுதிகள் சிதைந்து ரத்தம் வழிந்தே பாதி செத்துப் போன சுமார் 12,000 அப்பாவி மக்களையும், அவ்வாறே காயமுற்ற சுமார் 3,000 போராளிகளையும் எப்படியேனும் அப்புறப்படுத்திக் காப்பாற்றும் முடிவினை விடுதலைப்புலிகள் எடுக்கி றார்கள். கடற் புலித் தளபதி சூசை மதுரையில் ஒருவரோடு தொடர்பு கொண்டு காயமுற்ற மக்களையேனும் பாதுகாப்பாய் வெளியேற்ற 48 மணி நேர சண்டை நிறுத்தம் வேண்டுகிறார்.
மதுரை தமிழரோ உணர்வாளர் சுப.வீ. என்ற சுப.வீரபாண்டியன் அவர்களை மன்றாட சுப.வீ. அவர் கள் கனிமொழி அவர்களின் கருணையை கேட்கிறார். கனிமொழி அவர்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கியமான ஒருவரோடு பேச "அதிகாரப்பூர்வமற்ற', ஆனால் யதார்த்த மான முடிவொன்று தரப்பட்டது. ""விடுதலைப் புலிகளின் அனைத்துலக பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாபன் கொழும்பிலுள்ள இந்திய தூதுவருக்கு ஆயுதங்களை ஒப்படைக்க தயாராக உள்ளோம் என்ற முடிவினை எழுத்துப் பூர்வமாய் தொலைநகல் (எஆல) வழி உடனே தெரிவிக்க வேண்டும். மற்றவையெல்லாம் இந்தியா பார்த்துக் கொள்ளும்''. இரவு 10 மணி ஆயிற்று. இந்தக் கட்டத்தில் நானும் இணைந்தேன். லண்டனிலுள்ள எனது நண்பர்கள் மூலம் செல்வராஜா பத்மநாபன் அவர்களுக்கு தகவல் சொல்லப்பட அவரும் மின்னல் வேகத்தில் இயங்கினார். ""இந்தியாவிடமே நாங்கள் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருக்கிறோம். அது சாத்தியமில்லையென்றால் ஐ.நா. ஏற்பாட்டில் ஒப்படைக்கிறோம்'' என்ற முடிவை விடுதலைப் புலிகள் இரவு 11.50-க்குத் தெரிவித்தார்கள். கனிமொழி தயக்கத்துடன் காங்கிரஸ் பெரியவரை தொடர்பு கொள்ள அவரும் விழித்தே இருந்தார். ""கால அவகாசமில்லை. இந்தியாவிடம் சரணடைவதற்கான சாத்தியப்பாடுகள் இப்போது இல்லை. இலங்கை ராணுவத்திடமே சரணடைவதுதான் இப்போதைய நெருக்கடி நிலையில் ஆகக் கூடியது'' என்கிறார் அப்பெரியவர்.
மக்களை காக்க வேண்டி இலங்கை ராணு வத்திடமே ஆயுதங்களை ஒப்படைக்கும் முடிவினை சனி நள்ளிரவு புலிகள் எடுத்தார்கள். ஞாயிறு காலை கொழும்பு இந்திய தூத ரகத்தின் உதவியுடன் இலங்கைத் தமிழர் பாராளுமன்ற உறுப்பினர் கஜன் பொன்னம்பலம் ராஜபக்சேவோடு பேச்சுவார்த்தை கள் நடத்த முடிவொன்று ஏற்படுகிறது. "முல் லைத்தீவு களத்தில் நிற்கும் புலிகளின் தளபதிகள் வெள் ளைக்கொடி பிடித் துக் கொண்டு இலங் கை தளபதிகளிடம் வரட்டும். ஆயுதங் களை ஒப்படைப்பது, காயமுற்றோரை அப்புறப்படுத்துவது தொடர்பான நடைமுறை ஒழுங்குகளை அவர்களே கலந்து பேசி முடிவு செய்யட்டும்' என்பதாக அந்த ஏற்பாடு.
இம்முடிவினை ராஜபக்சே அலுவலகம் ராணுவத் தலைமைக்கும், முல்லைத் தீவு கட்டளைத் தளபதிகளுக்கும் அறிவிக்கிறது. இந்த ஏற்பாடுகள் முடியவே ஞாயிறு இரவாகி விடுகிறது.
ராஜபக்சேவுடன் நடந்த விவாதங்களையும் முடிவுகளையும் கஜன் என்ற கஜேந்திரன் பொன்னம்பலம்... செல்வராஜா பத்மநாபனுக்குத் தெரிவிக்க முல்லைத்தீவு களத்தில் நின்ற விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவுப் பொறுப்பாளர் நடேசனுடன் இவற்றை திங்கள் அதிகாலை 2.30 மணிக்கு விவாதிக்கிறார் பத்மநாபன். யுத்தம் 500 மீட்டர் அருகில் வந்த போதும் கூட உலகோடு உரையாடும் செயற் கோள் வசதிகளை விடுதலைப்புலிகள் கொண்டிருந்தார்கள் என்பது ஒரு ராணுவ அரசியல் இயக்கமாக எத்துணை ஆழமாக வளர்ந்திருந்தார்கள் என்பதற்குச் சான்றாகத் தெரிந்தது. விடிந்ததும் நடேசன், சிறப்புத் தளபதி ரமேஷ் -இவர் முன்பு கருணாவின் துணை தளபதியாக இருந்தவர், புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் மூவரும் வெள்ளைக் கொடி ஏந்தி சிங்களத் தளபதியர்களை சந்திக்கச் செல்வ தாய் ஏற்பாடு.
வெடிபொருள் புகை கவிந்த முல்லைத் தீவு பரப்பு விடிந்தது. வெள்ளைக் கொடி ஏந்தி மூவரும் நடந்தார்கள். சிங்களத் தளபதியர்களின் கூடாரம் அருகே வந்தார்கள். ஏன், என்னவென்ற பேச்சின்றி சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பின்னர்தான் தெரிய வந்தது அவர்களைச் சுட்டுக் கொல்லும் உத்தரவை ராஜபக்சேவின் சகோதரனும் ராணுவ அமைச்சருமான கோத்தபய்யா ராஜபக்சே பிறப்பித்திருந்த சதி.
வெள்ளைக் கொடியேந்தி சரணடையவோ, பேச்சுவார்த்தை நடத்தவோ வருகிறவர்களுக்குத் தீங்கிழைப்பது யுத்தக் குற்றம். அனைத்துலக சட்டதிட்டங்கள் இதனை கடுமையாக வலியுறுத்துகின்றன. ஆனால் சிங்கள இனவெறி பிடித்தாடும் கோத்தபய்யாவை பொறுத்தவரை தமிழருக்காகப் பேச எவருமே உயிரோடு இருக்கக்கூடாது. நடேசனும், புலித்தேவனும் சரணடைந்து கைது செய்யப்பட்டாலும் அவர்கள் யுத்தக் கைதிகளாகவே நடத்தப்பட வேண்டும். நாளை அனைத்துலக ஏற்பாட்டில் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கும் போது புலிகள் தரப்பிலும் பிரதிநிதிகள் இருக்க வேண்டுமென உலக நாடுகள் நிச்சயம் வலியுறுத்தும். அத்தகு சூழலில் தகுதியோடு தமிழரை பிரதிநிதித்துவப்படுத்த எவருமே இருக்கக்கூடா தென்பதுதான் கோத்தபய்யாவின் கணக்கு. முக்கிய செய்தி என்னவென்றால் இந்தியா சொல் வதையோ, அண்ணன் ராஜபக்சே சொல்வதையோ கேட்பதற்கு கோத்தபய்யா தயாராக இல்லை என்பதுதான்.
