Thursday, May 28, 2009

ஈழத் தமிழர் பிரச்சினை தீர்க்காவிட்டால் பேரழிவு உறுதி! ஒபாமா முதற் தடவையாக கடும் எச்சரிக்கை.

மனிதாபிமானப் பிரச்சினை ஒன்று உருவாகுவதைத் தவிர்க்கு மாறும் போர்ப் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்குத் தேவையான உதவிகள் சென்றடை வதற்கு வழிவகுக்குமாறும் அவசர கோரிக்கை விடுத்துள்ள அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமா, இந்த மனிதாபிமானப் பிரச்சினை தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் இது ஒரு பேரழிவாக மாற்றமடையும் எனவும் கடுமையாக எச்சரித்துள்ளார்.

இந்தப் பிரச்சினையுடன் சம் பந்தப்பட்ட அரசியல் விவகாரங்களை ஒருபுறத்தில் ஒதுக்கிவைத்துவிட்டு, போரில் அகப்பட்டுள்ள அப்பாவி ஆண்கள், பெண்கள், சிறுவர்களின் உயிர்களையிட்டுத்தான் நாம் முதலில் எமது கவனத்தைச் செலுத்த வேண்டும் எனவும் வெள்ளை மாளிகையில் நேற்று புதன்கிழமை ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் அமெரிக்க அரச தலைவர் வலியுறுத்தினார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் "மக்களுக்கான பாதுகாப்பு வலயம்" எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதி மீது சிறிலங்கா படையினர் தமது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி, மருத்துவமனைகள், மக்கள் குடியிருப்புப் பகுதிகள் என்பன தொடர்ச் சியான எறிகணைத் தாக்குதலுக் குள்ளாகி ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுவரும் ஒரு நிலை யிலேயே அமெரிக்க அரச தலைவர் இந்த அவசர கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார்.

இங்கு ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய ஒபாமா மேலும் தெரிவித்ததாவது:

இலங்கையில் ஒரு மனிதா பிமானப் பிரச்சினை உருவாகியிருக் கின்றது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். போர்ப் பகுதியில் இருந்து அண்மைக்காலத்தில் கிடைத்த செய்திகள் மிகவும் கவலையளிப்பதாக இருக்கின்றது.

இப்பகுதியில் ஆயிரக்கணக் கான மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு எந்தவிதமான வசதிகளும் இல்லாமல், உணவு, குடிநீர், மருந்து மற்றும் வதிவிட வசதிகள் எதுவும் இல்லாமல் அகப்பட்டுள்ளார்கள். இது பாரிய அவல நிலையைத் தோற்று வித்திருப்பதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் இதனால் உயிரழிக்கும் நிலைமையும் ஏற்பட்டிருக்கின்றது.

இது தொடர்பில் உடனடியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் இந்த மனிதாபிமானப் பிரச்சினை ஒரு பேரழிவாக மாற்ற மடைந்துவிடும். இந்தப் பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட அரசியல் விவகாரங்களை ஒரு புறத்தில் ஒதுக்கிவைத்துவிட்டு, போரில் அகப்பட்டுள்ள அப்பாவி ஆண்கள், பெண்கள், சிறுவர்களின் உயிர்களையிட்டுத்தான் நாம் முதலில் எமது கவனத்தைச் செலுத்த வேண்டிய தருணம் இப்போது வந் திருப்பதாகவே நான் கருதுகின்றேன்.

இந்த மனிதாபிமானப் பிரச் சினையை தவிர்ப்பதற்காக சிறிலங்கா அரசாங்கமும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.

முதலாவதாக - ஆயிரக்கணக் கான மக்களின் மரணங்களுக்கு காரணமாகவுள்ள எழுந்தமானமான எறிகணைத் தாக்குதல்களை இலங்கை அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும். இதில் பல மருத்துவமனைகளும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. அதேவேளையில் சிக்கலுக்கு உரிய பிரதேசத்தில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்து வதில்லை என்ற தமது உறுதி மொழியை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இரண்டாவதாக - போர் இடம் பெறும் பகுதிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமானக் குழு ஒன்று செல்வதற்கும் அங்குள்ள மக்களின் உயிர்களைப் பாதுகாப்ப தற்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும் சிறிலங்கா அரசாங்கம் அனுமதியை வழங்க வேண்டும்.

மூன்றாவதாக - இடம் பெயர்ந்துள்ள சுமார் 1 லட்சத்து 90 ஆயிரம் மக்களையும் பார்வை யிடுவதற்கும் அவர்களுக்குத் தேவையான மேலதிக உதவிகளை வழங்குவதற்கும் ஐ.நா.வையும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தையும் சிறிலங்கா அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்.

இந்த வேளையில் அனைத் துலக சமூகத்துடன் இணைந்து செயற்பட்டு அங்குள்ள மக்களுக்கு உதவுவதற்கு அமெரிக்கா தயாராகவிருக்கின்றது. இதில் தாமதம் கூடாது என நான் நினைக்கின்றேன். இந்த சந்தர்ப்பத்தில் மேலும் மனிதாபிமானப் பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக நாம் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியம்.

இதற்கு மேலாக சிறிலங்கா அரசாங்கமானது அந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களினதும் கெளரவத்தைப் பாதுகாக் கக்கூடியவகையிலான இறுதித் தீர்வு ஒன்றை முன்வைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும் மரணங்கள் இடம் பெறுவது அந்த நாட்டு மக்கள் விரும்பும் சமாதானத்தை அடைவ தற்குத் தடையாகவே இருக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் என்றார் அவர்.

