Tuesday, June 23, 2009

இந்து மதத்தில் ஆண் - பெண்ணின் வக்கரித்த உறவுகள் – பாகம்-2.


பாரதப் புராண இலக்கியத்தைப் பார்ப்போம். யார் இந்தப் பாண்டவர்கள், துரியோதனர்கள் என்று பார்ப்போம். சந்தனு என்ற மன்னன் பரிமளகத்தியை இரண்டாம்தாரமாக மணந்தபோது, அவளுக்கும் அது இரண்டாவது திருமணமாகும். இது புராணம் எழுதப்பட்ட காலத்தில் மறுமணச் சுதந்திரம் பெண்ணுக்கு இருந்ததைப் பிரதிபலிக்கின்றது. இது இன்று மறுப்புக்குள்ளாவதை நாம் காணமுடிகிறது. இந்தப் பரிமளகத்தி முதலில் மச்சகந்தி என்ற பெயரில் இருந்தவள். இவள் தோணியோட்டியாக இருந்தபோது பராசன் என்ற முனிவன் உடலுறவு கொண்டு வேதவியாசன் என்ற முனிவன் பிறந்தான்;. இதற்குப் பின்னால் சந்தனுவுடன் நடந்த திருணத்தில் இரண்டு குழந்தைகள். மூத்தவனைக் கந்தரூபன் கொன்றுவிட இரண்டாமவனான விசித்திரவீரியன் பட்டத்துக்கு வந்தான். இவன் அம்பிகை, அம்பாலிகை என்ற இரண்டு மனைவிமாரை வைத்திருந்தான்;. இருந்தும் அவன் பிள்ளையில்லாமல் இறந்துபோக, அவள் தாய் தனது மூத்த புருஷனின் மகன் வேதவியாசன் என்ற முனிவனைக் கொண்டு, இருபெண்களையும் புணரச்செய்தாள். இதனால் அம்பிகை குருட்டு திருதராட்டினனைப் பெற்று எடுக்க, அம்பாலிகை பாண்டுவைப் பெற்று எடுத்தாள். வேதங்களை எல்லாம் வகுத்ததால் வேதவியாசன் என்ற பெயரைப்பெற்று பாரதக் கதையை எழுதியதுடன், ஐந்தாம் வேதமாக மாற்றிய இந்த முனிவர், அம்பாலிகையின் தாதியுடன் புணர்ந்து விதுரன் உருவானான்.

பாண்டுவும் இரண்டு பெண்டாட்டிகளாகக் குந்தி, மாதிரி என இருவரைக் கொண்டிருந்தான். குந்தி திருமணத்தின் முன்பே அதுவும் காது கன்னத்தின் வழியாக, கர்ணனைப் பெற்றெடுத்தாள். நம்பித் தொலையுங்கள். அத்துடன் அதை மறைத்து பச்சைக் குழந்தையைக் கைவிட்டாள். காட்டில் வேட்டையாடச் சென்ற பாண்டு இரண்டு மான்கள் புணரும்போது அதன் மீது அம்பு செலுத்தினான். அங்கு புணர்ந்து கொண்டிருந்தது மாறுவேடம் கொண்ட முனியும் மனைவியுமாம். இதனால்தான் இன்றைய நீலப்படங்கள் மிருகத்துடன் புணர்வதை ஜனநாயகப் பண்பாடாக்கிப் படமாக்குகின்றனரோ?!

பாண்டு வீசிய அம்பைக் கண்டு கோபம் கொண்ட முனிவர் சாபம் போட்டாராம். நீ உன் மனைவியைத் தொட்டால் மண்டை வெடித்துவிடும் என்று. இதனால் காட்டில் வாழத் தொடங்கிய பாண்டு, ஒருநாள் மாதிரி மீது மோகம் கொண்டு தொட பாண்டு மண்டை வெடித்து விடுகின்றது. இதனால் கொள்ளி வைக்க பிள்ளையற்ற நிலையில், குந்தி எமதர்மனையும், வாயுபகவானையும், இந்திரனையும், புணர்ந்து முறையே தருமனையும், பீமனையும், அருச்சுனனையும் பெறுகின்றாள். மற்றைய இரண்டாவது பெண்டாட்டி ''மாதிரி, அசுவினி தேவதைகள் மூலம் கருவுற்று நகுலன், சகாதேவர்களை ஈன்றதாக மகாபாரத்தில் காணமுடியும.;" யார் இந்த அசுவினிகள்?

