Friday, June 19, 2009

இலங்கையில் தோற்றது இந்திய இராசதந்திரமே! - பழ.நெடுமாறன்.

இலங்கையில் 30 ஆண்டுகாலத் திற்கு மேலாக நடைபெற்று வந்த போர் முடிவடைந்துவிட்டது. விடுதலைப்புலிகளை முற்றாகத் தோற்கடித்துவிட்டோம் என இலங்கை அரசு கொக்கரித்துள்ள து” இந்திய அரசும் அதற்குப் பாராட் டுத் தெரிவித்துவிட்டது. ஆனால் இலங் கைப்போரில் புலிகள் தோற்றார்களா? இல்லையா? என்ற கேள்விக்குரிய விடை யைவிட இந்தியாவின் இராசதந்திரம் வெற்றிபெற்றதா? இல்லையா? என்ற கேள் விக்குரிய விடையை அறிவதுதான் முக்கியமானதாகும்.

1980களில் தொடங்கி இன்றுவரை இலங்கையில் தங்களது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ளவும், இந்துமாக் கடலின் முக்கிய கடல், வான் பாதை களைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரவும், அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்று வந்த ஆதிக்கப்போட்டியில் இந்தியா படுதோல்வியடைந்துள்ளது.

1977ஆம் ஆண்டில் ஜெயவர்த்த னாவின் ஐக்கியத்தேசியக்கட்சி இலங் கையின் ஆட்சிபொறுப்புக்கு வந்தபோது இந்தியாவின் மேலாதிக்கத்திலிருந்து விடுபட விரும்பியது. அதற்கு ஒரே வழி அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுடன் உள்ள உறவுகளை வலுப்படுத்துவதே யாகும் எனத் திட்டமிட்டுச் செயல்பட்டது. இலங்கையின் பொருளாதாரம் மேற்கு நாடுகளுக்குத் திறந்துவிடப்பட்டது. இதன் விளைவாக தமிழர்களுக்கு எதிரான சிங்கள அரசின் இராணுவ நடவடிக்கை களுக்கு மேற்கு நாடுகள் உதவத் தொடங்கின.

1983ஆம் ஆண்டிற்குப் பிறகு அமெரிக்க உதவியுடன் இசுரேல் பாது காப்புப் படையான சின்பெத் (ஈட்ண்ய்bங்ற்ட்) உளவுப்படையான மொசாட் (ஙர்ள்ள்ஹக்) ஆகியவற்றைச்சேர்ந்த அதிகாரிகள் இலங்கைக்கு வந்து சிங்கள இராணு வத்திற்குப் பயிற்சி அளித்தனர். பிரிட்ட னைச் சேர்ந்த பிரிட்டானிய சிறப்பு விமானப்படையின் நிபுணர்கள் சிங்கள விமானப்படை விமானிகளுக்கு தமிழர் பகுதிகளில் குண்டுவீசப் பயிற்சி அளித் தனர். பிரிட்டனைச் சேர்ந்த தனியார் நிறுவனமான கீனி மீனி சர்வீசஸ் சிங்கள இராணுவத்தில் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கப் பயிற்சி அளித்தது. தென் னாப்பிரிக்க அரசு சிங்கள இராணுவத் திற்குத் தேவையான தளவாடங்களை அனுப்பியது.

இலங்கையில் மேற்கு நாடுகளின் ஆதிக்கம் வளர்ந்தோங்கிய நிலையில் இந்திய அரசின் கருத்துக்கள் எதற்கும் சிங்கள அரசு மதிப்புக் கொடுக்கவில்லை. எனவே அதற்கு எதிராக - சிங்கள அரசை மிரட்டுவதற்காக பிரதமர் ராஜீவ் காந்தி காலத்தில் 1987ஆம் ஆண்டு சூன் மாதம் 4ஆம் தேதி இந்திய இராணுவ விமானங்கள் முற்றுகைக்கு ஆளாகி யிருந்த யாழ்ப்பாணத்தின் மீது பறந்து சென்று உணவுப்பொதிகளை வீசின. இதைக்கண்டு சிங்களஅரசு அச்சம் அடைந்தது. 1987ஆம் ஆண்டு சூலை 27ஆம் தேதி அன்று இந்திய - இலங்கை உடன்பாட்டில் கையெழுத் திட்டாக வேண்டிய நெருக்கடி ஜெயவர்த் தனாவுக்கு ஏற்பட்டது. இந்த உடன் பாட்டின் சாரம் பின்வருமாறு அமைந்தது: இலங்கைக்கு இந்தியா தனது படையை அனுப்பி தமிழ்ப்போராளிகளின் ஆயுதங் களைக் களைய உதவும். இலங்கையில் அமைதிக்கான சூழ்நிலையை உருவாக் கித் தரும். இதற்கு பிரதிபலனாக இலங் கையில் உள்ள அனைத்து வேற்றுநாட்டு இராணுவக் குழுக்களை இலங்கை அரசு வெளியேற்றவேண்டும்” என்பதே இந்த உடன்பாட்டின் அடிப்படையாகும்.