நன்றி: http://www.thenseide.com/


யூத மக்கள் வெற்றியடைந்தது போன்று நாமும் வெற்றியடைவோம்.

தமிழர் இடம்பெயர்ந்த சமூகம் பிரபாகரனின் மரணத்தினால் ஏற்பட்டிருக்கும் விளைவுகள் தொடர்பாக தமது கௌரவம் ,சமத்துவத்திற்கான போராட்டத்தின் எதிர்காலம் குறித்து முடிவுக்கு வரவேண்டிய நிலையில் உள்ளது. 1940 களில் தனது இருள் சூழ்ந்த நாட்களில் யூதர்களின் புலம்பெயர் சமூகம் செயற்பட்ட விதமானது அவர்களுக்கான (புலம்பெயர் தமிழ் சமூகம்) முன்மாதிரியாக அமையலாம் என்று இந்திய அமைச்சரவையின் முன்னாள் இணைத் தலைமைச் செயலாளர் பி. இராமன் தெரிவித்திருக்கிறார்.


"யாழ்ப்பாணத் தமிழர்கள்' என்ற தலைப்பில் "அவுட் லுக்' சஞ்சிகையில் இராமன் இது தொடர்பாக கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது;

விடுதலைப் புலிகளின் தலைவர் வி.பிரபாகரனின் மரணம் தொடர்பாக தொலைக்காட்சி செதிகளில் நான் பார்த்தேன். அவரது உடல் உருட்டி எடுக்கப்பட்ட விதம் குறித்த செதிகளை நான் கேட்டும் வாசித்தும் உள்ளேன். எனது மனம் 1951 1955 காலப்பகுதிக்கு பின்னோக்கிச் சென்றது. அக்காலகட்டத்தில் சென்னையிலுள்ள லொயோலாக் கல்லூரியில் நான் மாணவனாக இருந்தேன். அக்கல்லூரியை இயேசுவின் சங்கம் நடத்தி வந்தது. ஒவ்வொரு வகுப்பிலும் நான் உட்பட நான்கு அல்லது ஐந்து இலங்கையின் வடமாகாணத்தைச் சேர்ந்த தமிழர்கள் கல்வி கற்று வந்தனர். அப்போது ஸ்ரீலங்காவானது, சிலோன் என்று அழைக்கப்பட்டது. 1972 க்குப் பின்னரே ஸ்ரீலங்காவானது. அந்த நாட்களில் கூட அவர்கள் தங்களை சிலோனின் ஒரு பகுதியினராக கருதவில்லை. தங்களை யாழ்ப்பாணத் தமிழர்கள் என்றே அவர்கள் அறிமுகம் செது கொள்வார்கள். இலங்கைத் தமிழர்கள் என்று அவர்கள் கூறுவதில்லை.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நடுத்தரவர்க்க குடும்பத்தினர் கூட தாங்கள் சேர்த்த பணத்தைக் கொண்டு தமது பிள்ளைகளை தமிழ்நாட்டிற்கு உயர் கல்விக்காக அனுப்புவார்கள். யாழ்ப்பாணத் தமிழர்கள் கல்வி கற்ற பிரபல கல்லூரிகளான சென்னையிலுள்ள லொயோலா , கிறிஸ்ரியன் கல்லூரிகளும் திருச்சியிலுள்ள புனித ஜோசப் கல்லூரியும் இருந்தன. அவர்கள் புத்திக்கூர்மை உள்ளவர்களாகவும் கடும் முயற்சிகளை மேற்கொள்பவர்களாகவும் சிறந்த நகைச் சுவை உணர்வு உள்ளவர்களாகவும் இருந்தனர். வகுப்புகள் முடிந்த பின்னர் அவர்கள் தங்களுக்குள் ஒன்றாக சேர்ந்து கொள்வார்கள். ஏனைய மாணவர்களுடன் அதிகளவிற்கு ஒன்றாகக் கலந்துகொள்ள மாட்டார்கள்.

தமிழ்நாட்டிலுள்ள தமிழர்கள் போன்றே ஒவ்வொரு யாழ்ப்பாணத் தமிழரும் அரசாங்க உத்தியோகத்தர்களாக வருவதற்கு விரும்புவர். அவர்கள் விரும்பும் மற்றைய தொழில் சட்டத்தரணியாவது இந்தியாவில் தமது கல்லூரிப் படிப்பை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதும் கொழும்பிலுள்ள அரச சேவையில் இணைந்துகொள்வார்கள். இலங்கை சுதந்திரமடைந்த சில வருடங்களில் இலங்கையின் அரச உயர் பதவிகளில் யாழ்ப்பாணத் தமிழர்களே ஆதிக்கம் பெற்றிருந்தனர்.

மலாயா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் அவர்கள் அரச உத்தியோகத்தில் மேலாதிக்கம் செலுத்தினர். ஆசியாவிலுள்ள தமது காலனிகளில் அரச உயர் அதிகாரிகளாக வேலைவாப்பு வழங்குவதில் பிரிட்டிஷார் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுத்தனர். அவர்களது புத்திக்கூர்மை, ஆங்கில மொழிப் புலமை, கடும் உழைப்பு என்பவற்றுக்கு அப்பால் யாழ்ப்பாணத் தமிழர்கள் நேர்மையான குணத்தை கொண்டிருந்தனர்.