அசுவினிகள் என்ற கடவுளின்; பிறப்பை விஷ்ணுபுராணத்தில் இருந்து பார்ப்போம். ''சூரியனுக்குச் சப்ஜ்ஞாவில் முதலில் மனு, யமன், யமி என மூன்று குழந்தைகள் பிறந்தனர். அதற்குப் பிறகு சூரிய ஒளியைத் தாங்க இயலாமல் சப்ஜ்ஞா, அவருக்குப் பணிவிடை செய்ய சாயாவை அமர்த்தி விட்டுக் காட்டுக்குச் சென்று தவம் செய்தாள். பெண் குதிரையின் வேடம் பூண்டே அவள் தவம் செய்தாள். சூரியன் அசுவ (குதிரை) வடிவம் பூண்டு அங்கே சென்றார். அங்கே வைத்து அந்தக் குதிரைகள் இணைந்தன அப்படிப் பிறந்த புதல்வர்களே அசுவினி குமாரர்கள்."

இந்த ஐவரில் அருச்சுனன் பந்தயம் ஒன்றில் திரௌபதி என்ற பெண்ணை வென்று எடுத்ததைத் தொடர்ந்து, அவளை ஐவரும் தமது பாலியல் தேவைக்குப் பயன்படுத்தினர். இவர்களிடையே இருந்த போட்டியைத் தணிக்க வேதவியாசன் ஆண்டுக்கு ஒருவர் அவளை வைத்திருக்க ஆலோசனை கூறினான். ஐவரின் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்யும் பொதுமகளிர் என்பதால், அவளைத் துணிந்து பந்தயத்தில் பணயம் வைத்தனர். முன்பு பந்தயத்தில் வென்ற அப்பெண்ணை வேறு இடத்தில் வைத்தபோது தோற்கின்றனர். அவளை வென்றவர்கள் பொதுவிபச்சாரத்தில் உரிந்து பார்க்க, இப்படி கூறிய வரலாற்றைத் தாண்;டி எந்த இடத்திலும் அப்படி உரிந்த ஆதாரத்தைக் கொண்டிருக்கவில்லை, பாண்டவர்கள் யுத்தம் மற்றும் மரபைத் தாண்டி, அநியாயமாகக் கிருஷ்ணனின் சதி உபதேசம் மூலம் நடத்திய யுத்தத்தில் பார்ப்பனிய ஆதிக்கத்தை நிலைநிறுத்த, உரிந்த வரலாறு புதிதாகக் கீதையில் இணைக்கப்பட்டதே.

இங்கு கீதையே புனைவானதுதான். ஆனால் திரௌபதி உரிந்த கதை இடைச் செருகலாக முன்னைய புனைவில் இணைக்கப்பட்டது. பலர் முன்னிலையில் உரிந்தபோது, முன்பு பொது விபச்சாரத்தில், பந்தயத்தில் வென்ற உரிமையுடன்; அனுபவித்தவர்கள், ஒரு பெண்ணுக்கு நடக்கும் அநியாயமாக எந்த நிலையிலும் எதிர்த்து போராட முனையவில்லை. பெண் - ஆணின் தனிப்பட்ட பந்தயச் சொத்து என்ற ஆணாதிக்க அடிப்படையில், உரிவதைப் பார்த்து நின்றனர். இங்கு யாரும் நீதியைக் கோரவில்லை.