இந்நிகழ்ச்சியின் மூலம் ஜெயவர்த்தனா இரு உண்மைகளைப் புரிந்து கொண்டார்.

1. இந்திய அரசை நேரடியாகப் பகைத்துக்கொண்டு நிம்மதியாக இருக்கமுடியாது.

2. மேற்கு நாடுகளை நட்புச் சக்திகளாகப் பெற்றால் இந்தியாவின் தயவு இல்லாமல் தமிழ்ப்போராளிகளை முறியடித்துவிட முடியும் என்ற அவரின் திட்டம் வெற்றிபெறவில்லை.

இந்திய அரசு அவரை மிரட்டிய போது மேற்கத்திய நாடுகளில் ஒன்றுகூட அவருக்கு உதவ முன்வரவில்லை. சின்னஞ்சிறிய இலங்கைக்காகத் தங்களின் பொருட்களின் விற்பனைக்கான மிகப் பெரிய சந்தை நாடான இந்தியாவுடன் முரண்பட மேற்கு நாடுகள் தயாராக வில்லை என்பதே உண்மையாகும்.

மேற்கண்ட இரு கசப்பான உண் மைகளை உணர்ந்துகொண்ட சிங்கள அரசு இந்தியாவிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள கிழக்கு நோக்கித் திரும்பிற்று. மேற்கு அதனைக் கைவிட்டபிறகு இந்தியாவின் பகை நாடான சீனாவின் உதவியை நாட அது முடிவு செய்தது. அதிலிருந்து தொடர்ந்து சீனாவின் சார்பு நாடாக இலங்கை படிப் படியாக உருவெடுத்தது. கீழ்க்கண்ட உண்மைகள் அதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன.

1. 1993 ஆம் ஆண்டில் இலங்கை யில் உள்ள கல்லே துறைமுகத்தில் சீனாவின் நோரிங்க்கோ நிறுவனம் மிகப் பெரிய ஆயுதக்கிடங்கு ஒன்றினைத் திறப் பதற்கான உடன்பாடு கையெழுத்திடப் பட்டது. இந்த உடன்பாட்டின்படி சிங்கள அரசு தனக்குத் தேவையான இராணுவத் தளவாடங்கள் அனைத்தையும் இந்த ஆயுதக் கிடங்கிலிருந்து பெற்றுக்கொள்ள லாம். ஆனால் வேறு எந்த நாட்டிடமிருந் தும் ஆயுதங்களை வாங்கக் கூடாது. அப்படி வாங்குவதற்கு நோரிங்க்கோவின் அனுமதி தேவை.

இலங்கையில் சீனாவின் ஆயுதக் கிடங்கு அமைவதென்பது இந்தியாவிற்கு மட்டுமல்ல தென்னாசியப் பகுதிக்கே ஆபத்தானதாகும். இப்பகுதியில் உள்ள நாடுகளுக்கு தேவைப்படும்போது உட னுக்குடன் ஆயுத உதவிகளை சீனா செய்யமுடியும்.