மலாயா , சிங்கப்பூரிலுள்ள யாழ்ப்பாண தமிழ்ச் சமூகத்தைப் பற்றி விக்கிமீடியா பின்வருமாறு எழுதியுள்ளது. " சுதந்திரத்திற்கு முன்னரான காலகட்டத்தில் பிரிட்டிஷ், மலாயா, சிங்கப்பூரில் அரசாங்க சேவையில் இலங்கைத் தமிழர்கள் பெரும்பான்மையாகக் காணப்பட்டனர். மலாயா, சிங்கப்பூரிலுள்ள வெள்ளையர்கள் அல்லாத முதலாவது ஆசிய மருத்துவர்கள், பொறியியலாளர்களில் பலர் இலங்கைத் தமிழ் வம்சாவளியினராவர். உலகின் முதலாவது ஆசிய சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.எஸ். திருச்செல்வம் ஆவார். அவர் இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த மலாயா நாட்டவராவார்.

முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ ஒரு தடவை பின்வருமாறு கூறியிருந்தார்.

" எண்ணிக்கையின் அடிப்படையில் யூரோ, ஆசியர்களைப் போன்று இலங்கையர்கள் எமது நாட்டின் பல்வேறு சமூகங்களில் சிறியளவினராவர். ஆனால், நவீன சிங்கப்பூர் , மலேசியாவின் அபிவிருத்திக்கும் வெற்றிக்கும் அவர்களின் பங்களிப்பானது அவர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க மிகப் பாரியளவு கொண்டதாகும். மலேசியாவினதும் சிங்கப்பூரினதும் வரலாற்றில் சிவில் சேவையிலும் தொழில் துறையிலும் ஆரம்ப நாட்களில் இலங்கையரே கணிசமான எண்ணிக்கையில் காணப்பட்டனர். இன்றும் கூட இலங்கைச் சமூகம் இந்தத் தொழில் துறையிலும் ஏனைய துறைகளிலும் முன்னணிப் பங்கினை வழங்கி வருகிறது.

இன்று சிங்கப்பூரில் உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால், பாராளுமன்றத்தின் சபாநாயகர் இலங்கையராவார். பெரிய பிரித்தானியாவிலுள்ள எமது உயர்ஸ்தானிகர் , எமது வெளிவிவகார அமைச்சர் , நீதித்துறை , சிவில் சேவை, பல்கலைக்கழகம் , மருத்துவ சேவை மற்றும் தொழில்துறைகளில் இலங்கையர்கள் தொடர்ந்து கணிசமான அளவு தமது பங்களிப்பினை வழங்கி வருகின்றனர். அவர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க அவர்கள் ஆற்றும் பங்களிப்பு அதிகமானதாகும். சிறுபான்மையினர் என்ற அடிப்படையிலல்லாது திறமையின் அடிப்படையிலேயே இத் தொழில்துறைகளில் உள்ளனர்.

தங்களிலும் பார்க்க அதிகளவு எண்ணிக்கையைக் கொண்ட சமூகங்களுடன் அவர்கள் பகிரங்கமான போட்டியின் மூலம் இந்தப் பதவிகளை எட்டியுள்ளனர். சிறுபான்மையினர் என்ற பரிசீலனை மூலம் தங்களுக்கு விசேட கல்விச் சலுகையை அவர்கள் கேட்கவில்லை. அவர்கள் கேட்பது எல்லாம் தமது திறமையைத் தீர்மானித்து பாரபட்சமின்றி ஏனைய சமூகங்களுடன் போட்டி போட்டு திறமை அடிப்படையில் தங்களை தேர்ந்தெடுக்க வேண்டுமென்பதேயாகும். இது முற்றுமுழுதாக நியாயமானதாகும்.

ஆற்றல் , திறமை , உயர்ந்த செயற்பாடு என்பவற்றை அங்கீகரிக்க வேண்டுமென்பதில் அந்தச் சமூகம் நம்பிக்கை கொண்டுள்ளது. எதிர்காலம் அந்த சமூகத்திற்கு உள்ளது என்பதை நான் நம்புகிறேன். இன, மொழி, மத வேறுபாடின்றி ஆற்றலுக்கு வெகுமதி கிடைப்பதிலேயே அந்த சமூகம் நம்பியுள்ளது' .

அவர் இலங்கையர் என்ற சொல்லைப் பயன்படுத்தினார். ஆனால், உண்மையில் சிங்கப்பூரில் பணிபுரியும் யாழ்ப்பாணத் தமிழர்கள் பற்றியே அவர் உண்மையில் கதைத்தார்.

எனது இளமைப்பருவ நாட்களில் யாழ்ப்பாணத் தமிழர்கள் சாந்தமானவர்கள் என்ற புகழை பெற்றிருந்தனர். பொலிஸ்காரரோ படைவீரரோ துப்பாக்கியை எடுத்தால் சாரத்தை முழங்காலுக்கு மேல் உயர்த்திக் கட்டிக்கொண்டு ஓடிவிடுவார்கள் என்று நாம் அவர்களைப் கேலி செவோம். ஆனால், அவர்களுடைய உரிமைக்காக போராடுவதற்கு பிரபாகரன் எவ்வாறு அவர்களை தயார்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கதொன்றாகும். 1948 இல் பிரிட்டிஷார் இலங்கையை விட்டுச் சென்ற பின் பெரும்பான்மை சிங்களவர்களால் பாரபட்சமாக நடத்தப்பட்டதை உணர்ந்த அவர்கள் தீவிரமாகப் போராடினர்.