கொடுமை அத்தோடு முடியவில்லை காயமுற்று பாதி உயிரோடு முனகிக் கிடந்த பத்தாயிரத்திற்கும் மேலான அப்பாவி மக்களை புல்டோசர்கள், செயின் புளக்-கள் ஏற்றிக் கொன்றுவிட்டு ஆதாரங் கள் ஏதுமின்றி அதிநவீன ரசாயனக் கலவைகள் ஊற்றி எரித்திருக்கிறார் கள். அவ்வாறே காய முற்றிருந்த சுமார் 3,000 போராளிகளையும் கரு ணை இரக்கமின்றி சுட்டுக் கொன்று வெறி தீர்த்திருக்கிறார்கள். வேறெதற் கும் இல்லையெனினும் கோத்தபய்யாவிற்கு நீதி சொல்லவேனும் வேலுப்பிள்ளை பிரபாகரன் வருவான், நிச்சயமாய் வருவான்.
மரணத்தின் நிழலில் வளர்ந்த அதீதப் பிறவி பிரபாகரன். மாத்தையா அவரது வாகனத்திற்கு அடியிலேயே வெடிகுண்டு பொருத்தினார். ஆனால் வெடிக்கவில்லை. ஏன் வெடிக்கவில்லை என்பதற்கு மனித அறிவு சார்ந்த விளக்கம் எதுவுமில்லை. சாவகச்சேரி நகர் வளைவு திறக்கும் நிகழ்வின் போது அவரோடு மூத்த தளபதிகள் யாவரதும் கதை முடிக்க மாத்தையா ஏற்பாடு செய்திருந் தார்.
விழாவுக்குப் புறப்படும் போது மோசமான வயிற்று நோவு வர விழாவிற்கு அவர் வரவில்லை. வந்திருந்தால் அன்றே அவர் வரலாறு முடிந்திருக்கும். திருநெல்வேலி தாக்குதலின் போது அவரது துப்பாக்கியில் ரவை தீர்கிறது. குனிந்து ரவை நிரப்புகிறார். புறத்தே மின்னல் தெரிகிறது. சக தோழர்களின் பறக்கிற ரவைகள் என நினைக்கிறார். காலையில் பார்த்தால் தான் குனிந்தபோதுதான் நின்ற இடத்திலேயே எதிரியின் ரவைகள் பாய்ந்து வந்திருக்கின்றன. அக்கணம் குனிந்திராவிட்டால் அன்றே அவர் முடிந்திருப்பார். ""கடவுள் காத்து வருகிறார் எனக் கருதலாமா?'' என 2002-ல் அவரிடம் கேட்டேன். ""இன்னும் நான் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கிறதென இயற்கை நினைக்கிறது போலும்'' என்றார். தமிழர்களே, நண்பர்களே, முல்லைத்தீவில் கதை முடிய வில்லை. புதிய கதை தொடங்குகிறது. உலகத் தமிழினம் இனி நடக்கப் போவது புதிய தடங்களில்.


இன்னொரு இறைவன் வரமாட்டான் எங்களைக் காப்பாற்ற – புலனாய்வுப் போராளியின் மடல்.

தமிழீழ தேசத்தின் இரத்த உறவுகள் உங்கள் எல்லோரையும் இந்த மடல் மூலமாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
p8 உங்களுடன் தற்போதய நெருக்கடியான சூழ்நிலையில் கொஞ்சம், எதிர்கால நிகழ்வுகளை நீங்கள் எப்படி அணுகப் போகிறீர்கள் அணுகிக் கொண்டு இருக்கிறீர்கள் என்பதையிட்டு எமக்கு சில கருத்து முரண்பாடுகள் உள்ளன. அவற்றைக் களைந்து நாம் சரியான பாதையில் பயணிக்க வேண்டிய கடமையும் இளையோரை தெளிவு படுத்த வேண்டிய நிலைமையும் எமக்கு ஏற்பட்டு இருக்கிறது.
நாம் இரண்டு மிகப் பெரும் நெருக்கடிக்குள் சிக்குண்டு இருக்கிறோம். அவற்றை நாங்கள் திறம்பட முறியடித்து மீண்டும் எங்கள் ஊர்களுக்கு திரும்பிப் போவோம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. நீங்களும் அந்த நம்பிக்கையில் இருப்பீர்கள் என்பது எமக்குத் தெரியும்.
ஒன்று சர்வதேச நெருக்கடி. மற்றையது உள்நாட்டு நெருக்கடி.
இதில் தற்போது பரப்பப்பட்டு வரும் வதந்திகள் உளவியல் சார்ந்த புலனாய்வு வேலைகளை சிங்கள இன வெறி அரசு, இந்தியா, தென்னாசியாவில் காலூன்ற நினைக்கும் மேற்கத்தேயங்கள், சீனா, றைசியா அமெரிக்கா போன்ற எல்லா அரசுசுகளும் தமது நலனையிட்டு சர்வதேச அரங்கில் நல்ல சிறந்த ஒரு நடிப்பாற்றலை வெளிப்படுத்துகின்றன.
நாம் அதை இறுதியில் வட்டுவாகல் வரை கண்டு களித்தோம். அதற்கு ஏற்றாற் போல் நாம் எங்களுடைய ஆக்ரோசமான கை தட்டல்களை இந்த நாடுகளுக்கு தெரிவிக்க கடமைப் பட்டு இருக்கிறோம் என்பதை உங்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
அத்தோடு எங்கள் இரத்த மரபணுக்களில் படிந்து இருக்கும் ஒன்று படாத குணமும் காட்டிக்கொடுக்கும் சாதுர்யமும் படைத்த இன சகோதரர்களுக்கும் எங்களின் பணிவான நன்றிகளை தெரிவிக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
ஏனெனில் இவர்கள் எல்லோரும் சீறுந் தமிழனின் உண்மையான நிலையை தமிழனுக்கு உணர்த்தி இருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு நாம் கடமைப் பட்டிருக்கிறோம். நாம் மிகவும் இறுமாந்து இருந்தோம். அந்த இறுமாப்பை சிதறடித்து இப்போ ஒரு குற்ற உணர்வை எல்லா தமிழனுக்கும் பரிசளித்து இருக்கிறார்கள்.
நாம் ஒரு உண்மையை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். சிங்களவன் முழு உலகையும் கொண்டு எம்மை தோற்கடித்து இருக்கிறான். அந்த இறுமாப்பு அவனிடம் நிறையவே உண்டு. அதை நாம் அனுபவித்து அதன் பின்பு தான் உங்களுக்கு இப்படி ஒரு மடலை எழுதக் கூடிய நிலைக்கு நாம் வந்தோம்.
வட்டுவாகல் தாண்டும் போது வரவேற்றவர்களில் நான் ஒரு சீக்கிய இந்திய தளபதியைக் கண்டேன். சிறிது தூரத்தில் சிங்களப் படை சிப்பாயின் சீருடையில் ஒரு வெள்ளை இன அதிகாரியை சந்திக்க நேர்ந்தது. கள முனைகளுக்கு அப்பால் நான் கண்ட முதலாவது வேற்று நாட்டு படை அதிகாரிகளில் இவர்கள் என்னை கவர்ந்தார்கள்.
ஏனெனில் மோட்டார் எறிகணை வீச்சுக்குள் இருந்தார்கள். வரும் போது ஒர் சிங்கள இராணுவத்தினர் “ LTTE செல் அடிக்கப்போகுது வேகமாக செல்லுங்கள்.” என கட்டளை வழங்கிக்கொண்டு இருந்தான். LTTE யின் செல்லை நினைத்தால் தங்களுக்கு தலையிடி வருவதாக மேலதிக தகவலையும் சொல்லிவைத்தான். ஆனால் துரதிஸ்டவசமாக அவனுக்கு தலையிடி கொடுக்க எம்மிடம் செல்கள் கையிருப்பில் இருக்கவில்லை என்பதை அவன் எப்படி அறிவான்?
