Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

Sunday, September 6, 2009

இந்த நாட்டில் காந்தி சிலைகள் இருப்பதே அவமானம்

image

சட்டத்திலே சாதியைக் காப்பாற்ற ஏற்பாடு செய்திருக்கிறார்கள்; அந்தப்படி செய்ததற்கு அடிப்படைக் காரணம் காந்தி. காந்தி பெயரைச் சொல்லித்தான் சாதிக்குப் பாதுகாப்பான ஏற்பாடு செய்ய முடிந்தது. எனவே, இந்த நாட்டில் காந்தி சிலை இருப்பது அவமானம் என்கிறேன். இன்று காங்கிரஸ்காரர்கள் சொல்லுகிறார்களே, "வெலிங்டன் சிலை இருக்கக் கூடாது; விக்டோரியா ராணி சிலை கூடாது; நீலன் சிலை கூடாது' என்று; அதுபோல காந்தி சிலை எங்கள் நாட்டில் இருக்கக் கூடாது என்று சொல்ல எனக்கும் உரிமையுண்டு. ஒரு வெலிங்டனும், நீலனும் செய்யாத அக்கிரமத்தை எங்களுக்கு காந்தி செய்துள்ளார்.

காந்தி மனதார ஏமாற்றி, சாதியைக் காப்பாற்றப் பலமான சட்டம் செய்து கொண்டு, பார்ப்பானுக்குப் பாதுகாப்புக் கொடுத்து, நம்மை என்றும் அடிமையாக இருக்க ஏற்பாடு செய்துவிட்டுப் போய்விட்டார். நம்மவனோ நான் நாயக்கனாயிற்றே, நான் கவுண்டனாயிற்றே என்று நினைத்துக் கொண்டு சூத்திரன் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறானே தவிர, வேறு என்ன? தெரியாமல் தொட்டால், நெருப்பு சுடாமல் விடுமா? தெரியாதது போலவே இருந்து விட்டால், சூத்திரப் பட்டம் இல்லாது போய்விடுமா?

ராசகோபாலாச்சாரியார் மதுரையில் பேசும்போது, "சிலர் தீண்டாமை ஒழிய வேண்டுமென்றதைத் தப்பாகப் புரிந்து கொண்டு, சாதியே ஒழிய வேண்டுமென்கிறார்கள். காந்தி ஒருக்காலும் சாதி ஒழிய வேண்டும் என்று சொல்லவில்லை; சாதி காப்பாற்றப்பட வேண்டுமென்றார்' என்று பேசினார். சாதி ஒழியக் கூடாது என்று சொல்லத் தைரியம் வந்துவிட்டதே, என்ன சங்கதி என்று பார்த்தால் ஒவ்வொன்றாகத் தெரிகிறது. காந்தி வருணாசிரம தர்மத்தை (சாதியை) காப்பாற்ற வேண்டும் என்று சொன்னதை ஆதாரமாக வைத்துக் கொண்டு அதன்படியே சாதியை அசைக்க முடியாதபடி சட்டம் செய்து விட்டார்கள். இது, காந்தி மனதாரச் செய்த துரோகம். இந்தப் பித்தலாட்டம் உங்களுக்குத் தெரியாது.

டாக்டர் அம்பேத்கர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இதில் காந்தி செய்த பித்தலாட்டங்களை நல்லபடி எடுத்துப் போட்டுள்ளார். "தீண்டாமை ஒழிப்புக்குக் காங்கிரசும் காந்தியும் செய்தது என்ன?' என்பது அந்தப் புத்தகம்.

நான் காங்கிரசில் இருந்தபோதே சமுதாயத் துறையில் சமத்துவம் ஏற்படுத்த வேண்டும் என்று நிறையப் பேசியிருக்கிறேன். அப்போது காந்தி, "தீண்டப்படாதவர்களைக் கிணற்றில் தண்ணீர் எடுக்க விடாவிட்டால் வேறு தனிக் கிணறு கட்டிக் கொடு. கோவிலுக்குள் விடாவிட்டால் வேறு தனிக் கோவில் கட்டிக் கொடு' என்றார்; பணமும் அனுப்புகிறேன் என்றார். அப்போது நாங்கள்தான் அந்த ஏற்பாட்டை எதிர்த்தோம். "கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாதென்று இழிவுபடுத்தும் இழிவுக்குப் பரிகாரமில்லாவிட்டால் அவன் தண்ணீரில்லாமலே சாகட்டும்' என்றேன்.

"அவனுக்கு இழிவு நீங்க வேண்டும் என்பது முக்கியமே தவிர, தண்ணீரல்ல' என்றேன். கோயில் பிரவேசம் வேண்டுமென்று கூப்பாடு போட்டோம். என் கூக்குரலுக்குக் கொஞ்சம் மரியாதை உண்டு என்பது ராஜாஜிக்குத் தெரியும். கோயில்களுக்குள் தீண்டப்படாதவர்கள் என்பவர்களை அழைத்துக் கொண்டு நுழைந்தோம். கேரளத்தில் பெரிய ரகளையாகிக் கொலையும் நடந்து விட்டது. ராஜாஜி, காந்தியிடம், "ராமசாமி பேச்சுக்கு மரியாதை உண்டு; ரகளை ஆகும். ஆதலால் கோவிலில் நுழைய விட்டுவிட வேண்டியதுதான்' என்றார். அதற்குப் பிறகும், "சூத்திரன் போகின்ற அளவுக்குப் பஞ்சமன் போகலாம்' என்றார்கள். நான், "சூத்திரனும் பஞ்சமனும் ஒன்றாகி, நாங்கள் இன்னும் கொஞ்சம் மட்டமானோமே தவிர, பார்ப்பான் அப்படியேதானே இருக்கிறான். சாதி ஒழிய வேண்டுமா, வேண்டாமா? என்றேன்.

அப்போதிருந்தே காந்தி, சாதி காப்பாற்றப்பட வேண்டும் என்ற முயற்சியில் பார்ப்பனருக்கு உடந்தையாகவே இருந்து பல மோசடிகள் செய்து, நம்மை ஏமாற்றி விட்டார். காந்திக்கு இருந்த செல்வாக்கு, நம்மைப் பார்ப்பானுக்கு அடிமையாகவும் பார்ப்பான் பார்ப்பனனாகவே இருக்கவும்தான் பயன்பட்டது. இன்னும் சாதி ஒழிப்புக்கு விரோதமாக "காந்தி சொன்னது; காந்தி மகான் காட்டிய வழி' என்று கூறிச் சட்டத்திலும் பாதுகாப்புச் செய்து கொண்டார்கள்.

காந்தி செய்த மோசடி மக்களுக்குத் தெரிய வேண்டும். அதனால்தான், "காந்தியின் படத்தை எரிப்போம்; எங்கள் நாட்டில் காந்தி சிலையிருப்பது கூடாது அகற்ற வேண்டும்' என்று சொல்லுகிறோம். காந்தியின் பெயரைச் சொல்லித்தானே பிழைக்கிறோம்; காந்திக்கு மரியாதை கெட்டுவிடும் போலிருக்கிறதே என்று நினைத்து அரசாங்கத்திற்கு சாதியை ஒழிக்க உணர்ச்சி வரலாம். "ஆகா! காந்தி படத்தை எரித்தால் ரத்தக் களறி ஆகும்!' என்கிறார்கள். ஆகட்டுமே என்ன நஷ்டம்?

(தர்மபுரியில், 19.9.1957 அன்று ஆற்றிய உரை. "விடுதலை' 9.10.1957)

சட்டத்திலே சாதியைக் காப்பாற்ற ஏற்பாடு செய்திருக்கிறார்கள்; அந்தப்படி செய்ததற்கு அடிப்படைக் காரணம் காந்தி. காந்தி பெயரைச் சொல்லித்தான் சாதிக்குப் பாதுகாப்பான ஏற்பாடு செய்ய முடிந்தது. எனவே, இந்த நாட்டில் காந்தி சிலை இருப்பது அவமானம் என்கிறேன். இன்று காங்கிரஸ்காரர்கள் சொல்லுகிறார்களே, "வெலிங்டன் சிலை இருக்கக் கூடாது; விக்டோரியா ராணி சிலை கூடாது; நீலன் சிலை கூடாது' என்று; அதுபோல காந்தி சிலை எங்கள் நாட்டில் இருக்கக் கூடாது என்று சொல்ல எனக்கும் உரிமையுண்டு. ஒரு வெலிங்டனும், நீலனும் செய்யாத அக்கிரமத்தை எங்களுக்கு காந்தி செய்துள்ளார்.

காந்தி மனதார ஏமாற்றி, சாதியைக் காப்பாற்றப் பலமான சட்டம் செய்து கொண்டு, பார்ப்பானுக்குப் பாதுகாப்புக் கொடுத்து, நம்மை என்றும் அடிமையாக இருக்க ஏற்பாடு செய்துவிட்டுப் போய்விட்டார். நம்மவனோ நான் நாயக்கனாயிற்றே, நான் கவுண்டனாயிற்றே என்று நினைத்துக் கொண்டு சூத்திரன் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறானே தவிர, வேறு என்ன? தெரியாமல் தொட்டால், நெருப்பு சுடாமல் விடுமா? தெரியாதது போலவே இருந்து விட்டால், சூத்திரப் பட்டம் இல்லாது போய்விடுமா?

ராசகோபாலாச்சாரியார் மதுரையில் பேசும்போது, "சிலர் தீண்டாமை ஒழிய வேண்டுமென்றதைத் தப்பாகப் புரிந்து கொண்டு, சாதியே ஒழிய வேண்டுமென்கிறார்கள். காந்தி ஒருக்காலும் சாதி ஒழிய வேண்டும் என்று சொல்லவில்லை; சாதி காப்பாற்றப்பட வேண்டுமென்றார்' என்று பேசினார். சாதி ஒழியக் கூடாது என்று சொல்லத் தைரியம் வந்துவிட்டதே, என்ன சங்கதி என்று பார்த்தால் ஒவ்வொன்றாகத் தெரிகிறது. காந்தி வருணாசிரம தர்மத்தை (சாதியை) காப்பாற்ற வேண்டும் என்று சொன்னதை ஆதாரமாக வைத்துக் கொண்டு அதன்படியே சாதியை அசைக்க முடியாதபடி சட்டம் செய்து விட்டார்கள். இது, காந்தி மனதாரச் செய்த துரோகம். இந்தப் பித்தலாட்டம் உங்களுக்குத் தெரியாது.

டாக்டர் அம்பேத்கர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இதில் காந்தி செய்த பித்தலாட்டங்களை நல்லபடி எடுத்துப் போட்டுள்ளார். "தீண்டாமை ஒழிப்புக்குக் காங்கிரசும் காந்தியும் செய்தது என்ன?' என்பது அந்தப் புத்தகம்.

நான் காங்கிரசில் இருந்தபோதே சமுதாயத் துறையில் சமத்துவம் ஏற்படுத்த வேண்டும் என்று நிறையப் பேசியிருக்கிறேன். அப்போது காந்தி, "தீண்டப்படாதவர்களைக் கிணற்றில் தண்ணீர் எடுக்க விடாவிட்டால் வேறு தனிக் கிணறு கட்டிக் கொடு. கோவிலுக்குள் விடாவிட்டால் வேறு தனிக் கோவில் கட்டிக் கொடு' என்றார்; பணமும் அனுப்புகிறேன் என்றார். அப்போது நாங்கள்தான் அந்த ஏற்பாட்டை எதிர்த்தோம். "கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாதென்று இழிவுபடுத்தும் இழிவுக்குப் பரிகாரமில்லாவிட்டால் அவன் தண்ணீரில்லாமலே சாகட்டும்' என்றேன்.

