Sunday, June 28, 2009

இன்னொரு இறைவன் வரமாட்டான் எங்களைக் காப்பாற்ற – புலனாய்வுப் போராளியின் மடல்.

தமிழீழ தேசத்தின் இரத்த உறவுகள் உங்கள் எல்லோரையும் இந்த மடல் மூலமாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
p8 உங்களுடன் தற்போதய நெருக்கடியான சூழ்நிலையில் கொஞ்சம், எதிர்கால நிகழ்வுகளை நீங்கள் எப்படி அணுகப் போகிறீர்கள் அணுகிக் கொண்டு இருக்கிறீர்கள் என்பதையிட்டு எமக்கு சில கருத்து முரண்பாடுகள் உள்ளன. அவற்றைக் களைந்து நாம் சரியான பாதையில் பயணிக்க வேண்டிய கடமையும் இளையோரை தெளிவு படுத்த வேண்டிய நிலைமையும் எமக்கு ஏற்பட்டு இருக்கிறது.
நாம் இரண்டு மிகப் பெரும் நெருக்கடிக்குள் சிக்குண்டு இருக்கிறோம். அவற்றை நாங்கள் திறம்பட முறியடித்து மீண்டும் எங்கள் ஊர்களுக்கு திரும்பிப் போவோம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. நீங்களும் அந்த நம்பிக்கையில் இருப்பீர்கள் என்பது எமக்குத் தெரியும்.
ஒன்று சர்வதேச நெருக்கடி. மற்றையது உள்நாட்டு நெருக்கடி.
இதில் தற்போது பரப்பப்பட்டு வரும் வதந்திகள் உளவியல் சார்ந்த புலனாய்வு வேலைகளை சிங்கள இன வெறி அரசு, இந்தியா, தென்னாசியாவில் காலூன்ற நினைக்கும் மேற்கத்தேயங்கள், சீனா, றைசியா அமெரிக்கா போன்ற எல்லா அரசுசுகளும் தமது நலனையிட்டு சர்வதேச அரங்கில் நல்ல சிறந்த ஒரு நடிப்பாற்றலை வெளிப்படுத்துகின்றன.
நாம் அதை இறுதியில் வட்டுவாகல் வரை கண்டு களித்தோம். அதற்கு ஏற்றாற் போல் நாம் எங்களுடைய ஆக்ரோசமான கை தட்டல்களை இந்த நாடுகளுக்கு தெரிவிக்க கடமைப் பட்டு இருக்கிறோம் என்பதை உங்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
அத்தோடு எங்கள் இரத்த மரபணுக்களில் படிந்து இருக்கும் ஒன்று படாத குணமும் காட்டிக்கொடுக்கும் சாதுர்யமும் படைத்த இன சகோதரர்களுக்கும் எங்களின் பணிவான நன்றிகளை தெரிவிக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
ஏனெனில் இவர்கள் எல்லோரும் சீறுந் தமிழனின் உண்மையான நிலையை தமிழனுக்கு உணர்த்தி இருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு நாம் கடமைப் பட்டிருக்கிறோம். நாம் மிகவும் இறுமாந்து இருந்தோம். அந்த இறுமாப்பை சிதறடித்து இப்போ ஒரு குற்ற உணர்வை எல்லா தமிழனுக்கும் பரிசளித்து இருக்கிறார்கள்.
நாம் ஒரு உண்மையை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். சிங்களவன் முழு உலகையும் கொண்டு எம்மை தோற்கடித்து இருக்கிறான். அந்த இறுமாப்பு அவனிடம் நிறையவே உண்டு. அதை நாம் அனுபவித்து அதன் பின்பு தான் உங்களுக்கு இப்படி ஒரு மடலை எழுதக் கூடிய நிலைக்கு நாம் வந்தோம்.
வட்டுவாகல் தாண்டும் போது வரவேற்றவர்களில் நான் ஒரு சீக்கிய இந்திய தளபதியைக் கண்டேன். சிறிது தூரத்தில் சிங்களப் படை சிப்பாயின் சீருடையில் ஒரு வெள்ளை இன அதிகாரியை சந்திக்க நேர்ந்தது. கள முனைகளுக்கு அப்பால் நான் கண்ட முதலாவது வேற்று நாட்டு படை அதிகாரிகளில் இவர்கள் என்னை கவர்ந்தார்கள்.
ஏனெனில் மோட்டார் எறிகணை வீச்சுக்குள் இருந்தார்கள். வரும் போது ஒர் சிங்கள இராணுவத்தினர் “ LTTE செல் அடிக்கப்போகுது வேகமாக செல்லுங்கள்.” என கட்டளை வழங்கிக்கொண்டு இருந்தான். LTTE யின் செல்லை நினைத்தால் தங்களுக்கு தலையிடி வருவதாக மேலதிக தகவலையும் சொல்லிவைத்தான். ஆனால் துரதிஸ்டவசமாக அவனுக்கு தலையிடி கொடுக்க எம்மிடம் செல்கள் கையிருப்பில் இருக்கவில்லை என்பதை அவன் எப்படி அறிவான்?
வரும் போது நந்திக் கடலுக்கும் பெருங்கடலுக்கும் இடைப்பட்ட ஒடுங்கிய பகுதிகளில் நான் அதிக இராணுவத்தைக் காணவில்லை. ஆனால் செல் மட்டும் மலையாக மக்கள் மீது பொழியப்பட்டு கொண்டே இருந்தன. மக்களின் வெளியேற்ற பாதையை படம் பிடிக்க 3 வேவு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டு அந்த இடங்களை 81 மோட்டார்களும் 5 இஞ்சி செல்களும் நிரையாக தொடர்ச்சியாக வீசிக் கொண்டு இருந்தார்கள். ஒரு மனிதனின் இடுப்புக்கு குறிவைத்து சுடப்பட்டும் நீண்ட தூர சுடகலன் பிரயோகம் நடை பெற்றுக் கொண்டு இருந்தது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டை தாண்டிய மக்களை விளையாட்டாக சினைப்பர் துப்பாக்கியாளர் இடையிடை சுட்டுக் கொண்டே இருந்தனர்.
சரணையடைய கைகளை தூக்கிய விடுதலைப்புலிகள் சுடப்பட்டனர். நடக்க முடியாமல் உயிரைக் காப்பாற்ற பாதைகளில் அரக்கி அரக்கி வந்தவர்களில் அநேகமானவர்கள் சுடப்பட்டனர். ஒரு சிலருக்கு வீதிகளில் வீசிச் சென்ற சயனற் வில்லைகள் கொடுக்கப்பட்டது.