இந்தத் திரௌபதி பாண்டவருடன் வாழ்ந்த காலத்தில் கர்ணனுடன் உறவு கொள்ளத் துடித்ததை, கண்ணன் என்ற அடுத்த ஆணாதிக்கவாதி பாண்டவரிடம் கூறியதாகப் பாண்டவர் வரலாறு கூறுகிறது. பீஷ்மனை நேரடி யுத்தத்தில் வெல்ல முடியாத அருச்சுனன், சிகண்டி என்ற அலிப் பெண்ணை, முன் நிறுத்தி (இங்கு பெண்கள் யுத்தத்தில் பணயம் வைப்பது நிகழ்கின்றது), அதன் மறைவில் நின்று சதி மூலம் கொன்றான். இப்படி நிறைய வரலாற்று மோசடியே நீதி நூலாக இருப்பதும், இந்து விளக்க நூலாக இருப்பதும், இவைகளை நம்புவதும் சமூக முட்டாள்த்தனத்தைக் காட்டுகின்றது. காட்டிக் கொடுப்பும், சதியும், மோசடியும் கொண்ட இந்தப் பாண்டவர் வரலாற்று நீதி, இன்று நாட்டை ஏகாதிபத்தியத்திடம் தாரைவார்க்கும், ஆணாதிக்க இந்து வானரங்களின் செயலை மறைமுகமாக ஊக்குவித்து நிற்கின்றது.

பாரதப் போரின் விளைவுபற்றிய அருச்சுனனின் கண்ணோட்டம் முற்றாக ஆணாதிக்கம் கொண்டதாக வெளிப்படுகின்றது.

''அதர்ம்மாபிபவால் க்ருஷ்ண! ப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரீய

ஸ்தரீஷீதுஸ்டாஸீ வார்ஷ்ணேய! ஜாயதேவர்ணஸங்கர"

- என்ற கூற்றின் அர்த்தம் ''கண்ணா, அதர்மம் சூழ்வதனால் குலப் பெண்கள் கெட்டுப் போகிறார்கள். வருஷ்ணி குலத் தோன்றலே, பெண்கள் கெடுவதனால் வருணக் குழப்பம் உண்டாகிறது"35 என்று கூறும்போது, வருணக் கலப்பையும், பெண்ணின் கற்பையும் குறித்தே கவலைப்படுகின்றான், இதனால் அமைதியை விரும்புகின்றான். இதேபோல் வர்க்க முரண்பாடற்ற, அமைதியான, சுரண்டலை நடத்த விரும்புவோரும், சொத்து சிதைவைத் தடுக்கவும், ஆணாதிக்கச் சிதைவைத் தடுக்கவும் என சமுதாயத்தின் சூறையாடல்கள் மீதே, தனிமனித உரிமைகளைப் பேண முனைகின்றனர்.

பார்ப்பனியம் தனது எதிரிகளை இட்டு பகவத் கீதையில் அவர்களின் பிறப்பை இழிவுபடுத்தியே சாபம் இடுகின்றது.

''தானம் த்விஷத க்ரூரான் ஸம்ஸாரேஷீ நராயமானன்

கஷபாம்ப ஜட்ரமஸீபானா ஸீரீஷ்வேவ யோனிஷீ"

- இதன் அர்த்தம் ''என்னைப் பகைக்கும் கொடியோரை- உலகத்தின் எல்லாரிலும் கடைப்பட்ட இந்தக் கீழ்மக்களை நான் எப்போதும் அசுரயோனிகளில் பிறக்கும்படி எறிகிறேன்"35 என்று இழிந்த சாதிகளை ஆணாதிக்க வக்கிரத்துடன் உருவாக்கிய சாதித்திமிரை இது வெளிப்படுத்துகின்றது. கடவுள்களின் இந்தத் திமிர்ப் பிடித்த சாபங்கள் எல்லாம் நிஜ உலக ஆணாதிக்கப் பார்ப்பனியத் திமிர்கள்தான். இந்தத் திமிரில் பிதற்றுவதைப் பார்ப்போம்;. மறுபிறவியில் கரடி, சிங்கம் முதலியவற்றின் யோனிகளில் பிறக்கப் பண்ணுவேன் என்று கூறத் தயங்கவில்லை. இதை மேலும் பார்ப்போம்.

