Showing posts with label கடவுள். Show all posts
Showing posts with label கடவுள். Show all posts

Sunday, September 6, 2009

குருட்டு நம்பிக்கைகளை வளர்ப்பதே மதம்! – தந்தை பெரியார்.

image

மனித வர்க்கம் விலங்குகளைப்போல் தனித்தனியே காடுகளில் வாசஞ்செய்து வந்த நிலைமை மாறி, குடிசை கட்டிக் கூடிக் குலவி வாழ ஆரம்பித்த போதே அவற்றிற்குச் சில கொள்கைகள் தேவையாகிவிட்டது. எப்படி எனில், எப்படி தனியே இருக்கும் மக்கள் ஏதாவது ஒரு பொது நன்மையை உத்தேசித்து தங்களுக்கென்று ஒரு சங்கத்தை நிறுவினால் உடனே அதற்குக் கொள்கைகள் நிர்ணயிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுகின்றதோ, அதேபோல் மனிதர்களின் கூட்டு வாழ்க்கைக்கு கொள்கைகளை நிர்ணயிக்க வேண்டியதாகி விட்டது.

அக்கொள்கைகள் தான் இப்போது மதம் எனப்படுவதாக இருக்கிறது. அம்மாதிரியான கொள்கை நிர்ணயங்களை மீறக் கூடாது என்பதற்கு நிபந்தனைகள் ஏற்படுத்தி, அந்நிபந்தனைகளை மீறி நடப்பவர்களைத் தண்டிக்க முடியாத நிலையிலோ, அல்லது தண்டிக்க வேண்டாம் என்று தோன்றிய சமயத்திலோ, அல்லது சிலரின் சுயநலத்திற்காகவோ, வேறு விதத்தில் ஏமாற்றிப் பிழைப்பதற்காகவோ வேண்டி, அக்கொள்கைகள் கடவுள் என்பதுடன் சம்பந்தப்படுவதனால் தான் மக்கள் ஏமாறுவார்கள் என்கின்ற எண்ணம் கொண்டு அவற்றை “கடவுள் உண்டாக்கினார்” என்றும், அவற்றிற்கு மீறி நடந்தால், “கடவுள் தண்டிப்பார்” என்றும் சொல்ல வேண்டியதாய் விட்டது. (இந்த இடந்தான் முதல் முதலாக மனிதன் தவறு செய்த இடமாகும்.)

ஆனால், இக்கொள்கைகள் நிர்ணயம் செய்யப்பட்டது எப்படி? எந்த ஆதாரங்களைக் கொண்டு? என்று பார்ப்போமேயானால், அது அந்தக்காலத்திய நிலைமை, சீதோஷ்ண ஸ்திதி, மக்களின் அறிவு நிலை, அதாவது பாமர மக்களின் அறிவீனம், சிலரின் சூழ்ச்சித் திறம் முதலாகிய நிலையில் அதாவது, காலதேச வர்த்தமானத்திற்கு ஏற்ப செய்யப்பட்டவைகள் என்றே சொல்ல வேண்டும்.

மேலும், ஒரு குறிப்பிட்ட கொள்கை பிற்கால தேச வர்த்தமானத்திற்கோ, சிலரின் சுயநலத்திற்கோ ஏற்றதாயில்லாவிட்டால் யாராவது அறிஞர் அல்லது தந்திரக்காரர் அதை மாற்ற நினைக்கும்போது, பாமர மக்கள் மூடநம்பிக்கையின் பலனாய் தாங்கள் பிடிவாதங்காட்டி மாற்ற சம்மதிக்காத காலத்தில் பிரிந்துபோய் புதிய கொள்கைகள் வகுத்து அதாவது, முன்னையதை திருத்தியோ, அல்லது சில மாற்றியோ, அல்லது சில புதியதுகளைச் சேர்த்தோ செய்ய நேரிடும் போது அது ஒரு புதிய மதமாக ஏற்பட்டு விடுகின்றது உண்டு.

இதனால், பாமர மக்கள் அதாவது குருட்டுப் பிடிவாத முள்ளவர்கள் “என் மதம் பெரிது,” “உன் மதம் சிறிது” என்கின்ற மதச் சண்டைக்கு ஆளாகி விடவும் நேரிட்டு விடுகின்றது. இந்தச் சண்டையில்லாமல் திருத்துப்பாடு செய்யலாமா என்று நினைத்த பெரியவர்கள், கொள்கைகளை மாற்றாமல் பழைய கொள்கைகளுக்கே புதிய வியாக்கியானங்களைச் செய்து திருப்தி செய்ய முயற்சித்தும் இருக்கின்றார்கள். ஆயினும், அம்முயற்சிகளின் பலனும் முடிவில் உட்சமயங்களாகவும், சார்புச் சமயமாகவும் மாறிற்றேயொழிய, கொள்கைகளின் முக்கியங்களை அறியமுடியாமலேயே போய் விட்டது.

இப்படியேதான் மதங்கள் வெகு காலமாய் மாறி மாறியும், திரிந்து திரிந்தும், பெருகிக் கொண்டும் வந்ததினாலேயே மதங்களின் உண்மைத் தத்துவமும், அவசியமும் அறிவதற்கில்லாமற் போனதோடு அதை ஒரு சடங்காகவே கொள்ள வேண்டியதாகி விட்டது.

இன்றைய தினம் எந்த மதக்காரனையாவது கண்டு உன் மதம் என்ன? அதன் தத்துவம் என்ன? என்றால், சில சடங்கையும், குறிகளையும் மாத்திரம்தான் சொல்லுவானே ஒழிய, அதன் உண்மைத் தத்துவம், அதாவது எந்தக் கருத்தைக் கொண்டு ஆதியில் மதத்தை உண்டாக்கினார்களோ அந்தக் கருத்து சற்றும் அறிந்திருக்கமாட்டான். அதோடு, அதற்கு நேர் விரோதமாக அறியாமையும், ஒழுக்கயீனங்களும் ஏற்பட்டுவிட்டது. அன்றியும், சிலர் இவற்றைத் தங்கள் சுயநலத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ளவும் கருவியாய் விட்டது.

சிறப்பாக, இப்போதைய முக்கிய மதங்கள் என்று சொல்லப்படுபவைகள் எல்லாம் பாமர மக்களை ஏமாற்றி கொடுமைப்படுத்தி பணம் பறித்து புரோகிதக் கூட்டமும், அரசாங்கமும், செல்வந்தனும் பிழைக்க மார்க்கங்களாக இருக்கின்றனவேயன்றி, பொதுவாக மனித வர்க்கத்திற்கு எவ்வித பலனும் இல்லாமற் போய்விட்டது. மற்றும், மதத்தினால் ஏற்பட்டு வரும் கெடுதிகள் என்னவென்று பார்ப்போமானால், முதலாவாது, மதம் மனிதனின் அறிவையே அடியோடு கெடுத்துவிடுகின்றது.

எப்படியெனில், ஒவ்வொரு மதக்காரனும் தனது மதப்படி ஒரு கடவுள் உண்டு என்று நினைப்பதோடு, தனது மதத்தையும் கடவுள் உண்டாக்கினார் என்று நம்புவதாகக் காணப்பட்டாலும், மற்றொரு மதக்காரனும் அப்படித்தானே சொல்லுகிறான். ஆதலால், அவர்களுக்கு வேறு மதத்தையும், நமக்கு வேறு மதத்தையுமாகக் கடவுள் செய்திருப்பார் என்று சிறிதாவது யோசிக்கவோ, அல்லது நம் மதத்தை வையும்படியோ, அன்றி ஏற்காதபடியோ அவர் மற்றொரு மதத்தை உண்டாக்கி இருப்பாரோ? அப்படியானால், இது ஒன்றுக்கொன்று முரண்பாடல்லவா? என்று எவருமே நினைப்பதில்லை. எவருமே என்றால் மத ஆச்சாரியார்கள், மத அபிமானிகள் என்பவர்கள் முதலாக எவருமே கருதுவதில்லை.

இந்த ஒரு காரணத்தாலேயே, மதம் மக்களின் அறிவை எவ்வளவு தூரம் கெடுத்திருக்கின்றது என்பது விளங்கும். இரண்டாவது, மனிதர்களின் ஒற்றுமைக்குப் பதிலாக மனிதனை மனிதன் பிரித்துக் காட்டவே மதம் உதவுகின்றது. மூன்றாவது, மதமானது மனிதனை வேடத்திலேயே திருப்தியடையச் செய்கின்றதே ஒழிய, ஒழுக்கத்தில் சிறிதும் இடமில்லை. ஏனென்றால், எவ்வளவு நல்ல மதமானாலும் முதலில் ஏதாவதொன்றையாவது நமது புத்திக்கும், அறிவிற்கும், கண்ணுக்கும் படாததைக் குருட்டுத்தனமாய் நம்பித்தானாக வேண்டுமென்று சொல்லாமலிருப்பதில்லை. அப்படியானால், அம்முறையில் ஒன்றை நம்பிவிட்டு அதேபோன்ற மற்றொன்றை நம்பாமலிருப்பதற்குக் காரணமும் இல்லை.

அய்ந்தாவது, மதமானது கடவுளுக்கும் நமக்குமிடையில் தரகர்களின் நடவடிக்கையையும், வார்த்தையையும் அது எவ்வளவு அசம்பாவிதமானாலும் நமது சொந்த அறிவைவிட, பிரத்தியட்ச அனுபவத்தை விட மேலானதாக நினைக்கின்றது. அன்றியும், மதமானது பணம் செலவு செய்யும் அளவுக்கு மோட்சமும், பாவ மன்னிப்பும் இருப்பதாகவும், எவ்வித அக்கிரமங்களுக்கும் வணக்கத்தின் மூலம் மன்னிப்பு இருப்பதாகவும் நம்பச் செய்வதால் மனிதனை அக்கிரமம் செய்யுவும், செய்தவன் மூலம் பணம் சம்பாதிக்கவும் தூண்டுகிறது. சோம்பேறிப் பிழைப்புக்குத் தாராளமாய் மதம் இடம் கொடுக்கின்றது.

மதம் மக்களைக் கோழைகளாக்குகின்றது. மதத்தினால் இவ்வளவு அநீதிகள் ஏற்பட்டும் உலக சம்பவங்களின் உண்மைக் காரண காரியங்கள் உணருவதற்கில்லாமல் நிர்ப்பந்தமாய் மக்கள் மதத்தினால் தடுக்கப்படுகின்றார்கள். இவ்வளவும் தவிர, ஒருவனுடைய உழைப்பில் மற்றும் ஒருவனை சாப்பிடச் செய்கின்றது. நிற்க, உண்மைச் சைவன் என்பவன் ஒருவன் எவ்வளவு அயோக்கியனானாலும், ஒரு துளி சாம்பல் அவன் மேலே பட்டு விட்டால் உடனே அவனுடைய சகல பாவமும் தீர்ந்து நேரே “கைலயங்கிரிக்கு”ப் போய்விடலாம் என்கின்றான்.

