Showing posts with label மாவீரர் நாள். Show all posts
Showing posts with label மாவீரர் நாள். Show all posts

Wednesday, July 1, 2009

'வீரத்தின் வித்துக்கள்' – போராளி சங்கர்.

sangar
சங்கர் ஒரு முழுநேரப் போராளி கம்பர்மலை வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட சங்கரின் சொந்தப்பெயர் சத்தியநாதன். விடுதலைப் போராட்டத்தின் பரிமாணாமங்களை முழுமையாக அறிந்து கொண்டவன். 1981ஆம் ஆண்டு நீர்வேலி வங்கியில் போராட்டத் தேவைக்காக பணம் பறித்தெடுக்கப்பட்ட தாக்குதலில் சங்கரின் துணிச்சல் வெளிப்படுத்தப்பட்டது.

அவனது அந்தச் துணிச்சலான செயற்பாடு விடுதலைப் போராட்டத்திற்குப் பொருளாதார பலத்தை அளித்தது. 27.10.1982 அன்று நடைபெற்ற சாவகச்சேரி பொலிஸ்நிலையத் தாக்குதலின் போது சீலன் அதற்குத்தலைமை தாங்கினான். சீலன் காயப்பட்டதும் அத்தாக்குதலை சங்கர் தலைமை தாங்கி வழிநடத்தினார்.

எதுவித பதட்டமும் இன்றி முன்னேறினான். பொலிசார் பின்வாங்கி ஓடினார்கள். தாக்குதல்கள் முழுமையான வெற்றியைத் தந்தது. சங்கரின் திறமை போராட்டத்திற்கு முழுமையான நம்பிக்கையை ஊட்டியது. இத்தாக்குதல் பற்றி பொலிஸ்மா அதிபராக இருந்த ஸ்ரான்லி சேனநாயக்கா இதில் பங்கு பற்றிய கெரில்லாக்கள் மிகவும் மதிநுட்பமும் அபார துணிச்சலும் மிக்கவர்கள் என ஒரு பத்திரிக்கைப் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

சீலனுக்கு வைத்திய வசதிகள் செய்வதற்காக பேரினவாதப் படைகளின் தேடுதல் வேட்டையும் சுற்றி வளைப்பும் அடிக்கடி நடந்தன யாழில்! அத்தோடு தேசத்துரோகிகளின் காட்டிக் கொடுப்புக்களும் நிகழ்ந்து கொண்டு தான் இருந்தன இருப்பினும் சங்கர் இதனை முறியடித்துச் செயற்பட்டுக் கொண்டிருந்தான்.

அந்த வேளையில் தான் யாழ் நாவலர் வீதியில் ஒருவீட்டருகே எதிரியின் துப்பாக்கிக்கு இலக்காகிறான். காயமடைந்து ஆதரவாளர் ஒருவரினால் முதலுதவிச் சிகிச்சை அளிக்கப்பட்டு கடல்வழியூடாக தமிழகம் அனுப்பி வைக்கப்பட்டான். இருந்த போதும் சரியான சிகிச்சையின்றி அதிக இரத்தம் வெளியேறிய நிலையில் அவனது உயிர் தலைவன் மடியில் பிரிந்தது.

அந்த மாவீரன் சங்கர் நினைவான நவம்பர் 27ஐ தமிழீழ மாவீரர் தேசிய மாவீரர் நாளாக தலைவர் வே. பிரபாகரன் அவர்களால் பிரகடனப்படுத்தப்பட்டு ஆண்டுதோறும் தமிழர் தாயகத்திலும் தமிழர் வாழும் நாடுகளிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகளின் முதல் தாக்குதல் தளபதி லெப். சீலன் ஆகும். அவனது பிறப்பிடம் திருகோணமலை அங்கு இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற காலந்தொட்டு அவனிடம் ஒரு போராடும் ஆற்றல் வெளிப்பட்டு வந்தது. ஜே.ஆர் ஜெயவர்த்தனா ஆட்சியில் சிறிலங்காவை இரண்டாவது தடவையாகவும் ஐனநாயக சோசலிசக் குடியரசாக பிரகடனப்படுத்தினார்.