இதில் குறைந்த அளவானோர் தப்ப முடிந்தது. பங்கர்களில் வெளியேற முடியாமல் இருந்த வர்கள் புளுடோசர்களால் அப்படியே மூடப்பட்டனர். இதில் ஆண் பெண் வேறுபாடு பார்க்;கப்படவில்லை.
ஒரு சிலர் தப்பி வரும் நேரத்தில் அங்கு நின்ற இராணுவ வீரர்களின் மன நிலைதான் அவர்களின் தலை விதியை தீர்மானித்தன. எமது மக்கள் எல்லோரும் இராணுவ பயிற்சி பெற்ற மக்களாக இருந்த காரணத்தினால் இந்தப் படுகொலைகளில் இருந்து தப்ப பெரிதும் உதவின என்பதை இராணுவம் கூட ஏற்றுக் கொள்ளும்.
இறுதி நாளில் மட்டு;ம் சுமார் 6000 மக்கள் கொல்லப்பட்டனர்;.
மொத்தமாக இந்த யுத்தத்தில் 50000 பேர் வரை படு கொலை செய்யப்பட்டு 150000க்கு மேற்பட்ட மக்கள் காயப்படுத்தப்பட்டு 25000க்கும் அதிக மானவர்களை ஏதோ ஒரு வித்தில் ஊனமாக்கப்பட்டனர்.
எங்களின் இறுதி நிலப்பரப்புக்குள் நடந்து போக இடமில்லை. ஓரே மக்கள். அதற்குள் பிணங்கள் கவனிப்பாரற்றுக் கிடந்தன. மலங்களிக்க கூட ஒரு இடமில்லாத நிலைமை. எல்லாமே வெளிப்படையாக நடந்தேறின. யாரும் யாரையும் பார்க்கும் நிலைமையில் இல்லை.
தமிழன் வாழ்வியலில் மறக்கப்படமுடியாதது ஒன்று. மிகப்பெரும் கடனை உலக நாடுகள் சிங்களவனுக்கு கொடுத்தது. (பணமும் ஆயுதமும்.) சிங்களவன் எமக்கு கொடுத்தது மரணமும் ஓலங்களும்.
இதை நான் எந்த திரைப்படத்திலும் பார்க்கவில்லை. இரண்டாம் உக யுத்தம் கூட இவ்வளவு குறகிய கால இனப் படுகொலையை ஒரே நேரத்தில் நிகழ்த்தவில்லை என நான் நினைக்கின்றேன்.
ஆனால் எமது மக்கள் இறுதிவரை எம்முடன் நின்று எம்மைப் பலப்படுத்தினார்கள். இப்போது அவர்கள் எங்களாலேயே ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். இதை சர்வதேசம் திறம்பட செய்தது.
எம்மை போரிட செல்ல விடாமல் ஒரு தீர்வை எமது மக்களுக்கு நாட்டை பெற்றுத்தருவோம் என மறைமுக வாக்குறுதிகளும் தமிழ் மக்களின் நண்பர்கள் போன்ற தோற்றத்தையும் காட்டி நாம் இறுதியில் ஏமாற்றப்பட்டோம். இதை தமிழர் பரம்பரை உள்ளவரை மறக்க முடியாது.
தமிழ் மக்கள் செய்த ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் பிரயோசனம் அற்றவையாக்கப்பட்டு புலம் பெயர் தமிழர்கள் ஏமாற்றப்ட்டார்கள். அதை விட கொடுமை சொந்த நாட்டில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த எந்த தமிழ் உறவுகளும் வாய் கூடத் திறக்கவில்லை. அந்த அளவுக்கு அவர்களுக்கு உயிர் பயத்தை ஊட்டி இருந்தான் சிங்களவன்.
எனக்கு ஒரு சந்தேகம். நாம் சரணடையும் பரம்பரையில் வந்தவர்கள் அல்லவே. எப்படி 10000க்கும் மேற்பட்ட புலிகளை சரணடையச் செய்ய முடிந்தது என்பதே. அதற்கான விடைகளை நீங்கள் நிட்சயம் அறிந்து கொள்ள வேண்டும்;. அதற்கான ஆரம்ப வித்து தூவப்பட்டது சமாதான உடன்படிக்கையில் என்பதே.
36 வருடங்களாக போராடிப் போராடி எங்கள் மக்களும் போராளிகளும் சோர்வடைந்து இருந்தார்கள் என்பது உண்மைதான். அதனால் எல்லோரும் ஓர் போர் நிறுத்தத்தை விரும்பியது என்னவோ உண்மை ஆனால் அதுவும் சர்வதேச நிர்ப்பந்தத்தில் தான் என்பதை உலகே அறியும்;.
சமாதானத்திற்கு முன் வீரனாக இருந்தவன் எப்படி கோழையாக மாற்றப்பட்டான் என்பது மிகவும் சுவாரஸ்சியமானவை.
சர்வதேச பாணியில் கால அளவைப் பார்த்து எல்லோருக்கும் திருமணங்கள்.
சர்வதேச இராணுவம் என கற்பனை பண்ணி எல்லோருக்கும் மாதாந்த கொடுப்பனவுகள்.
வசதி வாய்ப்புக்கள். சட்லைற் ரீவிடிஸ்கள். மின்சாரம் அல்லது சோலார் சிஸ்ர வசதிகள். நவீன வாகனங்கள் அதை விட நவீன கலாச்சாரங்கள் எல்லாம் வெகு விரைவில் பரப்பப்பட்டன. இதைப் பல தொண்டு நிறுவனங்கள,; மதம் சார்ந்த நிறுவனங்கள் என்பன மக்களின் துன்பம் போக்க இலவசமாகவே செய்து வந்தன.
ஒரு சில நாடுகள் கொடுப்பனவுகள் வளங்க பணமும் கொடுத்தன என்பது திரைமறைவுக் காட்சிகள் அதிகமானவை.
உதாரணம் சமாதான காலத்தில் எம்முடன் எங்கள் மக்களுக்காக பாடுபட்ட ஒரு ஐ.நா தொண்டு நிறுவன தலைமை பெண் அதிகாரி பாம்பு கடிக்கு இலக்கானார். உடனே வந்தது இராணுவ கெலி. என்னடா கெலி வருகிறது எனப் பார்த்தால் உண்மையில் அவர் ஒரு இராணுவ மேயர் ஜெனரலுடைய மாணவி. ஆனால் அவருக்காக எங்கள் முகங்கள் கூட திறந்தே கிடந்தன. அவரும் எங்களுக்கென்றால் தனது வாகனத்தைக் கூட பரிசளிப்பார்.
திறமையான அப்படி ஒரு ஊடுருவல். இதே போல் பல நிறுவனங்கள் எம்மால் கண்டுபிடிக்கப்பட்டன.
