Friday, July 31, 2009

கறுப்பு ஜீலை 1983 ல் இருந்து மே 2009 வரையில்…

கறுப்பு ஜீலையில் காணமல் போன உறவுகளுக்கு கண்ணீர் வணக்கம் செய்தபடியே நெருப்பு நினைவுகளை அள்ளிவரமுயல்கின்றேன். புகை எழுந்த கொழும்பு மாநகரத்தின் மத்தியில் எரிந்து கொண்டிருந்த தமிழர் வீடுகளும், வணிப நிறுவனங்களுக்கே தமிழர் உடல்களும் வெந்து கொண்டிக்க சிங்களம் எகத்தாளமிட்டு கூச்சலிட்டு கும்மாளம் கொண்டாடியது.

கறுப்பு ஜீலையில் நாம் ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்தோம், பல்லாயிரம் பேர் அகதிகளாகி இன்று வரை மாற்றான் தேசங்களின் அலைகின்றனர். அதை விடவும்  பல மில்லியன் கணக்கான சொத்துக்கள் அழிந்து நாசமாய் போனது.

கறுப்பு ஜீலையின் நினைவுகளை ஈழத்தமிழனுக்கு யாருதம் சொல்லித்தர தேவையில்லை என்ற ரீதியில் அதன் வடு ஈழத்தமிழர் வாழ்வியலில் ஒரு அங்கமாகிவிட்டது.

ஜீலை மாதம் 83ம் மூன்றான் ஆண்டின் பின் எழுந்த தமிழர் வரலாற்று எழுச்சியானது தொடர்ந்து அவ்வாறனதொரு கலவரத்தை, சிங்கள் ஆளும் வார்க்கமும் காடையர் கூட்டம் நடாத்த அனுமதிக்கவில்லை. அதற்க்கு சாதகமான சூழல் தென்னிலங்கையிலும் சரி எந்த பிரதேசத்திலும் எழுந்திருக்கவில்லை.

தமிழீழ விடுதலைப்போரின் உச்சக்கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினர் கொல்லப்பட்ட போதும் அதன் தாக்கம் தென்னிலங்கை தமிழர்களை பாதிக்கவில்லை. அவர்களது அந்த அமைதிக்கு காரணம் சிங்கள இனத்துடனான ஒன்றிணைவு அல்ல. மாறாய் சிங்கள இனத்துக்கும் ஆளும் சமூகத்துக்கும் தமிழர் தலைமை மீது கொண்ட அச்ச உணர்வே.!

இத்தனைக்கு பின்னர் இன்று நாம் நட்டாற்றில் நிற்பதாய் பலரும் நம்ப தலைப்பட்டுள்ளனர். கறுப்பு ஜீலையை நினைவு கூரும் நாம் இன்னோரு கறுப்பு கறைந் படிந்த ஒரு “மே” யையும் நினைவு கூரத்தலைப்பட்டுள்ளோம். தமிழீழ போரின் எழுச்சியை கறுப்பு ஜீலையும் தமிழீழ விடுதலை;  போரின் பின்னடைவை கறுப்பு மே தீர்மானித்திருக்கின்றது.

கறுப்பு ஜீலையில் 2000 வரையிலான தமிழர் கொல்லப்பட்ட போது எமது இனம் பெற்ற எழுச்சியும், அந்த அழிவிலிருந்து மீள வேண்டும் என்ற எண்ணமும்  மே மாதம் இருபதினாயிரம் போது மக்கள் கொல்லப்பட காரணமான சிங்கள இனவாத அரசின் போருக்கு எதிரான போராடவோ அல்லது அந்த போரின் போது சிதைவடைந்து போன எமது சில கட்டமைப்புகளை சீர் செய்யவோ இந்த மக்கள் தயாராய் இல்லை.

சிதைந்து போன கட்டமைப்புகளை சீர் செய்ய வேண்டிய காலத்தில் சிதைவுகளை மென்மேலும் வளர்ப்பதில் சிங்களத்தின் ஆதரவுக்குழுக்களை விடவும் தமிழ் மக்கள் மத்தியில் இயங்கிய கட்டமைப்புக்கள் செயல்ப்படுவது வருந்தத்தக்கது.

கறுப்பு ஜீலையில பிரசவித்த எத்தனையோ கண்மனிகளை விடுதலையின் விலையாய் தாய் மடியின் உரமாய் நாம் இட்ட போதும் விடுதலையை வெறும் அரசியலாய் மட்டும் பார்க்கும் கேவலமானவர்களுடன் நாம் வாழ நிர்பந்திக்கப்ட்டிருப்பது வேதனையான விடயமாகும்.

செய் அல்லது செத்து மடி என்று எம் தலைவன் காட்டிய பாதையில் நடந்த அந்த உன் வீரர்களின் கனவுகளை கலைத்து நம் சுயத்தை வெளிப்படுத்த முனைவோர் கறுப்பு ஜீலை ஒன்றில் கனடா ஓடி வந்தவர்களாகவே இருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.

கறுப்பு ஜீலையில் எம் தமிழன் சிந்திய குருதி எப்படி எழுச்சியை உண்டாக்கி ஈழ விடுதலையின் வாசலை அடைந்தததோ அவ்வாறு மே மாதம் எம் விடுதலைப் போரை அணைக்க, அழிக்க சிங்கள தேசம் மேற்க்கொண்ட அழிவு நடவடிக்கைகளிலிருந்து நாம் மீண்டும் எழ வேண்டும். நாம் மீண்டிட எமது கட்டமைப்புக்கள் மீண்டும் சரி செய்யப்பட வேண்டும் என்ற ஆவல் எல்லாத் தமிழ் மக்களின் மத்தியிலும் இருக்கத்தான் செய்கின்றது.

அதை தமிழீழ விடுதலை; போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல விளையும் பெருந்தகைகள் புரிந்து கொண்டு தமது அடுத்த கட்ட நகர்வுகளுக்கு செல்ல வேண்டும் அல்லது அடுத்த கட்டம் தொடர்பான ஆக்க பூர்வமான செயற்ப்பாடுகளுக்கு வழி விட வேண்டும்

கனடாவிலிருந்து ஆதவன்.


Thursday, July 30, 2009

இடஒதுக்கீடே தேசாபிமானத்தின் ரகசியம் – தந்தை பெரியார்.

image பார்ப்பனரல்லாதார் இயக்கம் ஏற்பட்டு சுமார் 15 வருட காலமே ஆகியிருந்தாலுங்கூட, அது ஏற்பட்ட பிறகு இந்த நாட்டுக்கு 100க்கு 97 பேர்களாய் உள்ள நம் பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கும், சிறப்பாகத் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கும் எவ்வளவு பயன் அளித்து வந்திருக்கின்றது என்பதை உணர்ந்தால், பார்ப்பனர்களின் சூழ்ச்சியும் அவர்களுக்கு உதவி செய்யும் மூடர்களுடையவும், கூலிகளுடையவும், குலத் துரோகிகளுடையவும், யோக்கியதையும் சிறிதாவது விளங்காமல் போகாது.

தென்னிந்தியாவில் போலிஸ் இலாக்காவிலும், முன்சீப் இலாக்காவிலும் (நிர்வாகம், நீதி என்கின்ற இரண்டு இலாக்காவிலும்) பார்ப்பனர்கள் ஆதிக்கம் இல்லாமல் இருந்திருக்குமானால், நேற்று நடந்த இந்திய சட்டசபைத் தேர்தல்களின் முடிவு இப்படி ஆகியிருக்காது என்பதற்கு அனேக ஆதாரங்கள் காட்ட நம்மால் முடியும். இது ஒருபுறமிருக்க, இந்த நாட்டுக்குப் பழம்பெரும் குடிமக்களாகிய பார்ப்பனரல்லாதார் நிலை இந்த இருபதாம் நூற்றாண்டிலும், சூத்திரராயும் சண்டாளர்களாயும் மதிக்கப்படவே முடியாது. ஆகவே, கப்பலுக்கு சுக்கான் எப்படி முக்கிய கருவியோ அதுபோல மக்களுக்கு மக்களை நடத்துவதற்கு போலிசும், முன்சீப்பும், சுக்கான் மாதிரியாய் இருந்து வருகின்ற அவ்வளவு முக்கியமானவையாகும்.

ஆனால், உத்தியோகம்தான் பெரிதா? தேசம் பெரிதா? என்று பார்ப்பனர்கள் நம்மைப் பார்த்துக் கேள்விகள் கேட்பார்கள்; பார்ப்பனர்களது கூலிகளும், அடிமைகளும் இதற்குப் பின்பாட்டும் பாடுவார்கள். உத்தியோகத்தை மனதில் வைத்தே தேசம், தேசாபிமானம் என்று பார்ப்பனர்கள் போசி வரும் ரகசியம் பார்ப்பனரல்லாத "தேசாபிமானிகள்' பலருக்குத் தெரியாது என்பதோடு, பலர் தெரிந்தும் தங்கள் பிழைப்புக்கு வேறு விதியில்லாமல் பின்பாட்டுப் பாடுகின்றார்கள் என்றே நினைக்கின்றோம்.

இன்று தமிழ் நாட்டிலுள்ள தேசபக்திப் பார்ப்பனர்களை எடுத்துக் கொண்டால், அவர்களது பிள்ளை குட்டிகள், போத்துப் பிதிர்கள் எல்லாம் எதை எதிர்பார்த்து இன்று வாழ்கின்றார்கள் வளர்க்கப்படுகின்றார்கள்? B.A., M.A, B.Com, IAS முதலிய படிப்புகள் படிக்க வைக்கிறார்கள் என்பவைகளைப் பார்த்தால், பார்ப்பனர்கள் தேசாபிமானத்தைப் பிரதானமாகக் கருதுகிறார்களா? அல்லது, உத்தியோகத்தைப் பெரிதாகக் கருதுகின்றார்களா? என்ற சூழ்ச்சி விளங்காமல் போகாது. பார்ப்பனர்கள், சர்க்கார் உத்தியோகத்தை எதிர்பார்க்காமலும் வெறும், புத்திக்காகவும் அறிவுக்காகவும், தேசபக்திக்காகவும் படிக்கின்றார்கள் என்று, இன்று எந்த முட்டாளாவது கருதியிருக்கின்றார்களா என்று கேட்கின்றோம்.

ஆகவே, உத்தியோகத்தையே நம்பி உயிர் வாழும் ஒரு கூட்டம் உத்தியோகத்திலேயே 100க்கு 70, 80, 90 கணக்கில் புகுந்து கொண்டும், நத்திக் கொண்டும் மற்றவர்களை உள்ளே விட ஒட்டாமலும் சூழ்ச்சி செய்து வயிறு பிழைக்கும் ஒரு கூட்டம் அதற்காகவே தங்கள் பிள்ளை குட்டி, போத்துப் பிதிர்களைத் தற்புத்தி செய்து கொண்டு அரசாங்க ஆதிக்கத்தைக் கைப்பற்ற எவ்வித இழி தொழிலையும் கையாளும் ஒரு கூட்டம், "உத்தியோகம் பெரிதா? தேசம் பெரிதா?' என்று உத்தியோகத்தில் 100க்கு 25 போர்கள்கூட இல்லாத நம்மைக் கேட்பதாயிருந்தால், இதில் யோக்கியப் பொறுப்போ, நாணயமோ, கடுகளவாவது இருக்க முடியுமா?

ஜஸ்டிஸ் இயக்கத்தின் பயனாய்ப் பார்ப்பனர்களின் ஏகபோக (உத்தியோக) அனுபவிப்பு குறைந்த பிறகுதான் பார்ப்பனர்கள் உத்தியோகம் வேறு, தேசாபிமானம் வேறு என்று சொல்ல ஆரம்பித்தார்களே தவிர, அதற்கு முன்பு வரை உத்தியோகங்களே தேசாபிமானமாய் இருந்து வந்தது யாரும் அறியாததல்ல. உதாரணமாக, ஜஸ்டிஸ் கட்சி ஏற்படும் வரை, காங்கிரஸ் பிரசிடெண்டுகளும் காரியதரிசிகளும், அய்க்கோர்ட் ஜட்ஜுகளாகவும், நிர்வாக சபை மெம்பர்களாகவும் இருந்து வந்ததே போதுமானதாகும்.

ஜஸ்டிஸ் கட்சி ஏற்படுவதற்கு முன்பு, தீண்டப்படாதார் நிலை எப்படியிருந்தது என்பது, இப்பொழுது கூலிக்கு மாரடிக்கும் பச்சோந்திகளுக்கும் தேசபக்தர்களுக்கும் "அரைடிக்கட்' தேச பக்தர்களுக்கும் தெரியாவிட்டாலும் ஒரு நாற்பது வயதிற்கு மேற்பட்ட பார்ப்பனர் - பார்ப்பனரல்லாத தேசபக்தர் எவரும் அறிந்ததேயாகும். ஆகவே, நமது பார்ப்பனரல்லாதார் சமூகம் அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப விகிதாச்சாரம் உத்தியோகத்தில் பெறும் வரையிலும் அல்லது பார்ப்பனர்கள் தங்கள் விகிதாச்சாரத்துக்கு மேற்பட்ட விகித உத்தியோகம் தங்களுக்கு வேண்டாம் என்று சொல்லும் வரையிலும் ஜஸ்டிஸ் கட்சி இருந்து தீர வேண்டியதே என்பதே நமது அபிப்பிராயம்.

அது தேசத் துரோகக் கட்சியாக ஆயினும் சரி, சர்க்கார் தாசர்கள் "குலாம்கள்' கட்சியாயினும் சரி, அதனுடைய பிறப்புரிமையைப் பெற்ற பிறகுதான் அது வேறு வேலையில் இறங்க வேண்டுமே தவிர, அதை விட்டுவிட்டுப் பார்ப்பனர்களுக்குப் பயந்து கொண்டு "எங்களுக்கு வகுப்புவாரித் திட்டம் வேண்டியதில்லை, யாரோ ஒருவர் இருவருக்கு மந்திரிப் பதவியோ, பெரிய சர்க்கார் உத்தியோகப் பதவியோ மாத்திரம் இருந்தால் போதும். நாங்களும் பெரிய தேசபக்தர்கள் கூட்டத்தில் சேர்ந்தவர்கள்தாம்' என்றால், அதைவிட ஈனத் துரோகமான கட்சி உலகில் வேறு இல்லையென்றுதான் சொல்லுவோம்.

பகுத்தறிவு' இதழின் தலையங்கம் - 23.12.1934


Tuesday, July 28, 2009

தமிழ்நாட்டுத் தமிழனுக்கு... – நிர்மலா.

அன்று

வணிகக் கப்பல்கள்

வரிசையாய் அணிவகுத்த நின்ற

நம் தென்கடலில்,

இன்று-ltte-tamilan-eelam

நச்சு உலைகள்

நங்கூரமிட நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றன

நீ,

தாராளமாய்த் தாரைவார்த்துக் கொடுத்தத்

தமிழ் மண்ணில்

உன்னையே வேவுபார்க்க

உளவுக்கோபுரம் உயர்ந்து கொண்டிருக்கிறது

இங்கிருந்து

அமைதிப்படை புறப்பட்ட அன்றே

நம் கடல் பகுதியின்

அமைதி குலைக்கப்பட

அங்கீகாரம் வழங்கப்பட்டது.

உனக்கு ஏனோ

புரியாமல் போயிற்று

ஆன்றோர் அறிவுரை

உனக்கு

உறைக்காமல் போனது,

அன்று மட்டுமல்ல-

இன்று வரையிலும் தான்!

தமிழா!

ஈழ இளங்குருத்துக்களின்

குருதிக் கறை படிந்த

"கை"க்கும்

மானங்கெட்டு,

பிச்சைப் பாத்திரத்தினுள் கவிழ்ந்து

உதிக்க மறந்த "சூரியனு"க்கும்

நீ போட்டாயே ஓட்டு,

அவை திரும்பிவரும்...

பகைப்புலங்களின் ஆயுத வீச்சுகளாய்!

செய்தித்தாள்களில் மட்டுமே

நீ -

வாசித்தறிந்த வடபுலத்து யுத்தங்கள்

இன்று நம்

வாசற்கதவைத் தட்டிக் கொண்டிருக்கின்றன.

விண்மீன்களைக் கண்டால் கூட

வீறிட்டு அலறும்

ஈழக் குழந்தைகளின்

அவல அனுபவங்கள்,

நமது தலைமுறைகளுக்கும்

தயாராகிக் கொண்டிருக்கின்றன

நீயோ-

ஒலிம்பிக் விழாவில் சிதறும்

சீனப் பட்டாசுகளைப் பார்த்து

வாய்ப்பிளந்து கொண்டிருக்கிறாய்

ஈழத்திரு மண்ணில் -

பிணம் புதைக்கத் தோண்டப்பட்ட

குழிகளில் கூட

குருதி கொப்பளித்துக்கொண்டிருந்த

அக்கொடூரப் பொழுதுகளில்

நீ

"கவர்"களின் கனத்தக்

கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தாயே...

நினைவில் கொள்!

ஈராயிரம் ஆண்டுகளின் சாரம் ஊறி,

ஆறு பத்தாண்டுகளில் வைரம் ஏறி

உயிர் ஊற்றி வளர்த்திட்ட

ஈழமரம் -

வெட்டப் படுவதற்குக்

கோடாலி வார்க்கப்பட்டது

உனது உலைகளில்!