35 வருடங்களாக தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், பாரபட்சங்களை அவர்கள் கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் பயங்கரவாதத்தையும் கிளர்ச்சியையும் எடுத்துக்கொண்டனர். சிங்கள பெரும்பான்மைப் பலத்திற்கு எதிரான அவர்களின் கிளர்ச்சி இராணுவத்தால் நசுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களின் ஆத்திரம் தொடர்ந்தும் இருந்துகொண்டிருக்கிறது. இலங்கையின் தமிழ் பகுதிகளிலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் இது காணப்படுகிறது. 1983 கலவரத்தின் பின்னர் சுமார் 10 இலட்சம் தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். அவர்களை மேற்கு ஐரோப்பா , வட அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவில் காணலாம்.

விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை தொடர்பான எனது கட்டுரைகள் தொடர்பாக புலம்பெயர் சமூகத்திடமிருந்து அதிகளவில் எனக்கு செதிகள் அனுப்பப்படுகின்றன. சிலர் ஆத்திரத்துடனும் வேறு சிலர் பண்பாகவும் செதிகளை அனுப்பியுள்ளனர். சிலர் அச்சுறுத்தியும் தூஷித்தும் செதிகளை அனுப்பியுள்ளனர். சிலர் தமிழர்களைக் கைவிட்டதற்காக குற்றஞ்சாட்டி இந்தியாவை சபிக்கின்றனர். இந்தியாவை தண்டிக்க வேண்டுமென்று கடவுளைப் பிரார்த்திப்பதாக அவர்களில் சிலர் தெரிவித்துள்ளனர். "ராஜீவை பிரபாகரன் கொன்றதற்காக முழுத் தமிழ்ச் சமூகத்தையும் நீங்கள் தண்டிக்கிறீர்கள்' என்று ஒரு செதி வந்தது. " இலங்கை இராணுவத்தால் தமிழ் பொதுமக்களுக்கு இழைக்கப்படும் கொடூரங்கள் குறித்து கண்டித்து ஒரு வார்த்தை தானும் உங்கள் பிரதமர் தெரிவிக்கவில்லையே. நாங்கள் துன்பப்படும் வழியில் நீங்களும் ஒருநாள் துன்பம் அடைய நான் கடவுளைப் பிரார்த்திக்கிறேன்'.

தமிழ் புலம்பெயர் சமூகமானது கௌரவம், சமத்துவத்திற்கான தமது போராட்டத்தின் எதிர்காலம் குறித்து பிரபாகரனின் மரணத்துடனான விளைவுகளுடன் தீர்மானத்திற்கு வர வேண்டியுள்ளது. 1940 களில் தனது இருள் சூழ்ந்த நாட்களில் யூத புலம்பெயர் சமூகமானது எவ்வாறு செயற்பட்டது என்பதை அவர்கள் (தமிழ் புலம்பெயர் சமூகம்) ஆராந்து கொண்டிருக்கின்றனர். யூத புலம்பெயர் சமூகத்தை நாம் முன்மாதிரியாகக் கொள்வோம். யூத மக்கள் வெற்றியடைந்தது போன்று நாமும் வெற்றியடைவோம் ' என்ற செய்தி புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் முரசறைந்து கொண்டிருக்கிறது.

நன்றி: http://www.tamilkural.com/


இந்தியாவின் பஞ்சாப் போராட்டம் ஒடுக்கப் பட்ட மக்களின் எழுச்சியா?


எங்கோ இருக்கிற ஆஸ்திரியாவின் வியன்னாவில் நான்கு சீக்கியர்கள் கொல்லப்பட்டதற்கு ஒட்டு மொத்த சீக்கிய மக்களுமே கிளர்ந்தெழுந்து போராடுகிறார்கள்

ஈழத்தில் இத்தனை கொடூரங்கள் நடந்த பிறகும் தமிழகம் அமைதியாக இருக்கிறது. என்ற கொதிப்புகளைக் கேட்க முடிகிறது. தமிழகம் தொடர்ந்து போராட வில்லை என்கிற மனக்குறைகள் இருந்தாலும் பஞ்சாபில் சீக்கியர்கள் ஒற்றுமையாகத்தான் போராடுகிறார்களா? இது சீக்கிய ஒற்றுமைக்கான போராட்டமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்து சாதீய அழுக்குக்கு எதிராக இந்தியாவில் பல் வேறு சிறு சிறு சமய வழிபாட்டு சித்தாந்தங்கள் காலம் தோறும் தோன்றியிருக்கின்றன. இந்து இஸ்லாமிய முரண்களின் உணர்வெழுச்சியில் இருந்து குருநானக் அவர்களால் உருவாக்கப்பட்டது சீக்கிய சமயம்.

ஜாட் பிரிவு மக்களைப் பெரும்பான்மையாக கொண்டிருந்தாலும் தேராசச்சா பிரிவினரும் கணிசமான அளவில் சீக்கிய மதத்தில் உண்டு. ஜாட்கள் மேட்டுக்குடியினர் செல்வந்தர்கள். பெரும்பாலான வணிக நிறுவனங்களையும் சொத்துக்களையும் வைத்திருக்கும் ஜாட்கள் தேராசச்சா பிரிவு சீக்கியர்களை ஏற்றுக் கொள்வதில்லை.