சுருக்கமாகச் சொன்னால், வக்கீல் தொழில் செய்பவனும், பொய்ப் புராணப் பிரசங்கம் செய்பவனும் விபூதி பூசிக் கொள்ளுகிற காரணத்தாலேயே தன்னை ஒரு சைவன் என்று எண்ணிக் கொண்டிருக்கிறான். பிறரும் அப்படியே எண்ண வேண்டுமென்று ஆசைப்படுகின்றான் என்றால், சைவனின் யோக்கியத்திற்கும், சைவ சமயத்தின் பெருமைக்கும் வேறு சாட்சியம் தேவையா?

அதுபோலவே, ஒரு உண்மை வைணவன் என்பவனும் ஒரு தடவை ‘ராமா’ என்று சொல்லிவிட்டால் சகல பாபமும் தீர்ந்துவிட்டது என்கின்றான். ராமனைவிட உலகில் வேறு தெய்வமில்லை என்கின்றான். அதுபோலவே, ஒரு உண்மை கிறிஸ்தவன் என்கின்றவனும் ஏசுவை அடைந்தால் சகல பாபமும் தீர்ந்துவிடும் என்கின்றான். அன்றியும், ஏசுவின் மூலம் அல்லாமல் பாவ மன்னிப்பு என்பது கிடையவே கிடையாதென்கின்றான்.

அதுபோலவே, ஒரு முகமதியனும் ‘குரான்’ வாக்கெல்லாம் கடவுள் வாக்கு, அது எந்த தேசத்திற்கும், எந்தக் காலத்திற்கும் பொருந்தியது, அதில் உள்ள ஒரு சிறு கோடாவது மாறினால் இஸ்லாம் மதமே போய்விட்டது என்கின்றான். இப்படியே ஒவ்வொரு மதத்திற்கு ஒவ்வொரு பெருமையும். அதுவேதான் உண்மையான மதம், முறையே கடவுள் அவதாரம், கடவுள் குமாரன், கடவுள் தூதன் ஆகியவர்களால் ஏற்பட்டது என்றும் சொல்லுகின்றார்கள்.

- (11-8-1929 “குடி அரசு” இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கத்தின் ஒரு பகுதி.


ஒழுக்கங்கெட்டத் தனத்திற்கு ஒருதலைக் கற்பே காரணமாகும் – தந்தை பெரியார்.

image

இந்து மதம் என்றும் இந்துக்கள் என்றும் நம்மைச் சொல்லிக் கொண்டு, இந்து மதம் சாஸ்திர புராண சம்பந்தமான விஷயங்களைத் தமிழர் தலையில் சுமத்துவதும், தமிழர்கள் அதற்குக் கட்டுப்படுவதும் நியாயமா? இந்து மதப் புராணங்களில் ‘கற்பு'க்கு லட்சணம் ஒரு பெண் (நளாயினி), தனது புருஷன் குஷ்டரோகியாய் இருந்து கொண்டு தாசி வீட்டுக்குப் போக வேண்டுமென்று சொன்னாலும், அவனைக் கழுவி எடுத்துக் கூடையில் வைத்துத் தலையில் தூக்கிக் கொண்டு போய் தாசி வீட்டில் வைத்து, விடிந்த பிறகு மறுபடியும் தாசி வீட்டிலிருந்து தன் வீட்டிற்குத் தூக்கிவர வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்து மதத்தை வலியுறுத்துகிற ஒருவன், தன் மகளுக்கு இப்படிப்பட்ட புருஷன் அமைந்து அவன் தன் பெண்ஜாதியை இப்படிச் செய்ய வேண்டுமென்று சொல்லுவானானால், ஒப்புக்கொள்ளுவானா?...

ஆண், பெண் கூட்டு வாழ்க்கையில் இப்போது வழங்கி வரும் கருத்தமைந்த ‘கற்பு' என்னும் வார்த்தையே அவசியமற்றது என்றும், அது வாழ்க்கை இன்பத்திற்குக் கேடு பயக்கின்றதே ஒழிய, அதனால் நன்மை இல்லை என்றும் சொல்லுவேன். இன்று வழங்கும் ‘கற்பு' பெண்களுக்கு மாத்திரமே ஒழிய ஆண்களுக்கு இல்லை. அது, பெண்களை நிர்ப்பந்திப்பது போல் ஆண்களை நிர்ப்பந்திப்பதில்லை. சமுதாயத்தில் ஒழுக்க ஈனம் ஏற்பட்டதற்குக் காரணம், இந்த ஒருதலைக் கற்பேயாகும். பெண்கள் அடிமையாக்கப்பட்டதற்கும் இந்த ஒரு தலைக் கற்பே காரணமாகும். இந்த ஒரு தலைக்கற்பு உள்ளவரை, சமுதாயம் சீர்படப் போவதில்லை என்பதே எனது உறுதி.

ஆண்களின் ஒழுக்க ஈனமான நடத்தைகளை இந்துமதக் கடவுள், சமயம், சாத்திரம், புராணம் ஆகியவை ஒப்புக் கொள்ளுகின்றனவா இல்லையா என்று கேட்கிறேன். இவை கூடாது என்று சொல்லுகிற ஒரு தமிழன், தன்னை இந்து மதத்தைச் சார்ந்தவன் என்று சொல்லிக் கொள்ள முடியுமா? இப்படிச் சொல்லுவதன் மூலம் ஆண்களைப் போலவே பெண்களும் ஒழுக்க ஈனமாக இருக்க வேண்டுமென்று போதிப்பதாகக் கொள்ளக்கூடாது. பெண்களைப் போலவே ஆண்களும், ஒழுக்கமாக இருக்கச் செய்வதற்கு என்னென்ன செய்யவேண்டுமோ அவற்றை எல்லாம் சட்டமோ, சமுதாயமோ செய்ய வேண்டும். செய்யாவிட்டால், சில பெண்களாவது முன் வந்து அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்யத் துணிவதாகவாவது காட்ட வேண்டும். உரிமையில்தான் சுதந்திர உணர்ச்சி இருக்கிறது. அது இல்லாத இடத்தில் அடிமை உணர்ச்சிதான் இருக்கிறது. அதனாலேயே நமது பெண்கள் அடிமைகளானார்கள். அப்பெண்களின் வயிற்றில் பிறந்த நாம் அடிமை வாழ்வு வாழ்கிறோம்...

அநேகம் பேர்களுக்குச் சேர்க்கையால்தான் பிள்ளைப் பேறு கர்ப்பம் உண்டாகின்றது என்பதுகூடத் தெரியாது. ‘ஏதோ கடவுள் கொடுக்கிறார். கடவுள் வயிற்றில் கொண்டு விடுகிறார். கடவுளே வளர்க்கிறார். கடவுளே பெற்ற பின்பும் நோய் உண்டாக்குகிறார். கடவுளே சாகடிக்கிறார்' என்று கருதிக் கொண்டு, இது விஷயங்களில் மிருகங்களைவிட கேவலமாய் நடந்து கொள்ளுகிறார்கள். சேர்க்கை விஷயம் அது சம்பந்தமான உடல்கூறு ஆகியவைகளைப் பற்றித் தெரிவது, வெகு கேவலமாக இங்கு பேசப்படுகிறது. கதைகளில், புராணங்களில் நாடகத்தில் பச்சை பச்சையாய்க் கேட்கிறபோதும், பார்க்கிறபோதும் ஆனந்தக் கூத்தாடுகிறோம்.

அந்தக் கலைகளை நமது ஆண் - பெண் இருபாலருமே ஓர் அளவுக்காவது தெரிந்து இருக்க வேண்டும். அது தெரிந்து கொள்ளாமல் வெறும் மிருகப் பிராயமாய் இருப்பதாலேயே அநேக நோய், சாவு, ஊனம், மனச்சஞ்சலம், பொருந்தா வாழ்வு ஆகியவை பெருகுகின்றன. குழந்தைகள் பெறுவதில் கர்ப்ப காலத்தில் எப்படி இருக்க வேண்டும், குழந்தை பிறந்த பிறகு எப்படி இருக்க வேண்டும், எத்தனை நாள் பொறுத்து மறுபடியும் கர்ப்பம் தரிக்க இடம் கொடுக்க வேண்டும் என்பவைகளையாவது ஒவ்வொரு பெண்ணும் தெரிந்திருக்க வேண்டும்.

சேர்க்கையில் எப்படி இருக்க வேண்டும் என்பது தெரியாமல் நடந்து கொண்டு நோய் வந்தால், அதற்குப் ‘பொம்பளை நோவு' என்று சொல்லிவிடுகிறார்கள். இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், பெண்களுக்கு அது சம்பந்தமான நோய் வந்தாலும், பெண்கள் அதையும் ‘பொம்பளை வியாதி' என்றுதான் சொல்லுகிறார்கள். இது, பெண்கள் சமூகத்திற்கே இழிவான காரியமாகும்.

ஆண் - பெண் தன்மை, உடல்கூறு, சேர்க்கை விளக்கம், கர்ப்பம், பிள்ளைப்பேறு ஆகியவைகளைப் பற்றிச் சர்க்கார், அத்தருணம் நெருங்கிய பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். அல்லது மேல் வகுப்புக்குப் பாடமாகவாவது வைக்க வேண்டும். இவை நன்றாக மக்கள் அறிந்தால், இக்காரியங்களில் ஒழுக்கத் தவறுதல்கூட ஏற்படாது என்பது எனது அபிப்பிராயம். சின்ன தவறுதல் கூட ஏற்படாது என்பது எனது அபிப்பிராயம். இன்ன இன்ன பதார்த்தம் சாப்பிட்டால், உடலுக்கு ஒத்துக்கொள்ளாது, நோய்வரும் என்று கருதினால், எப்படிச் சாப்பிடாமல் விட்டுவிடுகிறானோ, அதுபோல் இன்ன மாதிரி நடந்தால் கேடுவரும் என்று தெரிந்தால், அதைச் செய்யாமல் தப்பித்துக் கொள்வான். அப்படிக்கில்லாமல் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று தெரியாமல், இஷ்டப்படி நடந்து கொண்டு வந்த வினையைக் கடவுள் செயல் என்று சொன்னால் மனிதனுக்கும் மிருகத்திற்கும் என்ன வித்தியாசம்?