வெட்டப்பட்ட மரம்

நிச்சயமாய் துளிர்க்கும்;

ஆயிரமாயிரம் -

துவக்குகளாய் உயிர்க்கும்!

இங்கு நீயோ,

உன் வேர்களை வெட்டிக்கொண்டிருக்கிறாய்

எச்சரிக்கை!

நன்றி: http://www.thenseide.com


Saturday, July 25, 2009

சொல்லாமல் போகார் எம் தலைவர்.

தலைவர் இருக்கின்றாரா இல்லையா என்ற ஆய்வுகள் என்னைப் பொறுத்தவரை தேவையற்றவை என்றே நான் கருதுகின்றேன். தமிழ் மக்களை ஒன்றிணைத்து ஒரு மாபெரும் சக்தியாக வளர்த்தெடுத்து, தமிழர் தாயக தேசத்தை எவ்வாறு வென்றெடுக்க வேண்டும் என்பதை தமிழினத்திற்கு தலைவர் மிகத் தெளிவாக கூறிவைத்திருக்கின்றார்.

எனவே, தலைவர் இருக்கின்றாரா இல்லையா என்ற விவாதங்களைத் தவிர்த்துவிட்டு தலைவர் காட்டியுள்ள வழியில் சென்று தாயகத்தை வென் றெடுப்பதே இன்றைய நிலையில் தமிழ் மக்களின் காலப்பணியாக இருக்க வேண்டும்.

ஆனாலும், தங்களது சுய நலன் களுக்காக தலைவரை இந்திய, சிறீலங்கா அரசுகளைவிட பலமுறை தங்கள் அறிக்கைகளில் கொன்றுகொண்டிருக்கும் நம்மவர்களுக்காக இங்கே சில கருத்துக்களை நான் முன்வைக்கலாம் என்ற உணர்விலேயே பால்ராஜ் அண்ணையின் இந்தத் தொடரின் ஊடாக, கடந்த காலங்களில் நிகழ்ந்த சில விடயங்களை எமது மக்களோடு இந்தக் கால நேரத்தில் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.

தலைவர் எப்போதும் தன்னை யொரு தலைவராக வைத்துக்கொள்ள விரும்பியதில்லை. ஒரு போராளியாக வாழவே அவர் எப்போதும் விரும்புபவர். ஒரு போராளியாக வாழ்ந்து, ஒரு போராளியாக களமுனையில் எதிரியுடன் மோதி வீரச்சாவைத் தழுவுவதே கெளரவமான சாவு என்று கருதுபவர்.

இதற்கு பல ஆதரங்களை இங்கே முன்வைக்க முடியும். 1987ம் ஆண்டு களில் அனுபவ ரீதியாகக் கண்ட சில விடயங்களை இந்த இடத்தில் ஆதாரமாக வைக்கலாம் என்று நினைக்கின்றேன்.

பேச்சுவார்த்தைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தலைவர் டில்லியில் அசோகா விடுதியில் தங்க வைக்கப்பட்டி ருந்தார். விடுதலைப் புலிகள் ஆயுதங் களை ஒப்படைக்க வேண்டும் என்பதை அங்குவைத்து இந்திய அதிகாரிகள் தலைவரிடம் எச்சரித்தே கூறியிருந்தனர். வெளியுலக தொடர்புகள் துண்டிக்கப் பட்டிருந்த நிலையில் ஆயுதங்களை ஒப்படைப்பது குறித்து தலைவர் போராளிகளுக்கு அறிவிக்கவேண்டும் என அவர்கள் கூறியிருந்தார்கள்.

ஆனால், அவர்களின் கைகளில் மிகவும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இருந்தபோதும் அங்கு காவலுக்கு நின்ற கறுப்பு பூனைகள் படைப்பிரிவின் ஊடாகவே தலைவர் தாயகத்தில் உள்ள போராளிகளுக்கு ஒரு தகவலை அனுப்பியிருந்தார்.

அந்தத் தகவலில் அவர் மிகத் தெளிவாக ஒரு விடயத்தை சொல்லியிருந்தார். அதாவது,

தான் நேரில் வராமல் யாரும் ஆயுதங்களை ஒப்படைக்கக்கூடாது. அவ்வாறு ஒலி நாடாவில் எனது குரலோ, அல்லது ஒளிநாடாவிலோ நான் கதைத்த பதிவுகளை யாராவது கொண்டுவந்து தந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டாம்.

நான் நேரில் வந்து உங்களிடம் சொல்லும் வரைக்கும் யாரும் ஆயுதங் களை ஒப்படைக்கக்கூடாது. அதனையும் மீறி இந்திய இராணுவத்தினர் வந்தால் தாக்குதலைத் தொடங்குங்கள். அவ்வாறு இந்திய இராணுவத்தினருடன் மோது வதற்கு விருப்பம் இல்லாதவர்கள், ஆயுதங்களை வைத்துவிட்டு போகலாம்"

என்பதையும் இந்தியாவின் முற்றுகைக்குள் இருந்துகொண்டும் தலைவர் உறுதியாக அறிவித்திருந்தார்.

பின்னர், தலைவர் நேரில் வந்து அறிவித்ததன் பின்னரே ஆயுத ஒப்படைப்பு நிகழ்ந்தது என்பது வரலாறு.

இப்படிப்பட்ட தலைவர், எந்த மக்களுக்காக போராடுகின்றாரோ அந்த மக்களுக்கு எந்தவொரு கருத்தையும் நேரிலோ, ஒளிப்பதிவாகவோ சொல்லாமல், முகம் தெரியாத ஒருவரை நீங்கள் தலைவராக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அறிவித்துவிட்டு சென்றுள்ளாரா என்பதை இந்தச் சம்பவத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் புரிந்துகொள்ள முடியும்.

நன்றி: ஈழமுரசு.


Sunday, July 19, 2009

காக்கத் தவறினோம்! கழுவாய் தேடுவோம்!! - பழ. நெடுமாறன்.

Nedumaran

உலகெங்கும் வாழும் சுமார் பத்துக் கோடி தமிழர்களில் ஏறத்தாழ ஆறரைக் கோடி தமிழர்கள் தமிழ்நாட்டில் வாழ் கிறார்கள். எனவே உலகெங்கும் வாழ்கிற தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் தங்களுக்கு இடர் சூழும் போதெல்லாம் அதிலிருந்து மீள தமிழகத்தையே எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டிய கடமை தமிழகத்திற்கு உண்டு.

மியான்மர் முதல் பிலிப்பைன்ஸ் வரை உள்ள தென்கிழக்கு ஆசிய நாடு கள் எல்லாவற்றிலும் சீனர்கள் பெருந் தொகையாக வாழ்கிறார்கள். அவர்களின் நலனில் செஞ்சீனம் மிகுந்த அக்கறைக் கொண்டிருக்கிறது. எனவே இந்நாடுகளில் அவர்களுக்கு எதிராக சுண்டு விரலை அசைப்பதற்கு கூட மற்ற இனத்தவர்கள் அஞ்சுகிறார்கள்.

உலகத் தமிழர்களுக்கு தான் ஆற்ற வேண்டிய கடமையைத் தமிழகம் செவ்வனே செய்திருக்கிறதா என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக் கொள்வது நல்லது.

இலங்கையில் மிக அண்மையில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர் கள் சிங்கள இராணுவ வெறியர்களினால் கொல்லப்பட்டார்கள். அதைத் தடுப்ப தற்குக் குரல் கொடுக்க வேண்டிய தமி ழகம் அந்த கடமையை முழுமையாகச் செய்யவில்லை. இந்த இரங்கத்தக்க நிலை இன்னமும் தொடர்கிறது. கடந்த 26-06-2009 அன்று தமிழகச் சட்ட மன்றத்தில் அ.தி.மு.க மற்றும் ம.தி.மு.க., பா.ம.க. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் சார்பில் கீழ்க்கண்ட தீர்மானம் முன் மொழியப்பட்டது. ‘சர்வதேசச் சட்டம் மற்றும் ஜெனிவா உடன்பாட்டில் உள்ள போர் விதிமுறைகள் ஆகியவற்றை முற்றிலுமாக மீறி அய்ம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி இலங்கைத் தமிழர் களை கொன்று குவித்து ஓர் இனப் படு கொலையை இலங்கை அரசு நடத்தி யுள்ளது. இது மனித உரிமையை மீறிய செயலாகும். எனவே இலங்கை அரசின் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டி மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட வேண்டும்.’

இத்தீர்மானம் எக்கட்சியின் நலன் சார்ந்த தீர்மானமும் அல்ல. ஈழத் தமிழர் நலன் பற்றிய தீர்மானமாகும். கட்சி எல் லைக் கோடுகளுக்கு அப்பால் அனைத் துக் கட்சிகளும் இத்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் சட்டமன்றப் பேரவையின் தலைவர் இத்தீர்மானத்தை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வதைத் தள்ளிப் போட் டார். உடனடியாக எடுக்க வேண்டிய இத்தீர்மானத்தை ஒத்தி வைத்ததற்குப் பின்னணியில் அரசியல் இருக்கிறது என்பது வெளிப்படையாகும்.

இலட்சக்கணக்கானத் தமிழர் களை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று குவித்த இலங்கை அரசை சர்வ தேச நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிறுத்த வேண்டியது தமிழனாகப் பிறந்த ஒவ் வொருவரின் கடமையாகும். ஆனால் அந்தக் கடமையை மறந்தும் துறந்தும் செயலாற்றுவது தமிழினத்திற்கு இழைக்கப்படுகிற துரோகமாகும்.

திட்டமிட்ட இனப் படு கொலையை சர்வதேச சமுதாயம் மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளது. இரண் டாம் உலகப் போரில் ஏற்பட்ட அத் தனை அழிவுகளுக்கும் காரணமான ஜெர்மானியத் தலைவர்களைப் போர்க் குற்றவாளியாக்கி விசாரணை செய்ய நூரம்பர்க் எனும் நகரில் விசாரணை நீதிமன்றமும் ஜப்பானியப் போர்க் குற்ற வாளிகளை விசாரிக்க டோக்கியோவில் விசாரணை நீதிமன்றமும் அமைக்கப் பட்டன. இந்த நீதிமன்றங்கள் வகுத்த வரைமுறைகளிலும் அய்.நா பேரவை நிறைவேற்றியத் தீர்மானங்களிலும் 1948-ஆம் ஆண்டு இனப் படு கொலையைத் தடுப்பதற்கும் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்குமான மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர் மானங்களும் இன்று வரையிலும் இப் பிரச்னையில் உலக நாடுகளுக்கு வழி காட்டி வருகின்றன.

இரண்டாம் உலகப் போரின் போது கிழக்கு அய்ரோப்பிய நாடுகளில் ஏறத்தாழ ஒரு கோடியே இருபது இலட்சம் சிலேவிய, யூத இனங்களைச் சேர்ந்த மக்கள் இனப் படுகொலை செய்யப்பட்டனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவில் வெள்ளை யர் ஆட்சியின் போது கருப்பினத்தைச் சேர்ந்த நீக்ரோ மக்களும் இந்திய மக்களும் இனப் படுகொலைக்கு ஆளானார்கள்.

இஸ்ரேல் ஆக்கிரமித்தப் பகுதி களில் இருந்த எண்ணற்ற அராபிய மக் கள் இனப் படுகொலைக்கு ஆளாயினர்.

வியட்நாமில் அமெரிக்கப் படை யினர் வியட்நாம் மக்களை இனப் படுகொலை செய்தனர்.

சீனா திபெத்திய மக்களைக் கொன்று குவித்தது.

பாகிஸ்தான் கிழக்குப் பாகிஸ் தானைச் சேர்ந்த வங்க இன மக்களை இனப் படுகொலைக்கு ஆளாக்கிற்று.

அதைப் போல இலங்கையில் தமிழ் மக்கள் சிங்கள இராணுவ வெறி யர்களால் திட்டமிட்ட இனப் படு கொலைக்கு தொடர்ந்து ஆளாகி வருகிறார்கள்.

உலகின் பல பகுதிகளில் நிலவி வரும் இத்தகைய இனப் படுகொலைகள் குறித்து விசாரிப்பதற்காகவும் குற்ற வாளிகளைத் தண்டிப்பதற்காகவும் சர்வ தேச நீதிமன்றம் அமைக்கப்பட்டது. 1945-ஆம் ஆண்டு அய்.நா இதை அமைத்தது. அய்.நா-வின் பட்டயத்தில் இந்த அமைப்புக் குறித்தும், அதன் அதிகார வரம்புக் குறித்தும் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அய். நா பேரவையும் பாதுகாப்புக் குழுவும் கூடி சர்வதேச நீதிமன்றத்திற்குரிய 15 நீதிபதி களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அய். நா-வில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் நாடுகளைச் சேர்ந்தவர்களாக இவர்கள் இருக்க வேண்டும். ஒரே நாட்டைச் சேர்ந்த இருவர் இதில் இடம் பெற முடியாது. இந்த நீதிமன்றம் நெதர்லாந்து நாட்டில் உள்ள ஹெக் நகரில் இயங்கும்.

1990-ஆம் ஆண்டில் போஸ்னி யாவின் கிழக்குப் பகுதியில் வாழும் சுமார் 40,000-க்கு மேற்பட்ட போஸ்னிய முஸ்லிம்களை போஸ்னியா-செர்பிய இராணுவம் திட்டமிட்ட இனப்படுகொலைச் செய்தது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. யூகோசிலேவியா, செர்பியா ஆகியவற்றின் முன்னாள் அதிபரான சுலோ போடன் மிலோசெவிக் மற்றும் முக்கியமான 30 பேர்கள் மீது இந்த வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த இடைக்காலத்தில் மிலோசெவிக் இயற்கையாக மரணம் அடைந்தார்.

2007-ஆம் ஆண்டு பிப்ரவரி 26-ஆம் தேதி சர்வதேச நீதிமன்றம் போஸ்னிய இனப்படுகொலை வழக்கில் திட்டமிட்ட இனப்படுகொலை நடை பெற்றிருக்கிறது எனத் தீர்ப்பு அளித்தது. மேலும் இவ்வழக்கில் பலர் தண்டிக்கப் பட்டனர். சிலர் விடுதலையாயினர்.

1992-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி அய்.நா பேரவை நிறைவேற்றிய தீர்மானம் எண் 47/121-இன் படி இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையும் இனப் படுகொலையேயாகும். இந்த தீர்மானத்தின்படி போஸ்னியாவில் செர்பி யர்கள் நடத்திய இனப் படுகொலைக் கண்டிக்கப்பட்டது.

2005-ஆம் ஆண்டு ஜுன் மாதம் 27-ஆம் தேதி அமெரிக்கப் பிரதிநிதிகள் அவை போஸ்னியாவில் நடெைபற்ற இனப் படுகொலையைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றியது.

எனவே அய்.நா பேரவை, அமெ ரிக்க பிரதிநிதிகள் அவை, சர்வதேச நீதிமன்றம் போன்ற அமைப்புகள் இனப் படுகொலையை மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளன. அதன் அடிப்படையில் தமிழகச் சட்டமன்றமும் இத்தகைய தீர் மானத்தை நிறைவேற்றுவது இன்றியமை யாததாகும். உற்றார் உறவினர் பெற்றோர் பிள்ளைகள் எல்லோரையும் இழந்து சாவின் விளிம்பில் நின்று தத்தளித்துக் கொண்டிருக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கு இத்தகைய தீர்மானம் நம்பிக்கைக் கீற்றாக விளங்கியிருக்கும்.

ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களைப் படுகொலைச் செய்த கொலைக்காரக் கும்பலை தமிழகம் ஒரு போதும் மன்னிக்காது. அவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய தண்டனையைப் பெற்றுக் கொடுக்க முயலும் என்பதை நிலை நிறுத்த ஒரே வழி தமிழகச் சட்டமன்றத்தில் இத்த கையத் தீர்மானத்தை நிறைவேற்றுவ தேயாகும். ஆனால் எதிர்க்கட்சிகளின் வற்புறுத்தலின் விளைவாக பெறும் விவா தம் மட்டும் நடத்தி பிரச்சனையத் திசை திருப்பியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி.

தி.மு.க தமிழ்நாட்டில் ஆளுங் கட்சி மட்டுமல்ல. மத்திய அரசை ஆளும் காங்கிரசுக் கூட்டணியில் தி.மு.க-வும் இணைப்பிரிக்க முடியாத அங்கமாக விளங்கி வருகிறது. அப்படி இருந்தும் ஒரு இலட்சம் தமிழர்களைக் காப்பாற்ற தி.மு.க தவறிவிட்டது. இதற்கு கழுவாய் தேடும் வகையிலாவது போர்க் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியிருக்க வேண்டும். அதையும் செய்ய தி.மு.க. தவறியது வரலாற்றில் என்றும் அழியாத கறையாகும்.