''ஆஸீரீம் யோனிமாபான்னா மூடா ஜன்மனி ஜன்மனி

மாமப்ராப்யைவ கவுந்தேய! ததோயாந்த்ய யமாம் கதி"

- இதன் அர்த்தம் ''குந்தியின் மகனே, பிறப்புதோறும் அசுரக் கருக்களில் தோன்றும் இம்மூடர், என்னை எய்தாமலே ஒன்றுக்கொன்று மிகவும் கீழான பிறவியை அடைகிறார்கள்"35 என்று அருச்சுனனுக்குக் கூறும்போதே, சாதியத்தைக் கட்டிக்காக்க பிறப்பை அடிப்படையாகக் கொள்ள, ஆணாதிக்கத்தை ஆயுதமாகக் கையாள்வதைக் காணமுடிகின்றது.

கிருஷ்ணனின் கீதை, பெண்கள் மீதான சேட்டைகளை நியாயப்படுத்தும் ஆணாதிக்க நீதி நூலாகும். கீதையில் மனிதனால் இழிவாக்கப்பட்ட பிறப்புகளையொட்டிய சூத்திரங்களில், ''பெண்களும், வைசியர்களும், சூத்திரர்களும் பாவ யோனிகளிலிருந்து பிறந்தவர்கள்"23 என்று ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை சாதியக் கட்டமைப்பையே சமுதாய மயமாக்குகின்றது. ஐந்தாவது வேதமாகக் கருதப்படும் மகாபாரதத்தில் கிருஷ்ணனின் காதலிகளில் முதன்மை பெற்ற இராதா இராபாணனின் மனைவியாவார். இந்த இராபாணன் புராணக் கதைகளின்படி கிருஷ்ணனின் மாமா ஆவார். இதேநேரம் பல காதலிகளை வைத்திருந்தார். இந்த எண்ணிக்கை 16,108 பேர் என்றும் குழந்தைகள் 1,80,000 என்றும் கிருஷ்ணன் கதை கூறுகின்றது. இதில் 16,000 பேரை ஒரே நாளில் மணந்தவன். அதாவது பிரஜோதிஷ மன்னனை யுத்தத்தில் வென்றபோது, அவன் அரண்மனையில் இருந்த பெண்களைத் தனது மனைவியாக்கியவன். பெண்களைச் சிறைமீட்டு விடுவித்து விடவில்லை. அவர்களை மீண்டும் பாலியல் அடிமையாக்கியவனே இந்த ஆணாதிக்க வக்கிரக் கடவுள் கிருஷ்ணன். இந்தப் பாலியல் கூத்துகளை ~இராசலீலை| என இந்துமதம் போற்றுகின்றது. இந்தக் காதல் கூத்துகளை இந்து மதம் கடவுளின் பாலானது என்று கூறி நியாயப்படுத்துகின்றது. தேவி மகாபாகவதம் (ஸ்கந்தம் 10, அத்22 இல்) ''கோபிகளைத் தழுவிக் கொஞ்சுவது, கோபிகளின் கைகள், மார்புகள், தொடைகள் இவற்றினைத் தடவி காமவெறி ஊட்டுவது, உடல் உறவு வைத்து இன்பம் பருகுவது கிருஷ்ணப் பரமாத்மாவின் தெய்வீக லீலா வினோதங்கள்"27 என்று இந்து மதம் நியாயப்படுத்துகின்றது.