"அவனுக்கு இழிவு நீங்க வேண்டும் என்பது முக்கியமே தவிர, தண்ணீரல்ல' என்றேன். கோயில் பிரவேசம் வேண்டுமென்று கூப்பாடு போட்டோம். என் கூக்குரலுக்குக் கொஞ்சம் மரியாதை உண்டு என்பது ராஜாஜிக்குத் தெரியும். கோயில்களுக்குள் தீண்டப்படாதவர்கள் என்பவர்களை அழைத்துக் கொண்டு நுழைந்தோம். கேரளத்தில் பெரிய ரகளையாகிக் கொலையும் நடந்து விட்டது. ராஜாஜி, காந்தியிடம், "ராமசாமி பேச்சுக்கு மரியாதை உண்டு; ரகளை ஆகும். ஆதலால் கோவிலில் நுழைய விட்டுவிட வேண்டியதுதான்' என்றார். அதற்குப் பிறகும், "சூத்திரன் போகின்ற அளவுக்குப் பஞ்சமன் போகலாம்' என்றார்கள். நான், "சூத்திரனும் பஞ்சமனும் ஒன்றாகி, நாங்கள் இன்னும் கொஞ்சம் மட்டமானோமே தவிர, பார்ப்பான் அப்படியேதானே இருக்கிறான். சாதி ஒழிய வேண்டுமா, வேண்டாமா? என்றேன்.

அப்போதிருந்தே காந்தி, சாதி காப்பாற்றப்பட வேண்டும் என்ற முயற்சியில் பார்ப்பனருக்கு உடந்தையாகவே இருந்து பல மோசடிகள் செய்து, நம்மை ஏமாற்றி விட்டார். காந்திக்கு இருந்த செல்வாக்கு, நம்மைப் பார்ப்பானுக்கு அடிமையாகவும் பார்ப்பான் பார்ப்பனனாகவே இருக்கவும்தான் பயன்பட்டது. இன்னும் சாதி ஒழிப்புக்கு விரோதமாக "காந்தி சொன்னது; காந்தி மகான் காட்டிய வழி' என்று கூறிச் சட்டத்திலும் பாதுகாப்புச் செய்து கொண்டார்கள்.

காந்தி செய்த மோசடி மக்களுக்குத் தெரிய வேண்டும். அதனால்தான், "காந்தியின் படத்தை எரிப்போம்; எங்கள் நாட்டில் காந்தி சிலையிருப்பது கூடாது அகற்ற வேண்டும்' என்று சொல்லுகிறோம். காந்தியின் பெயரைச் சொல்லித்தானே பிழைக்கிறோம்; காந்திக்கு மரியாதை கெட்டுவிடும் போலிருக்கிறதே என்று நினைத்து அரசாங்கத்திற்கு சாதியை ஒழிக்க உணர்ச்சி வரலாம். "ஆகா! காந்தி படத்தை எரித்தால் ரத்தக் களறி ஆகும்!' என்கிறார்கள். ஆகட்டுமே என்ன நஷ்டம்?

(தர்மபுரியில், 19.9.1957 அன்று ஆற்றிய உரை. "விடுதலை' 9.10.1957)


Saturday, July 25, 2009

சொல்லாமல் போகார் எம் தலைவர்.

தலைவர் இருக்கின்றாரா இல்லையா என்ற ஆய்வுகள் என்னைப் பொறுத்தவரை தேவையற்றவை என்றே நான் கருதுகின்றேன். தமிழ் மக்களை ஒன்றிணைத்து ஒரு மாபெரும் சக்தியாக வளர்த்தெடுத்து, தமிழர் தாயக தேசத்தை எவ்வாறு வென்றெடுக்க வேண்டும் என்பதை தமிழினத்திற்கு தலைவர் மிகத் தெளிவாக கூறிவைத்திருக்கின்றார்.

எனவே, தலைவர் இருக்கின்றாரா இல்லையா என்ற விவாதங்களைத் தவிர்த்துவிட்டு தலைவர் காட்டியுள்ள வழியில் சென்று தாயகத்தை வென் றெடுப்பதே இன்றைய நிலையில் தமிழ் மக்களின் காலப்பணியாக இருக்க வேண்டும்.

ஆனாலும், தங்களது சுய நலன் களுக்காக தலைவரை இந்திய, சிறீலங்கா அரசுகளைவிட பலமுறை தங்கள் அறிக்கைகளில் கொன்றுகொண்டிருக்கும் நம்மவர்களுக்காக இங்கே சில கருத்துக்களை நான் முன்வைக்கலாம் என்ற உணர்விலேயே பால்ராஜ் அண்ணையின் இந்தத் தொடரின் ஊடாக, கடந்த காலங்களில் நிகழ்ந்த சில விடயங்களை எமது மக்களோடு இந்தக் கால நேரத்தில் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.

தலைவர் எப்போதும் தன்னை யொரு தலைவராக வைத்துக்கொள்ள விரும்பியதில்லை. ஒரு போராளியாக வாழவே அவர் எப்போதும் விரும்புபவர். ஒரு போராளியாக வாழ்ந்து, ஒரு போராளியாக களமுனையில் எதிரியுடன் மோதி வீரச்சாவைத் தழுவுவதே கெளரவமான சாவு என்று கருதுபவர்.

இதற்கு பல ஆதரங்களை இங்கே முன்வைக்க முடியும். 1987ம் ஆண்டு களில் அனுபவ ரீதியாகக் கண்ட சில விடயங்களை இந்த இடத்தில் ஆதாரமாக வைக்கலாம் என்று நினைக்கின்றேன்.

பேச்சுவார்த்தைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தலைவர் டில்லியில் அசோகா விடுதியில் தங்க வைக்கப்பட்டி ருந்தார். விடுதலைப் புலிகள் ஆயுதங் களை ஒப்படைக்க வேண்டும் என்பதை அங்குவைத்து இந்திய அதிகாரிகள் தலைவரிடம் எச்சரித்தே கூறியிருந்தனர். வெளியுலக தொடர்புகள் துண்டிக்கப் பட்டிருந்த நிலையில் ஆயுதங்களை ஒப்படைப்பது குறித்து தலைவர் போராளிகளுக்கு அறிவிக்கவேண்டும் என அவர்கள் கூறியிருந்தார்கள்.

ஆனால், அவர்களின் கைகளில் மிகவும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இருந்தபோதும் அங்கு காவலுக்கு நின்ற கறுப்பு பூனைகள் படைப்பிரிவின் ஊடாகவே தலைவர் தாயகத்தில் உள்ள போராளிகளுக்கு ஒரு தகவலை அனுப்பியிருந்தார்.

அந்தத் தகவலில் அவர் மிகத் தெளிவாக ஒரு விடயத்தை சொல்லியிருந்தார். அதாவது,

தான் நேரில் வராமல் யாரும் ஆயுதங்களை ஒப்படைக்கக்கூடாது. அவ்வாறு ஒலி நாடாவில் எனது குரலோ, அல்லது ஒளிநாடாவிலோ நான் கதைத்த பதிவுகளை யாராவது கொண்டுவந்து தந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டாம்.

நான் நேரில் வந்து உங்களிடம் சொல்லும் வரைக்கும் யாரும் ஆயுதங் களை ஒப்படைக்கக்கூடாது. அதனையும் மீறி இந்திய இராணுவத்தினர் வந்தால் தாக்குதலைத் தொடங்குங்கள். அவ்வாறு இந்திய இராணுவத்தினருடன் மோது வதற்கு விருப்பம் இல்லாதவர்கள், ஆயுதங்களை வைத்துவிட்டு போகலாம்"

என்பதையும் இந்தியாவின் முற்றுகைக்குள் இருந்துகொண்டும் தலைவர் உறுதியாக அறிவித்திருந்தார்.

பின்னர், தலைவர் நேரில் வந்து அறிவித்ததன் பின்னரே ஆயுத ஒப்படைப்பு நிகழ்ந்தது என்பது வரலாறு.

இப்படிப்பட்ட தலைவர், எந்த மக்களுக்காக போராடுகின்றாரோ அந்த மக்களுக்கு எந்தவொரு கருத்தையும் நேரிலோ, ஒளிப்பதிவாகவோ சொல்லாமல், முகம் தெரியாத ஒருவரை நீங்கள் தலைவராக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அறிவித்துவிட்டு சென்றுள்ளாரா என்பதை இந்தச் சம்பவத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் புரிந்துகொள்ள முடியும்.

நன்றி: ஈழமுரசு.


Saturday, July 11, 2009

மைக்கேல் ஜாக்சன் ஒரு இசை வரலாறு.

mjhead

தனது இனிய இசையால் உலகையே கட்டிப் போட்டவர் மைக்கேல் ஜாக்ஸன். 1958ல் அமெரிக்காவில் பிறந்தார். தனது 9 வயதிலேயே இசைத்துறையில் கால் பதித்த ஜாக்ஸன், வெற்றிகரமான பாப் பாடகராக மேடைகளைக் கலக்க ஆரம்பித்தார். தி ஜாக்ஸன் 5 எனும் பெயரில் தனி இசைக் குழுவைத் தொடங்கிய ஜாக்ஸன், 1970 ல் அந்தசக் குழுவின் சூப்பர் ஸ்டாராகவும், உலக பாப் இசையின் மிகச் சிறந்த பாடகராகவும் பார்க்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 12.

1972 ம் ஆண்டு ‘பென்’ எனும் பெயரில் தனது தனி ஆல்பத்த வெளியிட்டார். 6 வருடங்களுக்குப் பின் தனது முதல் திரைப்படமான ‘தி விஸ்’ஸில் நடித்தார். பின்னர்தான் தனது நண்பர் ஜோனுடன் இணைந்தார். 1979 ல் ஆஃப் தி வால் மற்றும் 1982 ல் த்ரில்லர் ஆகிய ஜாக்ஸனின் இசை ஆல்பங்கள் சரித்திரம் படைத்தன. ஆஃப் தி வால் ஆல்பம்தான் டிஸ்கோ இசையை உலகம் எங்கும் பிரபலப்படுத்தியது. 10 மில்லியன் இசைத்தட்டுகள் விற்பனையாகின. அன்றைக்கு உலகையே வாய்பிளக்கச் செய்த சாதனை இது. த்ரில்லருக்கு மட்டும் 8 கிராமி விருதுகள் கிடைத்தன.

உலக இசையின் சக்ரவர்த்தியாக அறிவிக்கப்பட்டார் மைக்கேல் ஜாக்ஸன். உலகமே இனம் மொழி நாடு என்ற எல்லைகளைக் கடந்து அவரது இசைக்காக உருகியது. த்ரில்லர் ஆல்பம் மட்டுமே 41 மில்லியன் விற்றுத் தீர்ந்தன. இன்றும் பாப் இசையில் அதிகம் விற்பனையாகும் ஆல்பங்களில் ஒன்றாகவே த்ரில்லர் திகழ்கிறது. இது உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றது.

mj5

இசையிலும் கூட நிறவெறி கொண்டிருந்த மேற்குலக நாடுகளில் ஜாக்ஸனின் வருகை ஒரு புதிய விடியலாகத் திகழ்ந்தது. வேறு வழியே இல்லாமல் வெள்ளையர்கள், ஜாக்ஸனைக் கொண்டாடும் அளவுக்கு, இசையை தனது வசப்படுத்திக் கொண்டிருந்தார் ஜாக்ஸன். பணம், வியாபாரம் இரண்டிலும் வெல்பவருக்கே உலகம் சொந்தம்… நிறமும் இனமும் ஒரு பிரச்சினையில்லை என்பதை அவரது முன்னேற்றம் உலகுக்கு எடுத்துச் சொன்னது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு புதிய தன்னம்பிக்கை தருவதாகவும் அது அமைந்தது.

1992 ம் ஆண்டு ஹீல் த வேர்ல்டு எனும் அறக்கட்டளையைத் துவங்கினார் மைக்கேல் ஜாக்ஸன். இந்த அமைப்பு மூலம், உடலால் மனதால் நிறவெறியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிகளை செய்வதாக அறிவித்தார். ஆதரவற்ற பல சிறுவர்களை இந்த அமைப்பின் மூலம் பராமரிப்பதற்காக அமெரிக்காவில் நெவர்லாண்ட் எனும் பெரிய பண்ணை இல்லத்தை வாங்கினார்.