1972இல் சிறிமாவோவும் இவ்வாறு பிரகடனப்படுத்தியிருந்தார். உள்ளுராட்சி அமைச்சராக இருந்த சு.பிரேமதாசா பிரதமரானார். அரச திணைக்களம், கல்வி நிறுவனங்கள் எங்கும் சிங்கக் கொடியை ஏற்றுமாறு சுற்று நிரூபம் அனுப்பினார். இதன் பிரகாரம் 1979 செப். 7ஆம் நாள் திருகோணமலை இந்துக் கல்லூரியிலும் சிங்கக் கொடி ஏற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதைவிரும்பாத சீலன் மிகவும் தந்திரோபாயமாக சிங்கக் கொடிக்குள் பொட்டாசியத்தை மறைத்து வைத்தான். கொடி ஏற்றப்பட்ட போது அது தீப்பற்றி எரிந்தது. பேரினவாதச் சிந்தனையாளர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

அந்தக் கணமே சீலன் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து போராளியானான். அவனது ஆற்றலும் ஆயுதப்பயிற்சியும் அவனை ஒரு தாக்குதல் அணித் தலைவனாக்கியது. மிக வேகமாக வளர்ந்தான். பெரும் தாக்குதல்கள் பலவற்றிற்கு தலைமை தாங்கினான். 1981 அக 15 யாழ்நகர் தாக்குதல், 1982 அக் 27 சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதல், 1983 மே 18 யாழ் கந்தர்மடம் சைவப்பிரகாசா வித்தியா சாலையில் இராணுவத்தின் மீதான தாக்குதல் என்பன முக்கியமானவை. சீலனின் இந்தத் துணிகரத் தாக்குதல்கள் சர்வதேச மட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னிலைப்படுத்தின.

இது விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகளின் முதல் தாக்குதல் தளபதி என்ற பட்டத்தையும் சீலன் பெற்றுக் கொண்டார். 1983ஆடி 15அன்று மீசாலையில் இடம்பெற்ற படைகளின் சுற்றி வளைப்பில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டான். விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் தன்னை முழுமையாக அற்பணித்த மற்றுமொரு போராளி செல்லக்கிளி அம்மான் ஆகும். விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட அனோகமான தாக்குதல்களில் செல்லக்கிளி அம்மானின் பங்குண்டு. விடுதலைப் போராட்டத்தைச் சிதைக்கப் பொலிசார் மற்றம் இரகசிய் பொலிசார் முனைப்போடு களமிறங்கிய வேளை ஏராளமான தமிழ் இளைஞர்கள் காரணமின்றி கைது செய்யப்பட்டும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டும் வந்த காலத்தில் செல்லக்கிளி அம்மானின் தந்திரோபாய காய் நகர்த்தல்கள் இரகசியப் பொலிசாரின் வலைப்பின்னலை அறுத்தெறிந்தது.

ஒரு கட்டத்தில் CIDஐ கருணாநிதி செல்லக்கிளி அம்மானாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். விடுதலைப் போராட்ட வரலாற்றில் தனித்தனி பொலிஸ்மீது நடத்தப்பட்ட தாக்குதல் மெல்ல பொலிஸ் ஐீப்வண்டிகள் மீதும் நடத்தப்பட்டன. அதுவே பின்னர் பொலிஸ் நிலையங்கள் மீதும், இராணுவச் சிப்பாய்கள் மீதும் நடத்தப்பட்டன. 1983யூலை 23ஆம் நாள் பலாலிவீதி திருநெல்வேலியில் வைத்து இராணுவத் தொடரணி முதல் முதலாக விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டது. செல்லக்கிளி அம்மானின் தலைமையில் இடம்பெற்ற இத்தாக்குதலில் அப்போதிருந்த அநேகமான போராளிகள் பங்குபற்றினர். 13இராணுவம் பலியானது.

இத்தாக்குதலே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தேவையை உணர்த்தி நின்றது. உலகம் திரும்பிப் பார்த்தது. இனக்கலவரமொன்றிற்கு திட்டமிட்டுக் கொண்டிருந்த ஆளும் ஜே.ஆர் பிரேமதாசா போன்ற தலைவர்கள் இதனை தமக்கு சாதகமாக்கி தமிழர்களை தென்னிலங்கையில் இருந்து விரட்டினர். அப்போது சுமார் மூவாயிரம் வரையான தமிழர்கள் கொல்லப்பட்டனர் இங்கு குறிப்பிடத்தக்கது. ஜே.ஆரின் இனப்படுகொலைக்கு பதிலடி கொடுக்கவும் இராணுவ பொலிசு அடக்கு முறைகளை உடைத்தெறிந்தும் தமிழனது இழந்த தாயகத்தை மீட்க ஆயுதப் போராட்டமே சிறந்தவழி என இளைஞர்கள் உணர்ந்து கொண்டு விடுதலைப் போராட்டத்தில் இணைந்து போராளியாகப் பயிற்சி எடுத்துக் கொண்டார்கள்.