இன்று பின்நவீனத்துவ வக்கிரவாதிகளின் மூத்த தந்தையும் வழிகாட்டியும் கிருஷ்ண லீலையாகும். இந்தக் கிருஷ்ணன் சுசிலா என்ற கோபியைக் கண்டு காமம் கொண்டு, தனது மனைவி இராதா அருகில் இருந்தும் அவளுடன் ஆபாசமாக நடந்து உறவு கொண்டார். இதுதான் இந்து மதத்தின் ஆணாதிக்க முகமாகும். உண்மையில் கற்பனைகளை ஒருங்கமைத்த இந்து மதம், ஆணாதிக்க அடிமைகளாகப் பெண் தெய்வங்களை மாற்றி கிருஷ்ணனுக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைத்ததன் மூலம், ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்தெய்வ வழிபாடுகளை உருவாக்க முடிந்தது. விதர்ப நாட்டு மன்னரான பீஷ்மன் தன்மகள் ருக்மணியை (இவள் ~பட்டமகிஷி| என்று அழைக்கப்பட்டாள். இந்த வடமொழிச் சொல்லின் அர்த்தம் எருமை மாடாகும்.) சிசுபாலன் மன்னனுக்குத் திருமணம் முடிக்க இருந்த நேரம், கிருஷ்ணன் அங்கு வந்து அந்தப் பெண்ணைக் கடத்திச் சென்றார். கிருஷ்ணனின் அத்தைமகள் மித்ரபிந்தாவை அவளின் சுயம்வர மண்டபத்தில் வைத்து தூக்கி சென்று புணர்ந்ததுடன் தனது மனைவியாக்கினான். இதுபோல் மத்ரா நாட்டரசன் பிரிகத்சேனனின் மகள் லக்ஷ்மனாவைச் சுயம்வர மண்டபத்தில் இருந்து தூக்கிச் சென்று மணந்தவன். இப்படி பல ஆணாதிக்கப் பாலியல் வன்முறைகளையும், கடத்தல்களையும் செய்தவன் கடவுளாக இருப்பது புதிர்அல்ல. காரணம் இந்து மதமே ஆணாதிக்க மதமல்லவா. இந்தக் கிருஷ்ணனின் ஆலோசனையின் பெயரில் அர்ச்சுனன் சுபத்திரையைப் பலாத்காரமாகக் கடத்திச் சென்றான். குப்ஜா என்ற வாசனை திரவியம் பூசும் பெண்ணையும் தனது அதிகாரம் மூலம் புணர்கின்றான். இந்தக் கிருஷ்ணன் கோபிகைகளுடன் நடனமாடுவது, பெண்கள் குளிக்கும் இடத்தில் துணியைத் திருடி இரசிப்பது என்று பல அற்புதங்களைச் செய்தவர். அதாவது பெண்கள் நதியில் நிர்வாணமாகக் குளிக்கும் வழக்கத்தைச் சாதகமாகக் கொண்டு, பெண்களின் உடுப்புகளைத் திருடி மரத்தின் மேல் வைத்தபடி, ஒவ்வொரு பெண்ணாக நிர்வாணமாக வந்து கையேந்திக் கோர வேண்டும் என்று கடவுள் கிருஷ்ணன் கோரி, அதை நடைமுறைப்படுத்தி பெண்களை வக்கிரமாக இரசித்தவன். இதை இந்து தர்மம் எப்படி நியாயப்படுத்துகின்றது எனப் பார்ப்போம்.

''புனிதர்கள், சாதுக்கள் - துறவு மேற்கொண்ட ரிஷிகள் - ஏன், தெய்வங்கள் கூட அவர்களின் முந்திய பிறவிகளில் கிருஷ்ணனிடம் பிரார்த்தித்து அவனிடமிருந்து, அவர்கட்கு மிக மிக நெருக்கமான இணைவு அவன் தருவதாக உறுதிமொழி பெற்றனர். பாலியல் விளையாட்டைவிட அதிகமான நெருக்கமான உறவைத் தந்துவிட முடியுமா? எனவே, அடுத்த பிறவியில் அவர்கள் அனைவரும் கோபிகளாகப் பிறப்பெடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்."23 இப்படித்தான் கிருஷ்ணனின் பாலியல் வக்கிரங்கள் நியாயப்படுத்தப்படுகின்றன. இன்றைய சினிமாவில் பெண்கள் குளிக்கும் காட்சிகள், மற்றும் அரைகுறை ஆடை அவிழ்ப்புக் காட்சிகளின் தந்தை கிருஷ்ணனாக இருப்பது அதிசயமல்ல.