மண உறவு கொள்வதில்லை என்பதோடு ஜாட்களின் நிலங்களில் கூலி வேலை செய்யும் நிலையிலேயே தேராசச்சா பிரிவினர் உள்ளனர். சாதீய அடையாளப்படி ஜாட்கள் OPC ( இதர பிற்படுத்தப்பட்ட சாதியினராகவும்) தேராசச்சா பிரிவினர் (LC) தாழ்த்தப்பட்ட்டோராகவும் உள்ளனர். ஜாட்களால் ஒடுக்கப்படும் தேராசச்சா பிரிவினரின் குமுரல் நீண்ட நாட்களாகே பஞ்சாபில் கொதித்துக் கொண்டிருந்த ஒன்றூதான்.

இந்நிலையில்தான் ஆஸ்திரியாவின் வியன்னாவில் குருதுவாராவில் ஒடுக்கப்பட்ட தேராசச்சா பிரிவைச் சார்ந்த் குருதாஸை ஜாட் பிரிவினர் கொலை செய்துள்ளனர். கொதித்தெழுந்த தேராசச்சா பிரிவினர் பஞ்சாபையே தங்களின் போராட்டங்களால் எரியவினர். மூன்றூ நாட்காளுக்குப் பிறகு ஊரடங்கு இன்று தளர்த்தப்பட்ட பிறகும் மாநிலம் முழுக்க இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை.

ஐந்து தேராசச்சா பிரிவினர் போலீசால் சுட்டுக் கொல்லப்பட பிரச்சனை மேலும் சிக்கலாகியிருக்கிறது. பஞ்சாப் முதல்வர் பிரதாப் சிங் பாதல் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் விளைவாய் அமைதி திரும்ப அனைவரும் ஒத்துழைத்தாலும் பஞ்சாபில் நிரந்த அமைதி என்பது தேராசச்சா பிரிவினருக்கு சமூக நீதி வழங்குவதிலேதான் இருக்கிறது என்கிறார்கள்.

பஞ்சாப் நிலை குறித்த ஒரு சிறு செய்திக் குறிப்பும் புகைப்படங்களும் ‐ ஈழத்தில் இத்தனை கொடூரங்கள் நடந்த பிறகும் தமிழகம் அமைதியாக இருக்கிறது உங்களை வன்முறையில் ஈடுபட சொல்லவில்லை ஒற்றுமையாக குரல்கொடுக்க கூட முடியவில்லையே !!!

நன்றி: http://www.tamilskynews.com/


தலைவரும், தளபதிகளும் தந்திரமாக வெளியேறியது எப்படி?

ஊடகங்களில் ஈழம் பற்றிய செய்திகள் தாறுமாறாக வெளியாகிக்கொண்டே இருந்தன. இந்தியாவில் தேர்தல் முடிவுகளை மக்கள் அறிந்துகொண்டிருந்த நேரம். மே 16-ந் தேதி சனிக்கிழமையன்று வன்னிக் காட்டில் பாரிய அளவிலான திட்டம் ஒன்றிற்குத் தயாராகியிருந்தனர் விடுதலைப் புலிகள். நெருங்கி வரும் சிங்கள இராணுவ வளையத்தை ஊடறுத்துத் தாக்கி, புலிகளின் முக்கியத் தலைவர்கள் வெளியேறுவது என்பதுதான் அந்தத் திட்டம்.
புலிகளுக்கேயுரிய போர் வியூகங்களின்படி நடந்த இந்த ஊடறுப்புத் தாக்குதலில் 100க்கும் அதிகமான சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், பிரபாகரனின் சமகாலத் தலைவரான சொர்ணம் இந்தத் தாக்குதலில் இராணுவத்தினரால் கொல்லப்பட, புலிகளின் முயற்சி தோல்வியடைந்தது.

போர்க்களத்தைவிட்டு வெறியேற மறுத்த தலைவர்
களத்தில் இழப்புகள் சகஜமானதுதான் என்பதைப் புலிகள் அறிவார்கள். ஆனால், தங்களின் இலட்சியமான தமிழீழத் தாயகம் அமைவதற்கு எதை இழக்கவேண்டும் எதைக் காப்பாற்ற வேண்டும் என்பதிலும் அவர்கள் கவனமாக இருப்பார்கள். அதனால், மே 17-ந் தேதியன்று புலிகளின் மூத்த தளபதிகள் அனைவரும், தங்களுக்கு வழக்கமாகக் கட்டளையிடும் பிரபாகரனிடம், கோரிக்கை வடிவில் ஒரு கட்டளை பிறப்பித்தனர் என்கிறார்கள் தொடர்பில் உள்ள வட்டாரத்தினர்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டிய தருணம் இது. ஏணென்டால், சிங்கள ராணுவம் தனது பாரிய படைகளோடு நெருங்கி விட்டது. இது இந்தப் போரின் இறுதிக்கட்டம். இதிலிருந்து தலைவர் அவர்கள் மீண்டால்தான் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்க முடியும். நம்முடைய இலட்சியமான தமிழீழத்தை வென்றெடுக்க முடியும் என்று தளபதிகள் சொன்னதை பிரபாகரன் ஏற்றுக் கொள்ளவில்லையாம். நமது மண்ணின் விடுதலைக்காகத்தான் நான் போராடுகிறேன். அதனால் கடைசிவரை இந்த மண்ணில்தான் இருப்பேன் என பிரபாகரன் உறுதியான குரலில் கூற, தளபதிகள் அவரிடம் நீண்ட நேரம் வாதாடியுள்ளனர். இந்த மண்ணில் உங்கட மகன் நின்று போராடட்டும். எங்கட தலைவராகிய நீங்கள் பாதுகாப்பான இடத்துக்குப் போயாக வேண்டும். அப்போதுதான் இந்தப் போராட்டம் எழுச்சியோடு தொடரும் என்று தங்களுடைய கோரிக்கைக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள்.