நேர்மையாக அல்லது மக்களுக்காக சேவை செய்தார்கள் என்பவர்கள் இராணுவத்தால் வெளியேற்றப்பட்டார்கள்.
நாம் சாமாதானத்தின் பின் இராணுவ கட்டுப்பாட்டுக்கு பரப்புரைகளுக்கு போய் வந்தோம். அங்கு எம்முடன் தொடர்பை ஏற்படுத்திய பல வல்லவர்கள் ஒர சில இராணுவ வீரர்களை கொண்று தமது வீரப் பிரதாபங்களை எமக்கு காட்டுவார்கள். நாங்களும் அவரை விட்டால் ஆள் இல்லை என நினைத்து பழைய ஆட்களைப் பின்னுக்கு தள்ளி அவர்களை புதுப் புலிகளாக சேர்த்துக் கொள்வோம். அவர்களும் நம்பிக்கையாக நடந்து கொள்வார்கள். பின்பு முக்கிய தளபதிகளுடைய மெய்ப்பாது காவலர்கள் அல்லது முக்கியமான வேலைகளை செய்து கொண்டு இருக்கும் நபர்கள் ஆகிவிடுவார்கள்.
இது எங்கே கொண்டு விட்டது தெரியுமா?
ஒரு சிலர் ஆவணங்களுடன் கம்பி நீட்டினர்.
பல தோல்விகளுக்கும் காரணமே கண்டு பிடிக்கப்படவில்லை இன்று வரை.
ஒர சிலர் திறமையாக இறுதிவரை இருந்து இறுதியில் தப்பி வந்தனர்.
அவர்கள் எல்லோரும் இறுதியாக சரணடைய வரும் மக்களோடு வந்த விடுதலைப்புலிகளை பெயர் கூறி வரவேற்றனர்.
ஒரு சிலர் இராணுவ சீருடையில் இருந்தனர். தாம் இராணுவம் என வெளிப்படையாக அறிவித்தனர்; எங்கள் எல்லோருக்கும் கண்ணீரைப் பரிசளித்த தமிழ் உத்தமர்கள் இவர்கள்.
மலையகம் மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளை சேர்ந்த தமிழர்கள்.
நாமும் சிங்களம் தெரிந்த புலிகளைத்தானே விரும்பினோம். அதனால் இராணுவம் எமக்கு கொடுத்த அன்பளிப்பு அவர்கள்.
இப்படித்தான் ஒருவர் வைத்தியசாலைக்கு வந்தார். தொப்பியும் முகத்துக்கு கறுப்புத் துணியும் கட்டியிருந்தார். எல்லோரையும் பாடசாலை மாணவர்கள் போல் இருத்திவிட்டுக் கேட்டார். இதில் புலிகள் இருந்தால் சரணடையுங்கள் என. யாரும் எழும்பவில்லை. அவர் ஒரு சிலரை சுட்டிக்காட்டி நீ இந்த படையணியில் இருந்த நீ! உனது பெயர் இது எனக் கூற,
அவர்கள் இல்லை என மறுத்தனர். வந்தவன் ஒரு இகழ்ச்சி சிரிப்பின் பின் தொப்பியைக் கழட்டிக் கேட்டான். என்னைத் தெரியுமா? என்ன யாரும் பதில் சொல்லவில்லை. முகத் துணியைக் கழட்டினான். ஒரு சிலர் குனிந்து அழுதனர். பதில் சொல்ல மறுத்த பலர் தலை குனிந்து இருந்தனர். அவனே கதைக்கத் தொடங்கினான். நான் ஒரு இராணவவீரன். சமாதான காலத்தில் ஊடுருவியிருந்தேன். நான் “கேணல் சாள்ஸ்க்கு பொடிக்காட்டாக இருந்திருக்கிறேன்”;.
அவருக்கு கிளைமோர் அடித்துக் கொன்றதும் நான் தான் என்றும், சில திகதிகளில் வன்னிக்குள் பஸ் வண்டிகள் மீது நடந்த தாக்குதல்களையும் தான், தான் வழி நடாத்தியதாக சொன்னான். எப்படியிருக்கிறது?
உண்மையில் இதற்காக நாமெல்லோரும் வெட்கப்பட வேண்டும்; இதில் என்ன மனக்கஸ்டம் என்றால் எனது சிறப்புத் தளபதி கூட இதற்கு தப்பவில்லை. அவரும் இதில் விழுந்து விட்டார். அந்தப் பாவத்திற்கு நாமெல்லாம் காரணமாகவும் அமைந்தோம்; எனும் போது வெட்கமாக இருக்கிறது. இதற்கெல்லாம் எப்படி பிராயச்சித்தம் செய்ய போகிறாம் என்னும் கேள்வியும் எழுகிறது.
இதை நான் ஏன் உங்களுக்கு சொல்ல வருகிறேன் என நீங்கள் நினைக்கலாம். நாம் நிறைய இழந்து விட்டோம். எங்களின் கண்டுபிடிப்புகள், சொத்துக்கள், ஆயுதங்கள், நிலங்கள் அவற்றையெல்லாம் விட பல்லாயிரம் மாவீரர்கள்.
எல்லாமே விடுதலைக்காக. அவை தமிழீழம் என்ற ஒன்றுக்காக. அது மாறாது இறுதித் தமிழன் உள்ளவரை இந்த யுத்தம் தொடரும். இது துட்ட காமுனுவிற்கு முற்பட்ட காலத்திலிருந்து நடக்கும் பெரும் போர். இதில் நாம் தொடர்ந்து தோற்க முடியாது. தொடர்நு அடிமையாக வாழ முடியாது.
நாம் இந்த மண்ணில் பிறந்து வளர்ந்து வரும் சிங்களவனுக்கு முற்பட்ட ஒரு இனம.;; ஆனால் எம் முன்னோர் வரலாற்று சான்றுகளை எங்கள் சந்ததிக்கு விட்டு செல்லவோ அல்லது சேகரித்து வைக்கவோ இல்லை. இருந்தும் தென் இந்தியா புராண இதிகாசங்கள் மதம் சார்ந்த விடயங்கள் எங்களை இந்த மண்ணின் பூர்வீக குடிகளாக அறிவிக்கப் போதுமானவை.
நாம் இராணுவப் பரம்பரை. எங்களின் ஆட்சியில் இந்த முழு இலங்கையுமே இருந்தது. அதை எங்கள் ஆட்கள் தான் பின் நாளில் கூறு போட்டார்கள். அந்நியருக்கு அடைக்கலம் கொடுத்தார்கள். இறுதியில் அடிமைப்பட்டார்கள். இது வரலாறு. இந்த வரலாற்றை மாற்றப் புறப்பட்ட வீரன் தான் எங்கள் தலைவன். எமது அண்ணன். பிரபாகரன். அவரின் மறைவு தற்காலிகமா? அல்;லது நிரந்தரமானதா? என யாரும் இப்போ உங்களக்குள் சேறு பூசும் வேலைகளை செய்ய வேண்டியதில்லை.
அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவர் எதிர்காலத்தை நன்கு உணர்ந்து இருந்தார். எனவே அதற்கு களம் பதில் சொல்லும். எனவே என் அன்பு உறவுகளே இதைப் பற்றியோ அல்லது என்ன செய்யலாம் என்ற வாதப் பிரதிவாதங்களை தற்போது நிறுத்தி யார் தலைவர் என உங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்ளாமல் நீங்கள் ஏற்கனவே என்ன வேலைகளைச் செய்தீர்களோ அவற்றை இன்னும் திறமையாக இராஜதந்திர நகர்வுகளுடன் எம் புலம் பெயர் வாழ் தமிழர்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பது எங்கள் அவா.
அதன் மூலம் எமது விடுதலைக்கு மேலும் உரம் சேர்ப்பீர்கள் என நாம் நம்புகிறோம். ஏனெனில் உங்களின் இந்த தடுமாற்றம் எங்களைத் தோற்கடிக்க உதவிய நாடுகளுக்கு இன்னும் சந்தோசத்தையும் அவர்களின் ஏனைய வேலைகளை இலகுவாக்கவும் உதவுகின்றன.
அவர்களும் இதையே எதிர் பார்க்கிறார்கள்.
இதில் இந்தியாவும் அமெரிக்காவும் முக்கியமான பாத்திரங்கள். ஏனெனில் 16ம் திகதி வரை நாட்களைக் கடத்தி, எங்களை ஏமாற்றிய கைங்கரியம் இவர்களை முழுமையாக சாரும். இதற்கு ஏனைய நாடுகளும் உதவின. நாம் இறுதிவரை நம்பியிருந்தோம்.
ICRC இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இதில் பணி புரியும் வெள்ளையர்கள் இராணுவத்திற்கு வேலை செய்கிறார்கள் என்பதை நிருபிக்க முடியாவிட்டாலும் எமக்கு அந்த சந்தேகம் நிஜம் என்பது தெரிந்து இருந்தது.
உதாரணம் காயமடைந்த நோயாளர்களை ஏற்றிக் கொண்டு போகும் கிறீன் ஓசையன் கப்பலில் வரும் வெள்ளையினப் பெண் அதிகாரி வைத்தியசாலையில் வந்து எமது பிரதேச வைத்தியர்களுடன் ஒரு நாள் வாக்குவாதப்பட்டதை நான் நேரில் கண்டேன். காரணம் முந்நூறுக்கு மேற்பட்ட நோயாளர்களை ஏற்ற வந்ததாகவும் இப்போது நூற்றைம்பது வரையானோர் இருப்பதாகவும் கூறி ஓர் வெள்ளைப் பெண்மணி சண்டை பிடித்தார். ஏனெனில் கடும் காயக்காரர்களுக்கு மட்டும் நாங்கள் அனுமதியை வழங்கினோம்.
சிறிது நேரத்தில் வைத்திய சாலை வளாகத்தில் நின்ற படி அந்தப் பெண்மணி யாருக்கோ சற்லைற் தொலைபேசி மூலம் கதைத்தார். ஒரு சில நிமிடங்களிலேயே வைத்தியசாலையை அண்டிய பகுதியில் சுமார் 20, 30 எறிகணைகள் விழுந்தன. எல்லாமே தரப்பாள் வீடுகள். சிதறியவர்கள் போக, அன்று அந்தப் பெண்மணி 450 பேர் வரையில் ஏற்றிக் கொண்டு போனார். இது ஒரு வழி முறையாக மக்களை மீட்கும் இலங்கை இராணுவத்திற்கு iஉசஉ வழங்கிய ஒரு சிறு உதவி தான்.
அதை விட இரகசிய உள் நுழைவுகளுக்கு UN வாகனங்களில் கூட இராணுவம் பயன்படுத்திய சந்தர்ப்பங்கள் உள்ளன. ஆனால் இந்த நிறுவனங்கள் எங்களில் பிழை பிடிப்பதிலும் எங்களுக்க எதிராக மக்களை திசை திருப்புவதிலும் பெரும் பங்கை ஆற்றின.
பிபிசி றோவின் கைப் பொம்மையாக எங்களுக்கு எதிரான பிரச்சாரத்தை உலகெங்கும் முடுக்கி விட்டது. இதற்கு அமெரிக்காவும் விதி விலக்கல்ல.
பல நாடுகளுக்கு காலச் சந்தைகளில் ஆயதங்களை விற்கும் இதே அமெரிக்கா எங்களையும் வாழ விடவில்லை. தனது நலனுக்காக எதையும் செய்யும் அமெரிக்கா பல நாடுகளுக்கு சுதந்திரத்தையும் ஆயதங்களையும் பல நாடுகளை சூறாடியும் கொண்டு தனது விஸ்தரிப்பை செய்கிறது.
ஆனாலும் றைசியா சீனா போன்ற அமைரிக்காவிற்கு எதிரான நாடுகளும் எங்கள் மண்ணில் தமது பங்குக்கு இராஜதந்திர நகர்வுகளை செய்கின்றன. அமெரிக்காவை காலூன்ற விடாமல் தடுத்தும் வருகின்றன.
ஆனால் இப்போதைய காலூன்றலுக்கு உதவி, இலங்கை அரசுமட்டும் என நம்பி, எங்களைக் காட்டிக் கொடுத்து அமெரிக்கா எங்கள் பலரை, ஆயுதக் கொள்வனவு செய்தார்கள் எனப் பிடித்து உள்ளே போட்டு எங்கள் சர்வதேச வலைப் பின்னலையும் இலங்கை அரசிற்கு காட்டிக் கொடுத்து புலனாய்வு தகவல்களையம் வழங்கியது.
ஏனைய நாடுகளையும் தனது வழியை பின்பற்ற செய்து, புலம் பெயர் நாடுகளில் நிதி முடக்கம், ஆயுத கொள்வனவுகளைத் தடுத்தல். ஆதரவாளர்களை கைது செய்;தல் போன்ற வற்றை தான் விரும்பியபடி செய்கிறது. எங்களையும் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்தது அவர்களின் இராணுவ நலனில் எங்களை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் இன்னும் அமைரிக்காவுக்கு உண்டு.