அங்கேயே இந்த சிறுவனர்களுடன் பொழுதைக் கழித்தார். இங்குதான் வந்தது வம்பு. சிறுவர்களை அவர் பாலியல் தொந்தரவு செய்வதாக அவர் மீது புகார்கள் எழுந்தன, வழக்குகள் தொடுக்கப்பட்டன, கோர்ட்டுக்கு வெளியே செட்டில்மெண்டுகள் நடந்தன. இந்த சிக்கல்களில் சிக்கித் தவித்த ஜாக்ஸனால் மீண்டும் ஒரு இசை ஆல்பத்தைத் தர முடியாமல் போனது. ஆனாலும் பாப் உலகின் மன்னனாகவே கடைசி வரை அவர் பார்க்கப்பட்டார்.

mj4

1994 ல் எல்விஸ் பிரஸ்லேயின் மகள் லிசா மேரியைத் திருமணம் செய்து கொண்டு, தன்மீதான ‘சிறுவர் பாலியல் தொந்தரவு’ புகார்களுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க முயன்றார். ஆனால் இந்தத் திருமணமும் இரு ஆண்டுகள்தான் நீடித்தது. லிசா மேரியை விவாகரத்து செய்த கையோடு 1996 ல் டெபி ரோவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரு குழந்தைகளும் பிறந்தனர்.

1999 ம் வரைதான் இந்தத் திருமண உறவும் நீடித்தது. பின்னர் வேறொரு பெண் மூலம் மூன்றாவது குழந்தையும் பிறந்தது அவருக்கு. மூவருமே ஆண் குழந்தைகள். ஜாக்ஸன் மகன்களின் பெயர் மைக்கேல் பிரின்ஸ், மைக்கேல் பிரின்ஸ் 1 மற்றும் மைக்கேல் பிரின்ஸ் 2. 2005 ம் ஆண்டு அனைத்து பாலியல் புகார் வழக்குகளிலிருந்தும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார் மைக்கேல் ஜாக்ஸன்.

மீண்டும் ஒரு சாதனையைப் படைக்க ஆர்வமாக இருந்த அவர், வரும் ஜூலை 13 ம் தேதி முதல் லண்டன் மற்றும் பிரிட்டனின் குறிப்பிட்ட நகரங்களில் 50 இசை நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டிருந்தார். இதற்காக லாஸ் ஏஞ்சல்ஸில் தீவிரமான ஒத்திகையும் நடந்து வந்தது. இந்த நிகழ்ச்சிகள் மூலம் தனது இமேஜை திரும்பப் பெற முடியும், புதிய இசை ஆல்பத்தை உருவாக்க முடியும் என்று பலமான நம்பிக்கை கொண்டிருந்தார்.

மைக்கேல் ஜாக்சன் அடுத்த மாதம் 13ந் தேதி தொடர் இசை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டிருந்தார். லண்டன் நகரில் 50க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்த இருந்த மைக்கேல் ஜாக்சன் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தன்னுடைய இல்லத்தில் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். பயிற்சிக்கு நடுவே மைக்கேல் ஜாக்சன் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டார். அவருடைய சுவாசம் பாதிக்கப்பட்டதால் குடும்பத்தினர் உடனடியாக மருத்துவர்களுக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த மருத்துவர்கள் 1 மணி நேரத்திற்கும் மேலாக அவருடைய உயிரை காப்பதற்காக போராடினர். பின்னர் யு.சி.எல்.ஏ. மருத்துவ மையத்திற்கு மைக்கேல் ஜாக்சன் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவரது உயிரை மீட்க மருத்துவர்கள் போராடினர். பின்னர் மைக்கேல் ஜாக்சன் உயிர் பிரிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. மாரடைப்பு காரணமாக அவர் இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அமெரிக்க நேரப்படி மாலை 2.26 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. (இந்திய நேரப்படி 26.06.09 அதிகாலை 2.56 மணி)

மைக்கேல் ஜாக்சன் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகே அவர் மரணத்திற்கான உண்மையான காரணம் அறிவிக்கப்படும் என தெரிகிறது. மைக்கேல் ஜாக்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அந்த இடத்தில் திரண்டனர்.

பதட்டத்தோடு காத்திருந்த அவர்கள், ஜாக்சன் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டதும் கேவி அழுதனர். ஜாக்சன் மரணமடைந்த செய்தி பரவியதும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரது இல்லத்தின் முன் கூடினர். ரசிகர்கள் தாங்க முடியாத சோகத்தில் ஆழ்ந்திருந்தனர். பலர் கண்ணீர் விட்டபடி இருந்தனர். மைக்கேல் ஜாக்சன் மரணத்தை அடுத்து எம்டிவி தன்னுடைய நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்து விட்டு மைக்கேல் ஜாக்சனின் புகழ் பெற்ற பாடல்களை ஒளிபரப்பியது.

வானொலி நிலையங்களும் மைக்கேல் ஜாக்சனின் சாகாவரம் பெற்ற பாடல்களை ஒளிபரப்பி வருகிறது. மைக்கேல் ஜாக்சனின் மரணம் இசையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவருடைய முதல் ஆல்பத்தை தயாரித்த நிறுவனத்தை சேர்ந்த குவின்சி ஜோன்ஸ், இத்தனை இளம் வயதில் மைக்கேல் ஜாக்சன் உலகை விட்டு பிரிந்தது வேதனையை தருவதாகவும், அதனை விளக்க வார்த்தைகளே இல்லையென்றும் கூறியுள்ளார்.

மைக்கேல் ஜாக்சன் இசையுலகில் செலுத்திய தாக்கமும், பாதிப்பும் என்றென்றும் உணரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மைக்கேல் ஜாக்சனுக்கு 3 பிள்ளைகள் இருக்கின்றனர். மேலும் ஜாக்சனுக்கு ஜெர்மினி, டிட்டோ, ராண்டி ஆகிய மூன்று சகோதரர்களும், ஜேனே மற்றும் லாடோயோ ஆகிய இரண்டு சகோதரிகளும் உள்ளனர்.

பாப் இசையுலகம் கொண்டாடிய மைக்கேல் ஜாக்சனின் எதிர்பாராத மரணத்தை அடுத்து அமெரிக்கா மட்டும் அல்ல உலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது

நன்றி நக்கீரன்.


Thursday, July 2, 2009

நம் சொந்தங்களின் வாழ்வுரிமைக்காக நாம் என்ன செய்யப்போகிறோம்?

"ஒவ்வொரு பேரழிவுமே வளர்ச்சிக்கானதொரு வாய்ப்பை அளிக்கிறது" - மகிந்த ராஜபக்சேயிடம், ஜூன் 9 ஆம் தேதியன்று 'இந்திய வேளாண் விஞ்ஞானி' எம்.எஸ்.சுவாமிநாதனால் உதிர்க்கப்பட்ட வார்த்தைகள்தாம் இவை.
பசுமைப்புரட்சி என்ற பெயரில் இந்திய வேளாண் விளைநிலங்களை எதற்கும் உதவாத தரிசுநிலங்களாக மாற்றி, உலகுக்கு உணவளித்த இந்திய விவசாயிகளை இலட்சக்கணக்கில் தற்கொலைக்குத் தள்ளிய சூத்திரதாரியான எம்.எஸ்.சுவாமிநாதனின் வாயிலிருந்து இந்த வார்த்தைகள் வெளிவந்திருப்பதில் வியப்பொன்றுமில்லை.
சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தோமானால் ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு முன்னதாகவே மேற்கண்ட வார்த்தைகள் உதிர்க்கப்பட்டிருக்கின்றன. அந்த அறிவார்த்தமான வாக்கியத்தை முதன்முதலில் கூறியவர் டாக்டர்.ஜோசப் மெங்கெல் (Joseph Mengele) என்ற ஜெர்மானியர்.
பல்வேறு நபர்களின் தாடை எலும்புகளின் வடிவத்தைப் பரிசோதிப்பதன் மூலம் அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கண்டறியும் ஆராய்ச்சியை கலாநிதிப் படிப்பிற்காக 1930-களின் இறுதியில் மேற்கொண்டவர் இவர். மானுடவியலிலும், மருத்துவத்திலும் பட்டம் பெற்ற ஜோசப் மெங்கெல், ஹிட்லரின் நாஜி இராணுவத்தின் மருத்துவராக 1940 இல் சேர்ந்தார்.

 

 

 

 

 

 

 

 

 

1943 ஆம் ஆண்டு மே 24 ஆம் தேதியன்று ஆஸ்விட்ச் - பிர்கானாவ் சித்திரவதைக் கொட்டடியில் இருந்த "நாடோடிகளுக்கான முகாமில்" (Gypsy Camp) மருத்துவராக நியமிக்கப்பட்டார். 1945 ஜனவரி 25 ஆம் திகதிவரை அம்முகாமில் பணியாற்றினார். அந்தக் காலத்தில் அவரால் சிறைக் கைதிகளின் மீது மருத்துவப் பரிசோதனை என்ற பெயரில் நடத்தப்பட்ட வதைகள் கேட்போர் நெஞ்சம் கலங்கும் குரூரத்தன்மை பொருந்தியவை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

உயிருள்ள மனிதர்களின் மீது மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வது அவருக்குப் பிடித்த ஒன்று. இரட்டையர்கள் மீது அவருக்குத் தனிப்பட்ட ஆர்வமிருந்தது. அதுபோல, குள்ள மனிதர்களும் அவரது பரிசோதனைகளுக்கு உவப்பான 'எலிகளாக'வே கணிக்கப்பட்டார்கள். அவரது ஆய்வுக்காக சுமார் 1500 இரட்டை ஜோடிகள் பயன்படுத்தப்பட்டனர்.

 

 

 

 

 

 

 

 