தன்னுடைய இடைவெளிக்காக மகனை முன்நிறுத்திய தலைவர்

தளபதிகளின் கோரிக்கையை யோசித்த பிரபாகரன், தனது மகன் சார்லஸ் அந்தோணியை ஈழமண்ணில் இருக்கச் செய்து போரை தொடர்ந்து நடத்தச் சொல்லிவிட்டு, தளபதிகள் கூறுவதுபோல, அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற நீண்ட யோசனைக்குப்பின் சம்மதித்துள்ளார்.

இதையடுத்து, மே 17-ந் தேதி ஞாயிறன்று இந்தியாவின் ஆங்கில ஊடகங்களில் ஈழநிலவரம் குறித்து சிங்கள அரசு பரப்பிய தகவல்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நேரத்தில், புலிகள் ஒரு பெருந் தாக்குதல் திட்டத்திற்குத் தங்களைத் தயார்படுத்தியிருந்தனர் என்கிறது கள நிலவரம். மிகச் சரியாக வியூகம் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட அந்தத் திட்டம் இதுதான் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

3000 கிலோ வெடிமருத்துகளை உடலில் கட்டிய 60க்கும் அதிகமான கரும்புலிவீரர்கள்

3000 கிலோ வெடிமருந்துகளை தங்கள் உடலில் கட்டிக்கொண்டு 60-க்கும் அதிகமான கரும்புலிகள் ஊடறுப்புத் தாக்குதல் நடத்துவது என்ற திட் டத்தின்படி இருவரணி, மூவரணியாக கரும்புலிகள் பிரிந்து, முன்னேறி வந்த சிங்கள ராணுவத்தினர் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்தினர். விடுதலைப்புலிகளின் மற்ற படையணியினரும் சரமாரியாக சுட்டுக்கொண்டே ராணுவத்தை எதிர்த்து வீரச்சமர் புரிந்தனர்.

தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வந்த சிங்கள ராணுவம் இதனை எதிர்பார்க்க வில்லை. தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் தலைவரைப் பாது காப்பதற்கான ஊடறுப்புத் தாக்குதலில் ஈடுபட்ட புலிகளை ராணுவத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. இருதரப்பிலும் கடும் சண்டை நடந்த அவ்வேளையில், வெடிமருந்துகளுடன் பாயும் புலிகளைக் கண்டு ராணுவம் சிதறியது. இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி, பிரபாகரனை அங்கிருந்து பாதுகாப்பாக கொண்டு சென்றனர் தளபதிகள்.

சுரங்கப்பாதை வழியே சென்ற தலைவர் மற்றும் தளபதிகள்

புலிகளின் வசமிருந்த கடல்பகுதியில் போர்த்துகீசியர்கள் காலத்தில் கட்டப் பட்டிருந்த கோட்டை ஒன்று உண்டு. அந்தக் கோட்டைக்குள் பிரபாகரனை அழைத்துச் சென்றனர். அந்தக் கோட்டையின் கீழ்ப் பகுதியில் பழையகாலத்து சுரங்கப்பாதை உள்ளது. அந்த சுரங்கப்பாதை வழியாக பிரபாகரனை முள்ளிவாய்க்கால் கடற் பகுதிக்கு அழைத்துச்சென்றனர். அங்கே கடற்புலிகளின் படகு தயாராக இருந்தது. அதில் பிரபாகரனை ஏறச் செய்தனர்.

அதேவேளையில், வன்னிக்காட்டில் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது. அப்போது, இன்னொரு தற்கொலைப் படையும் படையணியும் வீரம் செறிந்த தாக்குதலைத் தொடர்ந்தது. மீண்டும் ராணுவத்தினர் சிதற, அந்தத் தருணத்தில் பொட்டு அம்மான் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். அப்போது திறம்படக் களமாடியவர் சார்லஸ் அந்தோணி. புலிகளின் தாக்குதலில் சிதறி ஓடுவதும், மீண்டும் ராணுவம் தாக்க வருவதுமாக வன்னிக் களம் அதிர்ந்து கொண்டிருந்த நிலையில், கடற்புலிகளின் தளபதியான சூசையை பாதுகாப்பாக வெளியே அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப் பட்டது.

தன் குடும்பத்தின் மீது அதிகப் பாசம் கொண்டவர் சூசை. அவரது மனைவியும் 17 வயது மகளும் ராணுவத்தின் பிடியில் சிக்கி சில நாட்கள்தான் ஆகின்றன.