அவர்கள் இப்போ கண் வைத்து இருக்கும் ஆட்கள் நீங்கள் தான். உங்களில் பலரை விடுதலைப்புலிகளின் பிரமுகர்கள் என இனம் கண்டபின் உங்களுடன் இப்போ பேச வேண்டும் என அழைப்பு விடுக்கப்படுகிறது. இதை இலங்கை அரசிற்கு வலியுறுத்தி வருகிறது. இது மிகவும் பெரிய ஒரு இராஜதந்திர சதி. இதில் தமிழ் மக்கள் கவனமாக இருந்து கொள்ள வேண்டும்.
இதே போல் தான் ஆயுதம் வாங்கினார்கள் என காட்டிக் கொடுத்தவர் ஒரு தமிழர். அவரையும் அவர் செய்த போதைப்பொருள் வியாபாரத்தையும் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டுமென்று அவர் காட்டிக் கொடுக்க வேண்டுமென கேட்கப்பட்டு, அவர் பின்பு அவர்களைக் காட்டிக்கொடுத்தார் என்பதை தகவலறிந்தவர்கள் சொல்கிறார்;கள்.
எனவே அமெரிக்காவும் வஞ்சகன். இந்தியாவும் வேண்டாம்; நாம் நாமாக இருப்போம் ஏனெனில் சமாதானத்திற்கு முன் யாராலும் எங்களை எடைபோட முடியாமல் இருந்தது. நாங்கள் ஒரு விடுவிக்கப்படாமல் இருந்த புதிர். எங்களைப் பார்த்து உலகம் வியந்தது. இதை சர்வதேசம் திட்மிட்டு சிதறடித்திருக்கிறது. நாங்கள் தோற்க காரணமானவை சில.
1. சமாதான உடன் படிக்கை.
2. சுனாமி
3. கருணா அம்மான் எங்களில் இருந்து பிரிந்து அரச கைபொம்மையானது.
4. பிரிகேடியர் தமிழ்ச் செல்வன் அண்ணையின் வீர மரணம்;
5. கேணல் சாள்ஸ் அண்ணையின் வீர மரணம்.
6. பிரிகேடியர் பால்ராஜ் அண்ணையின் வீர மரணம்.
என்பன மிக முக்கியமானவை.
இவற்றை எங்களால் உடன் மறு சீரமைக்க முடியாத படி போர் தொடங்கப்பட்டது. இதை இந்தியாவே நடாத்தியது. எல்லா வழிகளாலேயும் அடைத்து எங்கள் வயல் நிலங்களை எல்லாம் சூறையாடப்பட்டு, பின் ஆறுதலாக எங்கள் ஊர்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. இதை எதிர்த்து போரிட முடியாமல் எங்களுடன் திரை மறைவில் பேச்சு நடாத்தப்பட்டது. இறுதியில் மக்களுக்குள் ஊடுருவி மக்களை மாற்றும் முயற்சியிலும் இவர்களுக்கு ஓரளவு வெற்றியைக் கொடுத்தது.
ஏனெனில் நாம் நீண்ட பல வருடங்களாக எமது கட்டுப்பாட்டுக்குள் மக்களை சுதந்திரமாக வைத்திருந்தோம். எங்களின் ஆட்சியை எல்லோரும் மெய்ச்சினார்கள். களவுகள் கொள்ளைகள் இல்லை. எந்த நேரமும் யாரும் எங்கும் போய் வரலாம.;; கலியாணம் கச்சேரி பெருமையாக நடந்தன. வியாபாரம் கொடிகட்டிப்பறந்தது. மக்கள் வீடு வாசல்களைக் கட்டி வாழ்ந்தனர். மாணவர்கள் கல்வி பொழுது போக்கு என மெய்மறந்து இருந்தனர்.
எல்லோருமே விடுதலை இது தான் என இருந்தனர். சமாதானம் பலரை குடும்பஸ்தர்களாக மாற்றியது. பலர் வெளிநாடு போயினர். அல்லது வெளி மாவட்டங்களுக்கு போயினர். மீண்டும் யுத்தம் வரலாம் என நாம் சமாதான காலத்தில் முடிவெடுத்த நேரத்தில் யாரும் இதய சுத்தியுடன் போராட வர விரும்பவில்லை. காரணம் அவர்களுக்கு போராடவேண்டிய தேவை இருக்கவில்லை. எந்த துன்பமும் இல்லாதவன் ஏன் போராட வேண்டும்.
அதனால் கட்டாய ஆட் சேர்ப்பு நடை பெற்றது. இதைச் சாக்காக வைத்து பலர் பலவிதத்தில் மக்களுக்கும் எமக்கும் விரிசலைத் தோற்றினர். இதை எமது போராளிகள் பலர் செய்தனர் என்பதே மனவருத்தமான விடயம்;.
இறுதியில் நாங்கள் பிள்ளை பிடிகாரராக சர்வதேச அரங்கில் பிரச்சாரப்படுத்தப்பட்டோம். போராளிகளைக் கள முனைகளில் இருந்து ஓட, பெற்றோர் ஊக்கம் கொடுத்தனர். விளைவு எதிரி எங்கள் வயல்கள் தாண்டி, கிராமம், நகரம் தாண்டி, எங்கள் வாசல்களை தாண்டி எம்மைச் சுட்டுக் கொன்றான்.
ஆகவே இன்று நிலைமை அப்படி இல்லை. முகம்களில் வாழும் எங்கள் உறவுகள் கண்ணீரோடு வாழ்கிறார்கள். அவர்கள் இப்போ தங்கள் நிலையை, உயிர் தப்பி வந்ததை விட சொந்த மண்ணில் செத்துப் போய் இருக்கலாம் என்பது அவர்களின் இன்றைய எண்ணப்பாடு. கஞ்சியைக் குடித்தாலும் அவர்கள் அங்கு சுதந்திரமாக இருந்தார்கள். அவர்களுக்கு எறிகணைகளும் உணவுப் பட்டினியும் இல்லாவிட்டால் இன்று இந்த முகாம்கள் யாரையும் கண்டு இருக்காது.
அவர்கள் தங்கள் பிள்ளை குட்டிகளுடன் நிச்;சயம் சொந்த மண்ணுக்காக போராடியிருப்பார்கள்.
அவர்களின் இந்தப் போக்கை மாற்ற இலங்கை அரசு ஒர் உளவியலை பாவிக்கின்றது. எல்லாவற்றிற்கும் வரிசையில் நிற்கவைத்தல். (சாப்பாடு, மருந்து, குடி தண்ணீர் எல்லாம்). இதனால் மனிதனுக்கு அன்றாடம் சாப்பிடவே பெரிய பாடாக இருக்கும்போது அவன் வேறு எதைப் பற்றியும் யோசிக்;காமல் செய்யும் ஓர் உளவியல் போர்.