இந்த வரலாற்றுத் திருப்பு முனைக்கு வித்திட்ட திருநெல்வேலித் தாக்குதலில் செல்லக்கிளி அம்மான் வீரச்சாவைத் தழுவிக் கொண்டான். செல்லக்கிளி அம்மானைத் தொடர்ந்து பண்டிதர் ரவீந்திரன் தாக்குதல் பிரிவுத் தலைமையை ஏற்றார். போராட்டத்தை மக்கள் மயப்படுத்துவதிலும் போராட்டத் தேவைகளின் தேவைகளின் தயாரிப்புக்களில் பரிமாற்று ஏற்பாடுகளை மேற்கொண்டார். தலைசிறந்த போராளி தலைமைத்துவம் அவனது ஆற்றலில் மிளிர்ந்தது. எதிர்பாராத விதமாக 1985ஐனவரி மாதம் ஒரு இராணுவச் சுற்றி வளைப்பில் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவடைந்தார்.

அந்த மாவீரனது பெயரால் இன்றும் போசப்படுகிறது. பண்டிதரின் மறைவைத் தொடர்ந்து கேணல் கிட்டு யாழ்மாவட்டத் தளபதியாகப் பெறுப்பேற்றார். ஜே.ஆர் பிரகடனப்படுத்தப்படாத போரை தமிழ் மக்கள் மீது திணித்தார். பல இராணுவ முகாம்களும், மினி முகாம்களும் அமைக்கப்பட்டன. பெருமளவிலான சிங்கள இளைஞர்கள் இராணுவத்தில் இணைக்கப்பட்டனர். பெருமளவிலான தேசிய வளங்கள் போருக்காக செலவிட்டனர். பல உயிர் இராணுவ அதிகாரிகள் பயிற்சிக்காக வெளிநாடு சென்று வந்தனர். முதன் முதலாக 1984 சித்திரை போருக்காக ஒரு அமைச்சர் நியமிக்கப்பட்டார். (லலித் அத்துலத்முதலி) வடக்கு-கிழக்கில் கடுமையான சட்டங்கள் அமுலுக்கு வந்தன.

இவ்வாறு ஐனாதிபதி ஜே.ஆர் படைக் கட்டுமானங்களிற்கு தேவையான அனைத்து வழிமுறைகளையும் செய்து கொடுத்து இராணுவக் கட்டமைப்பை விரிவு படுத்தினார். இவ்வாறானதொரு காலகட்டத்தில் தான் கேணல் கிட்டுவும் யாழ்மாவட்டத் தளபதியாக பொறுப்பேற்றார். குறிப்பாக அரசின் இராணுவ வலுவும் யாழ்மீதே குவிந்திருந்தது. இந்தச் சவால்களைச் சிறப்பாக கிட்டு எதிர்கொண்டார். இராணுவ முகாம்களை விட்டு வெளிவந்த படைகள் விடுதலைப் புலிகளால் வழிமறித்து தாக்கப்பட்டன. ஆக்கிரோசமான தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாத படை பின்வாங்கியும் இழப்புக்களைச் சந்தித்தும் வந்தன.

இதன்பிரதிபலிப்பு யாழ்மாவட்டத்தில் இராணுவ முகாமிற்குள் முடங்கியது. இதுகேணல் கிட்டுவின் போராற்றலுக்குக் கிடைத்த வெற்றியாகும். இராணுவத்தீர்வு சாத்தியமாகாது என உணர்ந்த ஜே.ஆர் அரசாங்கம் 1985ஆம் ஆண்டு நடுப்பகுதியில் போர்நிறுத்தத்திற்கு இணங்கியதுடன் பூட்டான் திம்புவில் தமிழ் போராளிகளுடன் பேசவும் இணங்கினார். இது எமது போராட்ட வரலாற்றில் விடுதலை இயக்கங்களிற்கு கிடைத்த முதல் அங்கீகாரம் ஆகும். அதுவும் அது சர்வதேச மட்டத்தில் கிடைத்த அங்கீகாரமாகும். அதுவும் அது சர்வதேச மட்டத்தில் கிடைத்த அங்கீகாரமாகும். என்பதால் முக்கியம் பெற்றது.

சிம்பு பேச்சுவார்த்தையை ஜே.ஆர் அரசு குழப்பி சம்பூர், கூனித்தீவு போன்ற இடங்களில் இராணுவத்தை ஏவி இனப்படுகொலையைச் செய்தது. இக்காலகட்டத்தில் தான் தளபதி கிட்டு தலைமையிலான போராளிகள் யாழ்ப்பாணக்குடாவில் பல பகுதிகளிலுமுள்ள இராணுவ முகாம்களைச் சுற்றி வளைத்து இராணுவம் வெளியேறாதபடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இது இற்றைக்கு 500ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழரின் னைக்கு யாழ்குடாவந்த செய்தி உலகிற்கு உணர்த்தியது. குடா நாட்டைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இந்தப் புனிதமான பணியில் ஈடுபட்ட மாவீரர்கள் நினைவு கூரப்பட வேண்டியவர்களே.