வரும் போது நந்திக் கடலுக்கும் பெருங்கடலுக்கும் இடைப்பட்ட ஒடுங்கிய பகுதிகளில் நான் அதிக இராணுவத்தைக் காணவில்லை. ஆனால் செல் மட்டும் மலையாக மக்கள் மீது பொழியப்பட்டு கொண்டே இருந்தன. மக்களின் வெளியேற்ற பாதையை படம் பிடிக்க 3 வேவு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டு அந்த இடங்களை 81 மோட்டார்களும் 5 இஞ்சி செல்களும் நிரையாக தொடர்ச்சியாக வீசிக் கொண்டு இருந்தார்கள். ஒரு மனிதனின் இடுப்புக்கு குறிவைத்து சுடப்பட்டும் நீண்ட தூர சுடகலன் பிரயோகம் நடை பெற்றுக் கொண்டு இருந்தது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டை தாண்டிய மக்களை விளையாட்டாக சினைப்பர் துப்பாக்கியாளர் இடையிடை சுட்டுக் கொண்டே இருந்தனர்.
சரணையடைய கைகளை தூக்கிய விடுதலைப்புலிகள் சுடப்பட்டனர். நடக்க முடியாமல் உயிரைக் காப்பாற்ற பாதைகளில் அரக்கி அரக்கி வந்தவர்களில் அநேகமானவர்கள் சுடப்பட்டனர். ஒரு சிலருக்கு வீதிகளில் வீசிச் சென்ற சயனற் வில்லைகள் கொடுக்கப்பட்டது.
இதில் குறைந்த அளவானோர் தப்ப முடிந்தது. பங்கர்களில் வெளியேற முடியாமல் இருந்த வர்கள் புளுடோசர்களால் அப்படியே மூடப்பட்டனர். இதில் ஆண் பெண் வேறுபாடு பார்க்;கப்படவில்லை.
ஒரு சிலர் தப்பி வரும் நேரத்தில் அங்கு நின்ற இராணுவ வீரர்களின் மன நிலைதான் அவர்களின் தலை விதியை தீர்மானித்தன. எமது மக்கள் எல்லோரும் இராணுவ பயிற்சி பெற்ற மக்களாக இருந்த காரணத்தினால் இந்தப் படுகொலைகளில் இருந்து தப்ப பெரிதும் உதவின என்பதை இராணுவம் கூட ஏற்றுக் கொள்ளும்.
இறுதி நாளில் மட்டு;ம் சுமார் 6000 மக்கள் கொல்லப்பட்டனர்;.
மொத்தமாக இந்த யுத்தத்தில் 50000 பேர் வரை படு கொலை செய்யப்பட்டு 150000க்கு மேற்பட்ட மக்கள் காயப்படுத்தப்பட்டு 25000க்கும் அதிக மானவர்களை ஏதோ ஒரு வித்தில் ஊனமாக்கப்பட்டனர்.
எங்களின் இறுதி நிலப்பரப்புக்குள் நடந்து போக இடமில்லை. ஓரே மக்கள். அதற்குள் பிணங்கள் கவனிப்பாரற்றுக் கிடந்தன. மலங்களிக்க கூட ஒரு இடமில்லாத நிலைமை. எல்லாமே வெளிப்படையாக நடந்தேறின. யாரும் யாரையும் பார்க்கும் நிலைமையில் இல்லை.
தமிழன் வாழ்வியலில் மறக்கப்படமுடியாதது ஒன்று. மிகப்பெரும் கடனை உலக நாடுகள் சிங்களவனுக்கு கொடுத்தது. (பணமும் ஆயுதமும்.) சிங்களவன் எமக்கு கொடுத்தது மரணமும் ஓலங்களும்.
இதை நான் எந்த திரைப்படத்திலும் பார்க்கவில்லை. இரண்டாம் உக யுத்தம் கூட இவ்வளவு குறகிய கால இனப் படுகொலையை ஒரே நேரத்தில் நிகழ்த்தவில்லை என நான் நினைக்கின்றேன்.
ஆனால் எமது மக்கள் இறுதிவரை எம்முடன் நின்று எம்மைப் பலப்படுத்தினார்கள். இப்போது அவர்கள் எங்களாலேயே ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். இதை சர்வதேசம் திறம்பட செய்தது.
எம்மை போரிட செல்ல விடாமல் ஒரு தீர்வை எமது மக்களுக்கு நாட்டை பெற்றுத்தருவோம் என மறைமுக வாக்குறுதிகளும் தமிழ் மக்களின் நண்பர்கள் போன்ற தோற்றத்தையும் காட்டி நாம் இறுதியில் ஏமாற்றப்பட்டோம். இதை தமிழர் பரம்பரை உள்ளவரை மறக்க முடியாது.
தமிழ் மக்கள் செய்த ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் பிரயோசனம் அற்றவையாக்கப்பட்டு புலம் பெயர் தமிழர்கள் ஏமாற்றப்ட்டார்கள். அதை விட கொடுமை சொந்த நாட்டில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த எந்த தமிழ் உறவுகளும் வாய் கூடத் திறக்கவில்லை. அந்த அளவுக்கு அவர்களுக்கு உயிர் பயத்தை ஊட்டி இருந்தான் சிங்களவன்.
எனக்கு ஒரு சந்தேகம். நாம் சரணடையும் பரம்பரையில் வந்தவர்கள் அல்லவே. எப்படி 10000க்கும் மேற்பட்ட புலிகளை சரணடையச் செய்ய முடிந்தது என்பதே. அதற்கான விடைகளை நீங்கள் நிட்சயம் அறிந்து கொள்ள வேண்டும்;. அதற்கான ஆரம்ப வித்து தூவப்பட்டது சமாதான உடன்படிக்கையில் என்பதே.
36 வருடங்களாக போராடிப் போராடி எங்கள் மக்களும் போராளிகளும் சோர்வடைந்து இருந்தார்கள் என்பது உண்மைதான். அதனால் எல்லோரும் ஓர் போர் நிறுத்தத்தை விரும்பியது என்னவோ உண்மை ஆனால் அதுவும் சர்வதேச நிர்ப்பந்தத்தில் தான் என்பதை உலகே அறியும்;.
சமாதானத்திற்கு முன் வீரனாக இருந்தவன் எப்படி கோழையாக மாற்றப்பட்டான் என்பது மிகவும் சுவாரஸ்சியமானவை.
சர்வதேச பாணியில் கால அளவைப் பார்த்து எல்லோருக்கும் திருமணங்கள்.
சர்வதேச இராணுவம் என கற்பனை பண்ணி எல்லோருக்கும் மாதாந்த கொடுப்பனவுகள்.
வசதி வாய்ப்புக்கள். சட்லைற் ரீவிடிஸ்கள். மின்சாரம் அல்லது சோலார் சிஸ்ர வசதிகள். நவீன வாகனங்கள் அதை விட நவீன கலாச்சாரங்கள் எல்லாம் வெகு விரைவில் பரப்பப்பட்டன. இதைப் பல தொண்டு நிறுவனங்கள,; மதம் சார்ந்த நிறுவனங்கள் என்பன மக்களின் துன்பம் போக்க இலவசமாகவே செய்து வந்தன.
ஒரு சில நாடுகள் கொடுப்பனவுகள் வளங்க பணமும் கொடுத்தன என்பது திரைமறைவுக் காட்சிகள் அதிகமானவை.
உதாரணம் சமாதான காலத்தில் எம்முடன் எங்கள் மக்களுக்காக பாடுபட்ட ஒரு ஐ.நா தொண்டு நிறுவன தலைமை பெண் அதிகாரி பாம்பு கடிக்கு இலக்கானார். உடனே வந்தது இராணுவ கெலி. என்னடா கெலி வருகிறது எனப் பார்த்தால் உண்மையில் அவர் ஒரு இராணுவ மேயர் ஜெனரலுடைய மாணவி. ஆனால் அவருக்காக எங்கள் முகங்கள் கூட திறந்தே கிடந்தன. அவரும் எங்களுக்கென்றால் தனது வாகனத்தைக் கூட பரிசளிப்பார்.