(காஞ்சிபுரத்தில் 16.6.1940 அன்று நடைபெற்ற திருமண விழாவில் ஆற்றிய உரை)


Wednesday, June 24, 2009

இந்து மதத்தில் ஆண் - பெண்ணின் வக்கரித்த உறவுகள் – பாகம்-6.


சகோதர - சகோதரியிடையே நிகழ்ந்த கடவுள் புணர்ச்சிகளைப் தேவி பாகவதப் புராணம் (6,17,53-58) வெளிக் கொண்டு வருகின்றது. சமுத்திரத் தேவனின் செல்வப் புதல்வி இலட்சுமிதேவி. தன் சகோதரன் அசுவனைக் கண்டு காமம் கொண்டாள். இதைக் கண்ட விஷ்ணு கோபம் கொண்டு ''கவர்ச்சி மிக்க கண்களைக் கொண்டுள்ள காமுகி! நீ யாரைப் பார்க்கிறாய்? நான் சொல்லும் வார்த்தைகள் கூட உன் காதில் விழவில்லையா? காமக் கடலில் நீயும் மூழ்கி விட்டாயா?"27 என்று கோபத்துடன் சீறினான். அவள் கணவன் கேட்டதற்குப் பதிலளிக்காது பெண்குதிரை வேஷம் எடுத்து தன் சகோதரனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டாள்.

விஷ்ணுவின் பலதார மணமும், ஒருதார மணத்துக்கு வித்திடும் ஆணாதிக்கத் தீர்வுகளும். கலைவாணி, சரஸ்வதி என்ற கடவுள்கள், தமது கன்னி வயதில் விஷ்ணுவின் காதலிகளாக இருந்தனர். இவர்களுக்கிடையில் யார் விஷ்ணுவின் காதலியாகத் தனித்து இருப்பது என்ற சண்டையின் போது, விஷ்ணுவின் மனைவி லட்சுமி தலையிட்டு, ''ஒரு மனிதன் ஒரு மனைவியை வைத்துக்கொண்டு இன்பம் அனுபவிக்க முடியாதபோது அதிகமான மனைவிகளை வைத்திருத்தல் அவனைப்பற்றி என்னவென்று சொல்வது"27 என்று கணவனைக் குற்றம் சாட்டி, தீர்வாக, கலைவாணியைச் சிவனிடம் படுக்கும் படியும், சரஸ்வதியைப் பிரம்மாவிடம் படுக்கும் படியும் கூறி, சக்களத்தி சண்டைக்குத் தீர்வு கண்டாள். இது இந்துமத ஆணாதிக்க அமைப்பு மாறிவந்த வடிவத்தைக் காட்டுகின்றது.

மனிதனாக விஷ்ணு கற்பழித்ததால் பிறந்த கதையைக் கந்தபுராணம் தக்கக் காண்டத்தில் விளக்குகின்றது. கற்புள்ள அரசப் பெண்ணைக் கற்பழித்ததால், அந்தப் பெண்ணின் சாபத்தால் விஷ்ணு மண்ணில் மனிதனாக பிறந்தானாம். இந்தக் கடவுளையும், கந்தபுராணத்தையும் சொல்லி வழிபடும் எமது முட்டாள்த்தனத்தை மெச்சத்தான் வேண்டும்.

கணவனைப் பிரிந்து வாழ இட்ட சாபம். சிவ இரகசியத்தில் இருந்து இதைப் பார்ப்போம்;. விஷ்ணு ஒருநாள் தனது மனைவியுடன் புணர்ச்சியில் ஈடுபட்டிருந்த போது, அற்புதர்க்கன் என்ற சிவகணங்களின் தலைவன் அங்கு சென்றானாம். என்ன இப்படி செய்கிறாய் எனக் கேட்க ~நீ யாரடா கேட்பதற்கு, எனக் கேட்க இதை நந்தியிடம் முறையிட்டானாம் சிவகணங்களின் தலைவன்;. நந்தி உடனே விஷ்ணுவைப் பூமியில் பிறக்க வைத்து, மனைவியைப் பிரிந்து வாழ சாபம் கொடுத்தாராம்;. ஆணாதிக்கப் பாலியல் நெருக்கடிகளைச் சகித்து வாழவும், அடங்கிவாழவும் கோரும் பண்பாடுகளையும் இந்து ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை வழியில் புகட்டுகின்றது.

இராமனின் குற்றப் பிறப்பும் சரி, பிறந்த பின்னாலான வாழ்வும் குற்றமே. ஒரு முனிவரின் மனைவியை விஷ்ணு கொன்று விடவே, அதனால் கிடைத்த சாபத்தினால் மண்ணில் பிறந்து மனைவியைப் (சீதையைப்) பிரிந்து வாழ வேண்டியேற்பட்டதாம். இன்று இராமன் பெயரில் செய்யும் கூத்தும் சமூகத்தின் இழிந்த தண்டனைக்குரிய குற்றங்களே. குற்றவாளிகளை வழிபடக்கோருவதும், அந்த நாய்களை முதன்மைப ;படுத்துவதும் சமூகத்தின் அறிவற்ற மூடத்தனத்தில், சிலர் பிழைத்துக் கொள்ளும் பிழைப்பல்லவா?.

மகளைக் (சரஸ்வதியைக்) கற்பழித்த பிரம்மன் இந்துக் கடவுள்களில் ஒருவர். பிரம்மன் தன் சரீரத்தில் இருந்து தனது மகளாகச் சரஸ்வதியைக் கல்விக்காகப் பெற்று எடுத்தாராம். பெத்த மகளின் அழகைக் கண்டு பிரம்மன் காமம் கொண்டு கற்பழிக்க முயல, சரஸ்வதி பெண் மான் உருவம் எடுத்து ஓடினாளாம். உடனே பிரமன் தானும் ஆண்மான் வேடமிட்டுத் துரத்திச் செல்ல, சிவன் வேடன் உருவெடுத்து பிரம்மனைக் கொல்ல, சரஸ்வதி ஒப்பாரி வைத்து அழ, சிவன் மனமிரங்கி பிரம்மனை உயிர்ப்பிக்கப்பட்ட நிலையில், மகள் சரஸ்வதி பிரம்மனின் மனைவியானாள். அதேநேரம் மற்றொரு விளக்கப்படி, சரஸ்வதி பிரம்மனின் பேத்தியான நிலையில் பிரம்மனின் மனைவியானாள். ஒருநாள் ஊர்வசி மீது காமம் கொண்டபோது பிரம்மனுக்கு விந்து வெளியேற, அதை ஒரு குடத்தில் எடுத்து வைத்தாராம். அந்தக் குடத்தில் இருந்து உருவான அகத்தியன் சரஸ்வதியைப் பெற்றானாம். இன்று சொந்த மகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைக்கு ஆணாதிக்க இந்துமதக் கடவுள்களே வழிகாட்டுகின்றனர். இது மனைவி, மகள் என்ற எந்த எல்லையுமற்ற நிலையில் கற்பழிப்புகள் சர்வசாதாரணமாக நடக்கின்றது. இதை இந்துமதம் போற்றிப் புகழ்ந்து வழிகாட்டுகின்றது.

பெண்களை நிர்வாணமாக்கி இரசித்த ஆணாதிக்கக் காமுகன் சிவன் இந்துக்களின் கடவுள். ''இராவணனின் மனைவி மண்டோதரியை இச்சித்துப் புணர்ந்ததும், அருந்ததியிடம் அவளை இச்சித்து நிர்வாணமாகப் பிச்சை போடும்படி கேட்டும், சிவன் சாபம் பெற்று சிசுவானது ஆணாதிக்கக் காமமாகும்."34 இதே சிவன் துரோணாச்சாரி மனைவியிடம் விருந்து சாப்பிட சென்ற இடத்தில், ஆணாதிக்க வக்கிரக் காமம் கொண்டு விந்து வெளியேற்றிய நிகழ்ச்சியைப் போற்றும் இந்துமதம் பெண்களின் எதிரியல்லவா? இன்றைய சினிமா, இன்றைய விளம்பரங்கள், இன்றைய டிஸ்கோக்களின் தந்தை சிவன் என்றால் தவறோ? உலகமயமாதல் பெண்ணை உரிந்த நிர்வாண நுகர்வு வக்கிரத்தில், மூலதனச் சந்தையை ஜனநாயகப்படுத்தி பெண்ணியமாக்கும் வழியில், உலகை வீரநடை போட வைக்கும் ஆணாதிக்கப் போக்குக்குச் சிவன் தந்தையல்லவா? இதனால் தான் இந்து இராஜ்ஜியத்தை உருவாக்க பிரகடனம் செய்பவர்கள், ஏகாதிபத்தியத்திடம் சோரம் போகின்றனரோ?

வள்ளியம்மையின் பிறப்பும் மிருகப்புணர்ச்சியாகும்;. காசிபர் மானுடன் புணர்ந்து வள்ளியம்மையைப் பெற்றார். இந்தக் கடவுள்களை, புராணங்களை, இதிகாசங்களை நாம் பின்பற்றலாமா? இவை ஆணாதிக்க வக்கிரப் புத்தியல்லவா?

விபச்சாரியிடம் சுந்தரமூர்த்திக்காகத் தூது போன சிவனின் ஒழுக்கம் என்ன? சுந்தரமூர்த்தி நாயனார் ஆணாதிக்க இந்து மதத்தைப் பாதுகாக்க மக்களுக்கு எதிராக, பார்ப்பனருக்காகப் பொய்யும் புரட்டுகளையும் கூறித்திரிந்த போது, இரண்டாவது வைப்பாட்டியாக விபச்சாரி மீது ஆசை கொள்ள, அவள் மறுக்க, சிவன் தரகு வேலை பார்த்து (ஏகாதிபத்தியத்துக்குச் செய்வது போல்) கடவுளின் பெயரில், சுந்தரமூர்த்தி நாயனாரின் ஆணாதிக்கக் காமத்தைத் தீர்த்து வைத்தார். இதை நாம் போற்றலாமா?