குளிக்க தண்ணீர் இல்லை. குடிக்கவும் அடிபாடு. நீண்ட வரிசையில் நின்று தான் நீரைப்பெற்று கொள்ள வேண்டும். மல சல கூடங்களுக்கு பாவிக்க போதமானதாக நீர் இல்லை. எல்லா இடமும் ஒரே நாற்றம்; வறண்ட களிதரையில் தண்ணீர் கூட வற்றாது. எனவே ஓரே சாக்கடை நாற்றம். எல்லோருக்கும் வயிற்றோட்டம், காய்ச்சல், செங்கண்மாரி வேறு நோய்களும்;.
மருத்துவத்திற்கு செல்ல பல கட்டுப்பாடுகள். போகவே முடியாது. அதற்காகவே புல் மோட்டையில் இருந்த இந்திய மருத்துவமனை வீணாக செட்டிகுளத்திற்கு மாற்றப்படுகிறது. 100 படுக்கைகள் கொண்ட மருத்துவ மனை முகாமுக்குள்ளேயே. இனி யாரும் வெளியில் மருந்துக்குக் கூட செல்ல முடியாது. இந்திய மருத்துவர்கள் உருவத்தவத்துடன் புலனாய்வும் செய்வார்கள். றோ தனது பங்கிற்கு ஆட்களை சேகரித்துக் கொள்ளும்;.
டக்ளஸ், கருணா, பிள்ளையான் போன்றோருடன் பான்கி மூனும் மற்றய நாடுகளும் இந்த உலகிலேயே மிகப் பெரிய சிறையைக் கவனித்துக் கொள்வார்கள். அமெரிக்கா அதற்கு வாழ்த்துச் சொல்லும்;. இதைப்போல வசதிகள் எங்கும் செய்து கொடுக்கவில்லை என.
இதைச் சொல்லும் போது ஒரு ஞாபகம் வருகிறது. முள்ளிவாய்க்;காலில் நின்ற நேரம் மூன்று நாள் போர் நிறுத்தம் அறிவித்தது அரசாங்கம். இது எல்லோருக்கும் தெரியும். அதை ஐ.நா.வர வேற்று பெரிய பிரச்;சாரம் செய்தது. அப்போது சிங்கள இன வெறி அரசு அறிவித்தது விமானத் தாக்குதலையும் கனரக ஆயத பாவனையும் நிறுத்தி வைக்கிறோம் என. அறிவித்த அன்று காலையில் இருந்து மாலை வரை கிட்டத்தட்ட 20-22 தடைவைகள் வரை ஓயாத விமானத்தாக்குதல்கள் நடைபெற்றன.
ஒரு தடவை சுமார் 3 அல்லது 4 மிகையொலி விமானங்கள் தாக்குதலை நடாத்தின. 30 நிமிடம் கூட இடைவெளி கொடுக்கவில்லை. ஏராளமான மக்கள் குடியிருப்பு அழிக்கப்பட்டு பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. ஆனால் வெளி உலகம் அறிவிப்பை வர வேற்றுக் கொண்டு இருந்தது. தொடர்ந்து வந்த மூன்று நாட்களும், சிங்களவன் ஆட்டிலறிகளையும் முல்ரி பரல்களையும் மக்கள் செறிந்த எல்லா இடங்களுக்கும் அடித்து, வேவு விமானம் மூலம் படம் பிடித்து இடைவிடாது மக்களைக் கொன்று தள்ளிக் கொண்டிருந்தான்.
விடுதலைப் புலிகளை அழிப்பது என்றால் களமுனைகளையும் இராணுவ நிலைகளையும் தான் அழித்த இருக்க வேண்டும்.
சங்கக் கடைகளில் நீண்ட தொடர் வரிசையில் வைத்து பசியைப் போக்க கஞ்சியாவது காய்ச்சுவோம் என காத்திருந்து அரைக்கிலோ அரிசிக்காக நாட்கணக்கில் ஏங்கித் தவிக்கும் மக்களை அவர்களின் வாழ்விடத்தை ஏன் குறிவைத்தது இன வெறி அரசு. ஏன் என்று ஐ.நாவும் இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என்பன தான் சொல்ல வேண்டும்;.
மக்கள் பசி போக்க விடுதலைப் புலிகள் மக்களுக்கு சுவையான கஞ்சியாவது வளங்கினார்கள் இறுதிவரை. ஆனால் அரசை நம்பி வந்த மக்களுக்கு பல நாட்கள் உணவே கிடைக்கவில்லை.
இராணுவம் வழங்கிய தண்ணீர் போத்தலுக்கும் பிஸ்கற் பக்கற்றுகளுக்கும் பலர் அடிபட்டு இறந்து போயினர். தற்;போதும் உதவி நிறுவனங்கள் இல்லா விட்டால் அரச படை பிச்சைதான் எடுக்கவேண்டும்;. அதைத்தான் சிங்கள இன வெறி அரசு செய்து கொண்டு இருக்கிறது.
இதில் ஐ.நாவின் பங்கு அளப்பெரியது. பட்டினியால் தவிக்கும் போது உணவை வளங்காமல் ஆயதமாக்கி தடுத்தது.
ஆரம்பத்தில் 70000மக்களே உள்ளனர் என்றும் இறுதியில் 2000 பேர் என அரசு அறிவிக்க அவர்களுக்கு அதை விட குறைந்த உணவையே ஐ.நா அனுப்பியது. ஆனால் இறுதி நாட்களில் எப்படி 200000க்கும் மேற்பட்ட மக்கள் வந்தார்கள் என்பதை இவர்கள் வாய் திறக்கவி;ல்லை. முகாம்களில் 400000க்கும் மேற்பட்ட மக்கள் எப்படி வந்தனர்.
இந்த உண்மையை தமிழன் வாய்கிழியக் கத்தியும் ஏன் ஐ.நா ஏற்றுக் கொள்ள வில்லை. உண்மையில் இந்த ஐ.நா இனப்படு கொலையை அறிந்து இருக்கிறது.
சிங்களவன், தமது பேச்சைக் கேட்க வேண்டும் என்பதற்காக செய்மதிப் படங்களைக்காட்டி பூச்சாண்டி காட்டிய இவர்கள் மக்களின் அழிவைப் பார்த்து ரசித்தது எந்த விதத்தில் நிட்சயம் என அவர்களுக்கு மட்டும் தெரியும்.
அதைவிட சமாதானத்தை ஏற்படுத்திய ஐக்கிய தேசிய கட்சி அரசு கருணாவைப்பிரித்து பின் பிள்ளையான் தலைமையில் ஆரம்பித்த ஆட்கடத்தல் (கொலைகள்) இன்று அரச கட்டுப்பாட்டு பகுதியில் தொடர்ந்தது.