2. தென்னிலங்கையில் உள்ள ஹம்பன்தோட்டா துறைமுகத்தை விரிவுபடுத்துவதற்கும் அங்கு இராட்சத எண்ணெய்க் கலன்களை அமைப்பதற் கும், புத்தளத்திற்கு அருகே நோரோச் சோலையில் 9000 மெகாவாட் திறனுள்ள அனல் மின் நிலையம் ஒன்றினை அமைப்பதற்கும் உதவும்படி இலங்கை அதிபர் சந்திரிகா 2005 ஆம் ஆண்டில் வேண்டிக்கொண்டார். சீனா, பெரு மகிழ்ச்சியுடன் இக்கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டது. ஏனெனில் ஹம்பன் தோட்டா துறைமுகம் சீனாவின் கட்டுப் பாட்டின்கீழ் வரும்போது இந்துமாக்கட

லில் மத்தியக் கிழக்கு நாடுகளிலிருந்து சீனா நோக்கிச் செல்லும் எண்ணெய்க் கப்பல்களின் பாதுகாப்பை உறுதிசெய்திட முடியும். நோரோச்சோலையில் அனல் மின்நிலையம் அமைக்கும் பணியில் ஈடு பட்டால் அதற்கு 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சேதுக்கால் வாயினை தனது கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்துவிட முடியும்.

3. 2006 ஆம் ஆண்டின் இறுதி யில் மன்னார் வளைகுடாவில் பெட் ரோலியம் உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்கான துரப்பணப்பணி அனும தியை எவ்வித டெண்டரும் இல்லாமல் சீனாவிற்கு இலங்கை அளித்தது. இதற்காக ஒதுக்கப்பட்ட இடம் சேதுக்கால் வாயிலிருந்து 20கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலம் சேதுக்கால்வாயில் செல்லும் அனைத்து நாட்டுச் சரக்குக்கப்பல்கள் மற்றும் இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான கப்பல்கள் ஆகியவற்றை சீனா தொடர்ந்து கண்காணிக்கமுடியும்.

08-07-74 இல் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் செய்துகொள்ளப்பட்ட இந்திய - இலங்கை உடன்பாட்டின்படி இந்தத் துரப்பணப்பணியை இந்தியாவும், இலங்கையும் கூட்டாக மேற்கொள்ள வேண்டும். ஆனால் அந்த உடன் பாட்டை மீறும் வகையில் இந்தப்பணி சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

4. வான்புலிகளின் விமானத்தாக்கு தலை இந்தியா அளித்த ராடார்களினால் கண்டறிய இயலவில்லை எனக்கூறி சீனா விடம் ராடார்களை இலங்கை அரசு பெற் றுக்கொண்டது. அதிக சக்திவாய்ந்த இந்த ராடார்கள் மூலம் இந்திய விமானப்படை யின் நடமாட்டங்களையும் உளவறிய சீனாவுக்கு வழிவகுக்கப்பட்டது.

5. கடந்த 2008 ஆம் ஆண்டில் மட்டும் இலங்கைக்கு சீனா 1 பில்லியன் அமெரிக்க டாலர் ( ரூ.5000 கோடி) உதவி அளித்தது. இந்தியாவையும், ஜப்பா னையும் விட பன்மடங்கு அதிக நிதி வழங்கிய நாடாக சீனா திகழ்கிறது. கடந்த காலத்தில் சீனாவிடமிருந்து ஆயுதங்கள் வாங்கிய வகையில் இலங்கை அரசு 1000 கோடி ரூபாய் கடன்பட்டிருந்தது. அந் தக் கடனையும் சீனா தள்ளுபடி செய்தது.

சீனா மட்டுமல்ல சீனாவின் நட்பு நாடுகளான பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளும் இலங்கைக்கு இராணுவ ரீதி யான உதவிகளை அளிக்க முன்வந்தன. இதற்குப் பின்னணியில் சீனா இருந்ததென்பது வெளிப்படையானது.

2006ஆம் ஆண்டு பாகிஸ்தான் அரசு இலங்கைக்கு 300 கோடி பெரு மான ஆயுத உதவிகளை அளித்தது. இதற்குப் பதிலுதவியாக இலங்கை அரசு இந்தியாவுடன் செய்துகொண்டதைப் போல பாகிஸ்தானுடனும் சுதந்திர வணிக உடன்பாடு ஒன்றைச் செய்துகொண்டது.

தென்னிலங்கையில் உள்ள உமா ஆற்றில் 100 மெகாவாட் திறனுக்கான நீர்மின் நிலையம் அமைப்பதற்காகவும் கொழும்புக்கு அருகே உள்ள சபுஸ்கந்தா பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையத்தை விரிவாக்குவதற்கும் உரிய உரிமங்கள் ஈரானுக்கு அளிக்க இலங்கை அரசு முன்வந்தது. பதிலுக்கு பெருந்தொகை யொன்றை ஈரான் உதவி நிதியாக வழங்கியது. சீனா ஆதரவு நாடான ஈரானை நட்பு நாடாக்கிக்கொண்டால் சீனா தன்னுடன் இன்னும் நெருக்கமாக வருமென இலங்கை அரசு கருதியது.