இரண்டாயிரத்திற்கும் அதிகமான இராணுவத்தை கொன்ற கரும்புலிவீரர்கள்

புலிகளின் அடுத்தடுத்து 23 கரும்பலித்தாக்குதல் சம்பவங்களால் இரண்டாயிரத்திற்கும் அதிகமான சிங்கள ராணுவத்தினர் செத்து விழுந்தனர். இந்தத் தாக்குதல்களை முன்னின்று நடத்திய பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி, சிங்கள ராணுவத்தின் தாக்குதலுக்குள்ளாகி களப்பலியானார். புலிகளின் கடைசிநேர அதிரடித் தாக்குதல், சிங்கள ராணுவத்தின் 58-வது டிவிஷனை நிலைகுலைய வைத்தது. புலிகள் அடிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்ற பயபீதியில் ராணுவத்தினர் சிதறி ஓடினர்.வன்னிக்காடு புகை மண்டலமானது. கடைசி இலக்கை நெருங்கிவிடலாம் என நினைத்த ராணுவத்தின் கண்களை கரும்புகை மறைத்து, முன்னேற் றத்தை முடக்கியது.

இதனால் பிரபாகரனையும் பொட்டு அம்மான், சூசை ஆகி யோரையும் பாதுகாப்பாக வெளியேற்றுவது சாத்திய மானது. அவர்கள் தனித்தனி படகில் ஒருவர் பின் ஒருவராகப் பயணித்தனர். கடற்புலிகள் பயன் படுத்தும் படகுகளின் வேகம் சிங்கள ராணுவத்தை மிரள வைக்கக்கூடியது. உதாரணத்திற்கு, ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குச் செல்ல வேண்டுமென்றால் 12 நிமி டங்களில் அந்தப் படகின் மூலமாகச் சென்று விட லாம். மின்னல் பாய்ச்சலில் செல்லும் அத்தகைய படகுகளில் பிரபாகரனும் முக்கியத் தளபதிகளும் பயணித்து, இலங்கையி லிருந்து கிழக்குத் திசை நோக்கி 3 மணி நேரப்பயணத்தில் பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

சிறீலங்கா கடற்படையின் கண்களில் மண்ணைத்துாவிய கடற்புலிகள்

சிங்கள கடல் எல்லைக்குட்பட்ட ராணுவக் கப்பல்களை ஏமாற்றி விட்டுச் செல்வது புலிகளுக்கு கைவந்த கலை. அதே நேரத்தில், சர்வதேச கடல் எல்லையில் இலங்கைக்காகத் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டிருக்கும் இந்தியக் கடற் படைக் கப்பல்களின் கண்ணில் மணலை அள்ளிக்கொட்ட முடியுமா என்ற தயக்கம் புலிகள் தரப்பிலேயே இருந் திருக்கிறது. ஆனால், இந்தியக் கடற்படைக்கு ஏற்கனவே உரிய உத்தரவுகள் இடப்பட்டிருந்தன. இலங்கையிலிருந்து வெளியேறும் படகுகளைப் பிடித்துக் கொடுப்பது நமது வேலையல்ல என்பதுதான் அந்த உத்தரவு. பலவித அழுதஇதங்களால் இந்த உத்தரவு இடப்பட்டிருந்தது. அதனால், அந்த மின்னல் வேகப்படகு சீறிச் சென்றபோது, மேலிடத்து உத்தரவுக்கேற்ப இந்தியக் கடற்படை தனது செயல்பாடுகள் எதையும் மேற்கொள்ளவில்லையாம்.

ஞாயிறன்று புலிகள் மேற்கொண்ட இந்த வெற்றிகரமான ஊடறுப்புத் தாக்குதலுக்குப் பிறகுதான், திங்கட்கிழமையன்று காலையில் கடைசி நிலப்பரப்பையும் பிடிப்பதற்கான கொடூரத்தாக்குதலை சிங்கள ராணுவம் மேற்கொண்டது. பீரங்கிகள், எறிகணைகள் ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியபடியே முன்னேறிய ராணுவம், பிரபாகரன் தங்கியிருப்பதாகத் தங்களுக்கு தகவல் வந்த பகுதியில் சகட்டுமேனிக்குத் தாக்குதல் நடத்தி கரும்புகை மண்டல மாக்கியது. எஞ்சியிருந்த புலிகளையும் அப்பாவி மக்களையும் சிங்கள ராணுவத்தின் ஆயுதங்கள் உயிர் குடித்தன.

அந்தத் தாக்குதலின்போதுதான், குண்டு துளைக்காத கவசம் கொண்ட ஒரு ஆம்புலன்ஸ் வண்டியில் பிரபாகரனுடன் பொட்டு அம்மான், சூசை ஆகியோர் தப்பிக்க முயன்றதாகவும் அந்த வண்டிக்கு முன்னால் ஒரு வாகனத்தில் வந்த புலிகள், ராணுவத்தை நோக்கித் தாக்குதல் நடத்தியதாகவும், பதில் தாக்குதலாக ராக்கெட் லாஞ்சர்களை ராணுவம் ஏவியபோது, பிரபாகரனும் தளபதிகளும் சென்ற ஆம்புலன்ஸ் வண்டி தாக்கப்பட்டு மூவரும் கொல்லப் பட்டதாகவும் சிங்கள அரசு மீடியாக்களுக் குப் பரப்பியது. அதனை இந்தியாவின் ஆங்கில சேனல்கள் நொடிக்கொரு முறை பரப்பிக் கொண்டி ருந்தன.

ஞாயிறு இரவி லும் திங்கள் காலை யிலும் சிங்கள ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதலில் புலிப்படையினர் பெரு மளவில் பலியாயினர். பிரபாகரன் உள்ளிட்ட அனைத்து தளபதி களின் கதையையும் முடித்துவிட்டோம் என சிங்கள அரசு கொக்கரித்துக் கொண்டிருந்தது. புலிகளை முற்றிலும் ஒழித்துவிட்டதாக பிரணாப் முகர்ஜியைத் தொடர்புகொண்டு ராஜபக்சே தெரிவித்தார்.

பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என இந்திய வெளியுறவுத்துறையும் நம்பியது. இதனை அத்துறையின் செய்தி தொடர்பாளரே பிரஸ் மீட்டில் தெரிவித்தார்.

“மொக்குச் சிங்களவங்கள் கோட்டைவிட்டுங்டாங்கள்” என தனது சகாக்களிடம் தெரிவித்த கருணா

வன்னிக்காட்டில் சிதறிக் கிடந்த புலிகளின் உடல்களை ராணுவத்தினர் வரிசையாக அடுக்கி வைத்திருந் தனர். சில உடல்கள் கருகியிருந்தன. பிரபாகரன் உள் ளிட்ட புலிகளின் முக்கியத் தலைவர் களை அடையாளம் காண்பதற்காக கருணாவை கொழும்பிலிருந்து தனி ஹெலிகாப்டரில் அழைத்து வந்தது சிங்கள ராணுவம். புலிகளால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் இருந்த கருணா, அவர் கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டார்கள் என்ற தகவலைக் கேட்டு, உற்சாகமாகத்தான் காட்டுப்பகுதிக்கு வந்தார். வரிசையாகக் கிடத்தி வைக்கப்பட்டிருந்த சடலங்களைப் பார்த்த அவருக்கு அதிர்ச்சி.

சிங்கள ராணுவம் கொன்றதாகச் சொல்லப்பட்ட புலிகளின் தளபதிகளில் ஒருவரின் உடலைக்கூட கருணாவால் அங்கு பார்க்க முடியவில்லை. உதட்டைப் பிதுக்கிவிட்டுத் திரும்பிய கருணா, “மொக்குச் சிங்களவங்கள் கோட்டை விட்டுட்டாங்கள்’ எனத் தனது சகாக்களிடம் சொல்லி யிருக்கிறார்.

தலைவர் பற்றி வாய் திறக்காத ஜனாதிபதி

இந்த நிலையில், செவ்வாயன்று காலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் ராஜபக்சே, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி எதுவும் சொல்லாதது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. பகல் 12 மணியளவில், நந்திக்கடல் பகுதியில், தலையில் சுடப்பட்ட பிரபாகரனின் உடல் கிடந்ததாக சிங்கள ராணுவம் அறிவித்து, தான் எடுத்த சில க்ளிப்புகளை மீடியாக்களுக்குக் கொடுத்தது.

பிரபாகரனின் தோற்றத்தை விட மெலிந்திருந்தது உடல். அவர் கையில் எப்போதும் கட்டியிருக்கும் வாட்ச் இல்லை. கழுத்தில் கயிறு அணிந்து பாக் கெட்டில் சய னைடு குப்பி வைத்தி ருப்பது வழக்கம். ஆனால், சிங்கள ராணுவம் காட்டிய படத்திலோ சயனைடு குப்பி இல்லை. ஐடென்ட்டி கார்டு காட்டப்பட்டது. இப்படி பல முரண்பாடுகளைக் கொண்ட க்ளிப்புகளைக் காட்டியதுடன், மதியம் கண்டு பிடிக்கப்பட்ட உடலை ஒரு சில மணிநேரத்தில் டி.என்.ஏ சோதனை மூலமாக உறுதிப்படுத்தி விட்டதாகவும் சிங்கள அரசு தம்பட்ட மடித்தது.

கமலின் “தசாவதாரம்” திரைப்படம் ஞாபகத்திற்கு வருகிறது

தண்ணீரில் கிடந்த உடல் எனச் சொல்லப்பட்ட நிலையில் கைகள் மட்டும் ஊறியிருக்க, முகம் நன்கு ஷேவ் செய்யப்பட்ட நிலையில் மொழுமொழுவென இளவயது பிரபாகரன் போல் இருந்தது. இது எப்படி சாத்தியம் என்பதை தசாவதாரம் படத்தில் மாஸ்க் அணிந்த கமலை பத்து கெட்டப்புகளில் பார்த்த தொழில்நுட்பம் அறிந்தவர்களால் விளக்க முடியும் என்கிறார்கள் தடயவியல் துறையினர்.

சிங்கள அரசின் பிரச்சாரத்தை ஊடகங்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருந்த வேளையில், நக்கீரனின் தொடர்ச்சியான முயற்சிகளின் மூலம் கிடைத்திருக்கும் உறுதி யான தகவல், உலகத் தமிழர்களின் நேசத்திற்குரிய விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதுதான். பிரபாகரனின் மனைவி, மகள், இரண்டாவது மகன் ஆகியோர் பாதுகாப்பாக வெளிநாட்டில் உள்ளனர்.

தன்னுடைய பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர ஏற்படுத்திக்கொண்டபிறகு , பிரபாகரனே ஊடகத்தில் தோன்றி உரையாற்றுவார். அதுவரை சிங்கள ராணுவம் தனது தரப்புச் செய்திகளை பரப்பிக்கொண்டிருக்கும். பிரபாகரன் ஊடகங் களில் உரையாற்றும்போது சிங்கள அரசின் மாஸ்க் முகம் அம்பலத்திற்கு வரும் என்கி றார்கள் மிகமிக முக்கியமானவர்கள். இச் செய்தி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதை வாசகர்களிடம் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி: http://www.nathiyosai.com/