தான் மேற்கொள்ளப்போகும் பரிசோதனைகளில் ஈடுபடுத்தப்படவிருக்கும் பல்வேறு இரட்டைக் குழந்தைகளுக்கு அவர் நல்ல துணிகளையும், உணவையும் கொடுப்பார். இதனைப் பல மாதங்கள் தொடர்வார். "மெங்கெல் மாமா.... மெங்கெல் மாமா....!" என்று குழந்தைகள் அவரை வளைய வளைய வரும் ஒரு நாளில் அவர்களைத் தன் பரிசோதனைக் கூடத்திற்கு அழைத்துச் செல்வார். மயக்கமேற்படுத்தும் சாக்லேட்டைக் கொடுத்து அவர்களை மயக்குவார்.
மயங்கிக் கிடக்கும் குழந்தைகளின் இருதயத்தில் அவர்களை உடனே கொல்லும் விஷத்தை ஊசியின் மூலம் செலுத்துவார். குழந்தைகள் அனைவரும் இறந்த பின்னர் அவர்களின் உடல்களை உடற்கூறு பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களின் அவயங்களுக்கு இடையில் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப் பொறுமையாகப் படித்தறிவார்.
இரட்டையர்களை ஒன்றாக வைத்துத் தைத்து, அவர்களால் உயிர்வாழ முடிகிறதா என்ற 'மகத்தான' ஆய்வையும் அவர் மேற்கொண்டார். குழந்தைகளின் கண்களின் நிறத்தை மாற்றுவது எப்படி என்ற கேள்வி அவருக்கு எழுந்தது. இதற்காக, பல்வேறு ரசாயனப் பொருட்களை ஊசிமூலம் அவர்களின் கண்களுக்குள் அவர் செலுத்திப் பார்த்தார்.
அதன் விளைவுகளை அவர் ஊன்றிப் படித்தார். இப்படிப்பட்ட ஆய்வினை மேற்கொள்வதற்கான வாய்ப்புள்ள ஒரு இடமாக ஆஸ்விச் சித்திரவதைக் கொட்டடி உள்ளது என்பதை அறிந்தவுடன் பிறந்த உற்சாகத்தில் அவரது உதடுகளிலிருந்து உதிர்ந்த வார்த்தைகளே " "ஒவ்வொரு பேரழிவுமே வளர்ச்சிக்கானதொரு வாய்ப்பை அளிக்கிறது" என்பது.
யூத இனத்திற்கு மெங்கெல் செய்த கைங்கரியத்திற்குச் சற்றும் குறையாத அன்றேல் அதற்கிணையான ஒன்றை ஈழத் தமிழினத்திற்கு எம்.எஸ்.சுவாமிநாதன் ஜூலையில் இருந்து செய்யவுள்ளார்.
எம்.எஸ்.சுவாமிநாதனின் ஆய்வுகளுக்கு சோதனைச்சாலை எலிகளாகப் பலியாகவிருக்கும் வன்னிப் பெருநில மக்களின் நிலைதான் என்ன?
வட ஈழ மக்களும், அவர்தம் அவலமும்:
இலங்கை இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட நான்காம் ஈழப்போரினால் வன்னிப் பெருநில மக்கள் அனுபவித்த - அனுபவிக்கும் துன்பங்களைச் சொல்ல முயலும்போது மொழியும் நம்மைக் கைவிட்டுவிடுகிறது.
2007 இறுதியில் வட ஈழத்தின் மீது இலங்கை அரசு போர் தொடுத்தது. 2008 ஏப்ரலில் அது மன்னார் பகுதியை அடைந்தது. அப்போது வன்னிப் பெரு நிலத்தில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை சுமார் 4 இலட்சத்து 3 ஆயிரம் ஆகும். இவர்களில் சுமார் 38% பேர் வேளாண் தொழிலையும், 18% பேர் உற்பத்தித் துறையையும், 45% பேர் சேவைத் துறையையும் தமது வாழ்வாதாரமாகக் கொண்டிருந்தனர்.
2005 ஆம் ஆண்டின்போது வன்னிப் பெருநிலத்தின் ஒட்டுமொத்தப் பொருள் உற்பத்தி மதிப்பில் (Gross Domestic Product - GDP) வேளாண் துறையில் ஈடுபட்டிருந்த 38% மக்கள் 24.5% பொருள் உற்பத்தி மதிப்பிற்குக் காரணமாயிருந்தனர். உற்பத்தித் துறையில் ஈடுபட்டிருந்த 18% மக்கள் 7% மதிப்பிற்கும், சேவைத் துறையில் ஈடுபட்டிருந்த 45% மக்கள் 68% மதிப்பிற்கும் காரணமாக இருந்தனர்.
போர் தொடங்கும் முன்பு - அதாவது 2004 ஆம் ஆண்டில் - வன்னிப்பெருநிலத்தின் 38% குடும்பங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த நெல் உற்பத்தியில் 13 % நெல்லை விளைவித்தன. இலங்கையின் 20% வெங்காயம் அவர்களால் விளைவிக்கப்பட்டது. 7% மிளகாய் உற்பத்தி அவர்களிடம் இருந்தே வந்தது. சுமார் 1000 டன் புகையிலையையும் அவர்களே அந்த ஆண்டில் உற்பத்தி செய்திருந்தனர்.
இலங்கையில் இருந்த ஒட்டுமொத்த செம்மறி ஆடுகளில் சுமார் 20% வன்னிப் பெருநிலத்திலேயே இருந்தன. 60% வெள்ளாடுகள் அங்குதான் இருந்தன. சுமார் 2 கோடி லிட்டர் பால் (இலங்கையின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 10%) இங்கு உற்பத்தியானது. 6 கோடி முட்டைகள் உற்பத்தியாயின.
போர் முடிந்த இன்றைய தேதியில், 2008 ஏப்ரலில் வன்னிப் பெருநிலத்தில் வாழ்ந்திருந்த 4 லட்சத்து 3 ஆயிரம் மக்களில் வெறும் 2,62,632 பேருக்கு மட்டுமே கணக்கு உள்ளது. 35% பேருக்கு என்ன ஆயிற்று என்பதற்கு கணக்கு இல்லை.
கடந்த 13 மாதங்களில் 1,40,368 பேர் காணாமல் போனதற்கான காரணம் என்ன என்பதற்குத் தெளிவான விடையில்லை. மே 27 ஆம் தேதியன்று அளிக்கப்பட்ட ஐ.நா.சபையின் மனித உரிமை நிறுவனத்தின் கணக்கின்படி அனைத்து அகதிகள் முகாம்களிலும் இருந்த வன்னிப் பெருநில மக்களின் எண்ணிக்கை 2,90,130 ஆகும். ஆனால், அந்த நிறுவனத்தால் மே 30 ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் அது 2,77,000 ஆகக் குறைந்து போயிருந்தது. ஜூன் 15 ஆம் தேதியன்று இலங்கை அரசால் வெளியிடப்பட்ட அறிக்கையில் அது 2,62,632 என மேலும் குறைந்து போயிருந்தது.
மே 27-க்கும் ஜூன் 15-க்கும் இடைப்பட்ட 19 நாட்களில் மட்டுமே முகாம்களில் இருந்த 27,498 பேர் காணாமல் போயுள்ளனர். இத்தனை குறுகிய காலத்தில் இவ்வளவு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இல்லாமலடிக்கப்படுவதென்பதன் பின்னணியிலுள்ள பயங்கரம் உறையவைப்பதாக இருக்கிறது. இன்று முகாம்களில் உள்ளவர்களில் 11,873 பேர் படுகாயமடைந்த நிலையில் உள்ளனர். 3,968 பேர் ஊனமுற்றோர்.
இவர்களுள் 57, 293 பேர் குழந்தைகள். அவர்களில் 7,894 பேர் தம் தந்தையரை இழந்தவர்கள். சுமார் 3,100 பெண்கள் கர்ப்பிணிகள். சுமார் 700 பேர் 70 வயதைத் தாண்டிய வயோதிகர்கள்.
எனவே, முகாம்களில் உள்ள மக்களில் 76,934 பேரினால் எவ்விதப் பணியிலும் ஈடுபட முடியாது. 1,85,698 பேரினால் மட்டுமே பணியில் ஈடுபட முடியும். இவர்களில் பெண்களின் எண்ணிக்கை 1,34,464 ஆகும். கர்ப்பிணிகளின் எண்ணிக்கையை இதிலிருந்து கழித்து விட்டால் பணியில் ஈடுபடக்கூடிய பெண்களின் எண்ணிக்கை 1,31,364 ஆகும். வேலை செய்யக்கூடிய வலு நிலையில் உள்ள ஆண்களின் எண்ணிக்கை வெறும் 51,234 மட்டுமே.
அவர்களில் பலர் இன்றும் இராணுவத்தால் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, வதைமுகாம்களுக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். முகாம்களில் உள்ளவர்கள் பட்டினியாலும், நோய்களாலும் கடுமையான துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். மே 23 ஆம் திகதியயன்று வவுனியாவின் மெனிக் முகாமில் உள்ள மக்களை ஐ.நா.சபையின் தலைவர் திரு.பான் கீ மூன் சந்தித்தார். "என் வாழ்வில் இதுவரை இப்படிப்பட்டதொரு பேரவலத்தை நான் கண்டதில்லை" என்று கூறி அவர் பெரிதும் வருந்தினார்.
சில நாட்களுக்கு முன்னதாக இதே மக்களை சந்தித்த இலங்கையின் தலைமை நீதிபதி திரு. சரத் நந்தா சில்வா " இந்த மக்களுக்கு நாம் மிகப்பெரும் தீங்கினை இழைத்துக் கொண்டிருக்கிறோம்" என்றார். ஐ.நா.சபைத் தலைவர் மெனிக் முகாமுக்கு சென்ற மே 23 ஆம் திகதியன்றே, வவுனியாவில் உள்ள செட்டிகுளம் முகாமில் 66 பேர் மரணமடைந்தனர்.
அவர்களில் 60 பேர் வயோதிகர்கள். 6 பேர் குழந்தைகள். மே 25 ஆம் திகதியில் இருந்து ஜூன் 9 ஆம் திகதிவரை முகாமில் இருந்து வவுனியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களில் 62 பேர் மரணமடைந்தனர்.. இவர்களில் 51 பேர் வயோதிகர்கள்.. 11 பேர் பச்சிளம் குழந்தைகள்.செட்டிகுளம் முகாமில் மட்டுமே ஜூன் 7 ஆம் திகதியன்று 14 பேரும், ஜூன் 8 ஆம் திகதியன்று 7 பேரும் இறந்து போயினர்.
இவ்வாறு இறந்தவர்களனைவரையும் பொதுச் சவக்குழியில் புதைப்பதை இலங்கை இராணுவம் தன் வழக்கமாகக் கொண்டிருக்கிறது. இந்த அவலம் ஏற்படக் காரணம் என்ன?
மக்களை கிராமங்களில் இருந்து விரட்டியடித்த இராணுவம்:
2007 இறுதியில் வன்னிப் பெருநிலத்தை ஆக்கிரமிப்பதற்கான போரை இலங்கை இராணுவம் தொடங்கியது. போர் தொடங்கிய நாளிலிருந்தே மக்களையும் அவர்களது வளர்ப்புப் பிராணிகளையும் அவர்தம் ஊர்களில் இருந்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவை நோக்கி விரட்டுவதே இலங்கை இராணுவம் மற்றும் விமானப்படையின் போர் உபாயமாக இருந்திருக்கிறது.
2008 ஜூன் மாதத்திற்குள்ளாக மன்னார் மாவட்டத்தின் பெரும்பகுதி மக்களை கிளிநொச்சியை நோக்கி விரட்டி அடிப்பதில் இலங்கை இராணுவம் வெற்றி கண்டது. வட ஈழத்தின் கீழிருந்த வவுனியா மாவட்டத்தின் ஒருபகுதியின் மக்களும் கிளிநொச்சியை நோக்கி விரட்டியடிக்கப் பட்டனர். இராணுவத்தால் விரட்டியடிக்கப்பட்ட மக்களின் உணவு மற்றும் மருத்துவத்திற்கு முற்றுமுழுதான பொறுப்பாளிகளான நிலைக்கு இதன்வழியாக விடுதலைப்புலிகள் தள்ளப்பட்டனர்.
புலிகள் தங்கள் பலத்தின் பெரும்பகுதியைத் தமது மக்களின் பாதுகாப்பிற்கும் அவர்களது உணவுத்தேவைக்கும் இருப்பிடத்திற்கும் செலவழிக்கவேண்டிய நிர்ப்பந்தத்தினுள் அவர்களைத் தள்ளுவதன் மூலமாக நெருக்கடியை அதிகரித்து, புலிகளின் போரிடும் வலுவைக் குறைப்பதே இராணுவத்தின் திட்டமாக இருந்தது. 2009 ஜனவரி 2 ஆம் தேதியன்று கிளிநொச்சி வீழ்ந்தது. வன்னிப் பெருநில மக்கள் அனைவரும் இந்த காலகட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் கிழக்குப் பகுதிக்குள்ளும், முல்லைத்தீவு மாவட்டத்திற்குள்ளும் இலங்கை இராணுவத்தால் வெற்றிகரமாகத் துரத்தி அடைக்கப்பட்டிருந்தனர்.
தென்னிலங்கையில் இருந்து வட ஈழத்திற்கு செல்ல வேண்டிய உணவுப் பொருட்களும், மருந்துகளும் இலங்கை அரசால் தடுத்து நிறுத்தப்பட்டது. உணவுப் பற்றாக்குறை காரணமாக இந்த மக்களுக்கு இலைக் கஞ்சியைத் தவிர வேறு எதையும் கொடுக்க இயலாத நிலைக்கு விடுதலிப்புலிகள் நிர்வாகம் தள்ளப்பட்டது.
அப்பாவி மக்களின் மீதான இராணுவ எறிகணை மழை:
கிளிநொச்சி வீழ்ந்த பிறகு கிளிநொச்சிக்கும் புதுக்குடியிருப்புக்கும் இடையே உள்ள உடையார்கட்டு கிராமத்தில் கிளிநொச்சியின் மருத்துவமனை இயங்க வேண்டி வந்தது. இந்த மருத்துவமனை மீதும், புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீதும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளின் மீதும் 30 கிலோமீட்டர் தூரத்திலிருந்து 20 விநாடிகளில் 40 எறிகணைகளை வீசும் திறனுள்ள பல்குழல் எரிகணை பீரங்கிகளைக் கொண்டும், மிக், கிபிர் மற்றும் எப்-7 விமானங்களைக் கொண்டும் 2009 பிப்ரவரி மாதத்தில் இலங்கை இராணுவம் தாக்குதலைத் தொடங்கியது.
அப்பாவி மக்களின் மீதான இந்தத் தாக்குதலை நிறுத்தச் சொல்லிப் பல்வேறு சர்வதேச நாடுகளும், ஐ.நா.சபையும் கேட்டுக்கொண்ட பின்னரும் இலங்கை அரசு நிறுத்தவில்லை. இதனைத் தடுக்க இந்திய அரசும் எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.
அகதிகள் முகாம் உருவாக்கமும், வெளியான இராணுவ உண்மைகளும்
போரில் தான் வெற்றி அடைவது உறுதி என்பதை இலங்கை இராணுவம் 2009 ஏப்ரல் மாதத்தில் உறுதி செய்துகொண்டது.. இதன் பிறகே விடுதலைப்புலிகளின் பராமரிப்பில் இருந்துவந்த வன்னிப் பெருநில மக்களுக்கு அகதிகள் முகாம் அமைப்பது என்ற பேச்சை இலங்கை அரசு எடுத்தது.
இதன் பிறகே, புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் இருந்து அப்பாவி மக்களை வெளியேற அது அனுமதி அளித்தது. இலங்கை இராணுவத்தின் இந்த ந்டவடிக்கையில் இருந்து, அது போரின் போது அப்பாவி மக்களை எவ்வாறு கையாளுவது என்பதற்காக வகுத்திருந்த திட்டம் வெட்ட வெளிச்சமானது:
1.. அப்பாவி மக்களை விடுதலைப் புலிகளின் பிரதேசத்திற்குள் விரட்டியடிப்பது