திறமையான அப்படி ஒரு ஊடுருவல். இதே போல் பல நிறுவனங்கள் எம்மால் கண்டுபிடிக்கப்பட்டன.
நேர்மையாக அல்லது மக்களுக்காக சேவை செய்தார்கள் என்பவர்கள் இராணுவத்தால் வெளியேற்றப்பட்டார்கள்.
நாம் சாமாதானத்தின் பின் இராணுவ கட்டுப்பாட்டுக்கு பரப்புரைகளுக்கு போய் வந்தோம். அங்கு எம்முடன் தொடர்பை ஏற்படுத்திய பல வல்லவர்கள் ஒர சில இராணுவ வீரர்களை கொண்று தமது வீரப் பிரதாபங்களை எமக்கு காட்டுவார்கள். நாங்களும் அவரை விட்டால் ஆள் இல்லை என நினைத்து பழைய ஆட்களைப் பின்னுக்கு தள்ளி அவர்களை புதுப் புலிகளாக சேர்த்துக் கொள்வோம். அவர்களும் நம்பிக்கையாக நடந்து கொள்வார்கள். பின்பு முக்கிய தளபதிகளுடைய மெய்ப்பாது காவலர்கள் அல்லது முக்கியமான வேலைகளை செய்து கொண்டு இருக்கும் நபர்கள் ஆகிவிடுவார்கள்.
இது எங்கே கொண்டு விட்டது தெரியுமா?
ஒரு சிலர் ஆவணங்களுடன் கம்பி நீட்டினர்.
பல தோல்விகளுக்கும் காரணமே கண்டு பிடிக்கப்படவில்லை இன்று வரை.
ஒர சிலர் திறமையாக இறுதிவரை இருந்து இறுதியில் தப்பி வந்தனர்.
அவர்கள் எல்லோரும் இறுதியாக சரணடைய வரும் மக்களோடு வந்த விடுதலைப்புலிகளை பெயர் கூறி வரவேற்றனர்.
ஒரு சிலர் இராணுவ சீருடையில் இருந்தனர். தாம் இராணுவம் என வெளிப்படையாக அறிவித்தனர்; எங்கள் எல்லோருக்கும் கண்ணீரைப் பரிசளித்த தமிழ் உத்தமர்கள் இவர்கள்.
மலையகம் மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளை சேர்ந்த தமிழர்கள்.
நாமும் சிங்களம் தெரிந்த புலிகளைத்தானே விரும்பினோம். அதனால் இராணுவம் எமக்கு கொடுத்த அன்பளிப்பு அவர்கள்.
இப்படித்தான் ஒருவர் வைத்தியசாலைக்கு வந்தார். தொப்பியும் முகத்துக்கு கறுப்புத் துணியும் கட்டியிருந்தார். எல்லோரையும் பாடசாலை மாணவர்கள் போல் இருத்திவிட்டுக் கேட்டார். இதில் புலிகள் இருந்தால் சரணடையுங்கள் என. யாரும் எழும்பவில்லை. அவர் ஒரு சிலரை சுட்டிக்காட்டி நீ இந்த படையணியில் இருந்த நீ! உனது பெயர் இது எனக் கூற,
அவர்கள் இல்லை என மறுத்தனர். வந்தவன் ஒரு இகழ்ச்சி சிரிப்பின் பின் தொப்பியைக் கழட்டிக் கேட்டான். என்னைத் தெரியுமா? என்ன யாரும் பதில் சொல்லவில்லை. முகத் துணியைக் கழட்டினான். ஒரு சிலர் குனிந்து அழுதனர். பதில் சொல்ல மறுத்த பலர் தலை குனிந்து இருந்தனர். அவனே கதைக்கத் தொடங்கினான். நான் ஒரு இராணவவீரன். சமாதான காலத்தில் ஊடுருவியிருந்தேன். நான் “கேணல் சாள்ஸ்க்கு பொடிக்காட்டாக இருந்திருக்கிறேன்”;.
அவருக்கு கிளைமோர் அடித்துக் கொன்றதும் நான் தான் என்றும், சில திகதிகளில் வன்னிக்குள் பஸ் வண்டிகள் மீது நடந்த தாக்குதல்களையும் தான், தான் வழி நடாத்தியதாக சொன்னான். எப்படியிருக்கிறது?
உண்மையில் இதற்காக நாமெல்லோரும் வெட்கப்பட வேண்டும்; இதில் என்ன மனக்கஸ்டம் என்றால் எனது சிறப்புத் தளபதி கூட இதற்கு தப்பவில்லை. அவரும் இதில் விழுந்து விட்டார். அந்தப் பாவத்திற்கு நாமெல்லாம் காரணமாகவும் அமைந்தோம்; எனும் போது வெட்கமாக இருக்கிறது. இதற்கெல்லாம் எப்படி பிராயச்சித்தம் செய்ய போகிறாம் என்னும் கேள்வியும் எழுகிறது.
இதை நான் ஏன் உங்களுக்கு சொல்ல வருகிறேன் என நீங்கள் நினைக்கலாம். நாம் நிறைய இழந்து விட்டோம். எங்களின் கண்டுபிடிப்புகள், சொத்துக்கள், ஆயுதங்கள், நிலங்கள் அவற்றையெல்லாம் விட பல்லாயிரம் மாவீரர்கள்.
எல்லாமே விடுதலைக்காக. அவை தமிழீழம் என்ற ஒன்றுக்காக. அது மாறாது இறுதித் தமிழன் உள்ளவரை இந்த யுத்தம் தொடரும். இது துட்ட காமுனுவிற்கு முற்பட்ட காலத்திலிருந்து நடக்கும் பெரும் போர். இதில் நாம் தொடர்ந்து தோற்க முடியாது. தொடர்நு அடிமையாக வாழ முடியாது.
நாம் இந்த மண்ணில் பிறந்து வளர்ந்து வரும் சிங்களவனுக்கு முற்பட்ட ஒரு இனம.;; ஆனால் எம் முன்னோர் வரலாற்று சான்றுகளை எங்கள் சந்ததிக்கு விட்டு செல்லவோ அல்லது சேகரித்து வைக்கவோ இல்லை. இருந்தும் தென் இந்தியா புராண இதிகாசங்கள் மதம் சார்ந்த விடயங்கள் எங்களை இந்த மண்ணின் பூர்வீக குடிகளாக அறிவிக்கப் போதுமானவை.
நாம் இராணுவப் பரம்பரை. எங்களின் ஆட்சியில் இந்த முழு இலங்கையுமே இருந்தது. அதை எங்கள் ஆட்கள் தான் பின் நாளில் கூறு போட்டார்கள். அந்நியருக்கு அடைக்கலம் கொடுத்தார்கள். இறுதியில் அடிமைப்பட்டார்கள். இது வரலாறு. இந்த வரலாற்றை மாற்றப் புறப்பட்ட வீரன் தான் எங்கள் தலைவன். எமது அண்ணன். பிரபாகரன். அவரின் மறைவு தற்காலிகமா? அல்;லது நிரந்தரமானதா? என யாரும் இப்போ உங்களக்குள் சேறு பூசும் வேலைகளை செய்ய வேண்டியதில்லை.
அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவர் எதிர்காலத்தை நன்கு உணர்ந்து இருந்தார். எனவே அதற்கு களம் பதில் சொல்லும். எனவே என் அன்பு உறவுகளே இதைப் பற்றியோ அல்லது என்ன செய்யலாம் என்ற வாதப் பிரதிவாதங்களை தற்போது நிறுத்தி யார் தலைவர் என உங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்ளாமல் நீங்கள் ஏற்கனவே என்ன வேலைகளைச் செய்தீர்களோ அவற்றை இன்னும் திறமையாக இராஜதந்திர நகர்வுகளுடன் எம் புலம் பெயர் வாழ் தமிழர்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பது எங்கள் அவா.