பல நூறு இந்து மதப் பிறப்புகள் இது போன்று வக்கரித்த ஆணாதிக்கப் பிறப்பாகும். பெண்கள் மீதான கற்பழிப்புகள், வைப்பாட்டித் தனங்கள், விபச்சாரங்கள், ஓரினச் சேர்க்கை, சுயப் புணர்ச்சி என்ற வகைவகையான பிறப்புகளை, புணர்ச்சி வடிவங்களை இந்துப் புராண இதிகாசங்களாக இந்து மதம் நியாயப்படுத்தி, ஆணாதிக்க வக்கிரமாகக் காணப்படுகின்றது. இன்று பாலியலில் புரட்சி செய்வதாகக் கூறிக்கொள்ளும் பின்நவீனத்துவச் சாக்கடைகளின் பாலியல் தந்தைமார்கள், இந்து பார்ப்பனிய ஆணாதிக்க இந்து மதத்தில் செறிந்து, நிறைந்து காணப்படுகின்றனர். சில மாதிரி வடிவங்களை மட்டுமே இந்துமதப் புராண, இதிகாசங்கள் சார்ந்து தொகுக்கப்பட்டுள்ளது. இந்து மதத்தையும், பின்நவீனத்துவ அழுகல்களையும் புரிந்து கொள்ள இந்த வக்கிரங்களே எமக்குப் போதுமானவை.

நன்றி: www.tamilcircle.net

- முற்றும்.


Tuesday, June 23, 2009

இந்து மதத்தில் ஆண் - பெண்ணின் வக்கரித்த உறவுகள் – பாகம்-5.


மனைவியைக் கூட்டிக் கொடுப்பதும் பதிவிரதைக்கு உயர் பண்பாடாகும். இயற்பகை நாயனார் தனது மனைவியையே கூட்டிக் கொடுத்ததால் 63 நாயன் மார்களில் ஒருவரானார். இதை நீங்கள் செய்யப் போகின்றீர்களா? பெண்கள் இதற்கு இணங்கப் போகின்றீர்களா? இன்று தேசங்களை ஏகாதிபத்தியத்துக்குக் கூட்டிக் கொடுக்கும் ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமை அரசுகளை மௌனமாக அனுமதிக்க போகின்N;றாமா? சிந்தியுங்கள் எதைச் செய்யப் போகின்றோம்?

பெண்கள் ஏன் பூச்சூடுகின்றனர் தெரியுமா? ஆண்களின் காமத்துக்கு, பெண்கள் தாங்களாகவே திரிவதாகக் காட்டி, அதற்குத் துணை போவதற்குமே. இந்தியப் பண்பாட்டின் சின்னமாகக் காட்டும் பெண்களின் தலையில் வைக்கும் பூ, ஆண்களின் காமத்தைத் தூண்டும் ஓர் ஊடகமாகும். மல்லிகை, முல்லைப் பூ காமத்தை ஏற்படுத்தும் மணம் கொண்டது என்ற அடிப்படைக் காரணத்தைக் கொண்டே, அவை பெண்கள் தலையில் அணிவிக்கப்பட்டது. ஆண்கள் படுக்கையை நாடி வீடு வரும்போது, பெண்ணின் கடமையை ஊக்குவிக்க, பூ கொடுக்கும் அதேநேரம் ஆணின் காமத்தை ஏற்படுத்த உதவுவதாகவே இந்த ஆணாதிக்கப் பண்பாடு காணப்படுகின்றது. இதில் இருந்தே கன்னிப் பெண்கள் மல்லிகை, முல்லைப் ப+ச்சூடக்கூடாது என்ற வழக்கமான ஆணாதிக்கக் கட்டுப்பாடுகளும் காணப்படுகின்றது.

காமதகனம் காமத்தைத் தடுக்க இந்து ஆணாதிக்க வழியாகக் கொண்டாடும் விழாதான் ~காமூட்டி கொளுத்துதல்| ஆகும். சிவனின் தவத்தைக் குலைக்க மன்மதன் காமத்தைச் சிவன் மீது ஏவியதாகவும், சிவன் கண்ணைத் திறந்து மன்மதனை எரித்ததாகவும் கூறும் கதையை அடிப்படையாகக் கொண்டு, ~காமூட்டி கொளுத்துதல்| விழாவாக இருக்கின்றது. இன்றைய பூர்சுவா பெண்ணியவாதிகளும், ஓரினச் சேர்க்கையாளரும் ஆணாதிக்கத்தை ஒழிக்க முன்வைக்கும் வழிகளைப் போல், இந்து ஆணாதிக்கம் வைக்கும் கூத்துதான் இது.

தீபாவளியாகக் கொண்டாடும் நரகாசுரன் வதையை இந்துமதம் எப்படி வக்கிரத்து உருவாக்கியது எனப் பார்ப்போம். பூமியைப் பாயாகச் சுருட்டி கடலுக்குள் அசுரன் ஒருவன் ஒளித்து விட, விஷ்ணு மூன்றாவது அவதாரமாகப் பன்றி அவதாரம் எடுத்து மீட்டு வந்து, பூமாதேவியை விபச்சாரத் தளத்தில் புணர்ந்து நரகாசுரனைப் பெற்றதாக இந்துமதம் கூறுகின்றது. இந்தப் பிறப்பு எப்படிப்பட்டது. இன்றைய நவீன கொலிவூட் சினிமா பொலிஸ் படங்கள் போல், மீட்பவர்கள் அப்பெண்ணைப் புணர்வது என்ற வடிவில் பூமியைப் புணர்வதாகக் கதை உள்ளது. ஆணாதிக்கக் கண்ணோட்டப்படி, மீட்கப்படுவது எப்போதும் பெண். மீட்பவர் எப்போது ஆண். மீட்ட பின் எப்போதும் புணர்வது என்று உலகப் பண்பாடு ஒரே பொதுக் கண்ணோட்டத்தில் காணப்படுகின்றது. இந்த இயற்கை பற்றிய ஆணாதிக்க இந்துமதக் கண்ணோட்டத்திலும் பிரதிபலிக்கின்றது.

விஷ்ணுவின் கற்பழிப்புக் கதையைப் பார்ப்போம். பத்மப்புராணம் உத்தரக் காண்டம் 263 இல், ஞானி ஜலந்தரின் மனைவி விராந்தா மீது ஆசைப்பட்ட விஷ்ணு அவள் கற்பைச் சூறையாடத் தீர்மானித்தார். அதன்படி அவளை ஏமாற்றிக் கற்பழித்தார். இதையடுத்து விராந்தா கோபத்துடன் சபித்ததைப் பார்ப்போம்;. ''ஓ, விஷ்ணு! பிறர் மனைவியின் கற்பைக் குலைப்பது உனக்கு வெட்கமாக இல்லையா? ஞானிபோல் தோற்றமளிக்கிறாய்; த்தூ, கடைகெட்ட குற்றவாளி"27 என்று சபித்தாள். கடவுள்களின் கற்பழிப்பை இந்து மதம் நியாயப்படுத்தும்போது, பெண்கள் எப்படி இந்து இராஜ்ஜியத்தில் கற்புரிமையைப் பாதுகாக்க முடியும். இந்து மதம் ஆணாதிக்க மதம் அல்லவா?

எதிரியைத் தோற்கடிக்க எதிரியின் மனைவியைக் கற்பழிக்குமாறு சிவன் வழிகாட்டுகின்றார். இந்து மதத்தின் மூத்த கடவுள் சிவனுக்கும் சங்காசுரனுக்கும் 100 வருடமாக யுத்தம் நடந்ததாம். சங்காசுரன் என்ற அசுரனைக் கடவுளால் கொல்ல முடியவில்லையாம். ஏன் என்று ஆராய்ந்த சிவன் காரணத்தைக் கண்டறிந்தாராம். சங்காசுரனின் மனைவி கற்புடையவள் என்பதால் சங்காசுரனை அழிக்கமுடியாது எனக் கண்டராம். சிவன் சங்காசுரன் வேடம் போட்டுச் சென்று துளசியைக் கற்பழித்தபின், சங்காசுரனைக் கொன்றாராம். இதன் பின் துளசி உண்மை அறிந்து ''ஓ, சிவனே, கல்நெஞ்சம் படைத்த வஞ்சகனே! என் கணவரைச் சதி செய்து கொன்று விட்டாய். நீ கல்லாகப் போ!"27 என்று சபித்தாள். மகாபாகவதப் புராணம் (9,24,25) இல், கீழ்ச் சாதிப் பெண் இகழ்ந்தாலும், மேல் குலத்தைச் சேர்ந்தவன், பெண்ணின் கற்புரிமையை அழிக்க தர்மசாஸ்திரம் அங்கீகரிப்பதுடன், இது மேல் சாதிப் பிரிவுக்குப் பெருமையைக் கொடுப்பதாகும் என்று விளக்கி கற்பழிப்பை ஊக்குவிக்கின்றது. துளசி கீழ்ச் சாதிப் பெண்ணாக இருப்பதால் அவளைக் கற்பழித்த சிவனின் வெற்றியை இந்து மதம் போற்றுகின்றது. இதைப் புராணமாகக் கூற, நாம் கேட்டு மௌனம் சாதித்து ஆணாதிக்க மரபில் அங்கீகரிக்கின்றோம். இந்த இந்து மதத்தைப் பெண்கள் எப்படிப் போற்றமுடியும்?

சங்கரனின் (சிவனின்) காமம் பெண்களை ஓட வைக்கின்றது. சிவனுக்குக் காமம் ஏற்பட மோகினியைக் கட்டிப்பிடிக்க அவள் தப்பி ஓடினாளாம். அதை மகா பாகவதப் புராணம் பெண் யானையைக் காமம் பிடித்த ஆண் யானை விரட்டுவது போல், மோகினியைச் சங்கரன் துரத்திச் சென்றாராம். வீதிக்கு வீதி இன்று ஆணாதிக்க வக்கிரத்தால் காமம் மேலிட, வதைக்குள்ளாகும் பெண்கள் படும்பாட்டை நாம் அறிவோம். ஆனால் நாம் வழிபடும் கடவுள் சிவனும் இதைத்தான் செய்தான் என்று தெரிகின்றபோதும், அதை நியாயப்படுத்தும் போதும், இதைச் சகித்து வழிபடுவது கேவலமானது. இது பெண்களைக் கற்பழிக்க மறைமுகமாகவும், நேரடியாகவும் துணைபோவதாகும். என்ன செய்வது என்பது எம்முன்னுள்ள அடிப்படையான கேள்வியாகும்.