2.. விரட்டியடிக்கப்பட்ட மக்களைப் புலிகளைக் கொல்லும் சாக்கில் குண்டுவீசி அழிப்பது; தான் வீசிய குண்டுகளால் இறந்துபோன மக்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயமாகப் பயன்படுத்திக் கொன்று விட்டார்கள் என்று பரப்புரை செய்வது.
3.. குண்டுவீச்சில் இருந்து தப்பிய மக்களைப் போரின் இறுதி நாட்களில் புலிகளின் 'பயங்கரவாதத்திலிருந்து' மீட்கிறோம் என்ற சாக்கில், முதல் முறையாக வன்னிப் பிரதேசத்திலிருந்து வெளியேற அனுமதிப்பது
4.. வெளியேறிய மக்களை முகாம்களில் அடைத்து வைப்பது.
5.. அவர்களில் பணியாற்றும் வலுவுள்ள ஆண்கள் அனைவரையும் புலிகளெனக் குற்றஞ்சாட்டி வதை முகாம்களில் அடைப்பது.
6.. இவ்வாறாக, போரினுள் சிக்கிய தமிழினத்தை ஆண்களற்றதொரு சமூகமாக மாற்றுவது
7.. பெண்களையும், குழந்தைகளையும், வயோதிகர்களையும் அவரவர் ஊர்களில் மீளக் குடியமர்த்தி, உலகத்திடம் நற்பெயர் பெறுவது.
ஏப்ரல் 24 ஆம் தேதியன்று, அகதிகள் முகாம்களுக்குத் தலைவராக, 2006-2008 ஆம் ஆண்டுவரை யாழ்ப்பாணத்தில் இலங்கை இராணுவ சேனையின் தலைவராக இருந்த- யாழ் குடா மக்களைத் துன்புறுத்துவதில் பெயர்போன மேஜர்.ஜெனரல்.சந்திரஸ்ரீ நியமிக்கப்பட்டார்.
முடிந்தவரையில் தமிழர்களை வன்னிப்பெருநிலப்பரப்பினுள் வைத்தே அழித்துவிடுவதன் மூலம் அகதிகளாக வெளியேறுபவர்களைக் குறைத்துவிடலாமென்று இலங்கை அரசும் இராணுவமும் திட்டமிட்டன. அத்திட்டத்திற்கிணங்க, ஏப்ரல் 24 ஆம் திகதியில் இருந்து, அப்பாவி மக்களின் மீதான தாக்குதலை இலங்கை இராணுவம் பன்மடங்காக்கி அழித்தொழிப்பைத் துரிதப்படுத்தியது.
இந்த வெறித்தனமான தாக்குதலில் மக்கள் வகைதொகையின்றிக் கொன்றொழிக்கப்படுவதைக் கண்ட விடுதலைப் புலிகள் இயக்கமானது, ஏப்ரல் 26 இல் போர் நிறுத்தத்தை தானே முன்வந்து அறிவித்தது. இலங்கை அரசு அதையும் நிராகரித்தது.
போரை நிறுத்துவதற்கு எதுவும் செய்யாமல் அதை மறைமுகமாக நடத்திய இந்திய அரசு, இலங்கை அரசின் அகதிகள் மறுவாழ்வுத் திட்டத்திற்கு ஏப்ரல் 27 ஆம் தேதியன்று 100 கோடி ரூபாய் உதவியை அளிப்பதாக அறிவித்தது. ஆனால் அதன் பின்னரே - அதாவது ஏப்ரல் 27 ஆம் தேதியில் இருந்து மே 6 ஆம் தேதிவரை உள்ள கால கட்டத்தில்தான் - வரலாறு காணாத எறிகணைத் தாக்குதல் வன்னிப் பெருநில மக்களின் மீது மேற்கொள்ளப்பட்டது.
பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.. பல்லாயிரக்கணக்கானோர் ஊனமாக்கப்பட்டனர். ஊனமாக்கப்பட்ட, படுகாயப்படுத்தப்பட்ட எண்ணற்ற அப்பாவி மக்களுக்கு மருத்துவம் செய்யத்துணிந்த மருத்துவமனைகளும் இலங்கை இராணுவத்தால் தாக்கி அழிக்கப்பட்டன.
முதன்முறையாக, போர்ப்பகுதியில் இருந்து மக்கள் அகதிகளாக வெளியேற இலங்கை இராணுவத்தால் இதன் பின்னரே அனுமதிக்கப்பட்டனர். வவுனியா, புல்மோட்டை, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய இடங்களை நோக்கி இதுவரை புலிகளின் பிரதேசத்தை நோக்கி இராணுவத்தால் விரட்டப்பட்டிருந்த அப்பாவி மக்கள் செல்லத் தொடங்கினர்.
வவுனியாவில் இயங்கும் பன்னாட்டு மருத்துவ இயக்கமான " எல்லைகளுக்கு அப்பாலான மருத்துவர்" இயக்கத்தின் இந்த கலகட்டத்திற்கான மருத்த்துவ அறிக்கைகளை படித்தால் இந்த மக்கள் எப்பேர்ப்பட்ட துன்பத்திற்கு இலங்கை இராணுவத்தின் தாக்குதல்களால் உள்ளாக்கப்பட்டிருந்தார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
'வடக்கின் வசந்தம்' என்ற வஞ்சகத் திட்டம்:
மே 7ஆம் திகதியன்று இலங்கை அரசு வன்னிப் பெருநிலத்தினை மீட்டுருவாக்கம் செய்வதற்கான செயற்குழு ஒன்றை அமைத்தது. 19 பேரை உறுப்பினர்களாகக் கொண்ட அந்தக் குழுவிற்கு இலங்கை அதிபரின் ஆலோசகரும், சகோதரரும், இனவாதக் கருத்துக்களை அள்ளிவீசுவதில் முன்னணியில் நிற்பவருமாகிய பசில் ராஜபக்சே தலைவராக நியமிக்கப்படடார்..
மீதமுள்ள 18 பேர்களில் அதிபரின் மற்றொரு சகோதரரும், 'மருத்துவமனைகளின் மீது குண்டுவீசுவது சரியான செயலே' என்று திருவாய் மலர்ந்தருளியவரும், இலங்கை இராணுவத்தின் செயலாளருமாகிய கோத்தபாயா ராஜபக்சேவும் ஒருவராவார்.
உறுப்பினர்களில் 7 பேர் இராணுவம் மற்றும் காவற்துறையைச் சேர்ந்தவார்களாகவும் ( இதில் இலங்கை இராணுவத்தின் தளபதியான சரத் பொன்சேகாவும் அடக்கம் ), 10 பேர் இலங்கை அரசின் நிர்வாகத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளாகவும் இருந்தனர். இவர்களில் 18 பேர் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் இஸ்லாமியர் ஆவார்
1. Senior Presidential Advisor Basil Rajapaksa - Chairman of the Taskforce
2. S.B.Divarathne - the Secretary
3. Secretary to the President, Lalith Weeratunge,
4. Secretary, Defence, Public Security Law and Order, Gotabaya Rajapaksa,
5. Secretary, Ministry of Finance and Planning, Sumith Abeysinghe,
6. Secretary, Ministry of Resettlement and Disaster Relief Services, U L M Haldeen,
7. Secretary, Ministry of Nation Building and Estate Infrastructure Development, W.K..K.Kumarasiri,
8. Secretary, Ministry of Highways and Road Development, S.Amarasekera,
9. Secretary, Ministry of Power and Energy, M M C Ferdinando,
10. Secretary Ministry of Land and Land Development, J R W Dissanayake,
11. Secretary, Ministry of Health Care and Nutrition, Dr. Athula Kahandaliyanage,
12. Chief of Defence Staff, Air Chief Marshal G D Perera,
13. Commander of the Army Lt.Gen.Sarath Fonseka,
14. Commander of the Navy, Vice Admiral Wasantha Karannagoda,
15. Commander of the Air Force, Air Marshall, W D R M J Gunatillake,
16. Inspector General of Police, Jayantha Wickremarathne,
17. Director General\Department of Civil Defence, Rear Admiral S P Weerasekera,
18. Chief of Staff of the Sri Lanka Army\Competent Authority for the Northern Province Maj.Gen..G A Chandrasiri, and
19. Former Director General\National Planning Dept. B.Abeygunewardena .
வன்னிப் பெருநிலத்தை மீட்டுருவாக்கம் செய்வதற்கான தம் திட்டத்திற்கு இவர்கள் இட்ட பெயர் 'வடக்கின் வசந்தம்'. தமிழர்கள் யாருமற்ற இந்தக் குழுவினால் தமிழர்களுக்காக உருவாக்கப்படவிருக்கும் 'வசந்தம்' எத்தகைய மலர்ச்சியை யாருக்குக் கொண்டுவரும் என்பது நாம் சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லை.
இலங்கை தலைமை நீதிபதி சில்வாவின் நேர்மை:
ஜூன் 5 ஆம் திகதியன்று இலங்கையின் தலைமை நீதிபதியான திரு. சரத் நந்தா சில்வா அவர்கள் அகதிகள் முகாமில் உள்ள மக்களின் உரிமைகளைப் பற்றி பேசியது உண்மை நிலையை உணர்த்துவதாக இருந்தது: "நம் நாட்டில் உள்ள சட்டப் பாதுகாப்புகளுக்கு அப்பாற்பட்டே அந்த மக்கள் உள்ளார்கள்.
அவர்கள் மீது இழைக்கப்படும் தீமைகளை எதிர்த்து அவர்களால் இலங்கை நீதிமன்றங்களில் நீதி கேட்க முடியாது. இதன்மூலம் அந்த மக்களுக்கு நாம் மிகப் பெரும் தீங்கை இழைத்துக் கொண்டிருக்கிறோம். இதை நான் வெளிப்படையாகவே கூறுகிறேன். இவ்வாறு கூறுவதற்கான விளைவுகளையும் சந்திக்க நான் தயாராகவே உள்ளேன்" என்று அவர் கூறினார்.
ஏதுமற்ற மக்களும், இந்திய அரசின் வஞ்சகமும் :
இலங்கையின் தலைமை நீதிபதியின் இந்தக் கூற்றுக்குப் பிறகும் கூட இந்திய அரசு இலங்கை அரசுடன் தான் இதுவரை கொண்டிருந்த உறவை மாற்றிக்கொள்ள முன்வரவில்லை. மாறாக, உறவுகளையும், உடலின் பாகங்களையும், வாழ்வாதாரங்களையும் இழந்து நிற்கும் மக்களிடம் கடைசியாக மிஞ்சி நிற்கும் மானத்தையும் பறிக்க முயலும் ராஜபக்சேவின் கொடுங்கோல் திட்டத்தை ஆதரிக்கவும், அதனை முன்னெடுத்துச் செல்லவுமே அது முனைந்து நிற்கிறது.
ஏப்ரல் 27 ஆம் தேதியன்று அகதிகளின் மறுவாழ்விற்காக 100 கோடி ரூபாயை இலங்கை அரசுக்கு இந்திய அரசு அளிக்க முன்வந்த பின்னரே பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் இலங்கை இராணுவத்தின் எறிகணைகளுக்குப் பலியாகினர். இதற்கு இந்திய அரசு எந்தவிதக் கண்டனமும் தெரிவிக்கவில்லை. மே 7ஆம் திகதியன்று "வடக்கின் வசந்தம்" என்ற பெயரில் வட ஈழத்தின் மீளுருவாக்கத்திற்காக இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட- தமிழர் தரப்பில் பிரதிநிதிகளைக் கொண்டிராத - 'கொடுங்கோல்' குழுவிற்கு இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் தம் எதிர்ப்பினைத் தெரிவிக்கவில்லை.
மாறாக, மே 27 ஆம் திகதியன்று, இந்திய அரசு அதிரடி அறிவிப்பொன்றினை வெளியிட்டது. அதாவது, அகதிகள் மீள்வாழ்வுத் திட்டங்களுக்காக, இலங்கை அரசுக்கு வழங்குவதாகச் சொன்ன 100 கோடி ரூபாவை 500 கோடியாக அதிகரித்திருப்பதாக அறிவித்து இலங்கை அரசினைக் களிகொள்ளவைத்தது.
மே 22ஆம் திகதி அறிவிப்புக்கும் 27ஆம் திகதி அறிவிப்புக்கும் இடையில் பெருகிய கோடிகளை, வன்னிப் பெருநிலத்தை மீளுருவாக்கம் செய்யப்போகும் கொடுங்கோல் குழுவிற்கு இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் அளித்திருக்கும் அங்கீகாரமாகவே கருத முடியும்.
வடக்கின் வசந்தத்திற்காக எம்.எஸ்.சுவாமிநாதன் முன்வைத்துள்ள 'போல் போட்' வேளாண் திட்டம்
'அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பும் பணியை 180 நாட்களுக்குள் முடிப்போம்' என்று ஜூன் மாத துவக்கத்தில் இலங்கை அதிபர் முழங்கினார். அதை அவர் எவ்வாறு நிறைவேற்றப் போகிறாரோ என்று உலகம் பார்த்திருக்க, 'அதற்குத்தான் நான் இருக்கிறேனே' என்று நம்மூர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பிணந்தின்னிக் கழுகாக, இலங்கை அதிபரின் இரட்சகனாக முன்வந்திருக்கிறார்.
ஜூன் 9 ஆம் தேதியன்று இலங்கை அதிபர் ராஜபக்சாவை இந்திய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் சந்தித்தார். அவர்கள் 'வடக்கின் வசந்தம்' திட்டம் குறித்து கலந்துரையாடினர். அந்தக் கலந்துரையாடலின்போது வடக்கு மாகாணத்தின் வேளாண் துறையைச் சீரமைப்பது குறித்து விவாதித்தனர். அப்போது, "இலங்கையின் வேளாண் ஆராய்ச்சி மற்றும் பயிற்சியை வலுவாக்க இந்தியாவின் உதவி இன்றைய காலத்திற்கு இன்றியமையாதது. இந்த உதவியை இலங்கை உடனடியாக எதிர்பார்க்கிறது.
இலங்கை மற்றும் இந்தியாவில் உள்ள அரசு நிறுவனங்களால் இவ்வளவு துரிதமாக செயல்படமுடியுமா என்பது சந்தேகமே," என்று இலங்கை அதிபர், சுவாமிநாதனிடம் கூறியிருக்கிறார். "இதுகுறித்து இந்தியாவும் இலங்கையும் ஜூலை மாதமே கலந்துரையாட வேண்டும்" என்றும் அவர் கோரியுள்ளார். "வடக்கின் வசந்தத் திட்டத்தின் கீழ் முன்வைக்கப்படவுள்ள வேளாண் மீட்டுருவாக்கத்தில் ஈடுபட இந்தியாவையும், இலங்கையையும் சேர்ந்த தனியார் நிறுவனங்கள் ஜூலை மாதத்திலேயே தம் கலந்துரையாடலைத் தொடங்க வேண்டும்" என்பதே ராஜபக்சே, சுவாமிநாதனிடம் கூறிய கூற்றின் சாரம்.
ராஜபக்சேவின் கூற்றை எம்.எஸ்.சுவாமிநாதன் அப்படியே ஏற்றுக்கொண்டார். "தமிழ் மக்களின் பிரச்சினை அரசியல் ரீதியாகத்தான் தீர்க்கப்படவேண்டும். என்றாலும் கூட இன்றைய உடனடித் தேவை அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டுருவாக்கம் செய்வதுதான்" என்று அவர் கூறியிருக்கிறார். அதோடு அவர் நிற்கவில்லை. வேளாண் மீட்டுருவாக்கத்திற்கான வழிமுறைகளையும், அதற்கான கால அட்டவணையையும் அவர் முன்வைத்திருக்கிறார்.
-தமிழ்க்கதிருக்காக சீமான்