நன்றி: www.thenseide.com


Saturday, July 11, 2009

இந்து ராம் யார் காதில் பூ சுற்ற நினைக்கிறார்?

image

சொந்த மண்ணில் அகதிகளாக உறவுகள் இருந்தும் அநாதைகளாக உரிமைகள் இருந்தும் அடிமைகளாக கம்பி வேலிகளாலும் கழுகுப் பார்வை பார்க்கும் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்களாலும் ஆட்டுமந்தையைப்போல இலங்கையிலுள்ள முகாம்களில் அடைபட்டு அல்லல்படும் ஏறத்தாழ மூன்று லட்சம் பேர்களின் பரிதாப நிலைக்காக நாம் ரத்தக் கண்ணீர் வடிப்பது அவர்கள் தமிழர்கள் என்பதற்காக மட்டுமல்ல அவர்களும் மனிதர்கள் என்பதால்தான்.

எந்தவொரு நாட்டிலும் எந்தவொரு இனத்திற்கும் இப்படியொரு நிலைமை ஏற்பட்டால் அவர்களுக்காகக் குரலெழுப்பவும் அவர்களது உணர்வுகளைப் பிரதிபலிக்கவும் நமக்குக் கற்றுத் தந்தவர்கள் அன்னிய நாட்டுப் போராளிகளோ மேதாவிகளோ அல்ல. நமது தேசப்பிதா மகாத்மா காந்தி!

அங்கே அடுத்த வேளைச் சாப்பாடு கிடக்கட்டும் வறண்டுபோன தொண்டையின் தாகம் தீர்க்கத் தண்ணீர்கூடக் கிடைக்காமல் இயற்கையின் அழைப்பை எதிர்கொள்ள இடமில்லாமல் ரணத்தின் வேதனையிலிருந்து நிவாரணம் பெற வைத்திய வசதி பெற முடியாமல் தவிக்கும் மூன்று லட்சம் பேர்களும் ஆறு அகதிகள் முகாமில் அடைந்து கிடக்கிறார்கள். அவர்களது நிலைக்குப் பரிதாபப்படாமல் இந்தியாவிலுள்ள அகதிகள் முகாம்களைவிட நேர்த்தியாகவும் வசதியாகவும் இலங்கை அரசு அந்த முகாம்களை நிர்வகிக்கிறது என்று நற்சான்றிதழ் வழங்கத் தமிழக ஊடகங்களே தயாராகிறதே அதுதான் விசித்திரமாக இருக்கிறது.

மூன்று லட்சம் பேர். ஆறு முகாம்களில் – சுமார் 85000 குடும்பங்கள் தங்கள் இருப்பிடங்களை இழந்து கையறு நிலையில். இவர்களை செல்வச் செழிப்பான அமெரிக்கா போன்ற வளர்ச்சி பெற்ற நாடுகளால்கூட வசதியாகப் பராமரிக்க முடியாதே அப்படி இருக்கும்போது இந்த அகதிகளுக்கு உண்ண உணவும் நோய்க்கு மருந்தும் கொடுக்க வழியில்லாமல் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளிடம் கையேந்தும் இலங்கை அரசு மகிழ்ச்சியாகவும் நேர்த்தியாகவும் முகாம்களில் சகல வசதிகளுடன் பராமரிக்கிறது என்று நற்சான்றிதழ் கொடுப்பவர்கள் யார் காதில் பூ சுற்ற நினைக்கிறார்கள்? யாருக்குத் தூதுவர்களாகச் செயல்படுகிறார்கள்?

பிரபல பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்று அவர்கள் மூலம் தனது கபட நாடகங்களுக்கு உலக அரங்கில் அங்கீகாரம் தேடும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டிருக்கிறது என்பதும் அதற்கு நம்மவர்கள் சிலரேகூடத் துணை போகிறார்கள் என்பதும் ஒருபுறம் இருக்கட்டும். அங்கே தமிழ் ஈழ அகதிகள் முகாம்களின் உண்மை நிலைதான் என்ன?

வட இலங்கையில் வவுனியா பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டு ஆறு முகாம்களில் கம்பி வேலிகளுக்குள்ளே இந்த அகதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். சுற்றிலும் ஆயுதம் ஏந்திய ராணுவத்தினர் இவர்கள் வெளியில் சென்றுவிடாமல் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். சுமார் 10000-க்கும் அதிகமான தாற்காலிகக் கூடாரங்கள் அமைக்கப்பட்டு இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் அதில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள

முறையான கழிப்பறை வசதிகள் கிடையாது. குடிக்கவும் குளிக்கவும் தண்ணீர் வசதி கிடையாது. வயிறு நிறைய உண்ண உணவு கிடையாது. மருத்துவ வசதியும் முழுமையாகக் கிடையாது. 13000 அகதிகள் இருக்கும் முகாமில் எட்டு மருத்துவர்களும் நான்கு செவிலியர்களும் போராட்ட பூமியிலிருந்து காயங்களுடன் கதறித் துடிக்கும் அகதிகளுக்கு என்னதான் மருத்துவ உதவி அளித்துவிட முடியும்?

உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாம் என்று ஐக்கிய நாடுகள் சபையால் வர்ணிக்கப்படும் செடிக்குளம் முகாமின் நிலைமை அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறுவது நாமல்ல சரத்நந்த சில்வா என்கிற இலங்கை உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி. அவர் மட்டுமல்ல ஐக்கிய நாடுகள் சபை செயலர் பான்கி-மூன் இதையே வருத்தப்பட்டுத் தெரிவித்திருக்கிறார்.

இலங்கை ராணுவத்தைவிடக் கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் இந்திய ராணுவம் திறமை வாய்ந்தது. இந்திய ராணுவத்தின் உதவியுடன் அடுத்த ஒரே மாதத்தில் கண்ணி வெடிகளை அகற்றவும் அகதிகள் முகாம்களைப் பராமரிக்கவும் இலங்கை அரசு முன்வர வேண்டும். அதற்கு இந்திய அரசு வற்புறுத்தவும் வேண்டும்.

முகாம்களில் அடைந்து கிடப்பவர்கள் அவரவர் இருப்பிடங்களுக்குத் திரும்பாதவரை நாளும் பொழுதும் செத்து மடியும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம்தான் இருக்கும். ராணுவம் முற்றிலுமாக அகன்று பொது நிர்வாகம் செயல்பட்டால்தான் சகஜ வாழ்க்கை தமிழர்கள் வாழும் பகுதிகளில் திரும்பப் போகிறது. அதற்குப் பிறகுதான் ஈழத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு என்ன என்பதையும் அரசியல் தீர்வு எப்படி அமைய வேண்டும் என்பதையும் யோசிக்க முடியும். இதுதான் யதார்த்த உண்மை.

நீங்கள் நிதி உதவியும் பொருள் உதவியும் தாருங்கள். நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்கிற இலங்கை அரசின் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டு அவதிப்படும் அகதிகளுக்கு உதவ இந்திய அரசு முன்வந்தால் மட்டுமே அவர்கள் வாழ்வில் நம்பிக்கை மலரப் போகிறது. இனியும் நாம் வாளாவிருந்தால் நியாயமல்ல!

நம்மை வழி நடத்துவது “காந்தி’தானே? மகாத்மா காந்திதானே?

- நன்றி தினமணி-


மைக்கேல் ஜாக்சன் ஒரு இசை வரலாறு.

mjhead

தனது இனிய இசையால் உலகையே கட்டிப் போட்டவர் மைக்கேல் ஜாக்ஸன். 1958ல் அமெரிக்காவில் பிறந்தார். தனது 9 வயதிலேயே இசைத்துறையில் கால் பதித்த ஜாக்ஸன், வெற்றிகரமான பாப் பாடகராக மேடைகளைக் கலக்க ஆரம்பித்தார். தி ஜாக்ஸன் 5 எனும் பெயரில் தனி இசைக் குழுவைத் தொடங்கிய ஜாக்ஸன், 1970 ல் அந்தசக் குழுவின் சூப்பர் ஸ்டாராகவும், உலக பாப் இசையின் மிகச் சிறந்த பாடகராகவும் பார்க்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 12.

1972 ம் ஆண்டு ‘பென்’ எனும் பெயரில் தனது தனி ஆல்பத்த வெளியிட்டார். 6 வருடங்களுக்குப் பின் தனது முதல் திரைப்படமான ‘தி விஸ்’ஸில் நடித்தார். பின்னர்தான் தனது நண்பர் ஜோனுடன் இணைந்தார். 1979 ல் ஆஃப் தி வால் மற்றும் 1982 ல் த்ரில்லர் ஆகிய ஜாக்ஸனின் இசை ஆல்பங்கள் சரித்திரம் படைத்தன. ஆஃப் தி வால் ஆல்பம்தான் டிஸ்கோ இசையை உலகம் எங்கும் பிரபலப்படுத்தியது. 10 மில்லியன் இசைத்தட்டுகள் விற்பனையாகின. அன்றைக்கு உலகையே வாய்பிளக்கச் செய்த சாதனை இது. த்ரில்லருக்கு மட்டும் 8 கிராமி விருதுகள் கிடைத்தன.

உலக இசையின் சக்ரவர்த்தியாக அறிவிக்கப்பட்டார் மைக்கேல் ஜாக்ஸன். உலகமே இனம் மொழி நாடு என்ற எல்லைகளைக் கடந்து அவரது இசைக்காக உருகியது. த்ரில்லர் ஆல்பம் மட்டுமே 41 மில்லியன் விற்றுத் தீர்ந்தன. இன்றும் பாப் இசையில் அதிகம் விற்பனையாகும் ஆல்பங்களில் ஒன்றாகவே த்ரில்லர் திகழ்கிறது. இது உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றது.

mj5

இசையிலும் கூட நிறவெறி கொண்டிருந்த மேற்குலக நாடுகளில் ஜாக்ஸனின் வருகை ஒரு புதிய விடியலாகத் திகழ்ந்தது. வேறு வழியே இல்லாமல் வெள்ளையர்கள், ஜாக்ஸனைக் கொண்டாடும் அளவுக்கு, இசையை தனது வசப்படுத்திக் கொண்டிருந்தார் ஜாக்ஸன். பணம், வியாபாரம் இரண்டிலும் வெல்பவருக்கே உலகம் சொந்தம்… நிறமும் இனமும் ஒரு பிரச்சினையில்லை என்பதை அவரது முன்னேற்றம் உலகுக்கு எடுத்துச் சொன்னது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு புதிய தன்னம்பிக்கை தருவதாகவும் அது அமைந்தது.

1992 ம் ஆண்டு ஹீல் த வேர்ல்டு எனும் அறக்கட்டளையைத் துவங்கினார் மைக்கேல் ஜாக்ஸன். இந்த அமைப்பு மூலம், உடலால் மனதால் நிறவெறியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிகளை செய்வதாக அறிவித்தார். ஆதரவற்ற பல சிறுவர்களை இந்த அமைப்பின் மூலம் பராமரிப்பதற்காக அமெரிக்காவில் நெவர்லாண்ட் எனும் பெரிய பண்ணை இல்லத்தை வாங்கினார்.

அங்கேயே இந்த சிறுவனர்களுடன் பொழுதைக் கழித்தார். இங்குதான் வந்தது வம்பு. சிறுவர்களை அவர் பாலியல் தொந்தரவு செய்வதாக அவர் மீது புகார்கள் எழுந்தன, வழக்குகள் தொடுக்கப்பட்டன, கோர்ட்டுக்கு வெளியே செட்டில்மெண்டுகள் நடந்தன. இந்த சிக்கல்களில் சிக்கித் தவித்த ஜாக்ஸனால் மீண்டும் ஒரு இசை ஆல்பத்தைத் தர முடியாமல் போனது. ஆனாலும் பாப் உலகின் மன்னனாகவே கடைசி வரை அவர் பார்க்கப்பட்டார்.

mj4

1994 ல் எல்விஸ் பிரஸ்லேயின் மகள் லிசா மேரியைத் திருமணம் செய்து கொண்டு, தன்மீதான ‘சிறுவர் பாலியல் தொந்தரவு’ புகார்களுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க முயன்றார். ஆனால் இந்தத் திருமணமும் இரு ஆண்டுகள்தான் நீடித்தது. லிசா மேரியை விவாகரத்து செய்த கையோடு 1996 ல் டெபி ரோவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரு குழந்தைகளும் பிறந்தனர்.

1999 ம் வரைதான் இந்தத் திருமண உறவும் நீடித்தது. பின்னர் வேறொரு பெண் மூலம் மூன்றாவது குழந்தையும் பிறந்தது அவருக்கு. மூவருமே ஆண் குழந்தைகள். ஜாக்ஸன் மகன்களின் பெயர் மைக்கேல் பிரின்ஸ், மைக்கேல் பிரின்ஸ் 1 மற்றும் மைக்கேல் பிரின்ஸ் 2. 2005 ம் ஆண்டு அனைத்து பாலியல் புகார் வழக்குகளிலிருந்தும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார் மைக்கேல் ஜாக்ஸன்.

மீண்டும் ஒரு சாதனையைப் படைக்க ஆர்வமாக இருந்த அவர், வரும் ஜூலை 13 ம் தேதி முதல் லண்டன் மற்றும் பிரிட்டனின் குறிப்பிட்ட நகரங்களில் 50 இசை நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டிருந்தார். இதற்காக லாஸ் ஏஞ்சல்ஸில் தீவிரமான ஒத்திகையும் நடந்து வந்தது. இந்த நிகழ்ச்சிகள் மூலம் தனது இமேஜை திரும்பப் பெற முடியும், புதிய இசை ஆல்பத்தை உருவாக்க முடியும் என்று பலமான நம்பிக்கை கொண்டிருந்தார்.

மைக்கேல் ஜாக்சன் அடுத்த மாதம் 13ந் தேதி தொடர் இசை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டிருந்தார். லண்டன் நகரில் 50க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்த இருந்த மைக்கேல் ஜாக்சன் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தன்னுடைய இல்லத்தில் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். பயிற்சிக்கு நடுவே மைக்கேல் ஜாக்சன் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டார். அவருடைய சுவாசம் பாதிக்கப்பட்டதால் குடும்பத்தினர் உடனடியாக மருத்துவர்களுக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த மருத்துவர்கள் 1 மணி நேரத்திற்கும் மேலாக அவருடைய உயிரை காப்பதற்காக போராடினர். பின்னர் யு.சி.எல்.ஏ. மருத்துவ மையத்திற்கு மைக்கேல் ஜாக்சன் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவரது உயிரை மீட்க மருத்துவர்கள் போராடினர். பின்னர் மைக்கேல் ஜாக்சன் உயிர் பிரிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. மாரடைப்பு காரணமாக அவர் இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அமெரிக்க நேரப்படி மாலை 2.26 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. (இந்திய நேரப்படி 26.06.09 அதிகாலை 2.56 மணி)

மைக்கேல் ஜாக்சன் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகே அவர் மரணத்திற்கான உண்மையான காரணம் அறிவிக்கப்படும் என தெரிகிறது. மைக்கேல் ஜாக்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அந்த இடத்தில் திரண்டனர்.

பதட்டத்தோடு காத்திருந்த அவர்கள், ஜாக்சன் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டதும் கேவி அழுதனர். ஜாக்சன் மரணமடைந்த செய்தி பரவியதும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரது இல்லத்தின் முன் கூடினர். ரசிகர்கள் தாங்க முடியாத சோகத்தில் ஆழ்ந்திருந்தனர். பலர் கண்ணீர் விட்டபடி இருந்தனர். மைக்கேல் ஜாக்சன் மரணத்தை அடுத்து எம்டிவி தன்னுடைய நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்து விட்டு மைக்கேல் ஜாக்சனின் புகழ் பெற்ற பாடல்களை ஒளிபரப்பியது.

வானொலி நிலையங்களும் மைக்கேல் ஜாக்சனின் சாகாவரம் பெற்ற பாடல்களை ஒளிபரப்பி வருகிறது. மைக்கேல் ஜாக்சனின் மரணம் இசையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவருடைய முதல் ஆல்பத்தை தயாரித்த நிறுவனத்தை சேர்ந்த குவின்சி ஜோன்ஸ், இத்தனை இளம் வயதில் மைக்கேல் ஜாக்சன் உலகை விட்டு பிரிந்தது வேதனையை தருவதாகவும், அதனை விளக்க வார்த்தைகளே இல்லையென்றும் கூறியுள்ளார்.

மைக்கேல் ஜாக்சன் இசையுலகில் செலுத்திய தாக்கமும், பாதிப்பும் என்றென்றும் உணரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மைக்கேல் ஜாக்சனுக்கு 3 பிள்ளைகள் இருக்கின்றனர். மேலும் ஜாக்சனுக்கு ஜெர்மினி, டிட்டோ, ராண்டி ஆகிய மூன்று சகோதரர்களும், ஜேனே மற்றும் லாடோயோ ஆகிய இரண்டு சகோதரிகளும் உள்ளனர்.

பாப் இசையுலகம் கொண்டாடிய மைக்கேல் ஜாக்சனின் எதிர்பாராத மரணத்தை அடுத்து அமெரிக்கா மட்டும் அல்ல உலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது

நன்றி நக்கீரன்.


தமிழர்கள் இன்னும் உணர்வை இழக்கவில்லை – பருத்தியன்.