கடவுள்களின் (பிரம்மா, விஷ்ணு, சிவன்) கூட்டுக் கற்பழிப்புகளுக்கு ஊடாகவே இந்துமதம் வக்கரித்து உருவானது. பாவிஸ்ய புராணத்தில் அத்திரி மாமுனிவரின் மனைவி அனுசூயாவின் அழகில் காமம் கொண்ட பிரம்மா, விஷ்ணு, சிவன் கூட்டாகச் சேர்ந்து கட்டிப்பிடித்து கற்பழிக்க முயன்ற போது அனுசூயா சபித்தாள். சாதாரணப் பெண்கள் ஆணாதிக்கக் கடவுள்களின் கற்பழிப்பு முயற்சிகள், கற்பழிப்புகளில் பிழைத்து வாழ்வது என்பது பெரும் போராட்டமாகவுள்ளது. இன்று அந்தக் கடவுள்களின் பெயரில் கற்பழிப்புகள் மற்றைய மதப் பெண்கள் மீதும், சாதி குறைந்த பெண்கள் மீதும் சர்வசாதாரணமாக நிகழ்கின்றது. இதுதான் இந்துமதத்தின் ஆணாதிக்க ஜனநாயகம்.

மகளுடன் உறவு கொண்ட பிரம்மன். பிரம்மன் தன் மகள் சரஸ்வதியுடன் உறவு கொண்டதாக ஸ்ரீமாதா பாகவதம் 3ஆவது காண்டம் 12 ஆவது அத்தியாயத்தில் கூறப்படுகின்றது. ஆணாதிக்க வக்கிரங்கள் சொந்த மகளையும் விட்டுவிடுவதில்லை என்பதை அண்மைய ஆதாரப்பூர்வமான நிகழ்ச்சிகள் காட்டுகின்றன. அது இன்று பெண்களாலும் நடத்தப்படுமளவுக்கு ஆண் - பெண் என்ற விதிவிலக்கு இன்றி தொடருகின்றது. வரைமுறையற்ற பாலியல் நிலவிய சமூகத்தில் இருந்து வளர்ச்சி பெற்று ஆணாதிக்க அமைப்பு உருவான பின்பு, மகளைத் தந்தை உறவு கொள்வது என்பது வக்கரித்துப்போன சமூக நிகழ்வாகும். உலகளவில் பாலியல் நெருக்கடி வளர்ச்சி பெற, சொந்தக் குழந்தைகளைப் பலியிடப்படுவது சர்வ சாதாரணமாக நிகழ்கின்றது. இந்து மதம் இதைத் தனது புராண இதிகாசங்கள் ஊடாக நியாயப்படுத்தி ஊக்குவிக்கின்றது.

கற்பழித்த பின் கொன்ற விஷ்ணுவின் பின்னால் ஊடுருவி நிற்பது அற்பத்தனமான ஆணாதிக்கக் காமமே. இந்திரனுக்கு ஆதரவாக நிரபராதியான பராகுவின் மனைவியின் தலையை வெட்டி எறிந்தான். இதை அடுத்து பராகு சபித்ததைப் பார்ப்போம். ''ஓ, விஷ்ணு! மாதர் குலத்தைக் கொல்லலாமா? ஒரு பாவமும் அறியாத ஒரு பெண்ணை ஒழுக்கக்கேடு விளைவித்தப் பின் கொன்று விட்டாயே. தமோ குணம் உள்ள கெட்ட குணமிக்கவனே! நீ பாம்பு போல் நடந்து வருகிறாயே!" என்று பார்ப்பன ஆணாதிக்கச் சதிராட்டத்தை வெட்டவெளிச்சமாக்குகின்றான்.

முப்பத்து முக்கோடி தேவர்களின் குருநாதர் பிரகஸ்பதியின் ஒழுக்கம் என்ன? ஸ்கந்த 9, அத்தியாயம் 20 இல், நாதர் பிரகஸ்பதி தனது அண்ணன் மனைவி கர்ப்பமாக இருந்தபோது, முறைகேடாக உறவு கொண்டு பிறந்த குழந்தைதான் (த்வஜாபுத்திரன்) பரத்வாஜா ஆவார். இந்த மகன் தந்தையை மிஞ்சிய காம வெறியன் என்பதைத் தேவி பாகவதப் புராணம் விளக்குகின்றது. இந்தப் பரத்வாஜா கிராதிஸி அப்ஸரா என்ற பெண்ணை நினைத்து விந்து வெளியேறியபோது உருவானவரே, வேதவிற்பன்னர் துரோணர் என்று மகாபாரதம் ஆதிபர்வதம் அத்தியாயம் 131இல் கூறுகின்றது. எப்படி இருக்கிறது இந்து புராணங்கள். கொஞ்சம் சிந்தியுங்கள். ஆணாதிக்க இந்துமதத்தின் பிறப்புகளே விசித்திரமான வக்கிரமாகும்.

தேவேந்திரனின் கள்ள உறவுகளும் வைப்பாட்டித்தனமும் பற்றி வால்மீகி இராமாயணம் பாலசர்கா 48 இல், கூறி நியாயப்படுத்துகின்றது. வேத ரிஷிகளில் சிறந்த கௌதம ரிஷியின் பத்தினி அகல்யாவுடன் பாலியல் சுகம் அனுபவித்த பின், அவளின் இன்ப நிலையில் தேவேந்திரன் விடைபெறுகின்றான்;. பெண்களின் இயற்கையான பாலியல் தேவைகளை மறுத்து, வைப்பாட்டித்தனம் ஆண்களின் வக்கிரத்தில் உருவாகி இருப்பதற்கு இந்தியாவில் இந்து மதம் காரணமாகும்;. கடவுள்கள் என்று போற்றி வழிபடும் ஆணாதிக்க வக்கிரம் பிடித்த கதைகள் இதன் மூலமாகி ஆதாரமாகின்றது.

பெண்ணைக் கடத்திச் சென்று கற்பழித்து சுகம் அனுபவித்த கடவுள் சந்திரன். திரிபுவனம் வெற்றி கிடைத்ததையடுத்து சந்திரன் இராஜசூய யாகம் செய்தார். இந்த நேரம் சந்திரன் தனது குருநாதர் பிரகஸ்பதியின் மனைவி தாராவைப் பலாத்காரமாகத் தூக்கிச் சென்றான்;. இந்தக் கட்டத்தில் அசுரர்களுடன் ஏற்பட்ட யுத்தத்தில் இப்பெண்கடத்தல், தேவர் அணியைப் பிளந்து விடும் என்று கருதி சந்திரனுக்குப் பிரம்மன் புத்தி கூறியதன் பேரில், தாரா விடுவிக்கப்பட்டாள். ஆனால் சந்திரன் பலாத்காரமாக உறவு கொண்டு பிறந்த குழந்தை புத்தாவைக் கொடுக்க மறுத்துவிட்டான். இதன் மூலம் இந்து மதம் ஆண்களுக்குக் கூறும் போதனை, பெண்களைக் கடத்திச் சென்று ஆணாதிக்கச் சுவைகளை அனுபவியுங்கள் என்பதே.

சாதி கடந்த வசிட்டரின் ஆணாதிக்க அத்துமீறல் பெண்களின் கற்புரிமையைச் சூறையாடுவதாக இருந்தது. விஷ்ணுவின் அவதாரப் புருஷன் இராமச்சந்திரபிரபுவின் குரு வசிட்டர், சாதி குறைந்த பெண் அஷ்கமாலாவின் மீது காமம் கொண்டு சூறையாடினான். இந்த வசிட்டரின் காம லீலைகளைப் போட்டிக்காரரான விசுவாமித்திரன் புட்டு வைக்கின்றார் மகாபாரதம் ஆதி பர்வதம் அத்தியாயம் 27 இல்.

விசுவாமித்திரனின் கட்டற்ற பாலியல் நடத்தையை ஆராய்வோம். தவம் இருந்த விசுவாமித்திரன் மேனகாவைக் கண்டு மயங்கி காமம் கொண்டு உறவாடினான். இந்த உறவால் சகுந்தலா பிறந்தாள். இந்தச் சகுந்தலா துஷ்யந்த மன்னனிடம் கண்ட இடத்தில் உறவு கொண்டு பாரதனைப் பெற்றாள். இப்படி தான் இந்து முனிகளின் உறவுகள், பழக்க வழக்கங்கள் காமத்தை அடிப்படையாகக் கொண்டு கண்ட இடத்தில் நடந்தது.

கண்ட இடத்தில் காமம் கொண்டு; உறவு கொண்ட மித்திர வருணன். வால்மீகி இராமாயணம் உத்தரக்காண்டம் சர்கா 55 இல், மித்திரவருணன் ஜலதேவதாவுக்குச் சென்றான். ஊர்வசி வருணாலயத்தில் குளித்துக் கொண்டிருந்ததைக் கண்டு காமம் கொண்டு உடலுறவு கொண்டான். இதனால் பிறந்த புத்திரர்களே மன்னர் நிமாவும், மகரிஷி வசிட்டரும்.

மானின் வயிற்றில் இருந்து பிறந்த ஸ்ரங்கி ரிஷி. ஒருநாள் விபாந்தக முனிவர் குளித்துக் கொண்டிருந்த போது, வனமோகினி ஊர்வசி அவர் அருகில் வர, காமம் கொண்ட முனிவருக்கு விந்து வெளியேறியதாம். அது தண்ணீரில் கலந்துவிட, அதை ஒரு பெண் மான் குடித்து கருவுற்று ஸ்ரங்கி ரிஷியைப் பெற்றதாம். மானில் இருந்து பிறந்ததால் இருகொம்பைக் கொண்ட அவருக்கு ~ஸ்ரஸ்ய ஸரங்கி| என்ற பெயர் வந்ததாம். இந்து மதத்தின் விசித்திரமான ஆணாதிக்க வக்கிரமான பிறப்புகளில் இது ஒன்று.

விதியின் பின்னால் ஆணாதிக்க வக்கிரத் தேவையை அனுபவிக்க முயலுதல். தேவி பாகவதப் புராணம் (6,26,36) இல், தேவர்களின் ஆலோசகரும், திரிகால ஞானியும், மகா பண்டிதரும், ஜோசியருமான நாரதர் சஞ்சய மன்னனைப் பார்க்கச் சென்றார். அந்த மன்னனின் மகள் சுதந்தியைக் கண்டு காமம் கொண்டு, இளவரசி என் மனைவியாகப் பிறந்து இருக்கின்றாள் என்ற திருவாய்மொழிந்தார். மன்னன் கோபம் கொண்டு குரங்கு முகத்தினனாக மாறு என்று சாபம் இட்டார். இன்றைய சாமிகள் போல் ஆணாதிக்கத் தேவைகளைப் பிறப்பின் தொடர்ச்சி, எனக்காகப் பிறந்தது போன்ற கடவுள்களின் மோசடிகளின் ஊடாக அனுபவித்ததையும், அதைக் கோரியதையும் இந்துமதப் புராணங்கள் நியாயப்படுத்தல்கள் ஊடாக அம்பலப்படுத்துகின்றன.