Wednesday, July 1, 2009

'வீரத்தின் வித்துக்கள்' – போராளி சங்கர்.

sangar
சங்கர் ஒரு முழுநேரப் போராளி கம்பர்மலை வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட சங்கரின் சொந்தப்பெயர் சத்தியநாதன். விடுதலைப் போராட்டத்தின் பரிமாணாமங்களை முழுமையாக அறிந்து கொண்டவன். 1981ஆம் ஆண்டு நீர்வேலி வங்கியில் போராட்டத் தேவைக்காக பணம் பறித்தெடுக்கப்பட்ட தாக்குதலில் சங்கரின் துணிச்சல் வெளிப்படுத்தப்பட்டது.

அவனது அந்தச் துணிச்சலான செயற்பாடு விடுதலைப் போராட்டத்திற்குப் பொருளாதார பலத்தை அளித்தது. 27.10.1982 அன்று நடைபெற்ற சாவகச்சேரி பொலிஸ்நிலையத் தாக்குதலின் போது சீலன் அதற்குத்தலைமை தாங்கினான். சீலன் காயப்பட்டதும் அத்தாக்குதலை சங்கர் தலைமை தாங்கி வழிநடத்தினார்.

எதுவித பதட்டமும் இன்றி முன்னேறினான். பொலிசார் பின்வாங்கி ஓடினார்கள். தாக்குதல்கள் முழுமையான வெற்றியைத் தந்தது. சங்கரின் திறமை போராட்டத்திற்கு முழுமையான நம்பிக்கையை ஊட்டியது. இத்தாக்குதல் பற்றி பொலிஸ்மா அதிபராக இருந்த ஸ்ரான்லி சேனநாயக்கா இதில் பங்கு பற்றிய கெரில்லாக்கள் மிகவும் மதிநுட்பமும் அபார துணிச்சலும் மிக்கவர்கள் என ஒரு பத்திரிக்கைப் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

சீலனுக்கு வைத்திய வசதிகள் செய்வதற்காக பேரினவாதப் படைகளின் தேடுதல் வேட்டையும் சுற்றி வளைப்பும் அடிக்கடி நடந்தன யாழில்! அத்தோடு தேசத்துரோகிகளின் காட்டிக் கொடுப்புக்களும் நிகழ்ந்து கொண்டு தான் இருந்தன இருப்பினும் சங்கர் இதனை முறியடித்துச் செயற்பட்டுக் கொண்டிருந்தான்.

அந்த வேளையில் தான் யாழ் நாவலர் வீதியில் ஒருவீட்டருகே எதிரியின் துப்பாக்கிக்கு இலக்காகிறான். காயமடைந்து ஆதரவாளர் ஒருவரினால் முதலுதவிச் சிகிச்சை அளிக்கப்பட்டு கடல்வழியூடாக தமிழகம் அனுப்பி வைக்கப்பட்டான். இருந்த போதும் சரியான சிகிச்சையின்றி அதிக இரத்தம் வெளியேறிய நிலையில் அவனது உயிர் தலைவன் மடியில் பிரிந்தது.

அந்த மாவீரன் சங்கர் நினைவான நவம்பர் 27ஐ தமிழீழ மாவீரர் தேசிய மாவீரர் நாளாக தலைவர் வே. பிரபாகரன் அவர்களால் பிரகடனப்படுத்தப்பட்டு ஆண்டுதோறும் தமிழர் தாயகத்திலும் தமிழர் வாழும் நாடுகளிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகளின் முதல் தாக்குதல் தளபதி லெப். சீலன் ஆகும். அவனது பிறப்பிடம் திருகோணமலை அங்கு இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற காலந்தொட்டு அவனிடம் ஒரு போராடும் ஆற்றல் வெளிப்பட்டு வந்தது. ஜே.ஆர் ஜெயவர்த்தனா ஆட்சியில் சிறிலங்காவை இரண்டாவது தடவையாகவும் ஐனநாயக சோசலிசக் குடியரசாக பிரகடனப்படுத்தினார்.

1972இல் சிறிமாவோவும் இவ்வாறு பிரகடனப்படுத்தியிருந்தார். உள்ளுராட்சி அமைச்சராக இருந்த சு.பிரேமதாசா பிரதமரானார். அரச திணைக்களம், கல்வி நிறுவனங்கள் எங்கும் சிங்கக் கொடியை ஏற்றுமாறு சுற்று நிரூபம் அனுப்பினார். இதன் பிரகாரம் 1979 செப். 7ஆம் நாள் திருகோணமலை இந்துக் கல்லூரியிலும் சிங்கக் கொடி ஏற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதைவிரும்பாத சீலன் மிகவும் தந்திரோபாயமாக சிங்கக் கொடிக்குள் பொட்டாசியத்தை மறைத்து வைத்தான். கொடி ஏற்றப்பட்ட போது அது தீப்பற்றி எரிந்தது. பேரினவாதச் சிந்தனையாளர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

அந்தக் கணமே சீலன் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து போராளியானான். அவனது ஆற்றலும் ஆயுதப்பயிற்சியும் அவனை ஒரு தாக்குதல் அணித் தலைவனாக்கியது. மிக வேகமாக வளர்ந்தான். பெரும் தாக்குதல்கள் பலவற்றிற்கு தலைமை தாங்கினான். 1981 அக 15 யாழ்நகர் தாக்குதல், 1982 அக் 27 சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதல், 1983 மே 18 யாழ் கந்தர்மடம் சைவப்பிரகாசா வித்தியா சாலையில் இராணுவத்தின் மீதான தாக்குதல் என்பன முக்கியமானவை. சீலனின் இந்தத் துணிகரத் தாக்குதல்கள் சர்வதேச மட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னிலைப்படுத்தின.

இது விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகளின் முதல் தாக்குதல் தளபதி என்ற பட்டத்தையும் சீலன் பெற்றுக் கொண்டார். 1983ஆடி 15அன்று மீசாலையில் இடம்பெற்ற படைகளின் சுற்றி வளைப்பில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டான். விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் தன்னை முழுமையாக அற்பணித்த மற்றுமொரு போராளி செல்லக்கிளி அம்மான் ஆகும். விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட அனோகமான தாக்குதல்களில் செல்லக்கிளி அம்மானின் பங்குண்டு. விடுதலைப் போராட்டத்தைச் சிதைக்கப் பொலிசார் மற்றம் இரகசிய் பொலிசார் முனைப்போடு களமிறங்கிய வேளை ஏராளமான தமிழ் இளைஞர்கள் காரணமின்றி கைது செய்யப்பட்டும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டும் வந்த காலத்தில் செல்லக்கிளி அம்மானின் தந்திரோபாய காய் நகர்த்தல்கள் இரகசியப் பொலிசாரின் வலைப்பின்னலை அறுத்தெறிந்தது.