அதன் மூலம் எமது விடுதலைக்கு மேலும் உரம் சேர்ப்பீர்கள் என நாம் நம்புகிறோம். ஏனெனில் உங்களின் இந்த தடுமாற்றம் எங்களைத் தோற்கடிக்க உதவிய நாடுகளுக்கு இன்னும் சந்தோசத்தையும் அவர்களின் ஏனைய வேலைகளை இலகுவாக்கவும் உதவுகின்றன.
அவர்களும் இதையே எதிர் பார்க்கிறார்கள்.
இதில் இந்தியாவும் அமெரிக்காவும் முக்கியமான பாத்திரங்கள். ஏனெனில் 16ம் திகதி வரை நாட்களைக் கடத்தி, எங்களை ஏமாற்றிய கைங்கரியம் இவர்களை முழுமையாக சாரும். இதற்கு ஏனைய நாடுகளும் உதவின. நாம் இறுதிவரை நம்பியிருந்தோம்.
ICRC இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இதில் பணி புரியும் வெள்ளையர்கள் இராணுவத்திற்கு வேலை செய்கிறார்கள் என்பதை நிருபிக்க முடியாவிட்டாலும் எமக்கு அந்த சந்தேகம் நிஜம் என்பது தெரிந்து இருந்தது.
உதாரணம் காயமடைந்த நோயாளர்களை ஏற்றிக் கொண்டு போகும் கிறீன் ஓசையன் கப்பலில் வரும் வெள்ளையினப் பெண் அதிகாரி வைத்தியசாலையில் வந்து எமது பிரதேச வைத்தியர்களுடன் ஒரு நாள் வாக்குவாதப்பட்டதை நான் நேரில் கண்டேன். காரணம் முந்நூறுக்கு மேற்பட்ட நோயாளர்களை ஏற்ற வந்ததாகவும் இப்போது நூற்றைம்பது வரையானோர் இருப்பதாகவும் கூறி ஓர் வெள்ளைப் பெண்மணி சண்டை பிடித்தார். ஏனெனில் கடும் காயக்காரர்களுக்கு மட்டும் நாங்கள் அனுமதியை வழங்கினோம்.
சிறிது நேரத்தில் வைத்திய சாலை வளாகத்தில் நின்ற படி அந்தப் பெண்மணி யாருக்கோ சற்லைற் தொலைபேசி மூலம் கதைத்தார். ஒரு சில நிமிடங்களிலேயே வைத்தியசாலையை அண்டிய பகுதியில் சுமார் 20, 30 எறிகணைகள் விழுந்தன. எல்லாமே தரப்பாள் வீடுகள். சிதறியவர்கள் போக, அன்று அந்தப் பெண்மணி 450 பேர் வரையில் ஏற்றிக் கொண்டு போனார். இது ஒரு வழி முறையாக மக்களை மீட்கும் இலங்கை இராணுவத்திற்கு iஉசஉ வழங்கிய ஒரு சிறு உதவி தான்.
அதை விட இரகசிய உள் நுழைவுகளுக்கு UN வாகனங்களில் கூட இராணுவம் பயன்படுத்திய சந்தர்ப்பங்கள் உள்ளன. ஆனால் இந்த நிறுவனங்கள் எங்களில் பிழை பிடிப்பதிலும் எங்களுக்க எதிராக மக்களை திசை திருப்புவதிலும் பெரும் பங்கை ஆற்றின.
பிபிசி றோவின் கைப் பொம்மையாக எங்களுக்கு எதிரான பிரச்சாரத்தை உலகெங்கும் முடுக்கி விட்டது. இதற்கு அமெரிக்காவும் விதி விலக்கல்ல.
பல நாடுகளுக்கு காலச் சந்தைகளில் ஆயதங்களை விற்கும் இதே அமெரிக்கா எங்களையும் வாழ விடவில்லை. தனது நலனுக்காக எதையும் செய்யும் அமெரிக்கா பல நாடுகளுக்கு சுதந்திரத்தையும் ஆயதங்களையும் பல நாடுகளை சூறாடியும் கொண்டு தனது விஸ்தரிப்பை செய்கிறது.
ஆனாலும் றைசியா சீனா போன்ற அமைரிக்காவிற்கு எதிரான நாடுகளும் எங்கள் மண்ணில் தமது பங்குக்கு இராஜதந்திர நகர்வுகளை செய்கின்றன. அமெரிக்காவை காலூன்ற விடாமல் தடுத்தும் வருகின்றன.
ஆனால் இப்போதைய காலூன்றலுக்கு உதவி, இலங்கை அரசுமட்டும் என நம்பி, எங்களைக் காட்டிக் கொடுத்து அமெரிக்கா எங்கள் பலரை, ஆயுதக் கொள்வனவு செய்தார்கள் எனப் பிடித்து உள்ளே போட்டு எங்கள் சர்வதேச வலைப் பின்னலையும் இலங்கை அரசிற்கு காட்டிக் கொடுத்து புலனாய்வு தகவல்களையம் வழங்கியது.
ஏனைய நாடுகளையும் தனது வழியை பின்பற்ற செய்து, புலம் பெயர் நாடுகளில் நிதி முடக்கம், ஆயுத கொள்வனவுகளைத் தடுத்தல். ஆதரவாளர்களை கைது செய்;தல் போன்ற வற்றை தான் விரும்பியபடி செய்கிறது. எங்களையும் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்தது அவர்களின் இராணுவ நலனில் எங்களை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் இன்னும் அமைரிக்காவுக்கு உண்டு.
அவர்கள் இப்போ கண் வைத்து இருக்கும் ஆட்கள் நீங்கள் தான். உங்களில் பலரை விடுதலைப்புலிகளின் பிரமுகர்கள் என இனம் கண்டபின் உங்களுடன் இப்போ பேச வேண்டும் என அழைப்பு விடுக்கப்படுகிறது. இதை இலங்கை அரசிற்கு வலியுறுத்தி வருகிறது. இது மிகவும் பெரிய ஒரு இராஜதந்திர சதி. இதில் தமிழ் மக்கள் கவனமாக இருந்து கொள்ள வேண்டும்.
இதே போல் தான் ஆயுதம் வாங்கினார்கள் என காட்டிக் கொடுத்தவர் ஒரு தமிழர். அவரையும் அவர் செய்த போதைப்பொருள் வியாபாரத்தையும் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டுமென்று அவர் காட்டிக் கொடுக்க வேண்டுமென கேட்கப்பட்டு, அவர் பின்பு அவர்களைக் காட்டிக்கொடுத்தார் என்பதை தகவலறிந்தவர்கள் சொல்கிறார்;கள்.
எனவே அமெரிக்காவும் வஞ்சகன். இந்தியாவும் வேண்டாம்; நாம் நாமாக இருப்போம் ஏனெனில் சமாதானத்திற்கு முன் யாராலும் எங்களை எடைபோட முடியாமல் இருந்தது. நாங்கள் ஒரு விடுவிக்கப்படாமல் இருந்த புதிர். எங்களைப் பார்த்து உலகம் வியந்தது. இதை சர்வதேசம் திட்மிட்டு சிதறடித்திருக்கிறது. நாங்கள் தோற்க காரணமானவை சில.
1. சமாதான உடன் படிக்கை.
2. சுனாமி
3. கருணா அம்மான் எங்களில் இருந்து பிரிந்து அரச கைபொம்மையானது.
4. பிரிகேடியர் தமிழ்ச் செல்வன் அண்ணையின் வீர மரணம்;
5. கேணல் சாள்ஸ் அண்ணையின் வீர மரணம்.
6. பிரிகேடியர் பால்ராஜ் அண்ணையின் வீர மரணம்.