குருவுக்குப் போதை ஊட்டிவிட்டு அவரின் மனைவியுடன் கூடிக் குலாவுவதை இந்து மதம் நியாயப்படுத்துகின்றது. தேவி பாகவதப் புராணத்தில் கீரனாத் புத்திரன் சுதீஸ்னா தனது குருவுக்குப் போதையைக் கொடுத்து மயக்கத்தை ஏற்படுத்திய பின், அவரின் மனைவியுடன் உடலுறவு கொண்டு வந்தான்.

வேத வியாசர் தனக்குத் தானே புணர்ச்சி செய்த வக்கிரமான ஆணாதிக்க வெளிப்பாட்டை இந்துமதம் போற்றுகின்றது. தேவி பாகவதப் புராணம் (1,10,31,34,14,6) இல், இவர் தனக்குத் தானே காமச் சுகம் தேடும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். அக்னி, ஆரணி தேவதைகளை நினைத்து தனது ஆணாதிக்க வக்கிரத்தினூடாகத் தனக்குத் தானே புணர்ச்சி செய்தார். இதனால் வெளியேறிய விந்தில் இருந்து ~சுகா| என்ற புத்திரன் பிறந்தான். வேத வியாசர் சந்திரவன்சாவை மனைவியாகக் கொண்டிருந்த அதே நேரம், கிராதலி என்ற விபச்சாரியுடன் உறவு கொண்டார். இந்து மதத்தின் மகிமைகள், அற்புதங்கள் இவை. வக்கிரமான ஆணாதிக்க முகங்கள் இவை.

இலட்சுமியின் கற்புரிமையும், பெண்ணின் ஆணாதிக்கச் சந்தேகங்களையும் தேவி பாகவதப் புராணம் தெளிவாக நிர்வாணமாக்குகின்றது. பெண்ணின் கற்பு பற்றி இந்து ஆணாதிக்கம் பெண்களுக்கு உபதேசிக்கும் வன்முறையைத் தாண்டி, இலட்சுமி விஷ்ணுவைத் திருமணம் செய்யும் முன்பே தனது கன்னி பருவத்தில் தேவேந்திரனால் பலாத்காரமாகக் கற்பழிக்கப்பட்டாள். இதைவிட ஒருநாள் துர்வாசமுனிவர் இந்திரனைப் பார்க்க வந்தபோது, இந்திரன் ஆணாதிக்கக் காமத்தில் இலட்சுமியை வெறித்து பார்த்தபடி இருந்ததால், வந்த முனிவரை வரவேற்கக்கூட முடியவில்லை. ஒருநாள் விஷ்ணு தனக்குள் தானே சிரித்து கொள்ள, இலட்சுமி சந்தேகப்பட்டு, ~உமது சிரம் துண்டிக்கப்படட்டும்|27 என்று சாபம் போட்டாள். ஆணாதிக்க அமைப்பில் பெண்கள் மீதான கற்பழிப்பு, வெறித்த காமப் பார்வைகள், பெண்ணின் சந்தேகங்கள் கடவுள்களையே விட்டுவிடவில்லை. சமூகத்தின் இயல்பான நடத்தைகளை, மனிதன் தான் கற்பனையில் உருவாக்கிய கடவுளுக்கும் பொருத்தியதன் ஊடாக அக்காலக்கட்டச் சமூகத்தைப் புரிந்து கொள்ள இவை உதவுகின்றன.

நன்றி: www.tamilcircle.net

- தொடரும்.


இந்து மதத்தில் ஆண் - பெண்ணின் வக்கரித்த உறவுகள் – பாகம்-4.

அரசனாக விரும்புபவன் என்ன செய்யவேண்டும் என்று இந்த மத ''மஹோநதி" நூல் கூறுவதைப் பார்ப்போம்.

''சாவம் ஹ்ருதய மாருஹ்ய நிர்வாஸா, ப்ரேத பூகத்:அர்க்கபுஷ்ப

ஸஹஸ்ரேணாப்யக்தேன ஸ்வீயரேதஸா தேவீம்ய: பூஜ யேத்

மகத்யா ஜப்ன்னே கைக சோமனும் ஸோசிரேணைவ காலேன

தரணீப்ரபுதாம் வ்ரஜேத்"

அதாவது, சுடுகாட்டில் நிர்வாணமாகப் பிணத்தின் மார்பில் உட்கார்ந்து கொண்டு, தனது வீரியத்தில் (ஆண் விந்து) தோய்க்கப்பட்ட ஆயிரம் எருக்கம் பூக்களினால் ஒவ்வொரு தடவையும் மந்திரஞ்சொல்லி தேவியைப் பூசை செய்கிறவன் வெகு சீக்கிரத்தில் அரசனாவான். பாலியல் வக்கிரத்தில் இருந்து வழிகாட்டும் இந்துமதம், எப்படிப்பட்டது என்பதற்கு இவைகளே சாட்சிகள். இந்த ஆபாசமான கூத்துகளைப் பார்ப்பனர் அல்லாத மக்கள் புரிந்து கொள்ளக் கூடாது என்பதால்தான், சமஸ்கிருத மொழியில் ஆணாதிக்க ஆபாசமாக வக்கிர மந்திரம் சொல்லி மக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிக்கின்றனர்.

சிவனுக்குச் சமமான தகுதியடைய என்ன செய்யவேண்டும்?

'

'... சவஸ்ய ஹ்ருதி ஸமஸ்திதாம்; மஹாகாலேன தேவனே

மாரபுத்தம் ப்ரயூர் வதீம், தாம் த்யாயேத் ஸ்மோவதனாம்

விதத்ஸீரதம் வையம் ஜபேத் ஹைஸ்ரம்மிய: ஸசங்கரஸமோ

பவேந்"

- என்று இந்துமத நூலான மஹோநதி கூறுகின்றது. இதன் அர்த்தம், பிணத்தின் மார்பில் இருந்து மகாகாலனைப் புணர்ந்து கொண்டிருப்பவளும், புன்சிரிப்போடு கூடிய முகத்தையுடையவளுமான தேவியைத் தியானித்தபடி, ஒரு பெண்ணுடன் புணர்ந்தபடி ஆயிரம் உருவேனும் ஜெபிக்கின்றவன் சிவனுக்கு ஒப்பாவான்.

இந்து மத சிவன் பக்தர்கள் முதல் அனைத்து பக்தர்கள் ஈறாக இதை எப்படிப் போற்றமுடிகின்றது? இவை பெண்கள் மீதான வக்கிரமான ஆணாதிக்கப் பார்வையில் இருந்தே, இந்துமதக் கோட்பாடுகள் தனிப்பட்ட சொந்த நலன் சார்ந்து வக்கரித்து சொன்னவைகளேயாகும் என்பதை இது காட்டுகின்றது. இதையொத்த மற்றொரு வக்கிரத்தைப் பார்ப்போம்.

கிருஷ்ண பட்சத்து சதுர்த்தசி நடு இரவில் நீராடி, சந்தனம் இட்டு, சிவந்த மாலை அணிந்து, சிவந்த உடையணிந்து தனியிடத்தில் இருந்து கொண்டு, இளமையும் அழகும் நிறைந்த ஐந்து ஆண்களைப் புணரக் கூடிய புன்சிரிப்பும் அவிழ்த்துவிட்ட கூந்தலையுமுடைய பெண்ணுக்கு, ஆடை அணிகள் கொடுத்து, மகிழ்ச்சியுண்டாக்கி, பின் அவளின் ஆடைகளை, அகற்றி நிர்வாணமாக்கிப் பூசிக்கவேண்டும். பின் அவளைப் புணர்ந்து பத்தாயிரம் மந்திரம் சொல்பவனுக்குச் செல்வம், ஆயுள், புத்திரப்பேறு, சுகம், நல்ல மனைவி கிடைக்கும். பாவங்கள் அவனை அணுகாது. ஆறுமாதம் காலையில் எழுந்து நூறு உரு ஜெபித்தால் சுக்கிராச்சாரியை விடச் சிறந்த கல்விமான் ஆவான். இவ்வாறு பூசா விதியையும் அதன் பலன்களையும் இந்து மதம் கூறுகின்றது.

புணர்வதற்கு, அதுவும் வக்கரித்து இவ்வாறு செய்வதன் ஊடாக நல்ல மனைவியை அடைவான் என்று கூறும் இந்துப் புரவலர்களின் ஆணாதிக்க வக்கிரங்கள்தான் இவை. சுக்கிராச்சாரி போன்ற மண்டைக் கிறுக்கர்களின் அறிவு உளறல்தான் இவை என்று இந்தக் கூத்தின் மூலம் அம்பலமாகின்றது. அதாவது அழகுராணி போட்டி போன்றனவற்றின் தோற்றத்துக்கு இந்துமதமே மூலமாகின்றது அல்லவா? ஆடை கொடுத்து, அதை விதவிதமாக அவிழ்த்துவிட்டு, இரசித்துப் புணருவதே இன்றைய ஏகாதிபத்திய அழகுராணிப் போட்டி. இதையே இந்து மதம் செய்து புணரும்போது அங்கு செல்வம், ஆயுள், புத்திரப்பேறு, சுகம், நல்ல மனைவி கிடைப்பாள் என்பதன் ஊடாக இருக்கும் ஒற்றுமைதான், அண்மையில் இந்தியாவில் நடந்த அழகுராணிப் போட்டிகளும் தெரிவுகளும்.