இந்தியாவின் ஏமாளித்தனம்

விடுதலைப்புலிகளைத் தோற்கடிப் பதற்குத் தேவையான இராணுவ உதவி உட்பட அனைத்துதவிகளையும் செய் வதன்மூலம் இராசபக்சே அரசை தன் சார்பான அரசாக மாற்றிவிட முடியும் என பிரதமர் மன்மோகன் சிங் அரசு 2004 ஆம் ஆண்டு இறுதியில் நினைத் தது. இதன் மூலம் இலங்கைச்சந்தையில் இந்தியப்பெரு முதலாளித்துவ நிறுவனங் களுக்கு முன்னுரிமைகளைப் பெற முடியும் என்று அது கனவு கண்டது.

காங்கிரசுத் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மன்மோகன் சிங் ஆகி யோருக்கு இந்த நம்பிக்கையை ஊட்டிய வர்கள் பாதுகாப்புத்துறை ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளியுறவுத் துறைச்செயலாளர் சிவசங்கரமேனன் ஆகியோராகும். இவர்களின் ஆலோ சனைப்படி இலங்கையரசின் நம்பிக்கை யைப் பெறுவதற்காக பாதுகாப்புக் குறித்த இந்திய-இலங்கை உயர்அதிகாரிகள் குழு ஒன்றினை 2007 செப்டம்பர் 3 ஆம் தேதி இரு அரசுகளும் அமைத்தன. இக் குழுவில் இராசபக்சேயின் செயலாளரான லலித் வீரதுங்க, இராணுவத் துறைச் செயலாளர் கோத்தபாய இராசபக்சே, மூத்த செயலாளர் பசில் இராசபக்சே ஆகியோரும் இந்தியாவின் சார்பில் தேசியப்பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே .நாராயணன், வெளியுறவுத் துறைச் செயலாளர் சிவசங்கரமேனன், இராணுவத் துறைச்செயலாளர் விஜய்சிங் ஆகி யோரும் இக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இக்குழு அமைக்கப் பட்ட பிறகு விடுதலைப்புலிகளின் 10 ஆயுதக்கப்பல்களை இந்திய உளவு விமானங்கள் கண்டறிந்து இலங்கைக் கடற்படைக்குக் கூறி அதன்மூலம் இக்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. ராடார்களும் அவற்றை இயக்க இராணுவ நிபுணர்களும், செய்மதிகள் மூலம் புலிகளைக் கண்காணிக்கவும் - கடற்பகுதி யில் கண்காணிக்க ரோந்துக் கப்பல்களும் வழங்கப்பட்டன.

பாகிஸ்தானைத் தவிர பிற நாடு களிலிருந்து தனக்கு எவ்வித அச்சுறுத்த லும் இல்லை என்ற கற்பனைவாதத்தில் இந்தியா திளைத்துக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக இலங்கையில் சீனா வும் அதன் கூட்டாளிகளான பாகிஸ் தான், ஈரான் போன்றவற்றாலும் உருவாகி வந்த அபாயத்தை இந்தியாவால் உணரமுடியவில்லை.

சீனாவுடனும் அதன் கூட்டாளி களுடனும் கூட்டு வைத்துக்கொள்வதன் மூலம் மட்டுமே புலிகளுக்கு எதிரான இராணுவ வெற்றிகளை அடைய முடியும் என இலங்கையை உணரச் செய்வதே சீன அரசின் நோக்கம் என்பதையும் அந்நோக்கத்தில் அது வெற்றி பெற்றுவிட்டது என்பதையும் இந்தியா உணரவே இல்லை.