என்பன மிக முக்கியமானவை.
இவற்றை எங்களால் உடன் மறு சீரமைக்க முடியாத படி போர் தொடங்கப்பட்டது. இதை இந்தியாவே நடாத்தியது. எல்லா வழிகளாலேயும் அடைத்து எங்கள் வயல் நிலங்களை எல்லாம் சூறையாடப்பட்டு, பின் ஆறுதலாக எங்கள் ஊர்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. இதை எதிர்த்து போரிட முடியாமல் எங்களுடன் திரை மறைவில் பேச்சு நடாத்தப்பட்டது. இறுதியில் மக்களுக்குள் ஊடுருவி மக்களை மாற்றும் முயற்சியிலும் இவர்களுக்கு ஓரளவு வெற்றியைக் கொடுத்தது.
ஏனெனில் நாம் நீண்ட பல வருடங்களாக எமது கட்டுப்பாட்டுக்குள் மக்களை சுதந்திரமாக வைத்திருந்தோம். எங்களின் ஆட்சியை எல்லோரும் மெய்ச்சினார்கள். களவுகள் கொள்ளைகள் இல்லை. எந்த நேரமும் யாரும் எங்கும் போய் வரலாம.;; கலியாணம் கச்சேரி பெருமையாக நடந்தன. வியாபாரம் கொடிகட்டிப்பறந்தது. மக்கள் வீடு வாசல்களைக் கட்டி வாழ்ந்தனர். மாணவர்கள் கல்வி பொழுது போக்கு என மெய்மறந்து இருந்தனர்.
எல்லோருமே விடுதலை இது தான் என இருந்தனர். சமாதானம் பலரை குடும்பஸ்தர்களாக மாற்றியது. பலர் வெளிநாடு போயினர். அல்லது வெளி மாவட்டங்களுக்கு போயினர். மீண்டும் யுத்தம் வரலாம் என நாம் சமாதான காலத்தில் முடிவெடுத்த நேரத்தில் யாரும் இதய சுத்தியுடன் போராட வர விரும்பவில்லை. காரணம் அவர்களுக்கு போராடவேண்டிய தேவை இருக்கவில்லை. எந்த துன்பமும் இல்லாதவன் ஏன் போராட வேண்டும்.
அதனால் கட்டாய ஆட் சேர்ப்பு நடை பெற்றது. இதைச் சாக்காக வைத்து பலர் பலவிதத்தில் மக்களுக்கும் எமக்கும் விரிசலைத் தோற்றினர். இதை எமது போராளிகள் பலர் செய்தனர் என்பதே மனவருத்தமான விடயம்;.
இறுதியில் நாங்கள் பிள்ளை பிடிகாரராக சர்வதேச அரங்கில் பிரச்சாரப்படுத்தப்பட்டோம். போராளிகளைக் கள முனைகளில் இருந்து ஓட, பெற்றோர் ஊக்கம் கொடுத்தனர். விளைவு எதிரி எங்கள் வயல்கள் தாண்டி, கிராமம், நகரம் தாண்டி, எங்கள் வாசல்களை தாண்டி எம்மைச் சுட்டுக் கொன்றான்.
ஆகவே இன்று நிலைமை அப்படி இல்லை. முகம்களில் வாழும் எங்கள் உறவுகள் கண்ணீரோடு வாழ்கிறார்கள். அவர்கள் இப்போ தங்கள் நிலையை, உயிர் தப்பி வந்ததை விட சொந்த மண்ணில் செத்துப் போய் இருக்கலாம் என்பது அவர்களின் இன்றைய எண்ணப்பாடு. கஞ்சியைக் குடித்தாலும் அவர்கள் அங்கு சுதந்திரமாக இருந்தார்கள். அவர்களுக்கு எறிகணைகளும் உணவுப் பட்டினியும் இல்லாவிட்டால் இன்று இந்த முகாம்கள் யாரையும் கண்டு இருக்காது.
அவர்கள் தங்கள் பிள்ளை குட்டிகளுடன் நிச்;சயம் சொந்த மண்ணுக்காக போராடியிருப்பார்கள்.
அவர்களின் இந்தப் போக்கை மாற்ற இலங்கை அரசு ஒர் உளவியலை பாவிக்கின்றது. எல்லாவற்றிற்கும் வரிசையில் நிற்கவைத்தல். (சாப்பாடு, மருந்து, குடி தண்ணீர் எல்லாம்). இதனால் மனிதனுக்கு அன்றாடம் சாப்பிடவே பெரிய பாடாக இருக்கும்போது அவன் வேறு எதைப் பற்றியும் யோசிக்;காமல் செய்யும் ஓர் உளவியல் போர்.
குளிக்க தண்ணீர் இல்லை. குடிக்கவும் அடிபாடு. நீண்ட வரிசையில் நின்று தான் நீரைப்பெற்று கொள்ள வேண்டும். மல சல கூடங்களுக்கு பாவிக்க போதமானதாக நீர் இல்லை. எல்லா இடமும் ஒரே நாற்றம்; வறண்ட களிதரையில் தண்ணீர் கூட வற்றாது. எனவே ஓரே சாக்கடை நாற்றம். எல்லோருக்கும் வயிற்றோட்டம், காய்ச்சல், செங்கண்மாரி வேறு நோய்களும்;.
மருத்துவத்திற்கு செல்ல பல கட்டுப்பாடுகள். போகவே முடியாது. அதற்காகவே புல் மோட்டையில் இருந்த இந்திய மருத்துவமனை வீணாக செட்டிகுளத்திற்கு மாற்றப்படுகிறது. 100 படுக்கைகள் கொண்ட மருத்துவ மனை முகாமுக்குள்ளேயே. இனி யாரும் வெளியில் மருந்துக்குக் கூட செல்ல முடியாது. இந்திய மருத்துவர்கள் உருவத்தவத்துடன் புலனாய்வும் செய்வார்கள். றோ தனது பங்கிற்கு ஆட்களை சேகரித்துக் கொள்ளும்;.
டக்ளஸ், கருணா, பிள்ளையான் போன்றோருடன் பான்கி மூனும் மற்றய நாடுகளும் இந்த உலகிலேயே மிகப் பெரிய சிறையைக் கவனித்துக் கொள்வார்கள். அமெரிக்கா அதற்கு வாழ்த்துச் சொல்லும்;. இதைப்போல வசதிகள் எங்கும் செய்து கொடுக்கவில்லை என.
இதைச் சொல்லும் போது ஒரு ஞாபகம் வருகிறது. முள்ளிவாய்க்;காலில் நின்ற நேரம் மூன்று நாள் போர் நிறுத்தம் அறிவித்தது அரசாங்கம். இது எல்லோருக்கும் தெரியும். அதை ஐ.நா.வர வேற்று பெரிய பிரச்;சாரம் செய்தது. அப்போது சிங்கள இன வெறி அரசு அறிவித்தது விமானத் தாக்குதலையும் கனரக ஆயத பாவனையும் நிறுத்தி வைக்கிறோம் என. அறிவித்த அன்று காலையில் இருந்து மாலை வரை கிட்டத்தட்ட 20-22 தடைவைகள் வரை ஓயாத விமானத்தாக்குதல்கள் நடைபெற்றன.
ஒரு தடவை சுமார் 3 அல்லது 4 மிகையொலி விமானங்கள் தாக்குதலை நடாத்தின. 30 நிமிடம் கூட இடைவெளி கொடுக்கவில்லை. ஏராளமான மக்கள் குடியிருப்பு அழிக்கப்பட்டு பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. ஆனால் வெளி உலகம் அறிவிப்பை வர வேற்றுக் கொண்டு இருந்தது. தொடர்ந்து வந்த மூன்று நாட்களும், சிங்களவன் ஆட்டிலறிகளையும் முல்ரி பரல்களையும் மக்கள் செறிந்த எல்லா இடங்களுக்கும் அடித்து, வேவு விமானம் மூலம் படம் பிடித்து இடைவிடாது மக்களைக் கொன்று தள்ளிக் கொண்டிருந்தான்.