ஒரு கட்டத்தில் CIDஐ கருணாநிதி செல்லக்கிளி அம்மானாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். விடுதலைப் போராட்ட வரலாற்றில் தனித்தனி பொலிஸ்மீது நடத்தப்பட்ட தாக்குதல் மெல்ல பொலிஸ் ஐீப்வண்டிகள் மீதும் நடத்தப்பட்டன. அதுவே பின்னர் பொலிஸ் நிலையங்கள் மீதும், இராணுவச் சிப்பாய்கள் மீதும் நடத்தப்பட்டன. 1983யூலை 23ஆம் நாள் பலாலிவீதி திருநெல்வேலியில் வைத்து இராணுவத் தொடரணி முதல் முதலாக விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டது. செல்லக்கிளி அம்மானின் தலைமையில் இடம்பெற்ற இத்தாக்குதலில் அப்போதிருந்த அநேகமான போராளிகள் பங்குபற்றினர். 13இராணுவம் பலியானது.

இத்தாக்குதலே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தேவையை உணர்த்தி நின்றது. உலகம் திரும்பிப் பார்த்தது. இனக்கலவரமொன்றிற்கு திட்டமிட்டுக் கொண்டிருந்த ஆளும் ஜே.ஆர் பிரேமதாசா போன்ற தலைவர்கள் இதனை தமக்கு சாதகமாக்கி தமிழர்களை தென்னிலங்கையில் இருந்து விரட்டினர். அப்போது சுமார் மூவாயிரம் வரையான தமிழர்கள் கொல்லப்பட்டனர் இங்கு குறிப்பிடத்தக்கது. ஜே.ஆரின் இனப்படுகொலைக்கு பதிலடி கொடுக்கவும் இராணுவ பொலிசு அடக்கு முறைகளை உடைத்தெறிந்தும் தமிழனது இழந்த தாயகத்தை மீட்க ஆயுதப் போராட்டமே சிறந்தவழி என இளைஞர்கள் உணர்ந்து கொண்டு விடுதலைப் போராட்டத்தில் இணைந்து போராளியாகப் பயிற்சி எடுத்துக் கொண்டார்கள்.

இந்த வரலாற்றுத் திருப்பு முனைக்கு வித்திட்ட திருநெல்வேலித் தாக்குதலில் செல்லக்கிளி அம்மான் வீரச்சாவைத் தழுவிக் கொண்டான். செல்லக்கிளி அம்மானைத் தொடர்ந்து பண்டிதர் ரவீந்திரன் தாக்குதல் பிரிவுத் தலைமையை ஏற்றார். போராட்டத்தை மக்கள் மயப்படுத்துவதிலும் போராட்டத் தேவைகளின் தேவைகளின் தயாரிப்புக்களில் பரிமாற்று ஏற்பாடுகளை மேற்கொண்டார். தலைசிறந்த போராளி தலைமைத்துவம் அவனது ஆற்றலில் மிளிர்ந்தது. எதிர்பாராத விதமாக 1985ஐனவரி மாதம் ஒரு இராணுவச் சுற்றி வளைப்பில் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவடைந்தார்.

அந்த மாவீரனது பெயரால் இன்றும் போசப்படுகிறது. பண்டிதரின் மறைவைத் தொடர்ந்து கேணல் கிட்டு யாழ்மாவட்டத் தளபதியாகப் பெறுப்பேற்றார். ஜே.ஆர் பிரகடனப்படுத்தப்படாத போரை தமிழ் மக்கள் மீது திணித்தார். பல இராணுவ முகாம்களும், மினி முகாம்களும் அமைக்கப்பட்டன. பெருமளவிலான சிங்கள இளைஞர்கள் இராணுவத்தில் இணைக்கப்பட்டனர். பெருமளவிலான தேசிய வளங்கள் போருக்காக செலவிட்டனர். பல உயிர் இராணுவ அதிகாரிகள் பயிற்சிக்காக வெளிநாடு சென்று வந்தனர். முதன் முதலாக 1984 சித்திரை போருக்காக ஒரு அமைச்சர் நியமிக்கப்பட்டார். (லலித் அத்துலத்முதலி) வடக்கு-கிழக்கில் கடுமையான சட்டங்கள் அமுலுக்கு வந்தன.

இவ்வாறு ஐனாதிபதி ஜே.ஆர் படைக் கட்டுமானங்களிற்கு தேவையான அனைத்து வழிமுறைகளையும் செய்து கொடுத்து இராணுவக் கட்டமைப்பை விரிவு படுத்தினார். இவ்வாறானதொரு காலகட்டத்தில் தான் கேணல் கிட்டுவும் யாழ்மாவட்டத் தளபதியாக பொறுப்பேற்றார். குறிப்பாக அரசின் இராணுவ வலுவும் யாழ்மீதே குவிந்திருந்தது. இந்தச் சவால்களைச் சிறப்பாக கிட்டு எதிர்கொண்டார். இராணுவ முகாம்களை விட்டு வெளிவந்த படைகள் விடுதலைப் புலிகளால் வழிமறித்து தாக்கப்பட்டன. ஆக்கிரோசமான தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாத படை பின்வாங்கியும் இழப்புக்களைச் சந்தித்தும் வந்தன.

இதன்பிரதிபலிப்பு யாழ்மாவட்டத்தில் இராணுவ முகாமிற்குள் முடங்கியது. இதுகேணல் கிட்டுவின் போராற்றலுக்குக் கிடைத்த வெற்றியாகும். இராணுவத்தீர்வு சாத்தியமாகாது என உணர்ந்த ஜே.ஆர் அரசாங்கம் 1985ஆம் ஆண்டு நடுப்பகுதியில் போர்நிறுத்தத்திற்கு இணங்கியதுடன் பூட்டான் திம்புவில் தமிழ் போராளிகளுடன் பேசவும் இணங்கினார். இது எமது போராட்ட வரலாற்றில் விடுதலை இயக்கங்களிற்கு கிடைத்த முதல் அங்கீகாரம் ஆகும். அதுவும் அது சர்வதேச மட்டத்தில் கிடைத்த அங்கீகாரமாகும். அதுவும் அது சர்வதேச மட்டத்தில் கிடைத்த அங்கீகாரமாகும். என்பதால் முக்கியம் பெற்றது.

சிம்பு பேச்சுவார்த்தையை ஜே.ஆர் அரசு குழப்பி சம்பூர், கூனித்தீவு போன்ற இடங்களில் இராணுவத்தை ஏவி இனப்படுகொலையைச் செய்தது. இக்காலகட்டத்தில் தான் தளபதி கிட்டு தலைமையிலான போராளிகள் யாழ்ப்பாணக்குடாவில் பல பகுதிகளிலுமுள்ள இராணுவ முகாம்களைச் சுற்றி வளைத்து இராணுவம் வெளியேறாதபடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இது இற்றைக்கு 500ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழரின் னைக்கு யாழ்குடாவந்த செய்தி உலகிற்கு உணர்த்தியது. குடா நாட்டைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இந்தப் புனிதமான பணியில் ஈடுபட்ட மாவீரர்கள் நினைவு கூரப்பட வேண்டியவர்களே.

போராட்ட இலட்சியத்தைக் காக்கவே லெப். கேணல் திலீபன் போராட்ட வடிவத்தை மாற்றினான். இந்தியா அகிம்சை வழியில் விடுதலை பெற்றது. எனவே அதேவழியில் இந்தியாவிடம் நீதி கேட்டான். திலீபன் செப் 15 1987 தொடக்கம் செப் 27வரை நீரின்றி உண்ணா நேன்பிருந்து உயிர் துறந்தார். அவனது ஐந்து அம்சக்கோரிக்கைகளையும் குறித்து இந்தியா பாராமுகமாக இருந்து விட்டதே என்பது தமிழர்களிற்கு இன்றளவும் ஒரு கவலையான விடயமே.இருப்பினும் தியாகி திலீபனது அந்தப் 12 நாட்களும் உடலை மெல்ல மெல்ல உருக்கி எம்கண்முன்னே உயிர்துறந்தது. தமிழ் மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி விட்டது. ஆயினும் திலீபனும் அந்தச் சாவு உலகின் விடுதலைக்காகப் போராடும் இனங்களிற்கு ஒளியாக மிளிர்கிறது.


Sunday, June 28, 2009

தமிழீழ கரும்புலிகளின் வரலாறு.

'ஒப்பிரேசன் லிபரேசன்" எனப்பெயரிட்டு வடமராட்சியில் இராணுவ நடவடிக்கை தொடங்கிய அன்று ஜே.ஆர் கொழும்பில் இலங்கை வங்கியில் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போது விடுதலைப் புலிகளை அழிக்கும் வரை இந்தப்போர் ஓயாது என்றார். அக்காலத்தில் லலித் அத்துலத் முதலி பேட்டி ஒன்றில் தீவிரவாதிகளைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்த காலம் போய்விட்டது.

 

இன்று போருக்கு அழைக்கும் காலம் நெருங்கிவிட்டது என்றார். இவ்விரு தலைவர்களின் செருக்கு நிறைந்த கூற்றை கப்டன் மில்லர் தன்னை ஒரு உயிராயுதமாக்கி முறியடித்தான். இதுவே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்து விட்டது. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் ஆக்கிரமிப்பு இராணுவமாக நிலை கொண்டிருந்தபோது அவ்வாறு இருக்க முடியாது என்ற செய்தியை மில்லரின் தாக்குதல் உணர்த்தி நின்றது.

 

வடமராட்சி நெல்லியடி மகாவித்தியாலத்தில் சிங்களப்படை குவிக்கப்பட்டிருந்தது. வடமராட்சியில் 'லிபரேசன் ஒப்பிரேசன்" இராணுவ நடவடிக்கையால் எழுந்த வெற்றியை சிங்கள இராணுவம் உருசி பார்த்துக் கொண்டிருந்தது. வடமராட்சி மக்கள் அகதிகளாக வெளியேறியிருந்தனர். சிங்களத்தலைவர்கள் இன்றுபோல் அன்றும் கொழும்பில் வெற்றி முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். நெல்லியடிப் படைத்தளத்தை அழித்து இந்த வீணர்களின் இறுமாப்பை அடக்க வேண்டுமென தேசியத்தலைவர் வே.பிரபாகரன் விரும்பினார். அது வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

 

நெல்லியடிப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு அனைத்தும் தயார்படுத்தப்பட்டன. அத்தாக்குதல் வீரனாக கப்டன் மில்லர் தேர்வு செய்யப்பட்டிருந்தான். சரியாக யூலை 5ஆம் நாள் இரவு 7.00மணி 3 நிமிடத்திற்கு கப்டன் மில்லருடைய வாகனம் முகாமிற்குள் மோதி வெடித்தது. நூற்றுக்கணக்கான இராணுவம் கொல்லப்பட்டும் பலநூறு படையினர் காயமடைந்தும் இருந்த அந்த வரலாறு எழுதப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் போரியல் வரலாற்றில் இவ்வாறான தாக்குதல் ஒன்று முதன் முதலாக நிகழ்த்தப்பட்டது.

 

கப்டன் மில்லரின் அந்த உன்னதமான தியாகத்திற்கு இலங்கை அடிபணிய நேரிட்டது. இத்தாக்குதலின் பின் ஜே.ஆர் சண்டே ரைம்ஸ்க்கு பேட்டி அளிக்கையில் நெல்லியடியில் புலிகளின் கரும்புலித் தாக்குதலுக்குப் பின் இனப்பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு சரிப்பட்டு வராது அரசியல்த் தீர்வு ஒன்று தான் ஒரேவழி என்ற முடிவை நான் எடுத்தேன். அதன் பின்னரே இந்தியாவுடன் பேச்சு நடாத்தி ராஐீவ் காந்தியுடன் ஒப்பந்தம் செய்தேன் என்றார். அப்போது சனாதிபதியாக இருந்த ஜே.ஆர் ஜெயவர்த்தனா உண்மையிலேயே பயந்து போனார். இதுபோன்ற தாக்குதல்கள் மேலும் நடந்தால் பேரழிவை இராணுவம் சந்திக்கும் என எண்ணினார்.
இந்தியாவிற்கு ஓடிப் போனார். புலிகளால் இருக்க முடியவில்லை. வாருங்கள் வந்து பிரச்சனையைத் தீருங்கள். என அப்போதைய பிரதமர் ராஐீவ் காந்தியின் காலில் வீழ்ந்தார். அதற்கு முன்னர் திம்பு பேச்சுவார்த்தையாகட்டும் அல்லது இந்தியா சிறப்புத் தூதுவர்களுடன் இலங்கை அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளாகட்டும் தமிழர்களிற்கு எந்த உரிமைகளையும் வழங்கத் தயாராக இல்லாமல் இருந்த ஜே.ஆர் இப்போது மட்டும் ஏதாவது கொடுக்கத் தயாராக இருந்தார். ஜே.ஆரை வழிக்கு கொண்டு வருவதில் கரும்புலி கப்டன் மில்லர் வெற்றி கண்டான்.