இதன் விளைவாக நான்காம் ஈழப் போர் தொடங்கிய 2006 ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதியிலிருந்து இலங்கை மண்ணுக்குள் சீனாவின் காலடித்தடங்கள் ஆழமாகப் பதிந்து விட்டன. சீனாவுக்காகவும், சீனாவின் நண்பர்களுக்காகவும் இந்தியாவைப் பகைத்துக்கொள்ள இலங்கை தயாராகி விட்டது. இலங்கையரசின் சீன உறவின் விளைவாக இந்தியாவிற்கு இராணுவ ரீதியாகப் பெரும் அச்சுறுத்தல்கள் உருவாகிவிட்டன. பாகிஸ்தானுடன் சீனா கொண்டுள்ள நெருக்கமான உறவு வட இந்தியாவுக்குப் பெரும் அபாயமாக விளங்குகிறது. அதேப் அளவுக்கு இப் போது உருவாகியிருக்கும் இலங்கை-சீன உறவு எதிர்காலத்தில் தென்னிந்தியா விற்கும் பெரும் சவாலாக விளங்கும் என்பதில் ஐயம் இல்லை.

இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தொழிற்சாலைகள், ஏவுகணைத் தளங்கள் அணு உலைகள்ஆகியவற்றை வட இந்தியாவில் அமைத்தால் பாகிஸ் தான், சீனா ஆகியவற்றின் தாக்குதலுக்கு ஆளாகி அழியும் அபாயம் இருப்பதால் அத்தகைய தொழிற்சாலைகளைத் தென்னிந்தியாவில் அமைப்பது பாது காப்பானதென பிரதமர் நேரு கருதி அவ்விதமே செய்தார். தொடர்ந்து வந்த இந்தியப் பிரதமர்களும் இக்கொள்கை யைப் பின்பற்றினார்கள். ஆனால் அதற்கும் இப்போது இலங்கை-சீனா- பாகிஸ்தான் அச்சின் மூலம் அபாயம் தோன்றிவிட்டது.

இலங்கையில் உள்ள தமிழர் களைப் பாதுகாப்பதைவிட அவர்களைப் பலிகொடுத்தாவது இலங்கையில் இந்தியப் பெருமுதலாளிகளின் நலனைப் பாதுகாப்பது மட்டுமே தனது ஒரே பணி என்று கருதி செயல்பட்டு வந்த இந்திய அரசு வந்திருக்கக்கூடியஅபாயத் தையோ அல்லது இலங்கைக்குள் சீனா அமைத்திருக்கும் தனக்கு எதிரான இராணுவம் மற்றும் உளவுக்கட்டமைப்பு கள் குறித்தோ ஒரு சிறிதும் கவலைப் படவில்லை.

இலங்கையரசுக்கு சீன அரசு இராணுவ ரீதியில் உதவி வருவது எதிர்கால வணிக நலன்களைக் கருதி அல்ல. இந்தியா அமெரிக்காவுடன் கொண்டுள்ள கூட்டணியின் விளைவாக இந்துமாக்கடல் பகுதியிலும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளிலும் தான் தனிமைப் பட்டுவிடக்கூடாது எனக் கருதுவத னாலேயேயாகும். இராணுவம் மற்றும் பொருளாதார ரீதியில் இப்பகுதியில் உள்ள இலங்கை, நேபாளம், வங்காள தேசம், பர்மா,மலேசியா ஆகிய நாடுகளுடன் மிக நெருக்கமான உறவை சீனா வளர்த்து வருகிறது. ஏற்கனவே பாகிஸ்தான், ஈரான் ஆகியவை சீனாவின் கூட்டாளிகளாகிவிட்டன.

20 வருடங்களுக்கு முன்பாக இப்பகுதியில் இந்தியா மட்டுமே ஒரே ஒரு மேலாதிக்க நாடாக விளங்கியது. ஆனால் இப்போது இந்தியாவின் பிராந் திய நலன்களுக்குட்பட்ட பகுதிகளில் சீனா நுழைந்துவிட்டது.

இந்துமாக்கடலில் இயற்கையான முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இலங்கை உள்ளது. நிலவியல் அடிப் படையிலும் அது நடு மையமான இடத் தில் அமைந்துள்ளது., இந்துமாக்கடல் வழியே செல்லும் விமானத்தடங் களுக்கும் கப்பல் தடங்களுக்கும் இலங் கையே நடுமையமாக உள்ளது. எனவே இந்தியாவின் பாதுகாப்பு இலங்கையைப் பொறுத்து அமைந்துள்ளது. ஆனால் இதுகுறித்து இலங்கை கவலைப்பட்ட தில்லை. இந்தியாவின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் மற்ற நாடுகளுடன் உறவாடவும், உடன் பாடுகள் செய்து கொள்வதற்கும் இலங்கை ஒருபோதும் தயங்கியதில்லை.