பெண்களின் உறுப்புகளை வக்கரித்துக் காட்டும் ஆணாதிக்கம், அதை இரசிக்க பெண்ணை மீள நிர்வாணமாக்குகின்றது. கிருஷ்ணனின் மனைவியான ஜாம்பவதி, ஜாம்பவான் என்ற குரங்கின் புதல்வியாகும். இப்படி கடவுளான கிருஷ்ணன் மிருகத்துடனான புணர்ச்சி, பெண்களைக் கவர்ந்து செல்வது, குளிக்கும் இடத்தில் சேட்டை விடுவதுமென ஆணாதிக்க வக்கிரத்தைப் போற்றுவதே இந்து மதம்தான். இந்தப் பாலியல் வக்கிரத்தில் எப்படிக் கிருஷ்ணன் ஈடுபட்டான் எனப் பார்ப்போம். ''... பிறகு கிருஷ்ணன் மேலிருந்து மாறிய முறையில் இராதா கலவி செய்தாள்... இராதையுடன் லீலையில் ஈடுபட்டதனால் பிற கோபியருக்கு அநீதி செய்து விட்டதாக இப்பொழுது கண்ணன் உணர்ந்தான். அந்தக் கோபியரும் இராதையைப் போலவே அவனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர். ஆகையால் பூங்காவில் அவர்களைக் கண்டு திருப்திபடுத்த வேண்டுமென்று சென்றான். அந்தக் கோபியர் 9,00,000 பேர் ஆவர். அத்தனை பேரையும் மொத்தமாகத் திருப்திபடுத்திட அவனும் 9,00,000 ஆடவராக மாறினான்... ஒரே நேரத்தில் 18,00,000 பேர் கலவியில் ஈடுபட்ட காட்சியை அந்த நந்தவனம் காட்டியது. பின்னர் அது (அந்த நூல்), கூட்டுக்கலவியின் களிமயக்கத்தை விவரிக்கின்றது... பின்னர், அனைத்துக் கோபியரின் தலைமைக் குருவானவர் எண்ணற்ற வடிவங்களை எடுத்து அவர்கள் அனைவரையும் திருப்திபடுத்தும் வகையில் அவர்களோடு உடல் உறவு கொண்டார். ஓ, நாரதா!.. அவர்களுடைய கொங்கைகளில் கிருஷ்ணன் நகங்களால் கீறினான். அவர்களுடைய திண்ணென்ற புட்டங்களிலும் பற்குறி - நகக்குறி பதித்தான். அம்மண நிலையில் அவர்கள் அழகாகக் காட்சியளித்தனர்."23 பாலியல் ஆணாதிக்க வக்கிரத்தின் எல்லை மீறிய விவரிப்புதான் இது.

கூட்டுக்கலவி, பெண் விடுதலை (பெண் புணர்ந்தால்) என்ற இன்றைய கோஷத்துக்குக் குரு கிருஷ்ணன்தான். அவன்தான் இதைப் பெண் விடுதலை தத்துவத்தின் விடுதலையாக இன்று காட்டுவதற்கும், இது தனிமனிதச் சுதந்திரத்தின் உரிமை என்று இன்று காட்டுகின்ற கூத்துகளின் கள்ளப்புருஷன் ஆவான். பெண்களின் உடல்களைப் பிராண்டிக் கடித்து நடத்தும் இன்றைய ஆணாதிக்க வக்கிர வன்முறையின் குருநாதரும் இவரே. பெண்களைப் பகவத்கீதை மூலம் இழிவுபடுத்தவும் பின்நிற்கவில்லை. அதைக் கிருஷ்ணன் தன் வாயால் கூறுகின்றான்.