தமிழர்கள் இன்னும் உணர்வை இழக்கவில்லை    - பருத்தியன்

தூக்கமில்லாத இரவுகளுடன் கரைகின்றன தமிழர்கள் பெரும்பாலோரினது இரவுப் பொழுதுகள். தோல்வியை ஜீரணிக்க முடியாமல் , இழப்புக்களை தாங்கிக்கொள்ள இயலாமல் விம்மிவெதும்பும் கனத்த இதயங்களுடன், விழியோரத்தில் கண்ணீருடன் கேள்விக் குறிகளாய் எதிர்காலத்தின் எதிர்பார்ப்புக்கள்.

    இறுதியாக நடந்துமுடிந்த போரில் தமிழினம் அனுபவித்த வலிகளை வார்த்தைகளினால் விபரிக்க முடியாது. சர்வதேசம் முழுவதினாலும் முற்றுமுழுதாக கைவிடப்பட்ட நிலையில், சிங்கள கொலைவெறி அரசினாலும் பல வல்லாதிக்க வல்லரசுகளின் சுயநலத் தேவைகளுக்கான அவற்றின் கூட்டுதவியினாலும் ஈழத்தமிழினம் அழித்து சின்னாபின்னமாக்கப்பட்டது. யாருமற்ற நிலையில் அநாதரவாய் அந்தரித்து நின்றது ஈழம்.

    முப்பது வருட காலமாய் தனியே  நின்று போராடிய தமிழர்படையை வெல்ல முடியாமல் திணறிய சிங்களம் இப்போது பல வல்லரசுகளின் பூரண ஆதரவோடு ஒரு இன அழிப்பு யுத்தத்தை நடத்தி முடித்துவிட்டு புலிகளை முற்றாக அழித்தொழித்துவிட்டோம் என எக்காளமிடுகிறது.

சர்வதேசங்களின் ஆசீர்வாதத்தோடு சிங்கள அரசு தமிழர் மீது மேற்கொண்ட ஆக்கிரமிப்பு மற்றும் இனவழிப்பு நடவடிக்கைகளில் ஈழத் தமிழினம் இழந்தவை கொஞ்ச நஞ்சமல்ல.

    வீடிழந்து, நிலமிழந்து, சேர்த்துவைத்த செல்வங்கள் அனைத்தையும் இழந்து உயிரைத்தன்னும் காப்பாற்றிக் கொள்ளலாமென எண்ணி ஏதிலிகளாய் அகதிகளாய் உணவின்றி, நீரின்றி அலைந்துதிரிந்து... கடைசியில் உயிரையும் உறவுகளையும் பறிகொடுத்து கைகால்களை இழந்து ஊனமாகி இன்னும் கொலைக்கூடாரங்களுக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கும் பேரவலத்துடன் இன்றும் தமிழினம்.

    தமது சுய உரிமைக்காகப் போராடிய தமிழினம் திட்டமிட்டு சிதைக்கப்பட்டிருக்கிறது. தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தினை சிதைத்து அதை இல்லாமற் செய்வதற்கு எத்தனை நாடுகள் போட்டி போட்டு முண்டியடித்தன என்பதை கண்முன்னே கண்டோம். முப்பது வருடத்துக்கும் மேலாக எத்தனையோ சோதனைகளையும் தடைகளையும் தாண்டி வளர்ச்சிபெற்று வந்த தமிழர் போராட்டத்தினை எப்படியாயினும் சிதைத்து விட வேண்டுமென்பதில்  சிங்களத்தினைவிட சர்வதேசமே அதீத அக்கறை காட்டியதையும் காண முடிந்தது.

    பொதுவாக உலகின் விடுதலைப் போராட்டங்களை பார்க்கும் கோணத்திலிருந்து விலகி ஈழத்தமிழரின் நியாயமான விடுதலைப் போராட்டத்தினை "பயங்கரவாதம்" எனப் பொய்முத்திரை குத்திச் சிறுமைப்படுத்தியது சர்வதேசம்.

இதற்கு சரியான உதாரணமாக, 2002ற்கு பிற்பாடான சமாதான பேச்சுவார்த்தைக் காலத்தில் புலிகளின் மீதான தடை இலங்கையில் அகற்றப்பட்டிருந்த போதும் , சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த விடுதலைப்புலிகளை ஐரோப்பிய நாடுகள்சில தடைசெய்ததனைக் குறிப்பிடலாம்.

    இவைமட்டுமல்லாமல்  ஈழவிடுதலைப் போராட்டத்திற்கெதிராக வெளிப்படையாகவும், திரைமறைவிலும் பற்பல காலகட்டங்களில் சர்வதேசம் செய்த பாதகச் செயல்கள் பலவுண்டு.  இன்றுவரைக்கும், ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக வலுவான குரல் கொடுத்ததாக எந்தவொரு சர்வதேச நாடுமே இல்லையென்பது ஈழத்தமிழரின் துர்ப்பாக்கியமே.

    ஈழ விடுதலைப் போராட்டமானது தமிழர்களின் தன்மான உணர்வு, விடுதலையுணர்வு, தியாக உணர்வு, மனோபலமிக்க போராட்ட உணர்வு என அவர்களின் உன்னத உணர்வுகளினாலேயே எல்லாவிதமான சோதனைகளையும் ,சவால்களையும் சமாளித்துத் தாண்டி வந்திருந்தது. சோதனைகளையும் சாதனைகளாக மாற்றினர். சவால்களை எதிரிக்கே திருப்பிக் கொடுத்தனர். ஆனால் இன்று ஒரு இக்கட்டான நிலைமையை ஈழப் போராட்டம் எதிர்கொண்டிருக்கும் நிலைமையில் அனைத்துத் தமிழர்கள் மத்தியிலும் ஒரு குழப்பமான மனநிலையைக் காணக் கூடியதாகவுள்ளது.

    "எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் , இனிமேல் என்ன?" என்பது தமிழர்கள் எல்லோர் மன ஆழத்திலும் எழும் கேள்வி.

உண்மைதான் ... நிறையவே இழந்து விட்டோம். ஆனால் எல்லாவற்றையும் அல்ல.எங்கள் உணர்வுகளை நாங்கள் இன்னும் இழக்கவில்லை. உங்களை நீங்களே ஆத்மார்த்தமாக கேட்டுப் பாருங்கள்!  "நாம் எமது தன்மான உணர்வையோ, விடுதலையுணர்வையோ, இன உணர்வையோ அல்லது போராட்ட உணர்வையோ சிறிதளவேனும் இழந்து விட்டோமா?"

பதில் என்ன.....?

இழப்புக்களின் வலிகள் உங்கள் உணர்வுகளை அதிகமாக்கியிருக்கும். முன்பைவிட பலமடங்கு அதிகமாக உங்கள் உணர்வு தற்பொழுது உருப்பெற்றிருக்கும். நமது போராட்டத்தின் கடந்த கால வரலாறுகளில் எங்கெல்லாம் நாம் விழுந்தோமோ , அங்கெல்லாம் வீறு கொண்டெழுந்திருந்தோம்.

இப்போதும் வீறுகொண்டெழத் துடிக்கின்றோம். ஆனால் போராட்டக் களம் குழப்பங்களைத் தவிர மீதம் வெறுமையாகவே இருக்கின்றது. இதனால்தான் பலர் மனமொடிந்து இருக்கின்றார்கள் என்பதும் உண்மை. புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டுவந்த தொடர் போராட்டங்களும் நிறைவுசெய்யப்பட்ட நிலையில், அடுத்தகட்டப் போராட்டங்களுக்காக காத்திருக்கின்றார்கள் வீறுகொண்ட உணர்வுகளோடு தன்மானத் தமிழர்கள்.

    இந்நிலையில் அவர்கள் கேட்பதெல்லாம் இனிவரும் களம், அது     அகிம்சை வழியோ... அரசியல் வழியோ... போராட்ட வழியோ... எதுவாக அமைந்தாலும் அதை அமைத்துக் கொடுப்பவர்கள் விலைபோகாத விடுதலையுணர்வுடன், இதயச்சுத்தியுடன் இருக்க வேண்டுமென்பதே.

மனரீதியில் குழப்பங்களை ஏற்படுத்தும் விடயங்களைத் தவிர்த்து காலத்திற்கேற்ப ஈழ உணர்வாளர்களின் போராட்ட உணர்வுகளுக்கு வழிசமைத்துக் கொடுக்கக் கூடியதாக அவர்களின் செயற்பாடுகள் அமைய வேண்டும் என்பதும், உணர்வுகளோடு காத்திருக்கும் மக்களின் எதிர்பார்ப்பு  என்ன என்பதனை சம்மந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ள வேண்டியதும் அவசியம்.

அத்தோடு எதிர்வரும் போராட்டக் களத்தில் இளையோரினதும், மாணவர்களினதும் பங்களிப்பும் பெறப்படவேண்டியதும் மிகமிக அவசியம்.ஏனெனில் இவர்களின் போராட்டங்கள் வீரியமிக்கவை. இயல்பாக எழும் உணர்வுகளோடு வேகமாய்ச் செயற்படும் வல்லமை மிக்கவர்கள் இந்த மாணவர்களும்,இளையோர்களும். இவ்வாறு செய்வதன் மூலம் நமது போராட்டத்தினை பன்முகப் படுத்தலாம்.

    தற்போதைய நிலைமையில் தமிழருக்கான போராட்டக்களம் எதுவாக அமைய வேண்டும் என்பதுவும் அப்போராட்டங்கள் எப்படியான முறைமைகளில் வழிநடத்தப்பட வேண்டும் என்பதனையும் பொறுத்தவரையில் மிகப்பெரியளவில் வாதவிவாதங்கள் நடைபெற்றுவரும் நிலையில், அவ்வாறான தளம்பல் நிலையிலிருந்து தெளிந்து கருத்து வேறுபாடுகளைக் களைந்து  ஓரணியில் தமிழர்கள் அனைவரும் திரளவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நாம் நிற்கின்றோம் என்பதனை ஒவ்வொரு உணர்வுமிக்க தமிழனும் புரிந்து செயற்படவேண்டும்.

    தமிழர்களின் விடுதலையுணர்வை,எழுச்சியுணர்வை அடக்குவதிலேயே இப்போது சிங்களம் குறியாய் இருக்கின்றது. அதற்கான காய்நகர்த்தல்களில் அது இறங்கிவிட்டது. இலங்கையில் உள்ள தமிழர்களின் இன உணர்வுகளை அடக்குமுறைகளினால் அடக்கிவிடலாம் என நம்பும் சிங்களம், புலம்பெயர்தேச தமிழ்மக்களின் எழுச்சிகளை அடக்குவதற்கு பல்வேறு சதிவேலைகளை முடுக்கிவிட்டிருக்கின்றது. இந்த விடயத்தில் புலம்பெயர் உறவுகள் மிக அவதானமாக இருக்கவேண்டும். எதிரியின்  சதிகளை முறியடிப்போம். ஒருபோதும் நாம் நமது உணர்வுகளை எதற்காகவும்,எச்சந்தர்ப்பத்திலும் இழக்கப் போவதில்லை என்பதனை செயலில் காட்டுவோம்!

தமிழர்களின் விடுதலைப் போராட்ட உணர்வுகளை யாராலும் எவ்விதத்திலும் அழிக்க முடியாது என சிங்களத்துக்கும் அதனோடு துணைநின்ற சர்வதேசத்திற்கும் எடுத்தியம்புவோம்!

ஈழத்தமிழ் உணர்வுகளோடு... நம் மாவீரர்களின் கனவுகளைச் சுமந்தபடி... நமது தாயக விடியலுக்காகப் போராடுவோம்!

நம் உணர்வுகளால் உலகை உறுத்துவோம்!

அதனை நம் பக்கம் மாற்றுவோம்!

    ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டம் என்பது இந்த உலகத்தின் வரலாற்றுப் பதிவுகளில் ஒன்று. எழுதப்படப்போகும் அவ்வரலாற்றுப் பதிவுகளில் ஈழத்தமிழரின் நீண்டகால போராட்டம் வீணாகிப்போனது என்று பதியப்படாமல் வெற்றிபடைத்து தனிநாடு கண்டு சரித்திரம் படைத்தது என்றே பதியப்படவேண்டும்.

எமது எதிர்கால வரலாறு எமது உணர்வுகளில்.......

உரிமை இழந்தோம்.. உடைமையும் இழந்தோம்...!  - உணர்வை இழக்கலாமா???

உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா???

விடியலுக்கில்லை தூரம்... உன் விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்???

உன் நெஞ்சம் முழுவதும் வீரம்... இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்???

                                      

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

-பருத்தியன்.


Thursday, July 9, 2009

எழுத்துலக மௌனம் - பா. செயப்பிரகாசம்.

Die-Press-Release

தமிழர்கள் இலங்கை பூமியின் பூர்வீகக் குடிகள். அமெரிக்கப் பூர்விகர்களான செவ்விந்தியத் தலைவன் ‘சியால்த்’ உணர்ந்து சொன்னது போல,

”இந்த பூமி எங்களின் தாய். நாங்கள் இந்த பூமியின் ஒரு அங்கம். அது எங்களில் ஒரு அங்கம். வாச மலர்கள் எங்கள் சகோதரிகள். மானும் குதிரையும், ராஜாளிப் பறவையும் எங்கள் சகோதரர்கள். பாறை, மலைமுகடுகள், புல்வெளிகளில் படிந்திருக்கும் பனித்துளிகள், மனிதன் எல்லாமும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. ஓடைகளிலும் ஆறுகளிலும் பளபளத்து ஓடும் நீர் வெறும் நீரல்ல. அது எங்கள் மூதாதையரின் ரத்தம். அது வெள்ளையனுக்குப் புரிவதில்லை”

அது போல…

”இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச் சுவடுகள், பதிந்திருக்கின்றன. அவர்களது மூச்சுக்காற்று கலந்திருக்கிறது. இந்த மண்ணிலேதான் எமது இனம் காலாதி காலமாக, கொப்பாட்டன், முப்பாட்டன், பாட்டன் என தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறது ” - அமெரிக்க பூர்விகக் குடிகளான செவ்விந்தியர்களினதும், இலங்கையின் பூர்வீகக் குடியினரான தமிழர்களினதும் மூல வரலாற்றுப் புள்ளிகள் ஒன்றாகவே இருக்கின்றன. செவ்விந்தியக்குடி ஒரு பழங்குடி இனமாகவே இருந்து கழிந்தது. ஆனால் தமிழர்கள் என்ற பூர்வீகக் குடியினர் ஒரு இனமாக வளர்ச்சி பெற்று தனெக்கென தனி அரசை நிறுவி, தனி இறையாண்மை கொண்டிருந்தனர்.

செவ்விந்தியத் தலைவன் “அது வெள்ளையனுக்குப் புரிவதில்லை” - என்று சொன்னது போலவே, தமிழருடைய வரலாற்று மேன்மையும் சிங்களருக்குப் புரிவதில்லை. வரலாற்று உண்மையை ஆதிக்க இனம் என்ற நிலையிலிருந்து முற்றிலும் அழித்திடவே முயற்சி செய்கின்றனர்.

”இலங்கை ஒரு பௌத்த சிங்கள நாடு, இது சிங்களருக்குச் சொந்தமானது“ ஓராண்டு பதவி நீட்டிப்புப் பெற்ற இலங்கை ராணுவத் தளபதி பொன் சேகா சொன்னார். ( இவர் அமெரிக்கக் குடியுரிமையும் பெற்றவராக வாழுகிறார் என்பது சிறப்புச் செய்தி )

”தமிழர்களுக்குப் போவதற்கு இன்னொரு நாடு இருக்கிறது. அதுபோல் இஸ்லாமியர்களுக்கும் இன்னொரு தேசம் உண்டு. சிங்களவர்களுக்கு இது தான் நாடு“ புத்தனுடைய சொல்லைப் புதைத்து விட்டு, அவனுடைய பல்லை வைத்து (அநுராதபுரம் புத்த விஹார்) ஆராதனை செய்கிற புத்த பிக்குகள் முதல் அதிபர் ராஜபக்க்ஷே வரை இந்த வாசகத்தை உதிர்க்கிறார்கள்.

1958 - ல் இனக் கலவரம் வெடித்து தலைநகர் கொழும்புவில் தமிழர் அதிகம் வாழும் பகுதிகளில் சிங்களக் காடையர்கள் தாக்குதல் நடத்தினர். பண்டார நாயகா தலைமையிலான அரசும் போலிசும், ராணுவமும் வேடிக்கை பார்த்ததோடன்றி ”பழி எடுங்கள்” என தூண்டியும் விட்டார்கள். அப்போது மே 26, தல் பவில சீவன் சதோரா என்ற புத்தத் துறவி “ஒரு சிங்களவன் உயிருக்கு ஆயிரம் தமிழர்கள் சமம்“ என்று ஒரு நிகழ்ச்சியில் பேசியதை கொழும்பு மாலைத் தினசரியான ஆங்கில அப்செர்வர் வெளியிட்டிருந்தது.

”தமிழர்கள் எந்தப் பகுதிகளில் வாழுகிறார்களோ அங்கு தங்களைப் பலப்படுத்திக் கொண்டு வருகிறார்கள் சிங்களவர்கள் தமிழர்களால் அழிக்கப்படும் ஆபத்து இருக்கிறது, இதற்கு இடம் கொடுக்கப் போகிறோமோ?”