விடுதலைப் புலிகளை அழிப்பது என்றால் களமுனைகளையும் இராணுவ நிலைகளையும் தான் அழித்த இருக்க வேண்டும்.
சங்கக் கடைகளில் நீண்ட தொடர் வரிசையில் வைத்து பசியைப் போக்க கஞ்சியாவது காய்ச்சுவோம் என காத்திருந்து அரைக்கிலோ அரிசிக்காக நாட்கணக்கில் ஏங்கித் தவிக்கும் மக்களை அவர்களின் வாழ்விடத்தை ஏன் குறிவைத்தது இன வெறி அரசு. ஏன் என்று ஐ.நாவும் இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என்பன தான் சொல்ல வேண்டும்;.
மக்கள் பசி போக்க விடுதலைப் புலிகள் மக்களுக்கு சுவையான கஞ்சியாவது வளங்கினார்கள் இறுதிவரை. ஆனால் அரசை நம்பி வந்த மக்களுக்கு பல நாட்கள் உணவே கிடைக்கவில்லை.
இராணுவம் வழங்கிய தண்ணீர் போத்தலுக்கும் பிஸ்கற் பக்கற்றுகளுக்கும் பலர் அடிபட்டு இறந்து போயினர். தற்;போதும் உதவி நிறுவனங்கள் இல்லா விட்டால் அரச படை பிச்சைதான் எடுக்கவேண்டும்;. அதைத்தான் சிங்கள இன வெறி அரசு செய்து கொண்டு இருக்கிறது.
இதில் ஐ.நாவின் பங்கு அளப்பெரியது. பட்டினியால் தவிக்கும் போது உணவை வளங்காமல் ஆயதமாக்கி தடுத்தது.
ஆரம்பத்தில் 70000மக்களே உள்ளனர் என்றும் இறுதியில் 2000 பேர் என அரசு அறிவிக்க அவர்களுக்கு அதை விட குறைந்த உணவையே ஐ.நா அனுப்பியது. ஆனால் இறுதி நாட்களில் எப்படி 200000க்கும் மேற்பட்ட மக்கள் வந்தார்கள் என்பதை இவர்கள் வாய் திறக்கவி;ல்லை. முகாம்களில் 400000க்கும் மேற்பட்ட மக்கள் எப்படி வந்தனர்.
இந்த உண்மையை தமிழன் வாய்கிழியக் கத்தியும் ஏன் ஐ.நா ஏற்றுக் கொள்ள வில்லை. உண்மையில் இந்த ஐ.நா இனப்படு கொலையை அறிந்து இருக்கிறது.
சிங்களவன், தமது பேச்சைக் கேட்க வேண்டும் என்பதற்காக செய்மதிப் படங்களைக்காட்டி பூச்சாண்டி காட்டிய இவர்கள் மக்களின் அழிவைப் பார்த்து ரசித்தது எந்த விதத்தில் நிட்சயம் என அவர்களுக்கு மட்டும் தெரியும்.
அதைவிட சமாதானத்தை ஏற்படுத்திய ஐக்கிய தேசிய கட்சி அரசு கருணாவைப்பிரித்து பின் பிள்ளையான் தலைமையில் ஆரம்பித்த ஆட்கடத்தல் (கொலைகள்) இன்று அரச கட்டுப்பாட்டு பகுதியில் தொடர்ந்தது.
முக்கியமாக தலை நகர எல்லாத் தமிழரையும் பல மில்லியன் கோடிகளில் பாது காப்பு நிதி எனக் கடத்தி கப்பம் பெற்றார்கள். இதற்கு உதவிய தமிழர்களும் பின் உண்மை வெளியே வராமல் இருக்க காணாமல் செய்யப்பட்டார்கள்.
எத்தனை ஆயிரம் பிணங்கள் இன்னும் கண்டு பிடிக்கப்படாமல் இருக்கிறது என கருணா, பிள்ளையான், EPDP, Plote, UNP, தற்போதய அரசு என்பவற்றிடம் தனித்தனியாகத் தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இவற்றில் சேர்ந்த பணத்தை அமெரிக்காவுக்கு அருகில் உள்ள நாடுகளில் வைப்பு செய்ததையும் நாம் செய்தியாகப் படித்தோம்.
இந்த கோடிக்கணக்கான டொலர் நிதி பின்பு தமிழ் மக்களுக்கு எதிரான போரில் ஆயுதங்களாக தமிழ் மக்களையே திரும்பி வந்து சேர்ந்தது.
இதை CIA போன்ற நிறுவனங்கள் அறியவில்லையா? அறிந்து இருந்தால் அவர்களின் படைத்துறை வெளியீடுகளில் இலங்கைக்காக ஒதுக்கப்பட்ட பக்கத்தில் எழுத்தில் இருக்கவேண்டும்.
ஆனால் அவர்கள் புலிப்பயங்கரவாதம் என எங்களுக்கு எதிராக மட்டும் பிரச்சாரம் செய்து எம்மை சர்வதேசத்தில் இருந்து அந்நியப்பட வைத்தார்கள் என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எங்களை ஒபாமாவோ அல்லது கிலாரியோ காப்பாற்ற வரவில்லை. அமெரிக்க நலனை நாமும் புரிந்து அதற்கேற்றாற் போல் விலை போகாமல் எதிர்காலப் போரில் நாம் ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம்.
எழுத்துப் பிரிவில் இரண்டு பிரிவினர் எழுதுகிறார்கள். ஒன்று உண்மையை நடு நிலைமையாக எழுதுகின்றது. மற்றையது உளவு நிறுவனங்களுக்கு விலை போனவர்கள். அல்லது எதிர் நாட்டு அல்லது கட்சி சார்ந்தவர்கள், எங்களைப் பற்றி எழுதினால் தான் எதுவும் விற்பனையாகும் என்பதை நன்கு அறிவார்கள்.
அதனால் நாலு வாரத்தையில் எம்மைப் புகழ்ந்து, சூசகமான முறையில் எங்களை, எங்கேயாவது ஒரு இடத்தில் கடுமையான குற்றம் சாட்டி எழுதுவார்கள். பார்க்கும் போது நடு நிலைமையாளர் போல்தான் தெரியும். ஆனால் உண்மையில் எங்களுக்கு எதிரான கருத்துக்களை மக்கள் மத்தியில் தந்திரமான முறையில் இவர்கள் பரப்புவார்கள். இவர்களை நாம் கொஞ்சம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். சமூகத்திற்கும் அறிமுகம் செய்து கொள்ள வேண்டும்;. எனவே விடுதலை பற்றி மக்களை பிழையாக வழிநடத்துபவர்களை எழுத்துலகை விட்டு அகற்றுங்கள்.
உண்மையில் எமது மக்கள் தங்கள் சந்ததிக்கு இராமாயணம் மகாபாரதம் போன்ற காவியங்கள் எல்லாவற்றையும் சிறு வயதிலேயே கற்பிக்க வேண்டும் என்பது எமது விண்ணப்பம்.
ஏனெனில் இராமாயணம் மகாபாரதம் என்பவற்றைப் பிரதி பண்ணித்தான் மகாசேனன் காலத்தில் அவன் மாமனான மகானாம தேரர், திட்மிட்டு எதிர் காலத்தைக் கருத்தில் கொண்டு எழுதப்பட்டது மகாவம்சம்.
இதை வைத்துத் தான் இன்று சிங்கள மக்களை உசுப்பேற்றிக் கொண்டு இருக்கின்றனர். உண்மையில் விஜயன் சிங்களவனும் அல்ல பௌத்தனும் அல்ல. அவன் வருகைக்கு முன் இங்கு மக்கள் வாழ்ந்தார்கள். அவர்களை மகாவம்சம் பேய்களாக சொல்கிறது.