''மாம் ஹி பார்த்த! வ்யாபாஸ்ரித்ய

யே பிஸ்யூ பாபயோயை

ஸ்தரீயோ வைஸ்யஸ்ததாஸீத்ர

ஸ்தேபி யாந்தி பராம்கதி"

இதன் அர்த்தம் ''அர்ச்சுனா! பெண்களோ, வைசியர்களோ, சூத்திரர்களோ, நீச குலத்தில் பிறந்தவர்களோ எவரானாலும் என்னைப் பணிவாராயின் அவர்கள் பரகதியை அடைவர்"

- என்று பெண்களைத் தாழ்ந்த சாதிக்கு, தாழ்த்தப்பட்டு இழிவு படுத்துவதைக் கடவுள் செய்யத் தவறவில்லை. இந்த இழிந்த கடவுள்களை வழிபடுவது சமுதாயத்தின் அறிவற்ற இழிநிலையால்தானே ஒழிய, அறிவியல் பூர்வமாக அல்ல.

''தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்

தெருவில் பெண்களுக்கு ஓயாத தொல்லை"

- என்று கூறி நியாயப்படுத்தும்போது, பெண்கள் மீதான ஆண்களின் ஆணாதிக்கச் சேட்டைகள் வரைமுறையின்றி அங்கீகரிக்கப்படுகின்றது. இன்று வீதியில் பெண்கள் செல்லும்போது, குரங்குகளாகக் குந்தியிருக்கும் ஆணாதிக்கக் குரங்குகளின் சேட்டை எல்லையற்ற துன்பத்தைக் கொண்டவை என்பதைப் பெண்கள் அறிவர். ஆனால் இந்துமதம் இதை அங்கீகரிக்கின்றது.

இந்தக் கிருஷ்ணன் விரகத் தாபத்தைக் கோபிகளுக்கு ஏற்படுத்தி விட்டுத் திடீர் என மறைந்தானாம். அவர்கள் தமது காமத்தைத் தீர்க்க மரங்களைக் கட்டிப் பிடித்தனராம்;. மரங்கள் பெயர்களைக் கூட இந்துமதத்தின் கீதை முன்வைக்கின்றது. அதாவது இன்றைய டிஸ்கோவில் பெண்கள் தடியைச் சுற்றியாடும் வக்கரித்த ஆட்டத்தின் தந்தைமார்கள் இதை எழுதிய பார்ப்பனர்கள்தான். அவர்கள் தமது மன வக்கிரத்தை அடிப்படையாகக் கொண்டு இரசித்து முன்வைத்த கீதையை, இன்று அதே கண்ணோட்டத்தில் படிக்கின்றனர். அடுத்து இதில் ஓரினச் சேர்க்கையை எப்படி கீதை அங்கீகரித்து முன்வைக்கின்றது எனப் பார்ப்போம்;. காமத்தைப் போக்காது கிருஷ்ணன் மறைந்தமையால், மரத்தைக் கட்டிப்பிடித்தும் முடியாமையால், சில கோபிகள் கிருஷ்ணனின் பங்கைத் தாமேயெடுத்து, புணர்ச்சிசெய்து லெஸ்பியனாக மாறிப் புணர்ந்தனர். அந்தப்புரப் பெண்கள் மத்தியில் பெண்களின் ஓரினச் சேர்க்கை உணர்வு எப்படி ஒரு பொதுப் பண்பாக இருந்ததோ, அதையே அழகாகக் கீதை எடுத்துவைத்து நியாயப் படுத்துகின்றது. அரண்மனைகளில் மன்னர்கள் பெண்களை ஆயிரக்கணக்கில் அடைத்து வைத்து, தமது இச்சையைத் தீர்த்தபின் விடப்படும் ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் ஓரினச்சேர்க்கை கொள்வது எதார்த்தமாகின்றது. இது நிரந்தர இராணுவத்தில் ஆணின் ஓரினச் சேர்க்கையாக இருக்கின்றது. இன்றைய ஓரினச்சேர்க்கையின் தந்தையாகக் கீதை போன்ற புராணங்கள் வழிகாட்டுகின்றன. இந்த இந்துமதத்தின் கீதை பெண்களை இழிவுபடுத்தியது.