என்று பொரணை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சாகர பலன சூரியா நாடாளுமன்றத்தில் கேட்ட நேரத்தில், அம்பாந்தோட்டை எம்.பி. - யான லக்ஷ்மன் ராஜபக்க்ஷே குறுக்கிட்டு “ அவர்களை அழித்து விடுங்கள் “ என்று கத்தினார். ஆனால் சாகர பலன சூரியா தெரிவித்ததற்கு மாறாக யதார்த்த நிலைமைகள் வேறொன்றைச் சித்தரித்துக் காட்டின.

இலங்கைப் பரப்பில் 29 விழுக்காடு தமிழ் வழித்தாயகப் பகுதியாகும். ஓரின ஒற்றையாட்சி முறையினால் தமிழ்ப் பகுதிகளில் திட்டமிட்டு சிங்களக் குடியேற்றம் நடத்தப்பட்டு, தமிழர் நிலம் பறிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. கிழக்கில் பெரும்பான்மையும், வடக்கில் முப்பது விழுக்காட்டுப் பரப்பிலும் சிங்களர் குடியேற்றப்பட்டனர். 1948 ஆம் ஆண்டில் கல்முனை மாவட்டத்தில் 4.5 சதவீதமாக இருந்த சிங்களர் 1950 ஆம் ஆண்டு முதல் அதிகரித்து, 1990 -ல் 38 சதவீதமாக உயர்ந்து பின்னர் அதுவே பெரிய சமுதாயமாகி கல்முனை மாவட்டத்தை ‘திகாமடுல்ல‘ என்று சிங்களப் பெயர் மாற்றுமளவுக்கு குடியேற்றப் பெருக்கம் நடத்தப்பட்டது.

அரசுப் பணிகள், இராணுவம் அனைத்திலும் சிங்களர் உயர்ந்து கொண்டே வர, இரண்டு விழுக்காட்டுக்கும் குறைவாக தமிழர்கள் கீழாகிக் கொண்டே போனார்கள். இலங்கைத் தீவில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்ற அடையாளமே இல்லாமால் செய்வதற்கு எத்தனிப்புகள் எடுக்கப்பட்டன. ஐ. நா அவையில் முதலில் தமிழ் பேசிய இலங்கை அதிபர் என்ற பெயரை வாங்கிக் கொண்ட, ராஜபக்க்ஷே கீபிர் விமானங்களால், பீரங்கிகளால், ஏவுகணைகளால் அக்னி அர்ச்சனை நடத்திக் கொண்டு வருகிறார். வன்னியிலிருந்து இடம் பெயர்ந்த அகதிகள் முகாமிற்கு அருகில் தடை செய்யப்பட்ட ‘கிளாஸ்டர்’ குண்டுகள் வீசப்பட்டன. இரண்டு குழந்தைகள் உட்பட மூவர் உயிரிழந்த இந்நிகழ்வில் அகதிகள் பலர் காயமடைந்தனர். நவம்பர் மாதத்தில் மட்டும் வன்னியில் ஐந்து முறை கிளாஸ்டர் குண்டுகள் வீசப்பட்டன. இந்த கிளாஸ்டர் குண்டுகள் இரண்டாம் உலகப் போரில் நாகஷாகி, கிரோஷிமா மீது வீசப்பட்ட அணுகுண்டுக்கு அடுத்தப்படியான பேரழிவு கதிர் வீச்சு ஆயுதம். இந்தக் குண்டுகள் வீசப்படுவது தடையில் இருந்த போதிலும் இலங்கை பயன்படுத்தியுள்ளது. இது யுத்த நெறிமுறைக்கு மாறானது. நூற்று ஏழு நாடுகள் கூடி 3 - ஆம் தேதி நார்வே தலைநகர் ஆஸ்லோவில் கிளாஸ்டர் குண்டுகள் பயன்படுத்துவதற்கு எதிரான உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.

வேறொங்கோ ஏழு கடல் தாண்டி, சத்தா சமுத்திரம் தாண்டி இந்த மானுட அவலம் கேட்கவில்லை. நமக்கு அருகேயுள்ள சிறு கடல் தாண்டிக் கேட்கிறது. நமது தோளில் வந்து உட்கார்ந்திருக்கிற அந்த அவலம், நமது தொப்புள் கொடி உறவாகவும் இருக்கிறது. தமிழகமெங்கும் எழுச்சிகள், எதிர் வினைகள் பெருகியுள்ளன. மாதம் அரைக்கோடி ரூபாய் ஊதியம் வாங்கும் கணினிப் பொறியாளர்கள் ( Tidel Park - 17-11-2008 ) உடல் ஊனமுற்றோர் அமைப்பு என சமூகத்தின் சகல பகுதியினரும் எதிர்வினை ஆற்றிக் கொண்டிருக்க - தமிழகத்திலுள்ள 221 ஓவியர்களும் 14.11.2008 முதல் 21.11.2008 வரை ஓவிய படையல் செய்து, ஓவியங்கள் விற்ற தொகையை ஈழ மக்களுக்கு உதவிட - திரையுலகினரின் ஆவேசம் நம்மைப் பிரமிக்க வைத்திட - அரவாணிகள் என்றழைக்கப்படும் திருநங்கையர் 08.12.2008 ஆம் தேதி ஒரு நாள் போராட்டம் நடத்துகின்றனர். கோவையில் அனைத்துக் கலை இலக்கிய அமைப்புகளின் கூட்டமைப்பு 22.11.2008 உண்ணா நிலை போராட்டத்தினை எடுத்தது. சென்னை புழல் சிறையில் கைதிகள் உண்ணா நிலைப் போராட்டம், 24.10.2008 அன்று கொட்டும் மழையில் சென்னையில் நடந்த மனிதச் சங்கிலி - என மக்களின் சகல பிரிவினரும் ஈழத் தமிழருக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர்.

மானுடம் எங்கெல்லாம் சிதைவுக்கு ஆளாக்கப்படுகிறதோ அங்கெல்லாம் போய் தாங்கி நிற்பது கலைஞனின் நெஞ்சம்.

கூப்பிடு தூரத்தில் இருக்கிறது ஈழம், ஆனால் தமிழ் எழுத்துலகில் மௌனம்…..

கலைஞர்கள், எழுத்தாளர்கள், சமகாலத்தில் நடப்பவற்றை கூர்மையாய் உள்வாங்கி, எதிரொலிப்புச் செய்ய வேண்டியவர்களாதலால் சமூக விஞ்ஞானிகளாகவும் இயங்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

நமக்கு அருகாமையிலுள்ள தேசத்தில் மானுட அவலமும் விடுதலை நோக்கிய ஒரு போராட்டமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிற போதும் - மானுட அவலம் மனசை உடைக்கிற போதும் - மௌனம் காக்கிற இந்த அறிவு ஜீவிகள் வரலாற்றுக்கு எதிர்த் திசையில் நடக்கிறார்களோ என்ற ஐயம் துளிர்க்கிறது. இந்த மௌனத்துக்கு என்ன பொருள்? உடன்படாமை அல்லது எதிர்திசை என்று தானே அர்த்தம்.

22.09.2008 அன்று சென்னையில் ஒரு நாள் தொடர் முழக்க ஆர்பாட்டத்தினை தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி ஏற்பாடு செய்து, தமிழகம் தழுவிய எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், திரையுலகத்தினற்கு அழைப்பு அனுப்பப்பட்டது. சிலர் பங்கேற்ற சிறிய கூட்டமாகவே முடிவு பெற்றது. எதிர்பார்த்த அளவுக்கு படைப்பாளிகள் வட்டத்திலிருந்து வந்தாரில்லை. தமிழ் எழுத்துலகில் அதிகமாகவே வாசிக்கப்படுகிற எழுத்தாளர்கள் அந்தத் திசைக்கே தென்படவில்லை.

”நாம் நாமாக இருப்போம், நமது படைப்புகளும் எழுத்துக்களும் அவ்வாறே இருக்கும்” தன் மோகக் கோட்பாட்டில் இயங்கும் சுய மோகிகள், தமது ஆற்றலின் உயரம் பற்றி அதீத எண்ணம் கொண்டோர்களாக இருக்கிறார்கள். தமது அறிவுத் திறன் பற்றிய பாராட்டுதலுக்காக காத்திருக்கும் இவர்கள், தமது படைப்புக்களின் விலைப் படுத்தலுக்கானதாக இந்தப் பாராட்டுதலை மாற்றிக் கொள்வார்கள்.

நவீன தமிழின் முதலிரண்டு தலைமுறை எழுத்தாளர்களுக்கு ஈழம் சந்தையாக இருந்தது. சமகால எழுத்தாளர்களுக்கு உலகப் பரப்பெங்கும் புகலிடம் அடைந்த ஈழத் தமிழர்களே சந்தையாகியுள்ளனர். புகலிடத் தமிழர்களை நோக்கியே இங்கு பதிப்பகச் செயல்பாடுகளைக் குவிக்கும் சிலரும் உருவாகியுள்ளனர்.

திரைக் கலைஞர்களின் உண்ணா நோன்பு நிகழ்வில் கவிஞர் தாமரையின் ஆவேசம், எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் நல்லதொரு கட்டுரை - என அங்கொரு இங்கொரு எதிர்வினைகள் போதுமானவை அல்ல, உணர்வு பூர்வ தொடர்ச்சியான செயல்பாடுகள் உருவாக்கப்பட வேண்டும்.

எந்த அசைவுமில்லாமல் அமர்ந்திருக்கக் காணுகையில், சொந்த மக்களின் துயரத்தில் பங்கு கொள்ளாத மௌனிகள் கூட்டத்தால் எழுத்துலகம் சூழப்பட்டுள்ளோதோ என நினைக்கத் தோன்றுகிறது. எதிர்வினை - ஒரு படைப்பாக்கமாய் இருக்க வேண்டும் என்பதில்லை. அது ஒரு கருத்தறிவிப்பாக இருக்கலாம். பேச்சு வடிவத்தில் கூட வெளிப்படலாம்.

எரியும் ஈழப் பிரச்சனையிலிருந்து விலகியிருக்கும் இந்த மௌன கூட்டத்திற்குள் த. மு. எ.ச போன்ற கலை இலக்கிய அமைப்புகளும் அடக்கமாவதுதான் வேதைனையானது. இலக்கியவாதிகளின் சுதந்திரமான செயல்பாட்டை கட்டுக்குள் வைப்புதுதான் கட்சி ரீதியான அரசியல் எனபது உள்ளுக்குள் உலவிடும் உண்மை.

தமிழின் நவீன இலக்கிய முன்னோடி பாரதி போல் கவிதை, உரைநடை என சகல துறைகளின் இலக்கியப் பங்களிப்பில் பஞ்சாபி இலக்கியத்தின் முன்னோடியாக போற்றப்படுபவர் மாககவி பாய்வீர்சிங் ( 1872 - 1950 ) அவருடைய ஆயிரக்கணக்கான இலக்கியக் கொடைகளில் ஒரு பக்கத்தில் கூட இந்திய விடுதலைப் போராட்டம் பற்றியதான குறிப்பு ஒன்றும் இல்லை. பாய்வீர் சிங் அமிர்தரஸில் வாழ்ந்தவர். அங்கிருந்து கூப்பிடு தூரத்தில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி அவரது ஒரு எழுத்தும் இல்லை. ஒரு கண்டனப் பேச்சும் இல்லை. பொற்கோவிலைப் பற்றி படைப்புகளில் பேசியவரிடமிருந்து, கல்லெறி தூரத்தில் நடந்த கொலைச் சம்பவம் பற்றி சிறு பதிவும் இல்லை. பாய்வீர் சிங்கை வழிகாட்டியாகக் கொள்கிற இளைய தலைமுறையினர் ‘அவர் வரலாற்றின் எதிர்த் திசையில் நடந்தார்‘ என விரல் நீட்டி குற்றம் சுமத்துகின்றனர்.

இன்றைய தமிழினப் பிரச்சினைகளில் - குறிப்பாக ஈழப் போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள் எதிர்த் திசையில் நடந்தார்கள் என்ற வரலாற்றுப் பதிவும் பழியும் தேவைதானா ?

- பா. செயப்பிரகாசம்

நன்றி: www.appaaltamil.com


Tuesday, July 7, 2009

இதுதான்… இந்திய ஜனநாயகம்… முட்டாள் தமிழனே…

இலங்கையில் ஈழத்தமிழர்களை கொன்று வரும் சிங்கள பேரினவாதத்துக்கெதிராகவும், போரினை நடத்தி ரத்தம் குடித்த இந்திய அரசுக்கு எதிராகவும் தமிழர் தேசிய இயக்கம், தமிழ்தேச பொதுவுடமைகட்சியை சேர்ந்தவர்கள் மாநிலம் முழுக்க இந்திய தேசியக்கொடியை எரிக்கும் போராட்டத்தை அறிவித்தனர்.

அதன் படி எரிக்க முயன்ற போது 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்கிய (அ)நீதிமன்றம் ஒருவாரம் தேசியக்கொடியை வீட்டின் முன் ஏற்ற வேண்டும் என நிபந்தனை விதித்தார்.

2008-272V--Scales-of-Justice-today

அதை ஏற்காத மூவர் நிபந்தனையை தளர்த்தக்கோரியவர்களுக்கு நாட்டாமையாக ஆணையிட்டிருக்கிறார் நீதிபதி.

அதில்’’தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த முடியாது. இதை ஏற்காவிட்டால் அவர்கள் தொடர்ந்து ஜெயிலிலேயே இருக்கட்டும். இந்த வழக்கில் போலீசார் விரைவில் குற்றச்சாட்டு பதிவு செய்து வழக்கை 3 மாதத்தில் முடிக்க வேண்டும்.RopePull-lg

அரசியல் அமைப்பு சட்டம் 5-வது பிரிவில் தேசிய கொடி, தேசிய கீதம், அரசியல் அமைப்பு சட்டம் ஆகியவற்றை அனைத்து குடிமக்களும் மதிக்க வேண்டும் என்று கூறுகிறது. அரசியல் அமைப்பு சட்டம் 51-ஏ பிரிவு, தேசிய கீதம், தேசிய கொடி ஆகியவற்றில் குடிமக்களுக்கு உள்ள கடமைகள் பற்றி கூறுகிறது.

இந்த கடமையை மக்கள் எப்படி நிறைவேற்ற வேண்டும். குடிமக்கள் எப்படி இதில் நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழகஅரசு குழு ஒன்றை அமைத்து விசாரித்து 2 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’என்று தீர்ப்பில் கூறினார்” 3 பேரும் தேசியக்கொடியை ஏற்றவில்லையெனில் ஜெயிலிலேயே கிட என்கிறார்.

அதுமட்டுமில்லாது மக்கள் எப்படி இக்கடைமையை நிறைவேற்றவேண்டுமென அறிக்கை தாக்கல் செய்யவும் சொல்லியிருக்கிறார். இதை படிப்பவருக்கு என்ன புரியும் ஆகா “கடமை தவறாத நீதிபதி இன்னொரு அப்துல் கலாம்”வந்துவிட்டாரென்று.

ஆனால் உண்மை என்ன? மத்திய அமைச்சர் மிரட்டினார் என்னிடம் மன்னிப்பு கேட்க வில்லையெனில் அவரின் பேரை சொல்லி புகார் செய்வேன் என்பவர் கட்டாயமாக ஏற்று இல்லையேல் சாகு என்கிறார். அவ்வளவு நீதிமானெனில் அந்த அமைச்சரின் பேரைச்சொல்லி அவருக்கு தண்டனை கொடுத்துப்பார்க்கட்டும். ஒரு வாரம் வேண்டாம் ஒரு நாள் அமைச்சரின் வீட்டில் கொடியை ஏற்றச்சொல்லி சொல்ல தீர்ப்பு வழங்கட்டுமே. ஏன் அவரின் பேரை சொன்னால் என்ன எது குறையும். ஏதாவது குறையலாம் வசதி, வாய்ப்புகள், பதவி உயர்வு……..

ஏதோ இந்த நீதிபதிமட்டுமல்ல நீதிமன்றங்கள் பலவழக்குகளை தானாக முன்வந்து எடுத்து தீர்ப்பு சொல்லுகிறது, கண்டனம் தெரிவிக்கிறது. ஆனால் மக்களின் பிரச்சினைகள் எதும் நீதி மன்றங்களுக்கு புலப்படாமலேயே போய்விடுகின்றன. ஒருவேளை அவைகள் போட்டிருக்கும் கண்ணாடியின் ஆளும் வர்க்கசாயல் அப்பியிருக்கும்.

ஒரு லட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறர்கள், தாய்மார்கள், குழந்தைகள் கொத்து கொத்தாய் கொல்லப்பட்டார்கள் ஒருதாஇன் வயிற்றை கிழித்த ஆட்லெறிகுண்டு அந்த சிசுவின் தலையை பிய்த்துப்போட்டது தெரியாதா நீதி மன்றமே உனக்கு.