இராமாயணம் எப்படி தென்புல தமிழர்களை குரங்காகவும், இராவணனை அரக்கனாகவும் ஆரியர் சித்தரித்தனரோ, அந்த வழி நடந்து சிங்களவர்களும் தாங்கள் ஆரியர் என சொல்லிக் கொள்கின்றனர்.
நாம் மகாவம்சம் எதை சொல்ல வருகிறது என்பதை நிட்சயம் அறிய வேண்டும்;.
ஏனெனில் அதை சிறு வயதிலேயே கற்பித்து அதன் வழியில் தான் சிங்களவன் வழி நடத்துகின்றான்.
மகிந்தனும் சங்கமித்தையும் வரும் போது சிங்களம் ஆட்சி மொழியும் இல்லை அப்படி ஒரு மதமும் இல்லை. ஆற அமர இருந்து மகானமார தேரர் பாளி மொழியில் மகா வம்சத்தைக் எழுதி பின்பு சிங்களத்தை உருவாக்கினார்கள் என்ற வரலாற்றையும், சிங்களவன் வந்தேறு குடி என்பதையும் எங்கள் உறவுகள் நிட்சயம் அறிந்து கொள்ள வேண்டும் என்பது தாழ்மையான விண்ணப்பம்.
தமிழன் இரண்டோடு நிறுத்த சிங்களவனோ பன்றி போல் பதினாறு பெற்று பெருகி இன்று அவன் பெரும் பான்மை. நாம் சிறு பான்மை. என்று ஒரு புதுக் கதையை சொல்லி எங்களை வாழ்நாள் அடிமையாக மாற்ற நினைக்கிறான்.
எமது வரலாற்று சான்றுகளை அழித்து தமது மதச்சின்னங்களை தமிழ் பிரதேசங்களில் இராணுவ ஆக்கிரமிப்புடன் செய்து வருகிறான். இதை நாங்கள் எல்லோரும் சரிவரப் புரிந்து கொள்வதாலேயே முறியடித்து விடமுடியும்.
இதற்காகவே கைப்பற்றிய இடங்கள் எல்லாம் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் எல்லாம் தரை மட்டமாக்கப்பட்டு, போராட்ட சிந்தனை வர விடாமல் எமது ஆதிகால மற்றும் தற்கால சான்றுகள் எல்லாம் திட்மிட்டு அழிக்கப்படுகின்றன.
அத்தேடு இங்கு காணப்படும் அகழ்வாராய்ச்சி பொருட்கள் என்பனவும் இருக்கிறது. அவற்றை நாம் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இல்லா விட்டால் இந்த உலகம் தமிழனை உலக வரைபடத்தில் இருந்து அழித்து விடும்;;.
இனி உங்களிடமிருந்து விடை பெறுமுன். உங்களுக்கு சில விடயங்களைத் தெளிவாகக் கூறுகின்றேன். இந்த யுத்தத்தில் சிங்களவன் எமது தாயகத்தை எமக்கு வளங்கும் வரை போராடுவோம்.
உலகில் தமிழனுக்கு என்றொரு ஒரு நாடு, அது தமிழீழம் என்பதை இந்த உலகிற்கு புரிய வைப்போம்.
ஒரே தலைவன் அவனே எங்கள் இறைவன். இதை நாம் என்றும் ஏற்று நடப்போம்.
வரும் துன்பங்களை ஏற்று, நம் எதிர்காலம் நோக்கிய சீரிய சிந்தனையில் எங்களை எமது தாய் நாட்டுக்காக அர்ப்பணிக்க துடிப்புள்ள ஒவ்வொரு இளைஞரும் முன்வரவேண்டும்;.
நீங்கள் எவ்வளவு தூரம் எம் தேசத்தை நேசித்தீர்கள் என்பது எமக்கும், எங்கள் மக்களுக்கும் தெரியும். நீங்கள் கூறியபடி இராணுவம் எங்கள் நிலங்களைக் கைப்பற்றினால் நாமெல்லோரும் தாயகம் சென்று ஆயதமேந்தி தனிநாடு காண்போம் என்ற வார்த்தையை மெய்ப்பிப்பீர்கள் என நாங்கள் உரிமையுடன் எதிர் பார்க்கிறோம்;.
எங்களுடன் கை கோர்த்து, நவீன உலகில் எங்களின் நாட்டை நாங்கள் உருவாக்குவோம்; என்பதில் நீங்கள் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் விடுதலைக்கு உரம் சேருங்கள்.
எங்களுக்குள் உள்ள கருத்து வேற்றுமைகளைக் களைந்து அநாவசியமான சந்தேகங்களை உறுதிப்படுத்த முனையுங்கள். உங்களுக்கு சரியான ஒரு தெளிவு பிறக்கும்;.
எல்லோரும் ஒவ்வொரு கதைகளை சொல்லிச் சொல்லி மக்களை குழப்பாமல் தெளிவாக இருந்து மற்றவரையும் தெளிவு படுத்துவோம்.
மகாபாரதத்தில் கிருஷ்ணர் சமாதானம் பேசித்தான் எதிரிகளை பிளவு படுத்தி, படை பலத்தை பெருக விடாமல் செய்து இறுதியில்போருக்கு சென்று வெற்றியும் பெற்றார். கர்ணனை அர்ச்சுனன் தனி ஒருவனாக கொல்லவில்லை. அதே போல் எங்களை சிங்களவனால் தனித்து வெற்றி கொள்ள முடியாது.
நாங்கள் இன்னமும் உயிருடன் இருக்கிறோம். மீண்டும் சிங்களவன் சேர்க்கும் படைகள் சிதறடிக்கப்படும். எங்கள் மக்களின் சதைகளையும் பிண்டங்களையும் பார்த்து மனம் இறுகி இரும்பாக இருக்கிறோம்;.
நாங்கள் இழந்தவை ஒன்றும் சாதாரணமானவை அல்ல. அவற்றை நாம் விரைவில் சிங்களவனுக்கு கொடுப்போம். போருக்கு ஆதரவு தெரிவித்த ஒவ்வொருவரும் எங்களைக் கொன்று சந்தோசமடைந்த சிங்களவனும் மனம் வருந்தி சாக என, நாம் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம்;. விதைத்ததை அவர்கள் அறுவடை செய்வார்கள் பல மடங்காக.
இந்தியா நரித்தனமாக எங்களை விழுத்தி இருக்கலாம். தொடர்ந்தும் எங்களை நசுக்க முற்பட்டால் இந்திய பரந்த தேசத்தில் ஒர் நாடு தனியாக உடையும். அதை எங்கள் சேர, சோழ, பாண்டிய வம்சத்தினர் ஆள்வார்கள் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்;. அதைப் பார்க்க தற்போதைய ஆட்சியாளர் யாரும் உயிருடன் இருக்க மாட்டார்கள் என்பது தான் கவலையான விடயம்.
இந்திய வரலாறுகளில் நிறைய அடக்கப்பட்டவன் அரியணை ஏறிய கதைகள் உள்ளன. அவற்றை இந்த பார்ப்பனர்கள் மீண்டும் படித்து தெளிய வேண்டும்;;
கலைஞர் போன்ற பெரியவர்களை நாம் நம்பி இருக்க, அவர்களும் எல்லாம் வெறும் அரசியல் தான் என தமிழினத்திற்கே புரிய வைத்ததிற்கு அவருக்கும் எங்கள் கை கூப்பிய வணக்கங்கள்.
இன்னொரு இறைவன் வரமாட்டான் எங்களைக் காப்பாற்ற நாம் தான் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
நன்றி.
தடைகளை உடைப்போம் தமிழீழம் அமைப்போம்;.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்;.
அன்புடன்
படைப் புலனாய்வுப் போராளி
அரவிந்தன்.