முக்கியமாக தலை நகர எல்லாத் தமிழரையும் பல மில்லியன் கோடிகளில் பாது காப்பு நிதி எனக் கடத்தி கப்பம் பெற்றார்கள். இதற்கு உதவிய தமிழர்களும் பின் உண்மை வெளியே வராமல் இருக்க காணாமல் செய்யப்பட்டார்கள்.
எத்தனை ஆயிரம் பிணங்கள் இன்னும் கண்டு பிடிக்கப்படாமல் இருக்கிறது என கருணா, பிள்ளையான், EPDP, Plote, UNP, தற்போதய அரசு என்பவற்றிடம் தனித்தனியாகத் தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இவற்றில் சேர்ந்த பணத்தை அமெரிக்காவுக்கு அருகில் உள்ள நாடுகளில் வைப்பு செய்ததையும் நாம் செய்தியாகப் படித்தோம்.
இந்த கோடிக்கணக்கான டொலர் நிதி பின்பு தமிழ் மக்களுக்கு எதிரான போரில் ஆயுதங்களாக தமிழ் மக்களையே திரும்பி வந்து சேர்ந்தது.
இதை CIA போன்ற நிறுவனங்கள் அறியவில்லையா? அறிந்து இருந்தால் அவர்களின் படைத்துறை வெளியீடுகளில் இலங்கைக்காக ஒதுக்கப்பட்ட பக்கத்தில் எழுத்தில் இருக்கவேண்டும்.
ஆனால் அவர்கள் புலிப்பயங்கரவாதம் என எங்களுக்கு எதிராக மட்டும் பிரச்சாரம் செய்து எம்மை சர்வதேசத்தில் இருந்து அந்நியப்பட வைத்தார்கள் என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எங்களை ஒபாமாவோ அல்லது கிலாரியோ காப்பாற்ற வரவில்லை. அமெரிக்க நலனை நாமும் புரிந்து அதற்கேற்றாற் போல் விலை போகாமல் எதிர்காலப் போரில் நாம் ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம்.
எழுத்துப் பிரிவில் இரண்டு பிரிவினர் எழுதுகிறார்கள். ஒன்று உண்மையை நடு நிலைமையாக எழுதுகின்றது. மற்றையது உளவு நிறுவனங்களுக்கு விலை போனவர்கள். அல்லது எதிர் நாட்டு அல்லது கட்சி சார்ந்தவர்கள், எங்களைப் பற்றி எழுதினால் தான் எதுவும் விற்பனையாகும் என்பதை நன்கு அறிவார்கள்.
அதனால் நாலு வாரத்தையில் எம்மைப் புகழ்ந்து, சூசகமான முறையில் எங்களை, எங்கேயாவது ஒரு இடத்தில் கடுமையான குற்றம் சாட்டி எழுதுவார்கள். பார்க்கும் போது நடு நிலைமையாளர் போல்தான் தெரியும். ஆனால் உண்மையில் எங்களுக்கு எதிரான கருத்துக்களை மக்கள் மத்தியில் தந்திரமான முறையில் இவர்கள் பரப்புவார்கள். இவர்களை நாம் கொஞ்சம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். சமூகத்திற்கும் அறிமுகம் செய்து கொள்ள வேண்டும்;. எனவே விடுதலை பற்றி மக்களை பிழையாக வழிநடத்துபவர்களை எழுத்துலகை விட்டு அகற்றுங்கள்.
உண்மையில் எமது மக்கள் தங்கள் சந்ததிக்கு இராமாயணம் மகாபாரதம் போன்ற காவியங்கள் எல்லாவற்றையும் சிறு வயதிலேயே கற்பிக்க வேண்டும் என்பது எமது விண்ணப்பம்.
ஏனெனில் இராமாயணம் மகாபாரதம் என்பவற்றைப் பிரதி பண்ணித்தான் மகாசேனன் காலத்தில் அவன் மாமனான மகானாம தேரர், திட்மிட்டு எதிர் காலத்தைக் கருத்தில் கொண்டு எழுதப்பட்டது மகாவம்சம்.
இதை வைத்துத் தான் இன்று சிங்கள மக்களை உசுப்பேற்றிக் கொண்டு இருக்கின்றனர். உண்மையில் விஜயன் சிங்களவனும் அல்ல பௌத்தனும் அல்ல. அவன் வருகைக்கு முன் இங்கு மக்கள் வாழ்ந்தார்கள். அவர்களை மகாவம்சம் பேய்களாக சொல்கிறது.
இராமாயணம் எப்படி தென்புல தமிழர்களை குரங்காகவும், இராவணனை அரக்கனாகவும் ஆரியர் சித்தரித்தனரோ, அந்த வழி நடந்து சிங்களவர்களும் தாங்கள் ஆரியர் என சொல்லிக் கொள்கின்றனர்.
நாம் மகாவம்சம் எதை சொல்ல வருகிறது என்பதை நிட்சயம் அறிய வேண்டும்;.
ஏனெனில் அதை சிறு வயதிலேயே கற்பித்து அதன் வழியில் தான் சிங்களவன் வழி நடத்துகின்றான்.
மகிந்தனும் சங்கமித்தையும் வரும் போது சிங்களம் ஆட்சி மொழியும் இல்லை அப்படி ஒரு மதமும் இல்லை. ஆற அமர இருந்து மகானமார தேரர் பாளி மொழியில் மகா வம்சத்தைக் எழுதி பின்பு சிங்களத்தை உருவாக்கினார்கள் என்ற வரலாற்றையும், சிங்களவன் வந்தேறு குடி என்பதையும் எங்கள் உறவுகள் நிட்சயம் அறிந்து கொள்ள வேண்டும் என்பது தாழ்மையான விண்ணப்பம்.
தமிழன் இரண்டோடு நிறுத்த சிங்களவனோ பன்றி போல் பதினாறு பெற்று பெருகி இன்று அவன் பெரும் பான்மை. நாம் சிறு பான்மை. என்று ஒரு புதுக் கதையை சொல்லி எங்களை வாழ்நாள் அடிமையாக மாற்ற நினைக்கிறான்.
எமது வரலாற்று சான்றுகளை அழித்து தமது மதச்சின்னங்களை தமிழ் பிரதேசங்களில் இராணுவ ஆக்கிரமிப்புடன் செய்து வருகிறான். இதை நாங்கள் எல்லோரும் சரிவரப் புரிந்து கொள்வதாலேயே முறியடித்து விடமுடியும்.
இதற்காகவே கைப்பற்றிய இடங்கள் எல்லாம் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் எல்லாம் தரை மட்டமாக்கப்பட்டு, போராட்ட சிந்தனை வர விடாமல் எமது ஆதிகால மற்றும் தற்கால சான்றுகள் எல்லாம் திட்மிட்டு அழிக்கப்படுகின்றன.