இதை தானாக வழக்கு பதிவு செய்ய என்ன கேடு? ஆம் கேடு தான் தன்வர்க்கத்துக்கு தானே ஏதாவது கேடுண்டாக்கிக்கொள்ளுமா? என் இனமக்கள் கொல்லப்படுகிறார்கள், இந்திய அரசுதான் போரை நடத்துகிறது எனத்தெரிந்தும் அமைதியாய் கவிந்து படுத்துக்கொண்டு மானாட மயிலாட பார்க்கமுடியுமா? பார்க்கிறார்கள் பல சூடு சொரணை கெட்டவர்கள் அப்படித்தான் எல்லோரும் வாழவேண்டுமா?001200902200340

ஆம் அப்படித்தான் வாழ்ந்தாக வேண்டும் என்கிறது நீதிமன்றம்.தமிழ் மக்களை கொத்துகொத்தாய் கொல்லும் போது, அகதியெனக்கூறி அலைக்கழிக்கும்போது, தாழ்த்தப்பட்ட , சிறுபான்மை இனமக்கள் பாதிக்கப்படும் போது, தொழிலாளர்கள் வேலையை விட்டு நீக்கப்படு சுடுகாடு நோக்கி தள்ளபடும் போது மூடிகிடக்கும் நீதி மன்றம் வாயைத்திறக்கிறது “தேசியக்கொடியை ஏற்று இல்லை உள்ளயே கிட” அட போலீசுக்காரர்கள் உங்கள் மண்டையை பிளந்தபோது கூட நீதிபதிகளே இப்படி கடினமாக பேசவில்லையே.

அவ்வளவு தேசியத்தின் மீது பற்றா? தேசியத்தின் மீது இருக்கும் பற்றினை விட ஆளும் வர்க்கத்தின் மீது இருக்கும் பற்று அளவிடமுடியாதது. சென்னை நீதிமன்றத்தில் நுழைந்து கொலைவெறியாட்டம் போட்டவர்களுக்கு பூச்செண்டு அடிவாங்கியவர்களுக்கு அறிவுரை.

அடடா இதுக்கு பெயர் தான் நடு நிலைதவறாத சனநாயகமா? தான் செத்தாலும் தன் வர்க்கத்துக்கு சேவை செய்வதைத்தான் பெருமையாக திறமையாக கருதுகிறார்கள். அடிப்படை உரிமைகளில் கருத்து சுதந்திரம் இருக்கிறதா இல்லையா?

எதுவய்யா கருத்து சுதந்திரம்? முதலாளிகள், ஆளும் வர்க்கபிரதிநிதிகளின் கருத்துக்கு வரவேற்பு, ஒடுக்கப்பட்டவர்களின் கருத்துக்கு வாய்ப்பூட்டு, நாளை அமெரிக்காவின் கொடியை எரித்தால் கூட கடுமையான சட்டம் கொண்டு தண்டிப்பார்கள். அதற்கும் பலவித காரணங்களை சொல்லி சப்பை கட்டுகட்டி வாயை அடைப்பார்கள்.

அவர்களின் தேவை ஆளும் வர்க்கத்தின் சேவைதானே தவிர மக்களுக்காக அல்ல. நாளை ஆளும்வர்க்கம் கொடியை பீத்துணி என அறிவித்தால் கூட அப்படியே துடைத்து விட்டு போவார்கள், பெயர்கள் தான் காவல்துறை, ராணுவம், நீதித்துறை……..

இதற்கு பெயர் தான் மாபெரும் இந்திய சனனாயகமாம் !!!!! நம்பாதவர்களுக்கு களி நிச்சயம் என்பது மட்டும் உண்மை.

நன்றி: www.tamilcircle.net


இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தில் 20 ஆயிரம் தமிழர்கள் கொலை: தி டைம்ஸ் தகவல்.

இலங்கை இராணுவத்தின் இறுதிக்கட்ட யுத்தத்தில் 20,000 தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்திருப்பதாக, த டைம்ஸ் குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்கம் மேற்கொண்ட எறிகணை வீச்சுக்களால் அவர்கள் கொல்லப்பட்டதாக த டைம்ஸ் மேற்கொண்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, அறிவிக்கப்பட்டதை விட, மூன்று மடங்கு அதிகம் என டைம்ஸ் தெரிவித்துள்ளது.
மோதல் தவிர்ப்பு வலயத்தில் இலட்சக்கணக்கான பொது மக்கள் இருந்த நிலையில் கடந்த ஏப்ரல் 27ம் திகதி கனரக ஆயுதங்களை பாவிப்பதை நிறுத்துவதாக அரசாங்கம் அறிவித்தது.
அத்துடன், அங்கு இடம்பெற்ற பொது மக்களின் உயிரிழப்புகளை, விடுதலைப்புலிகளின் மீது அரசாங்கம் சுமத்தியதாக டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், கிடைக்கப்பட்ட நிழற்படங்கள், உத்தியோகபூர்வ ஆவணங்கள், சாட்சியாளர்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்கள் என்பன மாறுபட்ட கதைகளை சொல்வதாக அது தெரிவித்துள்ளது.
சர்வதேச கண்காணிப்பாளர்களும், உதவி வழங்குனர்களும், ஊடகவியலாளர்களும் புறந்தள்ளப்பட்டு, இராணுவம் இறுதி மூன்று வாரங்கள் பாரிய தாக்குதல்களை முன்னெடுத்து யுத்தம் நிறைவடைந்து விட்டதாக அறிவித்தது.
ஆனால் அதற்கான விலைகளை அப்பாவி தமிழ் பொது மக்களே செலுத்த வேண்டியேற்பட்டதாக த டைம்ஸின் அந்த செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தமிழீழத் தலைவர் கொல்லப்பட்டதன் பின்னர், மே 19ம் திகதி மாத்திரம் 1000 பொது மக்கள் கொல்லப்பட்டதாகவும் த டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த பாதிப்புக்களை, தற்போது வெளியாகியுள்ள நிழற்படங்களின் ஊடாக பார்க்கும் போது தெளிவுபடுத்தப்படுகிறது.
இதற்கிடையில் தாக்குதல் கோணங்கள் இராணுவத்தினரால் நிர்ணயிக்கப்பட்டு, அதன் பின்னர், வான் மற்றும் நிலத்தாக்குதல்களை மேற்கொள்ளப்பட்டுள்ளமை சில புகைப்படங்களில் தெளிவாக தெரிவதாக பிரித்தானிய ஆயுதப்படை என்னும் சஞ்சிகையின் ஆசிரியர் சார்ல்ஷ் ஹெயின்மென் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் இலங்கையின் பிரேரணை வெற்றி பெற்றுள்ளது.
An aerial view of an abandoned vehicle is seen in the  devastation in the former conflict zone on the  north east coast of  Sri Lanka, Saturday, May 23, 2009. U.N. Secretary-General Ban Ki-moon visited the displacement camp packed with tens of thousands of Tamil civilians in northern Sri Lanka as he appealed Saturday to the triumphant government to "heal the wounds" after three decades of civil war.  (AP Photo/Kirsty Wigglesworth)
Image for Ian Whitbread - Catherine Philps Piece. Sri Lanka’s No-Fire Zone is a scene of such utter devastation it mocks its very name. It is a glimpse of hell unleashed in paradise. A glistening white beach packed with home-made bunkers where civilians huddled to protect themselves from the shells that the government denies launching in the final weeks of the offensive.
An aerial view of the former battlefront can be seen from the helicopter carrying U.N. Secretary-General Ban Ki-moon during his visit, which also included a visit to the refugee camp called Manik Farm, on the outskirts of the northern Sri Lankan town of Vavuniya May 23, 2009. Ban toured Sri Lanka's largest war refugee camp named Manik Farm, home to 220,000 refugees, in the north of the country on Saturday during a trip to press for wider humanitarian access and political reconciliation, and is the highest-level international visit Sri Lanka since the government declared victory on Monday over the Tamil Tiger rebels in a 25-year war.        REUTERS/Louis Charbonneau     (SRI LANKA CONFLICT MILITARY POLITICS)
An aerial view of a former battlefront can be seen from the helicopter carrying U.N. Secretary-General Ban Ki-moon during his visit, which also included a visit to the refugee camp called Manik Farm, on the outskirts of the northern Sri Lankan town of Vavuniya May 23, 2009. Ban toured Sri Lanka's largest war refugee camp named Manik Farm, home to 220,000 refugees, in the north of the country on Saturday during a trip to press for wider humanitarian access and political reconciliation, and is the highest-level international visit Sri Lanka since the government declared victory on Monday over the Tamil Tiger rebels in a 25-year war.        REUTERS/Louis Charbonneau (SRI LANKA CONFLICT MILITARY POLITICS SOCIETY IMAGES OF THE DAY)
An abandoned UN World Food Program vehicle lays amidst the devastation, seen in this aerial photo showing part of the former conflict zone on the north east coast on the Jaffna peninsula of Sri Lanka, Saturday, May 23, 2009.  Many thousands of Tamil people were displaced over the final months of fighting, leaving some areas largely deserted, with displaced people being housed in tented camps. (AP Photo/Kirsty Wigglesworth)
The abandoned devastation is seen in this aerial photo showing part of the former conflict zone on the north east coast on the Jaffna peninsula of Sri Lanka, Saturday, May 23, 2009. Many thousands of Tamil people were displaced over the final months of fighting, leaving some areas largely deserted, with displaced people being housed in tented camps. (AP Photo/Kirsty Wigglesworth)
The abandoned devastation is seen in this aerial photo showing part of the former conflict zone on the north east coast on the Jaffna peninsula of Sri Lanka, Saturday, May 23, 2009. Many thousands of Tamil people were displaced over the final months of fighting, leaving some areas largely deserted, with displaced people being housed in tented camps. (AP Photo/Kirsty Wigglesworth)
Image for Ian Whitbread - Catherine Philps Piece. Sri Lanka’s No-Fire Zone is a scene of such utter devastation it mocks its very name. It is a glimpse of hell unleashed in paradise. A glistening white beach packed with home-made bunkers where civilians huddled to protect themselves from the shells that the government denies launching in the final weeks of the offensive.


Saturday, July 4, 2009

தமிழனை நசுக்கிய ராஜபக்சே காலுக்கு முத்தமிடச் சொல்லும் கருணாநிதி! - பழ நெடுமாறன்.

neduழத் தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்க வேண்டுமேயானால் சிங்கள அரசின் மூலமாகதான் அதனைச் செய்ய முடியும். எனவே நம்முடையப் பேச்சால், நம்முடைய நடவடிக்கையால் சிங்களவர்களுடைய கோபத்தை அதிகரிக்கும் வகையில் எதுவும் செய்துவிடக் கூடாது” என முதல்வர் கருணாநிதி தமிழகச் சட்டமன்றத்தில் கூறியிருக்கிறார்.

ஏறத்தாழ ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழர்களை ஈவு இரக்கம் இல்லாமல் படுகொலை செய்த ராஜபக்சவுக்கும் அவருடைய கூட்டத்திற்கும் ஆத்திரமூட்டும் எத்தகைய நடவடிக்கையிலும் ஈடுபடாமல் நடந்து கொள்ள வேண்டும் என தமிழர்களுக்கு கருணாநிதி அறிவுரை வழங்கியிருக்கிறார். அதாவது உதைக்கிற காலுக்கு முத்தமிட வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார்.

கன்னடர்களுக்கு கோபமூட்டாமல் காவிரிப் பிரச்னையிலும், மலையாளிகளுக்கு கோபமூட்டாமல் முல்லைப் பெரியாறு பிரச்னையிலும் நீக்குப் போக்குடன் கருணாநிதி நடந்து கொண்டதினால்தான் அப்பிரச்சினைகளில் தமிழகம் மிகப்பெரிய இழப்புகளுக்கு ஆளாக நேரிட்டது.

ஈழத் தமிழர் பிரச்சினையிலும் காங்கிரஸ் கட்சிக்கு கோபமூட்டி அதன் விளைவாக தேர்தல் உறவு பாதிக்கப்பட்டு விடக்கூடாதே என்பதற்காக இவர் கையாண்ட அணுகுமுறையின் விளைவாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அது மட்டுமல்ல, “தமிழீழத் தனிநாடு இனி சாத்தியமானது அல்ல.சம உரிமையும் சம அதிகாரமும் கொடுக்குமாறு வேண்டி சிங்களவரிடம் மண்டியிட வேண்டும்” என்றும் ஆலோசனை வழங்கியிருக்கிறார்.

“கொள்கையைக் கைவிடுவதற்கும் ஒரு துணிச்சல் வேண்டும்.திராவிட நாடு கொள்கையை தி.மு..க. கைவிட்டதற்கு காரணம் கட்சியை ஒழிப்பதற்கு சட்டம் வந்தபோது திராவிட நாடா அல்லது கட்சியா என்ற கேள்வி எழுந்தது.எனவே முதலில் கட்சிதான் வேண்டும் என்று முடிவு எடுத்ததாக”வும் முற்றிலும் உண்மைக்கு மாறான தகவலை கூறியிருக்கிறார்.

பிரிவினை கேட்கும் கட்சிகள் தடை செய்யப்படும் என்ற சட்டம் கொண்டு வரப்படவில்லை.பிரிவினை கேட்கும் கட்சிகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்றுதான் சட்டம் கொண்டு வரப்பட்டது.தேர்தலில் போட்டியிட்டு பதவி சுகம் அனுபவிப்பதற்கு இச்சட்டம் தடையாக இருக்கும் என்று கருதியதால்தான் திராவிட நாடு கோரிக்கை குழிதோண்டி புதைக்கப்பட்டது.வரலாற்றுப் பூர்வமான இந்த உண்மையைத் திரித்து பேசுகிறார் கருணாநிதி.

30 ஆண்டு காலம் அறவழியில் சம உரிமைக் கேட்டு ஈழத் தமிழர்கள் போராடினார்கள். எதுவுமே கிடைக்காத காலகட்டத்தில் ஆயுதம் தாங்கிய போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள். 15 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் சொந்த மண்ணில் வாழ வழியில்லாமல் அயல்நாடுகளில் அகதிகளாக அடைக்கலம் புகுந்தார்கள்.

தமிழீழப் பகுதி முழுவதிலும் பாதிக்கப்படாத தமிழர் குடும்பமே இல்லை.இவ்வளவு தியாகங்களை ஈழத் தமிழர்கள் செய்த பிறகு அந்தப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தவும் பின்னோக்கித் தள்ளவும் கருணாநிதி முயற்சி செய்வதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

உலகத்தின் பல நாடுகள் ராஜபக்சே அரசின் மனித உரிமை மீறல்களை மிகக் கடுமையாகக் கண்டனம் செய்யும் கட்டத்தில் அவருக்கு வெண்சாமரம் வீசும் வேளையில் தமிழக முதலமைச்சர் ஈடுபட்டிருப்பது வெட்கக் கேடானதாகும். இதன் மூலம் உலக நாடுகள் நடுவில் ஈழத் தமிழர் போராட்டம் குறித்து ஒரு தவறானக் கண்ணோட்டத்தை ஏற்படுத்த அவர் செய்யும் முயற்சி வெற்றி பெறப் போவதில்ல. ஈழத் தமிழரின் மன உறுதி ஒரு போதும் தளரப் போவதில்லை.அவர்களுக்கு ஆதரவாக உலகத் தமிழர்களின் போரட்டங்களும் ஓயப் போவதில்லை, என்று கூறியுள்ளார் நெடுமாறன்.