 

இந்த மாவீரர்களை எவ்வாறு நெஞ்சம் மறக்கும். இதுவரை 379கரும்புலிகள் வீரகாவியமாகியுள்ளனர். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் புதிய திருப்பு முனையாக அமைந்தது கடற்புலிகளின் பிரவேசமாகும். அதிலும் கடற்கரும்புலிகளின் வரவு மேலும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தி நிற்கிறது. 1990ஆண்டு யூலை 10ஆம் திகதி தமிழீழக் கடற்பரப்பில் நன்கூரம் இட்டு நின்ற 'எடித்தரர்" என்ற ஆயுதக் கப்பல் கடற்கரும்புலிகளான காந்தரூபன், வினோத், கொலின்ஸ் ஆகிய வீரர்களால் தகர்க்கப்பட்டது. இதில் எதிரிகளுக்கு பெரும் உயிரிழப்பும், ஆயுத தளபாட இழப்பும் ஏற்பட்டது.

 

இதுபோன்று 1991வைகாசி 4ஆம் நாள் எஸ்.ஐ.என்.எஸ் அபிதா என்ற கப்பல் கடற்கரும்புலிகளான சிதம்பரம், ஜெயந்தன், ஆகிய வீரர்களால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இது சிறிலங்காக் கடற்படைக்கு மட்டுமல்லாது அரசிற்கும் ஒருபெரும் நெருக்கடியைக் கொடுத்தது. இது அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஐயரத்தினவிற்கு விழுந்த அடியாகக் கொள்ளலாம் 1988, 1989ஆண்டுகளில் ரோஹணவிஐய வீர , உபதிஸ்ஸ திஸாநாயக்கா போன்ற ஜே.வி.பி தலைவர்களை அழித்தது போல விடுதலைப் புலிகளின் தலைவர்களையும் கைது செய்து அழித்திடுவேன் என ரஞ்சன்விஐயரத்தினா கூறியிருந்தார்.
இந்தக் கடற்புலிகளின் தாக்குதலுக்குப்பின் ரஞ்சன்விஐயரத்தினா பத்திரிக்கையாளர்களிடம் சாவுக்கஞ்சாத விடுதலைப்புலிகளின் தொடர்தாக்குதல்களால் சிறிலங்காப் படைகளுக்கு பெரும் தாக்குதலை ஏற்படுத்துகிறது என்றார். தேசிய விடுதலைப் போராட்டத்தில் மகளிர் பங்கு இன்று முக்கியத்துவம் பெறுகிறது. 1984ஆம் ஆண்டு தொட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண் போராளிகளை பின் களப்பணிக்கு உள்வாங்கிக் கொள்ளப்பட்டது அதற்கான கட்டமைப்பு இருந்தது. முதல் பொறுப்பாளராக மேஐர் சோதியா விளங்கினார். 1987அக் 10 அன்று இந்திய இராணுவத்துடனான தற்காப்புச் சமரில் 2ஆம் லெப் மாலதி வீரச்சாவடைந்தார்.

 

இவர் மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் இவரது நினைவு நாளையே பெண்கள் எழுச்சி நாளாக தமிழீழத் தேசியத் தலைவரால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கப்டன் அங்கயற்கண்ணி கடலில் எதிரிகளை அழித்து காவியமானவர் இவரே முதற்பெண் கடற்புலியுமாவார். இவர்களை தமிழினம் மறக்குமா? இதுவரை 4894 மகளிர் மாவீரர்களையும் நெஞ்சங்களில் நிறைந்துள்ளனர். 3ஆம் கட்ட ஈழப்போர் 19ஏப்பிரல் 1995 அன்னை பூபதி நினைவு நாளன்று தொடங்கியது. சமாதானத்தை கூறி ஆட்சியைப் பிடித்தவர் ஆனால் பதவிக்கு வந்தவுடன் இராணுவத் தீர்வே ஒரே வழிஎன போர் தெடுத்தவர்கள் இவர்களின் காலத்தில் புலிகள் மிகப் பெரும் வளர்ச்சியைப் பெற்றார்கள்.

 

18.07.1996 அன்று ஓயாத அலைகள் 1 எனப்பெயரிட்டு முல்லைத்தீவு கூட்டுப் படைத்தளம் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு முற்றாக அழிக்கப்பட்டது. 1100 படையினர் கொல்லப்பட்டதாக வெளிவுவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார். இத்தொகையை விட இன்னும் கூடுதலான படையினர் கொல்லப்பட்டனர் என்ற கருத்தும் உள்ளது. இத்தாக்குதலை முறியடிக்க அளம்பிலில் சிங்களப் படை இறக்கப்பட்ட போதும் அது அழிவையே சந்தித்தது. விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச அரங்கில் பெரும் மதிப்பை ஏற்படுத்தி இருந்தது.

 

ஓயாத அலைகள் 1 இல் 315வேங்கைகள் வீரச்சாவை எய்தினர். இந்த வீரர்களை எப்படி மறப்போம். எதிரியின் போர் வெறி அடங்காத நிலையில் ஜெயசிக்குறு தொடங்கியது. 1997.05.13 அன்று தொடங்கி 18மாதங்கள் நடந்தன. ஏ 9 வழியில் வேலி அமைப்பதே இராணுவத் திட்டம் இத்திட்டத்தை விடுதலைப் புலிகள் 6 நாட்களில் முறியடித்தனர். இராணுவத்திற்கு பேரிழப்பு ஏற்பட்டிருந்தது. இந்த முறியடிப்புத் தாக்குதலில் 2146 விடுதலைப் புலிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்திருக்கிறார்கள்.

 

இம் மாவீரர்களின் அற்பணிப்பு காலத்தால் அழிக்க முடியாதவை. சத்ஜெய 1, 2 இராணுவ நடவடிக்கை மூலம் பரந்தன் -கிளிநொச்சியை வன்பறிப்புச் செய்த இராணுவத்தை ஓயாத அலைகள் இரண்டின் மூலம் விடுதலைப் புலிகள் முறியடித்தனர். 403 போராளிகள் உயிரை ஈகம் செய்துள்ளனர். மாங்குளத்தைக் கைப்பற்றி கிளிநொச்சியை வந்தடைய முற்பட்ட வேளை ஓயாத அலைகள் 2நடந்து முடிந்தது. இராணுவத்திற்கு உளரீதியான பின்னடைவை ஏற்படுத்தின. இதன் காரணமானவர்கள் இந்த மாவீரர்களே.

 

ஓயாத அலைகள் 3 ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையால் 30,000 இராணுவம் ஈடுபட்டிருந்தது. அது 18 மாதங்கள் விழுங்கியிருந்தது. ஆனால் ஓயாத அலைகள் 3 இல் விடுதலைப் புலிகள் மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு 6 நாளில் முடிவுக்குக் கொண்டு வந்தார். 1999 நவம்பர் 1 தொடங்கியது. 1336வேங்கைகள் வீரச்சாவடைந்தனர். விடுதலைப் போராட்ட களநிலைகளில் ஓயாத அலைகள் 3 இன் வெற்றி என்பது தமிழ் மக்களிற்கு மிகுந்த உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி நின்றது. இம்மாவீரர்கள் என்றும் நினைவில் கொள்ளத் தக்கவர்கள். இலங்கைத் தீவில் இரு இராணுவக் கட்டமைப்பின் இராணுவ சமநிலையிலும் இது மாற்றத்தை உண்டாக்கியது.

 

விடுதலைப் புலிகள் சார்பான இராணுவ வலு அவர்களுக்கு சாதகமானதாகவே எழுந்து நிற்பதாகவே உலகம் கருதியது. இராணுவ ஆய்வாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்திய மற்றுமொரு தாக்குதல் தரையிறக்கத் தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் 3 இன் தொடர்ச்சியாக டிசம்பர் 12 வெற்றிலைக்கேணி, புல்வெளி போன்ற பகுதிகளில் இராணுவ முகாம்கள் புலிகளிடம் வீழ்ந்தன. 1999 டிசம்பர் 17அன்று பரந்தனும், தெற்கு ஆனையிறவும் வீழ்ந்தன. இதனைத் தொடர்ந்து சில இராணுவத் தந்திரோபாயங்களைக் கையாண்டு ஆனையிறவு வடக்கே இயக்கச்சியை 2000 ஆம் ஆண்டு ஏப்பிரல் 22அன்று கைப்பற்றினர் 2000.04.23 அன்று ஆனையிறவு புலிகளிடம் வீழ்ச்சியடைந்தது.

 

இந்த ஆனையிறவைக் கைப்பற்ற புலிகள் அதிக விலை கொடுத்துள்ளனர். இதற்கு அரிய தியாகம் செய்த மாவீரர்களை மறப்போமா? 25.04.2001இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தீச்சுவாலை இராணுவ நடவடிக்கை முறியடிப்புச் சமரில் புலிகள் வெற்றிவாகை சூடினர். அப்போது இராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்பே அவர்களை அமைதிவழிக்கு திரும்ப வேண்டி ஏற்பட்டது. அதற்குக் காரணமாக 141 வேங்கைகள் தங்களை ஈகம் செய்திருக்கிறார்கள். இதற்குப் பின் சந்திரிக்கா அரசின் இராணுவத் தோல்விகளால் தென்னிலங்கையில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. அந்த அரசியல் மாற்றங்கள் கூட தமிழர்களிற்கு எதுவும் தந்துவிடவில்லை. சர்வதேச அனுசரணையோடு நோர்வேயின் சமரசத்துடன் அரசு- புலிகளிடையே போர்நிறுத்த உடன்பாடுகைச்சாத்திடப்பட்டத
 
அதனைக்கூட நிராகரித்துவிட்டு மஹிந்தராஐபக்ச போர் புரிகிறார். இதன்நடுவே இந்தப் போரை தமிழ் மக்கள் எதிர் கொண்டுள்ளனர். விடுதலைப் புலிகள் இராணுவத்தின் முன்னேற்ற முயற்ச்சியை முறியடிக்க தற்காப்புச் சமரில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் மக்களின் விடுதலைக்காக தனது இன்னுயிரை போராளிகள் வழங்கி வருகின்றனர். இந்த வீரர்களின் இலட்சியக்கனவு ஒருநாள் நிறைவேறும்.
இந்நேரத்தில் கடந்த ஆண்டில் அனுராதபுர கூட்டுப்படைத்தள தாக்குதலில் 23கரும்புலிகள் செப்டெம்பரில் வவுனியா படைமுகாம் தாக்குதலின் 10கரும்புலிகளும் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்திருக்கிறார்கள். இவர்கள் இப்போதும் எம்மனதில் நிற்கிறார்கள். இந்த வேளையில் போரின் அனைத்து வழிகளிலும் நம்முடன் நின்ற பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வனும், பிரிகேடியர் பால்ராஐ்சுக்கும் இந்தப் போரில் வீரகாவியமான அனைத்துப் போராளிகளுக்கும் இந்த மாவீரர்கள் நாளில் எங்கள் வீரவணக்கத்தை வழங்கி நிற்போம். இந்தத் தேசம் விடியும் என்ற கனவுடன் சென்ற அந்த மாவீரர்களின் இலட்சியத்தைப் பின்தொடர்வோம்.