அத்தேடு இங்கு காணப்படும் அகழ்வாராய்ச்சி பொருட்கள் என்பனவும் இருக்கிறது. அவற்றை நாம் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இல்லா விட்டால் இந்த உலகம் தமிழனை உலக வரைபடத்தில் இருந்து அழித்து விடும்;;.
இனி உங்களிடமிருந்து விடை பெறுமுன். உங்களுக்கு சில விடயங்களைத் தெளிவாகக் கூறுகின்றேன். இந்த யுத்தத்தில் சிங்களவன் எமது தாயகத்தை எமக்கு வளங்கும் வரை போராடுவோம்.
உலகில் தமிழனுக்கு என்றொரு ஒரு நாடு, அது தமிழீழம் என்பதை இந்த உலகிற்கு புரிய வைப்போம்.
ஒரே தலைவன் அவனே எங்கள் இறைவன். இதை நாம் என்றும் ஏற்று நடப்போம்.
வரும் துன்பங்களை ஏற்று, நம் எதிர்காலம் நோக்கிய சீரிய சிந்தனையில் எங்களை எமது தாய் நாட்டுக்காக அர்ப்பணிக்க துடிப்புள்ள ஒவ்வொரு இளைஞரும் முன்வரவேண்டும்;.
நீங்கள் எவ்வளவு தூரம் எம் தேசத்தை நேசித்தீர்கள் என்பது எமக்கும், எங்கள் மக்களுக்கும் தெரியும். நீங்கள் கூறியபடி இராணுவம் எங்கள் நிலங்களைக் கைப்பற்றினால் நாமெல்லோரும் தாயகம் சென்று ஆயதமேந்தி தனிநாடு காண்போம் என்ற வார்த்தையை மெய்ப்பிப்பீர்கள் என நாங்கள் உரிமையுடன் எதிர் பார்க்கிறோம்;.
எங்களுடன் கை கோர்த்து, நவீன உலகில் எங்களின் நாட்டை நாங்கள் உருவாக்குவோம்; என்பதில் நீங்கள் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் விடுதலைக்கு உரம் சேருங்கள்.
எங்களுக்குள் உள்ள கருத்து வேற்றுமைகளைக் களைந்து அநாவசியமான சந்தேகங்களை உறுதிப்படுத்த முனையுங்கள். உங்களுக்கு சரியான ஒரு தெளிவு பிறக்கும்;.
எல்லோரும் ஒவ்வொரு கதைகளை சொல்லிச் சொல்லி மக்களை குழப்பாமல் தெளிவாக இருந்து மற்றவரையும் தெளிவு படுத்துவோம்.
மகாபாரதத்தில் கிருஷ்ணர் சமாதானம் பேசித்தான் எதிரிகளை பிளவு படுத்தி, படை பலத்தை பெருக விடாமல் செய்து இறுதியில்போருக்கு சென்று வெற்றியும் பெற்றார். கர்ணனை அர்ச்சுனன் தனி ஒருவனாக கொல்லவில்லை. அதே போல் எங்களை சிங்களவனால் தனித்து வெற்றி கொள்ள முடியாது.
நாங்கள் இன்னமும் உயிருடன் இருக்கிறோம். மீண்டும் சிங்களவன் சேர்க்கும் படைகள் சிதறடிக்கப்படும். எங்கள் மக்களின் சதைகளையும் பிண்டங்களையும் பார்த்து மனம் இறுகி இரும்பாக இருக்கிறோம்;.
நாங்கள் இழந்தவை ஒன்றும் சாதாரணமானவை அல்ல. அவற்றை நாம் விரைவில் சிங்களவனுக்கு கொடுப்போம். போருக்கு ஆதரவு தெரிவித்த ஒவ்வொருவரும் எங்களைக் கொன்று சந்தோசமடைந்த சிங்களவனும் மனம் வருந்தி சாக என, நாம் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம்;. விதைத்ததை அவர்கள் அறுவடை செய்வார்கள் பல மடங்காக.
இந்தியா நரித்தனமாக எங்களை விழுத்தி இருக்கலாம். தொடர்ந்தும் எங்களை நசுக்க முற்பட்டால் இந்திய பரந்த தேசத்தில் ஒர் நாடு தனியாக உடையும். அதை எங்கள் சேர, சோழ, பாண்டிய வம்சத்தினர் ஆள்வார்கள் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்;. அதைப் பார்க்க தற்போதைய ஆட்சியாளர் யாரும் உயிருடன் இருக்க மாட்டார்கள் என்பது தான் கவலையான விடயம்.
இந்திய வரலாறுகளில் நிறைய அடக்கப்பட்டவன் அரியணை ஏறிய கதைகள் உள்ளன. அவற்றை இந்த பார்ப்பனர்கள் மீண்டும் படித்து தெளிய வேண்டும்;;
கலைஞர் போன்ற பெரியவர்களை நாம் நம்பி இருக்க, அவர்களும் எல்லாம் வெறும் அரசியல் தான் என தமிழினத்திற்கே புரிய வைத்ததிற்கு அவருக்கும் எங்கள் கை கூப்பிய வணக்கங்கள்.
இன்னொரு இறைவன் வரமாட்டான் எங்களைக் காப்பாற்ற நாம் தான் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
நன்றி.
தடைகளை உடைப்போம் தமிழீழம் அமைப்போம்;.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்;.
அன்புடன்
படைப் புலனாய்வுப் போராளி
அரவிந்தன்.


2 comments:

கண்டும் காணான் said...

வணக்கம் , நீங்கள் பதிவிட்ட "கடவுள் அல்ல தலைவர் பிரபாகரன் மனிதன் " இல் , அனாமேதேய கடிதங்களை நம்பவேண்டாம் எனகூறி இப்பதிவில் உள்ள கடிதத்தின் நம்பகத்தன்மை கேள்விக் குறியாக்கப்பட்டது , ஆனால் தற்போது நீங்களே இந்தப் பதிவை இட்டுள்ளீர்கள் :-(

மு.இரா said...

உணர்ச்சிகளுக்கு எல்லை இல்லை. உணர்ச்சிகளை அடக்கி கொண்டே போனாலும், தவறு. இவை அனைத்துமே, தவறு. இவையெல்லாம் சரி என்று எதுவுமே இல்லை.

உணர்ச்சி பூர்வமான சில விஷயங்களுக்கு, வரைமுறை இல்லை. அது போலதான் இதுவும்.

உணர்ச்சியின் வெளிப்பாடு. பிழை இருப்பின் மன்னிக்கவும்.

Post a Comment