வாழத்துடிக்கும் பெண்ணினம்! வாழ்க்கை மறுக்கும் சமூகம்!!

penmai
மார்ச் 8 உழைக்கும் மகளிர் தினம். சமையலறையிலும், குழந்தைப் பேறுவளர்ப்பிலும், பாலியல் இச்சைக்காகப் படுக்கையறையிலும் காலங்காலமாகக் கட்டிப் போடப்பட்ட பெண்கள், மனித குல வரலாற்றில் தங்களுக்கும் சரிபாதிப் பங்குண்டு என வர்க்கப் போராட்டத்தில் ஈடுபட்டு செந்நீர் சிந்தி, சில உயிர்களைப் பலிதானமிட்டு உணர்ந்த நாள் மார்ச் 8. ஆனால் 21 ஆம் நூற்றாண்டில் மனித சமூகம் அடியெடுத்து வைத்திருக்கும் இக்காலத்திலும், நவீன வாழ்க்கையின் அடையாளமாக எத்தனையோ வசதிகள் சகஜமாகிவிட்ட இச்சூழ்நிலையிலும் பெண்கள் தங்கள் தளைகளை அறுக்க முடியாமல் அடிமைகளாக நீடித்திருக்கும் நிலையே தொடர்கின்றது.
முக்கியமாக ஒரு பெண் தன் காதலை, திருமணத்தை, குடும்பத்தை, வேலையை, மொத்தத்தில் வாழ்வை தான் விரும்பியபடி தெரிவு செய்யும் சுதந்திரம் இல்லை. வேலைக்குச் சென்று தனது பொருளாதார சுயேச்சை நிலையை அடைந்திருக்கும் பெண்ணுக்குக் கூட முழுச் சுதந்திரத்தை இந்தச் சமூகம் கொடுத்து விடுவதில்லை. சமூகம் மரபாகப் பின்பற்றி வரும் எல்லாப் பிற்போக்குத்தனங்களுக்கும் பெண்தான் முதல் பலிகடாவாகின்றாள். சாதி, மத, இனங்களின் கவுரவமே ஒரு பெண்ணின் ‘தூய்மையை’ வைத்தே அளவிடப்படுகின்றது. கீழ்க்கண்ட இரண்டு உண்மைச் சம்பவங்களைப் பார்த்துவிட்டு இந்த விமரிசனத்தை மேற்கொண்டு பரிசீலிக்கலாம்.
···
ஈரோடு மாவட்டம், குன்னத்தூரைச் சேர்ந்தவர் சங்கீதா. வெண்ணெய்க்குப் பிரபலமான ஊத்துக்குளியைச் சேர்ந்தவர் சதாசிவம். சொந்த மண்ணில் வாழ வழியில்லாதவர்களுக்கு சற்றே சிரமமென்றாலும், ஒரு குறைந்தபட்ச வாழ்வை உத்திரவாதம் செய்யும் திருப்பூருக்கு இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்பதற்கு வந்தனர். தமிழகத்தின் தெற்கு, கிழக்கு, மேற்கு என எல்லாப் பகுதிகளிலுமிருந்தும் இலட்சக்கணக்கான தொழிலாளிகள் திருப்பூரில் குவிந்துள்ளனர். பனியன் தொழிற்சாலைகளில் நூற்றுக்கணக்கில் ஆண்களும், பெண்களும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இருப்பதால் மற்ற ஊர்களில் சிரமப்படும் காதல் வாழ்க்கை இங்கே ஒப்பீட்டுரீதியில் சற்றே சுலபமானது எனலாம்.
அப்படித்தான் சதாசிவமும், சங்கீதாவும் காதலித்தனர். பிழைப்பதற்கு வந்த ஊர் காதலுக்கு வழியேற்படுத்தினாலும், அவர்களின் பிறந்த ஊர்கள் இந்தக் காதலை அடியோடு நிராகரித்தன. இந்த உண்மைக்கதையை வெளியிட்டிருக்கும் ஜூனியர் விகடனில் (28.01.09) அவர்களின் சாதி குறித்த விவரமில்லை. இருப்பினும் இருவரும் ஓரே தகுதி கொண்ட வெவ்வேறான சாதிகளாகவோ, அல்லது இருவரில் ஒருவர் சற்றே ஆதிக்கசாதியாகவோ இருக்கலாம். எப்படியும் இருவரின் குடும்பத்தாரும் இவர்களின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டவில்லை என்பதோடு உறவை அறுத்துக்கொண்டு தலைமுழுகினர். வேறுவழியின்றி இந்த ஜோடிகள் திருப்பூர் கோவிலொன்றில் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்குப் பிறகாவது தன் குடும்பம் தன்னை எற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கையில் தந்தைக்கு தொலைபேசியில் பேசினார் சங்கீதா. தந்தையோ “உன் குடும்பத்தில் பிள்ளை பிறந்தாலும் எங்களுக்குச் சொல்லாதே! இழவு விழுந்தாலும் எங்கிட்ட வராதே” என வெட்டு ஒன்று துண்டு இரண்டென பேசி முடித்துக் கொண்டார். சதாசிவம் வீட்டிலும் இதே கதைதான் என்பதால், இந்தப் புதுமணத் தம்பதியினர் திருப்பூரில் தங்கள் குடும்ப வாழ்க்கையைத் துவங்கினர். சொந்த பந்தங்களின் ஆதரவின்றி ஒருவருக்கொருவர் ஆறுதலாக அந்த வாழ்க்கை நகர்ந்தது.
முதல் வருடத்திலேயே சங்கீதாவுக்கு ஒரு குழந்தை மூளை வளர்ச்சியின்றி இறந்தே பிறந்தது. தலைப்பிரசவத்துக்கு ஒரு பெண் தயாராகும்போது சுற்றமும் உற்றமும் புடைசூழ பார்த்துக் கொள்ளும். ஆனால் சங்கீதாவுக்கு அவளது கணவனைத் தவிர யாரும் துணையில்லை, வந்து பார்க்கவுமில்லை. பேறுகாலச் சிரமங்களை மிகுந்த சிரமத்துடன் பொறுத்துக்கொண்ட சங்கீதா அதன் பின் நான்கு வருடங்களுக்குப் பிறகுதான் கர்ப்பமானார்.
உறவுகள் அற்றுப்போய் தனித்தீவுகளில் வாழ்வது போல தனிமைப்பட்டிருந்த அந்த ஏழைத் தம்பதியினருக்கு ஒரு குழந்தையின் மூலம் புதிய உறவு வரப்போகின்றது என அளவில்லாத மகிழ்ச்சி! தன் மனைவியை அவளது தாய் பார்ப்பது போல பராமரித்து வந்த சதாசிவம், சங்கீதா கர்ப்பமான ஒன்பதாவது மாதத்தில் அதிக இருமலும் சளியுமாக அவதிப்பட்டார். திருப்பூர் அரசு மருத்துவமனையில் காட்டிய போது அவருக்கு காசநோய் முற்றியிருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டார். ஏதோ ஒரு நோய், கோவை சென்றால் சரியாகிவிடும் என்று புரிந்து கொண்ட அந்தப் பெண் கணவனைக் கோவைக்கு அழைத்துச் சென்றாள்.
திருப்பூரின் சாயப்பட்டறைகளினால் நொய்யல் ஆறு ரசாயன ஆறாக மாறி உயர்நீதி மன்றம் அதற்கு பல உத்திரவுகளைப் பிறப்பித்து சரி செய்வதற்கு முயன்ற விசயம் வாசகர்களுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் பனியன் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளிகள் பலருக்கு பஞ்சுத் தூசியினால் ஆஸ்துமாவும், காசநோயும், தோல் வியாதிகளும் இருக்கின்றது என்ற விசயம் அரசால் கூட கவனிக்கப் படவில்லை. திருப்பூர் மருந்துக் கடைகளில் இந்த நோய்களுக்கான மருந்துகள்தான் அதிகம் விற்பனையாகின்றது என்றால் இதன் பரிமாணத்தைப் புரிந்து கொள்ளலாம். அமெரிக்காவின் வால்மார்ட்டுக்காக ஆர்டர்கள் எடுத்திருக்கும் திருப்பூரின் முதலாளிகள் இப்படி தொழிலாளர்களின் நுரையீரலையும், எலும்புகளையும் சிதைத்துத்தான் ஆயத்த ஆடைகளைத் தயாரிக்கின்றனர் என்பது யாரும் கவலைப்படாத ஒன்று.
சங்கீதா நிறைமாதக் கர்ப்பிணியாய் தனக்கு எப்போது குழந்தை பிறக்கும் என்பது தெரியாமல் கணவனைக் கருத்தாகப் பார்த்துக் கொண்டாலும், கோவை அரசு மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றாலும் காசநோய் முற்றிய சதாசிவம் ஒரு சில நாட்களில் இறந்து போகின்றார். இந்த உலகில் தனக்கென இருந்த ஒரே உறவையும் தொலைத்து விட்ட அந்தப் பெண் அழுது புரண்டாள். பிறகு கணவனின் பிணத்தை எரிப்பதற்கு பணமில்லாமலும், தூக்குவதற்கு ஆளில்லாமலும் தவித்த அந்த அபலைப்பெண் பைத்தியமாய்ச் சுற்றியிருக்கின்றாள். சவக்கிடங்கில் இருக்கும் கணவனின் பிணத்தைத் தொட்டு அழுவதற்குக் கூட வாய்ப்பில்லாமல் தனது பெற்றோருக்கு தொலைபேசி மூலம் உதவுமாறு கேட்டிருக்கின்றாள் சங்கீதா.
எந்தச் சனியன் எக்கேடு கெட்டாலும் எங்களுக்கென்ன என குடும்பத்தினர் இரக்கமின்றி முறித்துக் கொண்டனர். பிறகு தோழமை அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தைக் கேள்விப்பட்டு அவர்களின் உதவியை நாடியிருக்கின்றாள் சங்கீதா. இந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் மூலம் கணவனது இறுதிச் சடங்கை முடித்த சங்கீதாவுக்கு தற்போது குழந்தை பிறந்திருக்கும். இருந்த ஒரே துணையையும் இழந்தவருக்கு ஆறுதலாக யாருமில்லை என்பதால் கைக்குழந்தையுடன் அவதிப்படப்போகும் சங்கீதாவின் எதிர்காலம் எப்படி நகரும்?
···
புது தில்லியில் இருக்கும் ஜவஹர்லால் நேரு மேல்நிலைக் கல்வி நிறுவனத்தில் ஆராய்ச்சியளராகப் பணிபுரியும் மீரா நந்தா அவரது சொந்த ஊரான சண்டீகரில் அவர் கண் முன்னே ஒரு இளம் பெண் கடத்தப்படுவதைப் பார்த்துவிட்டு அந்த அனுபவத்தை ‘தி ஹிந்து’தினசரியின் ஞாயிறு மலரில் (01.03.09 ) எழுதியிருக்கின்றார்.
பிப்ரவரி மாதத்தின் துவக்கத்தில் சண்டீகருக்கு வந்த மீரா நந்தா ஒரு பகல் பொழுதில் தனது வீட்டிலிருந்து அருகாமையில் இருக்கும் நீதிமன்ற வளாகத்தைக் கடந்து கடைத்தெருவுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரைக் கடந்து ஒரு இளம்பெண் வேகமாகச் சென்று கொண்டிருந்தாள். திடீரென வந்த ஒரு வெள்ளை வேனில் இருந்து இறங்கிய நான்கைந்து இளைஞர்கள், அவர்களைப் பார்த்துப் பதறி ஓடிய அந்தப் பெண்ணை விரட்டுகின்றார்கள். கணப்பொழுதில் அவளைப் பிடித்து தரதரவென இழுத்து அடித்து வேனில் ஏற்றிச் செல்கின்றார்கள்.
அதிர்ச்சியில் உறைந்திருந்த மீரா நந்தா அந்த வண்டியின் எண்ணைக் குறித்துக் கொண்டிருந்தபோது, நீதிமன்றத்தில் இருந்த மக்கள் கூட்டம் இச்சம்பவத்தைப் பார்த்து கூடுகின்றது. அந்தப் பெண் கடத்தப்பட்டதைப் போலீசிடம் புகார் கொடுக்கலாம் என்று அவர்கள் பேசியபோது கூட்டத்தில் நடுத்தர வயதிலிருக்கும் ஒரு சீக்கியர் குறுக்கிடுகின்றார். அந்த பெண்ணுக்கு ஒன்றும் ஆபத்தில்லை எனவும், தான் அவளது தந்தை, வேனில் பிடித்துச் சென்றது அவளது சகோதரர்கள்தான் என்றும் அவர் நிதானமாகத் தெரிவிக்கின்றார்.
உடனே மீரா நந்தா பெற்ற மகளையே இப்படி அடித்துக் கடத்துகின்றீர்களே! நீங்களெல்லாம் ஒரு தந்தையா, உங்களுக்கு வெட்கமில்லையா என்று கோபத்துடன் கேட்கிறார். தனது மகள் பொறியியல் கல்லூரியில் படிக்கும் ஒரு புத்திசாலிப் பெண்ணென்றும், அவளை ஒரு முசுலீம் இளைஞன் காதலிப்பதன் மூலம் அவளது வாழ்க்கை பாழாகக் கூடும் என்பதால் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டிருந்த அந்தக் காதலர்களைப் பிரிப்பதற்கு தான் எடுத்த நடவடிக்கை சரியானது என்றும் அந்தச் சீக்கியர் வாதிடுகின்றார்.
இதைக் கேட்டவுடன் கூட்டம் சமாதனத்துடன் கலைந்து செல்கின்றது. மீராவுடன் நான்கைந்து இளைஞர்கள் மட்டும் காவல் நிலையம் சென்று புகார் கொடுக்கலாம் என முடிவு செய்கின்றார்கள். காவல் நிலையத்தில் பொறுப்பிலிருந்த அதிகாரி சீக்கியரின் விளக்கத்தைக் கேட்டவுடன் திருப்தி அடைகின்றார். இப்போது மீராவுடன் ஒரு இளைஞர் மட்டுமே இருக்கின்றார். அந்த இளம்பெண் ஒரு மேஜர் என்பதால் தனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கு அவளுக்கு முழு உரிமை உண்டென மீரா அதிகாரியிடம் வாதிடுகின்றார். உங்கள் மகளுக்கு இப்படி நடந்திருந்தால் என்ன செய்வீர்கள் என அந்த அதிகாரி மீராவின் பதிலுக்குக்கூட காத்திராமல் அந்தத் தந்தையின் செயலை நியாயப்படுத்துகின்றார். அந்தச் சீக்கியரோ தான் குறுகிய எண்ணம் கொண்டவனல்ல, தனது மகள் ஒரு தாழ்த்தப்பட்ட சாதிக்காரனைக் காதலித்திருந்தால் கூட அதை ஏற்றுக் கொள்வாரெனவும், ஆனால் ஒரு முசுலீமைத் தனது மகள் காதலிப்பதை ஏற்க முடியாது என்றும் வாதிடுகின்றார்.
இறுதியில் மீரா போலீசு இதில் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் தான் இந்தப் பிரச்சினையை ஊடகங்களுக்குக் கொண்டு செல்வதாக மிரட்டியதும் அந்த அதிகாரி இதைப் பற்றிக் கண்டிப்பாக விசாரிப்பதாக உறுதியளிக்கின்றார். அவரது செல்பேசி எண்ணை வாங்கிவிட்டு மீரா திரும்புகின்றார். அன்று மாலையே அந்த இன்ஸ்பெக்டர் மீராவுக்கு தொலைபேசியில் பேசுகின்றார், அதன்படி அந்தப் பெண்ணைச் சந்தித்து விட்டதாகவும், அவள் தனது சொந்த விருப்பத்தில் குடும்பத்துடன் சேர்ந்து இருக்க விரும்புவதாகவும் கூறிவிட்டு அந்தப் பெண்ணையே பேச வைக்கின்றார். அந்தப் பெண்ணும் ஏதோ கடமைக்குப் பேசுவது போல தனக்கு ஒரு பிரச்சினையுமில்லை எனவும் சுரத்தில்லாமல் கூற, எந்தப் பிரச்சினை என்றாலும் தனது செல்பேசி எண்ணுக்கு அழைக்குமாறு கூறிவிட்டு மீரா இந்த சம்பவத்தை அசை போடுகின்றார். துயரம் தோய்ந்த அந்தப் பெண்ணின் முகம் அவரைத் தொந்திரவு செய்கின்றது.
···
சங்கீதா செய்த ‘குற்றம்’ சாதி மாறித் திருமணம் செய்தது, சண்டீகர் பெண் செய்த ‘குற்றம்’ மதம் மாறிக் காதலித்தது. சங்கீதாவின் பெற்றோரும், உறவினரும் அவளைப் புறக்கணித்து எந்த உதவியும் செய்யாமல் இருந்ததன் மூலம் அவளைத் தண்டித்தார்கள். சண்டீகர் பெண்ணின் குடும்பமோ அவளை வன்முறையின் மூலம் மிரட்டி அவளது காதலை நசுக்கித் தண்டிக்கின்றார்கள். தாங்கள் விரும்பியபடி மணவாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயன்ற அந்தப் பெண்களுக்கு இந்தச் சமூகம் ஒப்புதல் தரவில்லை.
சாதிவெறியும், மதவெறியும் பெண்ணின் இரத்தக் கலப்பில்லாத தூய்மையை வைத்ததே தத்தமது கவுரவத்தைக் காப்பாற்ற நினைக்கின்றன. ஆனால் இந்தப் புனிதக்கடமை ஆண்களுக்கில்லை. ஆதிக்கசாதி ஆண்கள் ஊருக்கு வெளியே இருக்கும் தலித் பெண்களைப் பாலியல் வன்முறை செய்வது இந்தியா முழுவதும் நடக்கும் விசயம். இதை மட்டும் சாதியின் கவுரவக் குறைச்சலாகக் கருதாமல், ஆதிக்கசாதி ஆண்களின் கம்பீரமாக இந்தச் சமூகம் பார்க்கின்றது. மேலும் தன்மானத்துடன் வாழ நினைக்கும் தலித் மக்களைக் கேவலப்படுத்துவதற்கும் அடக்குவதற்கும் ஆதிக்கசாதி வெறியர்கள் செய்யும் முதல் விசயம் தலித் பெண்களைப் பாலியல் வன்முறை செய்வதுதான். ஒரு ஆதிக்கசாதிப் பெண் ஒரு தலித் ஆணைக் காதலித்து திருமணம் செய்தால் ஊரே பற்றி எரியும். இந்தக் காதலை கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத சூழலே இந்தியாவெங்கும் இருக்கின்றது.
வட இந்தியாவில் ஒரு ஆதிக்கசாதி அல்லது பிற்படுத்தப்பட்ட பெண் ஒரு முசுலீமைக் காதலித்தால் மேற்கண்ட வெறியால் இன்னும் தீவிரமாக எதிர்க்கப்படும். இதைத் தடுப்பதற்கென்றே இந்தி பேசும் மாநிலங்களில் இந்து மதவெறியர்கள் தனி இயக்கமே நடத்துகின்றார்கள். சண்டீகர் பெண்ணின் தந்தை கூறியதைப் பாருங்கள், இந்துமதத்தில் இருக்கும் தலித் ஆணைக் கூட ஏற்றுக் கொள்வாராம், ஆனால் ஒரு முசுலீமை ஏற்றுக்கொள்ள மாட்டாராம். உண்மையில் அப்படி ஒரு தலித்தை அந்த சீக்கியப் பெண் காதலித்தாலும் இதுதான் நடக்கும். என்றாலும், முசுலீம் என்றால் அந்தக் கவுரவ வெறி சில மடங்கு அதிகமாக இருக்கின்றது.
உலகெங்கும் முசுலீம்களைப் பற்றிய வெறுப்பும், தவறான கற்பிதங்களும் திட்டமிட்டே பரப்பப்படுகின்றன. இதில் இந்தியாவைப் பொறுத்தவரை பிரிவினை காலந்தொட்டு நடந்துவரும்,இந்துமதவெறியர்களால் இயக்கப்படும் இந்து முசுலீம் கலவரங்கள் அந்த வெறுப்பைப் பிரச்சாரம் ஏதுமின்றி ஒரு இந்துவின் மனதில் ஏற்படுத்தி விடுகின்றன. எனவேதான் இந்தி பேசும் மாநிலங்களில் இதற்காக அதாவது இந்து மற்றும் ஆதிக்கசாதியின் கவுரவத்தைக் காப்பாற்றும் விதமாக யாரெல்லாம் அந்த எல்லையை மீறுகின்றார்களோ அவர்களெல்லாம் கொல்லப்படுவது சகஜமாக இருக்கின்றது. இந்தக் கவுரவக் கொலைகளில் பத்து சதவீதம் பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் நடக்கின்றது. முக்கியமாக இந்தக் கொலைகளுக்கு ஆளாவதில் பெரும்பான்மையினர் பெண்கள்தான்.
···
விஜய் டி.வியில் நீயா நானா நிகழ்ச்சி ஒன்றில் காதலைத் தீர்மானிப்பது அப்பியரன்சா,அப்ரோச்சா என ஒருமுறை விவாதிக்கும் போது எப்படி கடலை போடுவது, எதிர்பாலைக் கவருவது அல்லது கவிழ்த்துவது, இன்ன பிற அயிட்டங்களையெல்லாம் பயங்கரமாக அலசினார்கள். ஆனால் கலப்பு மணம் செய்தால் அதைத் தீர்மானிப்பது அரிவாள்தான் என்பதை அங்கிருக்கும் நடுத்தர வர்க்க அறிவாளிகள் எவரும் மருந்துக்குக் கூட தொட்டுப் பேசவில்லை.
இந்த விவாதம் நடந்து சில மாதங்கள் இருக்கலாம். இதே காலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவாஜிராவ் எனும் தலித் இளைஞரும், லட்சுமி எனும் கள்ளர் சாதிப் பெண்ணும் காதலிக்கின்றார்கள். கள்ளர் சாதி கோலோச்சும் இம்மாவட்டத்தில் இருக்கும் அபாயத்தைக் காதலர்கள் உணர்ந்திருந்ததால் யாருக்கும் தெரியாமல் திண்டுக்கல் சென்று ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு வாழ்கின்றார்கள். இதை எப்படியோ மோப்பம் பிடித்த லட்சுமியின் மூன்று அண்ணன்கள் ஒரு டாடா சுமோவில் சில ரவுடிகளை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் சென்று லட்சுமி கதறக் கதற அவளது கணவனை அடித்து வண்டியில் எற்றுகிறார்கள். சில நாட்கள் கழித்து அந்த தலித் இளைஞன் கொடைக்கானல் சாலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடக்கின்றான்.
தனது அண்ணன்கள் கொலை செய்யுமளவு துணிய மாட்டார்கள் என நம்பிய அந்தப் பெண் இன்றும் அழுது கொண்டிருக்கின்றாள். சில ஆண்டுகளுக்கு முன் விருத்தாச்சலம் அருகே ஒரு தலித் ஆணும் வன்னிய சாதிப் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள அந்தப் பெண்ணின் ஊர்க்காரர்கள் அதாவது வன்னியர்கள் முன்னிலையில் அந்தக் காதல் ஜோடி உயிரோடு எரித்துக் கொளுத்தப்பட்டது. வழக்கு இன்றும் நடக்கின்றது என்றாலும் மொத்த ஊரே இதில் சம்பந்தப்பட்டிருக்கும் போது யாரைத் தண்டிப்பது?
ஸ்ரீராம் சேனா என்ற இந்து மதவெறி இயக்கத்தினர் மங்களூர் பஃப்புகளில் இருந்த மேல்தட்டுப் பெண்களைத் தாக்கியதை வாசகர்கள் அறிந்திருக்கலாம். இதே போல காதலர் தினத்தில் சங்க பரிவாரங்கள் இந்தியா முழுவதும் செய்த அராஜகங்களையும் அறிவோம். ஆணாதிக்கத்தினோடு இந்து மதவெறியும் சேரும்போது அதனுடைய வெறி தீவிரமாகத்தான் இருக்கின்றது. இங்கும் கூட கவனியுங்கள் பெண்தான் குறிவைக்கப்படுகின்றாள். ஆண்கள் டாஸ்மாக் தொட்டு நட்சத்திர விடுதி மதுவறைகள் வரை குடித்து விட்டு ஆடலாம். ஆனால் இதை இயல்பு எனக் கருதும் இந்து மனம் பெண்கள் குடிப்பதை மாபெரும் கவுரவக் குறைச்சலாக நினைக்கின்றது. ஸ்ரீராம் சேனாவின் அத்துமீறலைக் கண்டித்து பல பெண்கள் அமைப்புக்கள் அந்த சேனாவின் தலைவருக்கு பிங்க் நிற ஜட்டிகள் அனுப்பித் தங்களது எதிர்ப்பைக் காண்பித்தன.
ஒரு பெண்ணுக்கு பஃப்புக்கு செல்வதற்கு சுதந்திரம் தேவை எனப் போராடுவதை விட சங்கீதாவும், சண்டீகரின் சீக்கியப் பெண்ணும் நடத்தும் போராட்டம் மிகவும் கடினமானது. மதுவறைகளுக்கு மேல்தட்டு பெண்கள் செல்வதை போலீசு உதவியுடன் கூட செய்து விடலாம். ஆனால் சங்கீதாவுக்கும், லட்சுமிக்கும் கறுப்புப் பூனைகள் போட்டாலும் பாதுகாக்க முடியாது. ஏனெனில் இங்கே முழுச் சமூகமுமே அந்த அபலைகளை எதிர்த்து நிற்கின்றது.
மேலும் மாநகரங்களைச் சேர்ந்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களிடத்தில் இவர்களில் ஐ.டி துறையில் பணிபுரியும் இளைஞர்களும் உண்டு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் படி 75% பேர் பெற்றோர் நிச்சயம் செய்யும் திருமணத்தைத்தான் செய்யப் போவதாகத் தெரிவித்திருந்தார்கள். படித்து, சற்றே வசதியுடன் வாழும் இந்த வர்க்கத்துக்கே இதுதான் கதியென்றால் அந்த ஏழைப் பெண் சங்கீதா என்ன செய்ய முடியும்?
ஆகவே பெண்ணுக்கு உரிமை என்பது தனிநபர் உரிமையாக சுருக்கிப் பார்த்தால், பஃப்புக்கு செல்வது, மானாட மயிலாட அல்லது ஜோடி ஒன்று நிகழ்ச்சியில் பங்கேற்பது, பார்வையாளராகச் செல்வது, தனியாக ஸ்கூட்டரிலோ, காரிலோ ஓட்டிச் செல்வது, வேலைகளில் ஏற்றத்தாழ்வின்றி எல்லா வகை வேலைகளுக்கும் செல்வது… இப்படித்தான் பலரும் புரிந்து கொள்கின்றனர். ஆனால் இத்தகைய தனிநபர் உரிமைகளைப் பெற்றுள்ள பெண்கள் தமது மணவாழ்க்கையைச் சுயேச்சையாக முடிவெடுக்க முடியாது. அப்படி மீறி எடுத்தால் கொலைவெறியைச் சந்திக்க வேண்டும் எனும் போது இங்கே எது பெண்ணுரிமை? ஏது பெண்ணுரிமை?
இந்தக் கட்டுரை எழுதும் சமயத்தில் சங்கீதாவுக்கு குழந்தை பிறந்திருக்கலாம், சண்டீகர் பெண்ணுக்கு வேறு மணம் கூட நடந்திருக்கலாம். ஆனால் அந்தப் பெண்கள் தனிமையில் கதறி அழுதவாறு இந்த வாழ்க்கையை எப்படி ஓட்டப் போகின்றோம் என விரக்தியில் உறைந்திருப்பார்கள். ஒருவேளை தற்கொலைக்குக் கூட முயற்சிக்கலாம். பரவாயில்லை,விரும்பியபடி வாழ்வதற்கு கதியில்லாத போது உயிரை முடித்துக் கொள்வது ஒன்றும் மோசமானதல்ல.