குழந்தை பெற வேண்டுமா அதற்கும் வழியை இந்துமதம் கூறுகின்றது. வேதங்கள் இதிகாசங்கள் கூறும் புத்திரக் காமேஷ்டி யாகத்தின் மூலம் எதைச் செய்யச் சொல்லுகின்றது எனப் பார்ப்போம்;. புத்திரன் வேண்டுபவன் தனது மனைவியைக் குதிரையின் அருகில் அனுப்பிவைப்பான். அவள் அருகில் சென்று,

'

'1. கணானாம் த்வா, கணபதிம் ஹவாமஹே (வஸோமம)

2. ப்ரியாணாம் த்வா: ப்ரியாபதிம் ஹவாமஹே (வஸோமம)

3. நதீனாம் த்வா நிதிபதிம் ஹவாஹமஹே (சோமம)"


- என்று கூற வேண்டும். இதன் அர்த்தம், ''ஓ குதிரையே! கணங்களின் தலைவனும், விருப்பத்தை நிறைவேற்றும் தலைவனும், பொருட்களின் தலைவனும் ஆகிய உன்னை அழைக்கின்றேன். நீ எனது கணவனாக இருக்கவேண்டும். பிறகு பெண் குதிரைக்கு அருகில் படுத்துக் கொண்டு, ''ஓ குதிரையே! கர்ப்பத்தை உண்டு பண்ணுகிற வீரியத்தை இழுத்து யோனியில் இடுகிறேன். அதேபோல் நீயும் செய்ய வேண்டும்."37 இப்படி சொன்னவுடன் பெண்ணைத் துணியொன்றால் மூடிவிடவேண்டும். அவள் அதன்பின் ''விந்துவைத் தன்னுள் வைத்துக் கொண்டிருக்கின்ற குதிரை அதை என்னிடத்தில் வைக்கட்டும்;"37 பிறகு ஆண் குறியைத் தனது கையால் பெண் குதிரையின் யோனியில் வைப்பாள். பின் ஆண் குதிரையி;டம் சென்று, நான் செய்யும் காரியத்தை எனக்குப் பதிலாக நீ செய்ய வேண்டும் என்று வேண்டுவாள். இதையே யஜீர் வேதத்தில் புத்திரக் காமேஷ்டி செய்யக் கோருகின்றது. இராமனைப் பெற்ற மலட்டுத் தசரதன் செய்த யாகமும் இதுதான். இன்று குழந்தை வரம் வேண்டிக் கோயில் செல்லும் பெண்கள், மலட்டுக் கணவன் ஊடாக அல்லது ஆணாதிக்க வக்கிரத்தில் முன்கூட்டியே விந்தை இழக்கும் கணவனுக்குக் குழந்தையைப் பெற முடியாது. அவர்கள் கோயில் பூசாரிக்கு மட்டுமே குழந்தையைப் பெற்றுப் போடமுடியும்.


குழந்தை பெற இந்து மதம் மிருகத்துடன் புணரும்படி முன்வைக்கும் இந்து வேத வக்கிரங்களில், உண்மையில் யாகம் செய்யும் முனி பார்ப்பனர்களின் ஆணாதிக்கக் காம இச்சையை அப்பெண்களிடம் தீர்க்கும் மாற்று வழியாகும். இந்தப் பார்ப்பனர்கள் திருமணத்துக்கு முன் பெண்ணை அனுபவிக்கும் உரிமையைக் கொண்டிருந்ததுடன், பார்ப்பனர்களைப் புணர்வது பெண்களின் புண்ணியத்தைக் குறிக்கும் என்ற இந்துப் பண்பாடுகளும் சமுதாயத்தில் இருந்துள்ளது. இழந்துபோன பல சொர்க்கத்தை மீளக் கொண்டு வரும் இந்து இராஜ்ஜியக் கனவை அடிப்படையாகக் கொண்டே, இன்று மீளவும் பாசிசச் சதிராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.

தங்கமும் வெள்ளியும் உருவான வக்கிரத்தைப் பார்ப்போம். மகாவிஷ்ணு மோகினி வேஷம் போட்டு அசுரர்களை மோகிக்கும் படி செய்வதாக அறிந்த பரமசிவன், கைலாயத்தில் இருந்து பார்வதியுடன் அவரைக் காணச் சென்றாராம்.

அவரிடம் மோகினி வேஷத்தைப் பார்க்க வேண்டும் என்று சிவன் கேட்டாராம். அதற்கு மகாவிஷ்ணு, காமுகர்தான் அதை வணங்கி மோகிப்பர் என்ற கூறி மறைந்தாராம்.

சிவன் அவரைத் தேடியபோது, பெண் வேஷத்தில் பெண்கள் விளையாடிக் கொண்டிருந்த மைதானம் ஒன்றில் நின்றாராம். சிவன் மகாவிஷ்ணு மீது மோகம் கொண்டு மனைவி உமாதேவி நிற்பதையும் கூட எண்ணாது காமம் கொள்ள, மகாவிஷ்ணு பந்தடிக்கும் கவனத்தில் ஆடையை நழுவவிட்ட நிலையில், சிவன் நிற்பதைக் கண்ட மகாவிஷ்ணு என்ற மோகினி மரத்தின் பின் ஒளிந்தாள். சிவன் அவளைப் பிடிக்க அவள் திமிரியபடி நிர்வாணமாகத் தலைவிரி கோலமாக ஓட, சிவன் துரத்திய படி தன்னுடைய ஆண்விந்தைக் காம வெறியில் சிதறவிட்டபடி துரத்தினர். விந்து வெளியேறிய நிலையில் மகாவிஷ்ணு மறைந்து போனாராம். சிவனின் விந்து எங்கு எங்கெல்லாம் விழுந்ததோ, அவைதான் தங்கம், வெள்ளியாகிப் போனதாம். நம்புங்கள்; இந்த இந்து மத வக்கிரத்தை.

பெண்கள் நீராடி, அழகுபடுத்தி தலையவிழ்த்து கோயில் செல்லும் போது, வீதி தோறும் நிற்கும் ஆணாதிக்கச் சிவன்கள் எல்லாம் இந்தக் கூத்தைத்தான் செய்கின்றனர். கும்பிடும் கோயில் சிற்பங்கள் புணர்வின் வக்கிரத்தில் பக்தியின் பின்னால் அரங்கேற்றுவதையே இந்துமதம் எமக்குப் போற்றித் தருகின்றது. ஆணாதிக்கச் சிவன் தனது மனைவியைத் தாண்டி மற்றைய பெண்களைப் புணரும் தன்மையும், வக்கிரமும் நியாயப்படுத்தும்போது உரிமை மறுக்கப்பட்ட பெண் கவர்ச்சியால் எதையும் சாதிக்க முடியும் என்கின்றது.

உலகத்தைக் கடவுள் படைத்தான் என்ற கற்பனைகள் போல், தங்கம் வெள்ளி கதையும், இந்து மதத்தின் பொய்மையை ஆணாதிக்க வக்கிரத்தினூடாக அம்பலப்படுத்துகின்றது. பெண்கள் தமது மார்பை இந்தா பிடி என அழைப்பவர்கள் என்று கருதும் ஆணாதிக்க ஆண்கள் சிவனின் அதே வாரிசுகள்தான். இன்று சினிமா முதல் ஆணாதிக்கப் பண்பாட்டுத் தளம் பெண்ணின் மார்பைச் சிவனைப் போல், மோகித்து காட்டும் எல்லா விளம்பர மற்றும் கலை இலக்கியக் கோட்பாடுகள் வக்கிரத்தின் உச்சமான பன்றித்தனமாகும்;. இன்றைய ஜனநாயகச் சமுதாயம் ''காதலைப் பாலியல் வெறியாகவும், மகிழ்ச்சியைக் களிவெறியாட்டமாகவும், துயரத்தை விரக்தியாகவும்" (ஏப்பிரல் மே 2000) மாற்றிவிடும் இன்றைய பண்பாடுகளின், இறுகிய ஆணாதிக்க வக்கிரத்தையே அன்று முதல் இந்துமதம் உருவாக்கி வளர்த்தெடுத்தது. நீங்கள் கழுத்திலும், மார்பிலும் தவளவிடும் தங்கம், வெள்ளி எல்லாம், சிவனின் விந்தாக இருப்பதையே இந்து மதம் பெண்களுக்கு அறிவ+ட்டுகின்றது. இந்து மதத்தை வழிபடும் மானம் வெட்கமற்ற ஆண்கள், குறிப்பாகப் பெண்கள் இதைச் சகித்துக் கொள்ளலாம்;. ஆனால் அறிவுள்ள மானவெட்கம் உள்ளவன் இதை எப்படி சகித்துக் கொள்வது. இதை வேரறுக்க இந்து மதத்தையே நொறுக்கவேண்டும்.

அருணகிரிநாதர் என்ற நாயனார் ஆயிரம் ஆயிரம் பெண்களிடம் அற்பத்தனமான பாலியல் சுகம் கண்ட ஆணாதிக்க வெறியன் என்பது உங்களுக்குத் தெரியுமா? இல்லையென்றால் அவனின் ஆணாதிக்க வரலாற்றைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

ராகு, கேது பிறப்பு எப்படிப்பட்டது? தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்தனராம். அப்போது அழகிய பெண்களும், அமிர்தமும் கிடைக்க, தேவர்கள் அமிர்தத்தையும், அசுரர்கள் பெண்களையும் விரும்பினராம். மகாவிஷ்ணு பெண் வேடத்தில் தேவர்களுக்கு அமிர்தம் பரிமாறினாராம். அப்போது இரண்டு அசுரர்கள் கள்ளத்தனமாகத் தேவருடன் அமர்ந்து விருந்து உண்டனராம். இதை அருகில் இருந்த சந்திரன் காட்டிக் கொடுக்க, மகாவிஷ்ணு அமிர்தம் பரிமாறும் அன்னவெட்டியால் அசுரர்களை வெட்டினராம். இந்த அசுரர்களில் ஒன்று அசுரப் பாம்பாம். மற்றது அசுர மனிதனாம். அமிர்தம் உண்டதால் அவர்கள் இறக்கவில்லை. வெட்டுண்ட தலையை மாற்றிப் பொருத்திவிட்டதால், தலைமாறி ராகு கேதுவானார்கள்;. நம்புங்கள். மக்களின் பல்வேறு வழிபாட்டு முறைகளைப் பார்ப்பனிய இந்து மதம் செரித்தபோது, இந்தமாதிரிப் புனைக் கதைகள் மூலமே பிறப்பு பற்றிக் கூறிச் சிறுவழிபாடுகளை அழித்தனர்.

இங்கு கடைந்து கிடைப்பது பெண்ணாக இருப்பதும், அதை விரும்பியவாறு பயன்படுத்த முடியும் என்ற புராண இதிகாச விளக்கங்கள், பெண்ணின் சுயத்தை அழித்து அடிமைப்படுத்துகின்றன. பெண்ணை ஒரு மனிதப் பிறவியாகவே மதிக்க மறுக்கின்றது இந்து மதம். அதைப் போற்றும்போதே ஆணாதிக்க வக்கிரம் கொப்பழிக்கின்றது.