இலங்கையின் இந்தப்போக்கி னைக் கண்ட இந்தியக்கடற்படையின் முன்னாள் தளபதியான இரவி கவுல் என்பவர் "இந்துமாக்கடலும் இந்தியா வின் முக்கியத்துவம் வாய்ந்த நிலையும்" என்னும் தலைப்பில் எழுதியுள்ள

நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்:

பிரிட்டனின் பாதுகாப்புக்கு அயர் லாந்து எவ்வளவு முக்கியமானதோ, சீனா வின் பாதுகாப்புக்கு தைவான் எவ்வளவு இன்றியமையாததோ அதைப்போல இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை மிக முக்கியமானதாகும். இந்தியாவின் நட்பு நாடாக அல்லது நடுநிலை நாடாக இலங்கை இருக்கும் வரை இந்தியா கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் இந்தியாவுக்கு எதிரான நாடு களின் வசத்தில் இலங்கை சிக்குமானால் அந்த நிலைமையை இந்தியா ஒரு போதும் சகித்துக் கொள்ளமுடியாது. ஏனென்றால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அதனால் அபாயம் நேரிடும்.

அமெரிக்காவுடன் இந்தியா செய்துகொண்ட அணுசக்தி உடன் பாட்டின் விளைவாக விரிவடையப் போகும் இந்தியாவின் பிராந்திய ஆதிக்க வலிமையானது எதிர்காலத்தில் தனக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்ற கலக்கம் சீனாவுக்கு உள்ளது. இந்தியாவில் இராணுவ, பொருளாதார முக்கியத்துவமிக்க பகுதியாக மாறிவரும் தென்னிந்தியாவின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு இலங்கை தனது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வரவேண்டும் என்பது இந்தியாவின் அவசியத் தேவை என்பதை சீனா புரிந்து கொண்டுள்ளது.

இலங்கையில் தமிழர்பகுதிகளை சிங்கள இராணுவம் தனது ஆதிக்கத்தின் கீழ்க்கொண்டு வருவதற்கும், விடுதலைப் புலிகளை ஓரங்கட்டுவதற்கும், தான் அளித்த உதவியினால் எதிர்காலத்தில் இலங்கை தனது கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட ஒரு நாடாக இருக்கும் என இந்தியா கருதியது குறுகிய காலத்திலேயே பகற்கனவாய் போய்விட்டது. தனது நோக்கம் நிறைவேறியவுடன் இந்தியாவைத் தூக்கியெறிய இலங்கை தயங்கவில்லை. இந்தியாவின் தயவு இனி இலங்கைக்குத் தேவையில்லை. இரு அணுஆயுத வல்லரசுகளான சீனாவும், பாகிஸ்தானும் இலங்கைக்கு உறுதுணையாக நிற்கின்றன.

இலங்கை அதிபர் இராசபக்சே யின் தம்பியும், பாதுகாப்பு ஆலோசக ருமான கோத்தபாய இராசபக்சே கட்டுப்பாட்டில் உள்ள இணைய தளத்தில் அவரின் நண்பர் ஜெயசூரியா என்பவர் எழுதியுள்ள கட்டுரையில் இந்தியாவைப் பற்றி மிகவும் கடுமை யான விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்களுக்கு சமவுரிமை வழங்கவேண்டுமென்று எங்களுக்கு ஆணையிட இந்தியாவுக்கு உரிமை யில்லை. இந்தியாவிலுள்ள அனைத்து தலைவர்களும், அரசதிகாரிகளும் இலங்கைக்கு ஆணைகளைப் பிறப் பித்துக் கொண்டிருக்கிறார்கள். அண் மையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவும் தமி ழர்கள் உட்பட அனைத்து சமூகத்தின ருக்கும் அதிகாரம் அளிப்பதன் மூலமே இனப்பிரச்சனைக்கான அடிப்படைக் காரணங்களை சரிசெய்திட முடியும் என்று கூறியிருக்கிறார். அவரிடம் நாங் கள் கேட்பது என்னவென்றால் இந்த அறிவுரையைக் கூற நீங்கள் யார்? உங்களுக்கு என்ன தகுதி உள்ளது? இறையாண்மை மிக்க நாடான இலங்கைக்கு எப்படி ஆட்சி செய்ய வேண்டுமென்பது தெரியும். நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்.