Friday, July 3, 2009

மாத்திரையின் மூலம் ஆண்களுக்கு கருத்தடை சாதனம் கண்டுபிடிப்பு.

மாத்திரை வடிவில் ஆண்களுக்கான தற்காலிக கருத்தடை சாதனம் கண்டுபிடிப்பு- இளையான்குடி பேராசிரியர் ஆபிதீனுக்கு டாக்டர் பட்டம் : இளையான்குடி டாக்டர் சாகீர் உசேன் க‌ல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் ஆபிதீன் தனது ஆராய்சிப் படிப்பை முடித்து. மணோன்மனியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்.Image
கடலியல் தாவரங்களைப் பயன்படுத்தி ஆண்களுக்கான கருத்தடை சாதனம் மாத்திரை வடிவில்; தயாரிப்பதற்கான முயற்சியில் மணோன்மனியம் சுந்தரனார் பல்கலைகழகத்திற்குட்பட்ட நாகர்கோவில், இராஜாக்கமங்களம் கடலியலியல் ஆராய்சி மையத்தில் பகுதிநேர மாணவராக பதிவுசெய்து கொண்டு ஆராய்சியை STUDIES ON THE IN VITRO HUMAN SPERM MOTILITY INHIBITING ACTIVITY OF MARINE HALOPHYTES AND IN VIVO TOXICOLOGICAL EVALUTION IN ALBINO MICE  - என்ற தலைப்பில் தொடங்கினார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக செய்து வந்த ஆராய்சிகட்டுரை சமர்ப்பிக்கப்பட்டு சமீபத்தில் இதற்கான வைவா நாகர்கோவில் கடலியல் ஆராய்சி மையத்தில்; நடைபெற்றது. சுமார் 350 பல்கலைகழக ஆராய்சி மாணவர்கள் முன்னிலையில், 3 மூன்று மணிநேரம் நடைபெற்ற இந்த வைவா தேர்வின். இறுதியில் மதுரை காமராஜர் பல்கலைகழக பேராசிரியர் டாக்டர் சாமுவேல் பால்ராஜ் பேராசிரியர் ஆபிதீனுக்கு டாக்டர் பட்டம் முறைப்படி அறிவித்தார்.
மேலும் இது குறித்து டாக்டர் பால்ராஜ் சாமுவேல் கூறும் போது, டாக்டர் ஆபிதீன் முடித்துள்ள இந்த ஆராய்சி இன்றைய காலகட்டத்தில் மிகவும் பயனள்ள ஓன்று. காரணம், இன்று உலக அளவில் மிகப்பெரிய அளவில் பிரச்சினையாக உருவெடுத்துள்ள மக்கள் தொகை பெருக்கத்தினை கட்டுப்படுத்த பயன்தரும் வகையில் இவருடைய ஆராய்சி வெற்றிபெற்றிருக்கிறது. ஆபிதீனுடைய ஆராய்சி குறித்து அவர் மேலும் கூறும் போது, தற்காலிக கருத்தடை சாதனங்களைப் பொறுத்தவரை பெண்கள் மாத்திரமே அதிகம் உபயோகித்து வருகிறார்கள். இதுவரை ஆண்களுக்கான தற்காலிக கருத்தடை சாதனம் என்பது காண்டம் ஒன்றுதான். இந்த நிலையில் பெண்கள் உபயோகப்படுத்தும் மாத்திரை வடிவிலான பொருள்களை போல், எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாத வகையில் ஆண்களுக்கும் கண்டுபிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறேன் என்று குறிப்பிடுகிறார்.
இந்த ஆராய்ச்சி பற்றி பேராசிரியர் ஆபிதீன் கூறுகையில், பொதுவாக பூமியில் காணப்படும் மருத்துவ குணமுடைய தாவரங்களை உபயோகித்து மருத்துவம் செய்யும்முறை மிகவும் பிரபலமாகி வருகிறது. அதே வேளையில் கடல்களில் காணப்படும் தாவரங்களைப் பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது, பொதுவாக பூமியில் காணப்படும் தாவரங்களில் இரண்டு மூன்று தாவரங்களை ஒன்று சேர்த்து ஓரு நோய்க்கு மருந்நதாக கொடுப்பார்கள். ஆனால் கடலில் காணப்படும் ஒரே தாவரம் கூட பல நோய்களுக்கு மருந்தாக பயன்படும் ஆற்றல் உள்ளது என்ற உண்மை பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை என்றார்.
தனது ஆராய்ச்சிபற்றி பேராசிரியர் விவரிக்கையில், ஆண்களின் விந்தனுக்கள் வெளியேற்றப்பட்டு அது கருத்தரிக்கும்முன், வெளியேற்றப்பட்ட விந்தனுக்களின் இயக்கங்களை தடைசெய்வதன் மூலம் அது கருத்தரிக்கப்படுவதை தடுக்க முடியும். அதாவது அந்த நேரங்களில் வெளியேற்றப்படும் விந்தனுக்களின் செயல்பாட்டினை தற்காலிகமாக பக்கவிளைவுகள் இல்லாமல் தடுக்க வேண்டியதுதான் ஆராய்சி என்கிறார்.  இதற்காக தமிழகத்தின் பல்வேறு கடற்கரை பிரதேசங்களிலிருந்து சுமார் என்பது வகையான பல்வேறுபட்ட கடல்வாழ் தாவரங்கள் சேகரிக்கப்பட்டு அறிவியல் முறைப்படி பதப்படுத்தி அவைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளை தன்னார்வ தொண்டர்கள் மூலம் பெறப்பட்ட விந்தனுக்களில் சோதனை (invitro test) செய்யப்படடது. இந்த சோதனை இந்திய அரசு சார்பாக மும்பையில் நடத்தப்படும் Indian Institute of Reproduction என்ற ஆராய்சி மையத்தில் முறைப்படி செய்யப்பட்டது. இந்த சோதனையின் முடிவில், தேர்ந்தெடுக்கப்பட்ட என்பது தாவரங்களில் ஆறுவகையான கடல்தாவரங்கள் மட்டும் விந்தனுக்களின் செயல்பாட்டை பெருமளவு தடைசெய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு வகைதாவரங்களை எலிகளைக் கொண்டு உள் உடலினுள் (invivo) பரிசோதனை செய்யப்பட்டது. சோதனையின் முடிவில், ஆறு வகைதாவரங்களில் ஓரு வகைதாவரம் மட்டும் அற்புதமான வகையில் விந்தனுக்களின் இயக்கத்தை பெரிதும் தடைசெய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இறுதியாக இந்த வகை மருந்துகளை உபயோகிப்பதால் ஏற்படும் மனதியல் மற்றும் உடலியல் ரீதியான பக்கவிளைவுகள் குறித்து மதுரையில் உள்ள ஒரு பிரபல மருந்தியல் கல்லூரியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பக்கவிளைவுகள் ஏதும் இல்லை என உறுதிசெய்யப்பட்ட பின்னர் இந்த தாவரத்தை ஆண்களுக்கான தற்காலிக கருத்தடை சாதனமாக மாத்திரை வடிவில் தயாரிக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுப்பணியின் முடிவில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைக்கு பி.எச்.டி. என்னும் டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது. என்றார்.
மேலும் அடுத்த கட்டமாக, கண்டுபிடிக்கப்பட்ட இந்த தாவரத்தின் செயல்பாடு குறித்து விளக்கி அவை மாத்திரை வடிவிலான, ஆண்களுக்கான தற்காலிக கருத்தடைப் மாத்திரையாகத் தயாரிக்கப் மருந்தியல் கம்பெனிகளுக்குப் பரிந்துரை செய்யப்படும். அதற்கு முன்பாக இந்த தாவரத்தினை பேட்டர்ன் பண்ணுவதற்கான முயற்சி செய்யப்பட்டு வருவதாகவும் கூறுகிறார் ஆபிதீன். இந்த ஒட்டு மொத்த ஆய்வுப்பணியும் மணோன்மனிய பல்கலைக்கழக கடலியல் விஞ்ஞானி டாக்டர் ரவிக்குமார் அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும், கடலியல் தாவரங்களிலிருந்து கரையான்களை கட்டுப்படுத்தும் ஆய்வு சம்மந்தமான கட்டுரையை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மலேசிய நாட்டில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் மாநாட்டில் ஆபிதீன் கலந்து கொண்டு சமர்பித்ததும் குறிப்பிடத்தக்கது.
- முதுவை ஹிதாயத்