''க்ருஹஸ்னேஹ வபத்தனம் நரனம் அல்பமேதஸம்

குஸ்திரீ கடாத்தி மம்ஸனி மகாமஸே கவம் இவா"

- இதன் அர்த்தம் ''வீட்டிற்குள்ளேயே தன்னை அடைத்து வைத்துக் கொள்ளுகிற ஒரு கெட்ட மனைவியானவள், ~மகா| மாதத்தில் பசுக்களின் தசையை உண்ணுவதைப்போல, தன் கணவனின் தசையைத் தின்னுகின்றாள்."23 பாலியல் ரீதியாக ஆண்களிடம் தப்பிப் பிழைத்து தன்னைப் பாதுகாத்து வாழும் பெண்ணின் இருப்பைக் கேவலமாக்கிய பார்ப்பனியம், மாட்டு இறைச்சியைத் தின்பதோடு ஒப்பிட்டுக் கேவலப் படுத்துகின்றது. அதாவது அன்று பார்ப்பனர் உள்ளிட்டு மாட்டு இறைச்சியை உண்டுவந்த காலத்தில், இதற்கு எதிராக ஆதிக்கம் பெற்றுவந்த சமூக நடைமுறை உணர்வுடன் ஒப்பிட்டே பெண்ணைக் கேவலப்படுத்துகின்றது கீதை. கணவனின் விரிந்த ஆணாதிக்கச் சமூக உலகத்துக்கும், வீட்டில் அடைந்து வாழும் பெண்ணின் சமூக உணர்வுக்கும் இடையில் ஏற்படும் முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, பெண் கணவனின் தசையைத் தின்பதாகக் காட்டி ஒப்பிட்டு இழிவுபடுத்தியே கீதை ஆணாதிக்கத்தைப் போதிக்கின்றது.

நன்றி: http://www.tamilcircle.net/


5 comments:

Chittoor Murugesan said...

வேல வெட்டி இல்லாம ரொம்பவே மெனக்கெட்டு தொகுத்திருக்கிங்க.. எல்லாத்தயும் மறுக்கற அளவுக்கு நேரமில்லே. எனவே ஒரு உதாரணம் சொல்லி என் மறுப்பை முடிச்சுக்கறேன்.

கதை:
சந்திரன் குரு மனைவியோட தப்பு தண்டா பண்ணிட்டான். புதன் பிறந்துட்டார்.

விளக்கம்:
இதை ஒரு உருவகமா ஏன் எடுத்துக்க கூடாது. ஏதோ ஒரு கால கட்டத்துல சந்திரன் குருவோட துணக்கோளோட மோதியிருக்கலாம். அதனால புதன் என்னும் கிரகம் உருவாகியிருக்கலாமே

Krishnav said...

nice answer ,

THANGAMANI said...

உங்களுக்கு கடவுள் மற்றும் புராண இதிகாசங்களில் நம்பிக்கை இல்லை என்பது தெரிகிறது.

கடவுள் மற்றும் புராண இதிகாசங்களை நம்பாத நீங்கள் இதிகாசங்களில் சொல்லப்பட்டதை மட்டும் நம்புகிறீர்களா?

மு.இரா said...

நன்றி சித்தூர் எஸ்.முருகேசன், எல்லா விஷயங்களையுமே, நமக்கு நல்லதுதான்னூ எடுத்துகிட்டா, நல்லதா தான் தெரியும் நண்பரே...
எ.கா: என்னோட காதலிய இன்னொருத்தன் அழகா இருக்காடா, அப்படி இப்படி பேசினா... நீங்க சொல்லற உருவகபடி நான் இங்க “அவ அழகா இருக்கறதால தானே, அப்படி சொல்லறாங்க, சொல்லட்டும்” -னு எடுத்துக்கனும். இது முடியுமா சொல்லுங்க... இத நீங்க ஏத்துகிறீங்களா?

மு.இரா said...

நன்றி தங்கமணி அவர்களே... நான் என்னை நம்புறேன் முதல்ல, அப்புறம் உங்கள, மத்தவங்கள நம்புறேன்...

இத தவிர நான் வேற எந்த ஜந்துவையும் நம்பல அய்யா...

Post a Comment