தமிழர்களுக்கு எவ்வித அதி காரங்களையும் வழங்கமாட்டோம். ஏனெனில் அவர்கள் தனிநாடு கேட்டுப் போராடுவதற்கு அதுவே வாய்ப்பாகி விடும். அதுமட்டுமல்லாது இந்தியா வால் எங்கள் மீது திணிக்கப்பட்ட உடன்பாட்டையும் தூக்கியெறிவோம். அதன் மூலம் இந்திய ஆதிக்கத்தின் கடைசி அடையாளங்களையும் துடைத் தெறிவோம்.

எங்கள் நாட்டை இந்தியாவுடன் இணைத்துக்கொள்ளும் நோக்கத்துடன் தான் நீங்கள் விடுதலைப்புலிகளை உரு வாக்கினீர்கள். நீங்கள் உருவாக்கியதை நாங்கள் அழித்துவிட்டோம்.”

கோத்தபாய இராசபக்சேயின் இணையதளத்தில் வெளிவந்துள்ள இந்தக்கட்டுரை அதிபர் இராசபக் சேயின் சம்மதம் இல்லாமல் வெளிவந் திருக்க முடியாது. இலங்கை அரசின் அதிகாரப்பூர்வமான கருத்தையே இந்தக்கட்டுரை எதிரொலிக்கிறது.

இலங்கையில் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று குவிக்க வும், 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக் களை மின்வேலி முகாம்களுக்குள் அடைத்துச் சித்ரவதை செய்யவும், சிங்கள இனவெறி அரசுக்கு எல்லா வகையிலும் துணை நின்ற இந்திய அரசுக்குக் கிடைத்த கைமாறு இதுதான். இத்துடன் நிற்கப்போவதில்லை. இந்தி யாவின் பகை நாடுகளான சீனாவும், பாகிஸ்தானும் இலங்கையில் வலுவாகக் காலூன்றிவிட்ட நிலையில் தென்னிந்தி யாவிற்கு எதிர்காலத்தில் ஏற்படப் போகும் அபாயத்திலிருந்து இந்தியா மீள்வதற்கு வழி உண்டா? என்ற கேள்விக்குரிய விடை இந்தியாவிடம் இல்லை.

விடுதலைப்புலிகளும் ஈழத்தமி ழர்களும் எவ்வளவோ உயிர்த்தியாகம் செய்து தங்கள் தாயக மண்ணை மீட்க மட்டும் போராடவில்லை. மாறாக தங் கள் மண்ணில் அன்னியர்கள் நுழைந்து விடக்கூடாது என்பதற்காகவும் போராடினார்கள். அந்தப்போராட்டம் நடந்த காலகட்டத்தில் அமெரிக்காவோ, சீனாவோ, அல்லது வேறு எந்த அன்னிய அரசோ நுழைய முடியவில்லை. இன்னொரு வகையில் பார்க்கப்போனால் இந்தியாவிற்கு எதிரான அன்னிய நாடுகள் இலங்கையில் நுழைய சிங்கள அரசு அனுமதித்தது. அதை எதிர்த்து புலிகளும், ஈழத்தமிழர்களும் நடத்திய போராட்டம் இந்தியா எதிர்கொள்ளவிருக்கும் அபாயத் தைத் தடுக்கவே என்பதை உணர வேண்டிய இந்திய அரசு உணராதது மட்டு மல்ல புலிகளின் போராட்டத்தை ஒடுக்கு வதற்குத் துணைபோயிற்று என்பது வர லாற்றில் வெட்கக்கேடான உண்மையாகும்.

இலங்கையில் சிங்கள இன வெறிக்கெதிராக நடைபெற்ற போரில் ஈழத் தமிழர்களோ, புலிகளோ தோற்க வில்லை. மாறாக இந்தியாவின் இராசதந்திரம் படுதோல்வியடைந் திருக்கிறது. இதற்குக் காரணமானவர்கள் தொலைநோக்குப் பார்வையோ அல்லது தேசப்பற்றோ அடியோடு இல்லாதவர்கள்.

நன்றி: http://www.thenseide.com/


0 comments:

Post a Comment