தேய்பிறை வளர்பிறை பிறந்த வரலாற்றைப் பார்ப்போம். சந்திரனுக்கு இறைவன் அருளியதாகக் கூறும் கீதையில், மிகப் பெரிய நட்சத்திரம் சந்திரன் என்று அறிவியலுக்குப் புறம்பாகக் கூறுகின்றது. நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இந்து மத விளக்கப்படி 27 மனைவிமார் இருந்தும் சந்திரன் ரோகினி என்ற பெண் மீதே அதிக அன்பாக இருந்தானாம். மற்றவர்களை ஏறுஎடுத்தும் பார்ப்பதில்லை. இந்தப் பெண்களுக்கு இன்றைய பெண்ணியவாதிகள் கோரும் ஓரினச் சேர்க்கையைப் பற்றித் தெரியாததாலோ என்னவோ, தந்தை தக்கனிடம் போய் முறையிட, தந்தை சந்திரனுக்குத் ''தேய்ந்து அழியக் கடவது" எனச் சாபம் போட்டதால் தேய்பிறையானதாம். இதனால் சிவனிடம் போய் முறையிட, அந்த ஆணாதிக்கச் சிவன் தனது தலையில் அணிந்து, ''வளரக் கடவது" என்று சாபம் போட்டாராம். பெண்ணின் பாலியல் பிரச்சினைக்கு, இன்றைய பெண்ணியவாதிகளின் ஆண் எதிர்ப்பு போல், சுடச்சுடத் தீர்வு கொடுத்த தக்கன் இன்றைய பூர்சுவா பெண்ணியவாதிகளின் மேதையல்லவா?

முனிவர்கள், ரிஷிகள் பிறந்த வரலாறே வக்கிரமானது. இந்து புராண, இதிகாச மேதைகளின் பிறப்புகளை ஆராய்வோம்.

''கலைக் கோட்டு ரிஷி மானுக்கும், கௌசிகர் குசத்திற்கும், ஜம்புகர் நரிக்கும், கவுதமர் மாட்டிற்கும், அகஸ்தியர் குடத்திலும், மாண்டவியர் தவளைக்கும், காங்கேயர் கழுதைக்கும், கவுனர் நாய்க்கும், கணாதர் கோட்டானுக்கும், சுகர் கிளிக்கும், ஜாம்புவந்தர் கரடிக்கும், அஸ்வத்தாமன் குதிரைக்கும்"38 பிறந்தாக இந்;து புராணங்கள் கூறுகின்றன. இந்து பார்ப்பனப் புராண இதிகாச நாயகர்களின் தாய், அவர்களை யாருடன் இணைந்து பெற்றாள் என்பதை ஆணாதிக்க அடிப்படையில் விளக்க முடியாத பெண்ணின் புணர்ச்சி வடிவத்தை, மனிதன் அல்லாத மிருகப் புணர்ச்சியூடாக விளக்கியது. பரிசுத்த ஆவி இயேசுவின் தாய் மரியாவின் வயிற்றில் புகுந்ததால் இயேசு பிறந்தார் என்ற ஆணாதிக்க விளக்கம்போல், இந்த விளக்கம் மிருகப் புணர்ச்சியாக்கிவிடுவதில், தனது ஆணாதிக்க விளக்கத்தை இந்து மதமாக்கியது. பாலியல் நெருக்கடியால் ஆண்கள், பெண்கள் மிருகப் புணர்ச்சியில் ஈடுபடுவது இன்றைய எதார்த்தம்;. அண்மையில் பிரஞ்சு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகையிடம் கேட்ட கேள்வி, நீங்கள் வளர்ப்பு மிருகத்துடன் புணர்வதைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? இதை நீங்கள் செய்கின்றீர்களா? இன்று பல்வேறு வகையில் மனிதப் பெண்ணும், மிருகப் பெண்ணும் பெற்றெடுக்கும் குழந்தை, குட்டி மனித உருவத்தை ஒரு பகுதி கொண்டிருப்பதை அறிகின்றபோது, மனித - மிருகப் புணர்ச்சி அம்பலமாகின்றது.

பட்டினத்தாரின் ஆணாதிக்கம் பற்றிப் பார்ப்போம். ஒருநாள் பட்டினத்தார் விபச்சாரி வீட்டுக்குச் சென்றாராம்;. விபச்சாரியின் மகள் மேல் ஆசைப்பட்டு, அவளைப் புணர அழைத்தாராம். அவள் அம்மாவிடம் கேட்டு வருவதாக உள்ளே செல்ல, பட்டினத்தாருக்கு விந்து வெளியேறிவிட்டதாம். அந்த விந்தை ஒரு எருக்கந் தொன்னையில் பிடித்து வைத்திருந்தாராம். தாயின் சம்மதம் பெற்று வந்த மகள் புணர அழைத்தாளாம். அதற்குப் பட்டினத்தார் கோபத்தோடு ''உன்னை அழைத்தவன் தொன்னையிலே, என்னிடம் வந்தால் இடுப்பை ஒடித்து விடுவேன்"38 என்று கூறிவிட்டுச் சென்றாராம். அப்பெண் விந்து வீணாகக் கூடாது என்று நினைத்து, வாயினூடாக எடுத்து விழுங்கினாளாம்;. இதனால் அப்பெண் கருத்தரித்து குழந்தையைப் பெற்று எடுத்ததாக இந்துமத வரலாறு கூறுகிறது. நம்புங்கள்;. திருமணம் செய்யாது கருத்தரிக்கும் பெண்களே, உங்கள் நிலையை இந்துப் பண்பாட்டு ஆணாதிக்கத்திடம் சொல்லிப் பாருங்களேன் என்ன நடக்கின்றது எனப் பார்ப்போம். பெண்கள் பார்ப்பனச் சந்நியாசிகளுக்குப் பாய் விரித்துப் படுக்க வேண்டும் என்பதையே இது கோருகின்றது. இன்று இந்து இராஜ்ஜியமும், இந்த வக்கற்ற பண்பாட்டை ஏற்படுத்தி ருசிக்கவே படாதபாடு படுகின்;றது. விபச்சாரம் செய்யும் பட்டினத்தாரைப் போற்றுவதன் மூலம், சொந்தக் கணவனின் வைப்பாட்டித்தனத்தையும், விபச்சாரத்தையும் விமர்சனம் இன்றி அங்கீகரிக்க இந்துப் பண்பாட்டு விளக்கங்கள் வழிகாட்டுகின்றது.

குரங்கின் முகம் ஏன் இப்படி போனது தெரியுமா? இந்து மத விளக்கத்தைப் பார்ப்போம்;. இராமனை வழிபடும் அனுமானின் வழியில் வந்த குரங்கு ஒன்று, ஒருநாள் சூரியனின் செந்நிறத்தைக் கண்டு, அதை ஒரு பழமாகக் கருதி, அதன் மீது பாய, அது முகத்தைச் சுட்டுப் பொசிக்கிவிட குரங்கின் முகம் பொசுங்கிவிட்டதாம். பாவம் குரங்கும் இந்து பக்தர்களும். அனுமானை வழிபட்ட இந்து பக்தர்களின் முட்டாள்த் தனமல்லவா இங்கு சந்தி சிரிக்கின்றது.

வெள்ளைக்காரன் பிறப்பை ஒட்டி இந்துமதம் ''நல்ல குழந்தை பிறக்க வேண்டும் என்று ஒரு பிராமணன் தவம் இருக்கின்றான். உனக்கு நல்ல குழந்தை பிறக்கும் என்று சொல்லி கடவுள் அவனுக்கு வரம் கொடுக்கின்றார். ஒரு பெண்ணோடு சேர்ந்தால்தான் குழந்தை பிறக்கும். வேறு ஒன்றும் வழி கிடையாது. கடவுளின் ஆசீர்வாதத்தால் விந்து வழிந்து அவன் இருந்த இடத்திலேயே கீழே விழுந்து விடுகின்றது. ஒரு கொக்கு அதை எடுத்து சாப்பிட்டுவிட்டது. அந்தக் கொக்கின் வயிற்றில் பிறந்ததனால் வெண்காலியன். கொக்கு வெள்ளையாக இருப்பதால் வெள்ளைக்காரன், வெள்ளையாக இருக்கின்றான்."

எப்படி இருக்கின்றது இந்துமதப் புரட்டுகள். ஆணாதிக்கப் பாலியல், ஆண்களின் விகாரமான போக்கையும் அதன் கொப்பளிப்பையும் காட்டுகின்றன.

நாடார் சாதி மக்களைப் பார்ப்பனியம் இந்துமதத்துக்கு மாற்றியபோது, அடித்தட்டு மக்களின் வழிபாட்டுக் கடவுள்களையும் புணர்ந்து உறவுகளை உருவாக்கினர். இந்தவகையில் பத்திரகாளியின் தோற்றமும் விகாரமாக்கப்பட்டது. பனை சார்ந்து உழைப்பில் வாழ்ந்த மக்கள், தாம் வழிபட்ட கடவுளுக்குப் பனையை ஒட்டி பத்திரகாளி என்ற பெயரை வைத்தனர். இந்த வகையில் நாடார் சாதி மக்களின் பிறப்பை ஒட்டி ''மகாவிஷ்ணு, வித்தியாதர முனிவர் வேடமிட்டு ஏழு கன்னிகளைப் புணர்ந்து அதில் பிறந்த குழந்தைகளும், அவர்களுடைய வாரிசுகளும் தான் நாடார்கள்... அண்ணனாகிய மகாவிஷ்ணுவின் வேண்டுகோளுக்கு இணங்க தங்கை பத்திரகாளியால் வளர்க்கப்பட்ட..."28 மக்கள்தான் நாடார் என்று கடவுள்களின் விளக்கங்களைக் கேட்க வேண்டியுள்ளது. இந்துப் பிறப்பில் பிறந்ததாகக் கூறும் நாடார் சாதி மக்கள் மீது திருவிதாங்கூர் அரசு தலைவரி, முலைவரி என எண்ணற்ற வரிகளை விதித்தது. அதாவது மார்பை மறைப்பதற்கும் வரி. வரிகட்டமுடியாதவர்கள் மார்பை மறைக்க முடியாது. இது ஆணாதிக்க இந்து சாதிச் சட்டமாக இருந்தது.

பதிவிரதையாவதற்;குப் பெண்கள் செய்யவேண்டியது, கடவுள்களின் காமக் கற்பழிப்புகளுக்கு எதிர்ப்பின்றி இணங்கிப் போவதாகும். கடவுளான இந்திரன் அகலிகையைக் கற்பழித்ததை நியாயப்படுத்தி, அகலிகையைப் பதிவிரதை ஆக்கியது இந்துமதம். இந்திரனின் வாரிசுகளான பார்ப்பனர்களின் கற்பழிப்புக்குப் பெண்கள் இணங்கி பாய் விரித்தால், உலகம் போற்றும் கற்புக்கரசியாக முடியும். அதைப் பார்ப்பனிய ஆணாதிக்க இலக்கியம் புகழும். பெண்களே என்ன செய்யப் போகின்றீர்கள்? எதிர்த்து நிற்க போகின்றீர்களா? அல்லது இணங்கிப்போகப் போகின்றீர்களா?

நன்றி: www.tamilcircle.net

- தொடரும்.