போராட்ட இலட்சியத்தைக் காக்கவே லெப். கேணல் திலீபன் போராட்ட வடிவத்தை மாற்றினான். இந்தியா அகிம்சை வழியில் விடுதலை பெற்றது. எனவே அதேவழியில் இந்தியாவிடம் நீதி கேட்டான். திலீபன் செப் 15 1987 தொடக்கம் செப் 27வரை நீரின்றி உண்ணா நேன்பிருந்து உயிர் துறந்தார். அவனது ஐந்து அம்சக்கோரிக்கைகளையும் குறித்து இந்தியா பாராமுகமாக இருந்து விட்டதே என்பது தமிழர்களிற்கு இன்றளவும் ஒரு கவலையான விடயமே.இருப்பினும் தியாகி திலீபனது அந்தப் 12 நாட்களும் உடலை மெல்ல மெல்ல உருக்கி எம்கண்முன்னே உயிர்துறந்தது. தமிழ் மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி விட்டது. ஆயினும் திலீபனும் அந்தச் சாவு உலகின் விடுதலைக்காகப் போராடும் இனங்களிற்கு ஒளியாக மிளிர்கிறது.


Friday, June 26, 2009

உரிமையோடு சுடரேற்றி உறுதி எடுக்கும் மாவீரர் நாள் தினத்தன்று வருவார் எம்தலைவர்.


1989-ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது.

அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழிற்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மயிரிழை வேகமெடுத்துள்ளது. சோகநதிகளாய் தமிழர் கண்ணீரும் சேர்ந்து பெருக்கெடுத்துப் பாய்கிறது. ஆறறோரத்து அகதிமுகாம்கள், வயல்மேட்டின் புற்றுப்பிட்டிகள், வீதியோரங்களென விரிந்திருக்கும் இடப்பெயர்வின் துயர வாழ்வுக்குள்ளும் ஏதோ ஒரு திடமான நம்பிக்கை...
"
எங்களுருக்கு மீண்டும் செல்வோம்" "அந்த மகிழ்வான வாழ்வுகையில் கிட்டும்" "நாங்கள் கொடுத்திருக்கும் விலை கொஞ்சநஞ்சமல்ல." "போட்ட முதலை செலவாய் எண்ணிவிட முடியாது அறுவடை எடுத்துத்தான் ஆகவேண்டுமென்ற கட்டாயம் எங்களுக்கு..." என்ற உண்ணத்து நம்பிக்கைகளும் உணர்வுகளும் எம்மை வலுவாகவே பற்றி நிற்கின்றன.

இந்தநிலையில் உணர்வுகளில் உறுதி ஏற்றிக்கொள்வதற்காய் எம்முன்னே விரிகிறது இன்றைய நாள் கார்த்திகை 27, மாவீரர்களுக்காய் எடுக்கப்படுகின்ற பெருவிழா அல்ல, அவர்கள் நினைவிடயங்களின் முன்னே உறுதி ஏற்றிக்கொள்கின்ற உன்னத நாள் எங்கள் நம்பிக்கைகளின் மகத்துவங்களாய் மண்ணில் உறங்கும் மானிட தெய்வங்களுடன் மனம்விட்டுப் பேசும் உயிர்ப்புநாள், இந்த நாளுக்காக இன்று தமிழர் மனங்கள் மனமுருகி நின்கின்றன.

சிங்களப் பேரினவாத இனமொன்றினால் அதன் அரச இயந்திரத்தாலும் சிறுபான்மைத் தமிழினம் அழிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் தவிர்க்க முடியாத தெரிவாய் ஆயுதத்தைக் கொண்டு அழிப்பவனை அழிக்கும் எமது விடுதலைப்போராட்டம் தொடங்கியது. படைவளம், படைப்பலம் கொண்ட ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிராய் ஒரு சில உணர்வுள்ள தமிழ் இளையோரால் தொடங்கப்பட்டதே இந்த விடுதலைப்போராட்டம், ஆட்பல ஆயுதப்பல ஒப்பீடுகளுக்கு அப்பால் எந்தவகைத் தியாகத்தையும் செய்யத்துணிந்தெழுந்த போராளிகளின் மனபலம் தனிப்பெரும் சக்தியாகவே தமிழரைக் காத்து நின்றது. அந்தக் காப்பு சகத்திகளின் சாட்சியாக 22000 இற்கு அதிக மாவீரர்களை இந்த மண்ணிலே விதைத்து இன்று உறுதிபெற்று நிற்கின்றோம்.

ஒவ்வொரு மாவீரரின் உயிர்த்தியாகமும் ஒரே இலட்சியத்தைக் கொண்டதெனினும் அவர்களின் தியாகவடிவங்கள் தனித்துவமானவை."எனது மரணத்தின் பின்னால் இந்த மண் மகிழ்வான வாழ்வைப்பெறும் என்ற நம்பிக்கையில் போகிறேன்" என சொல்லிப்போன கரும் புலி மாவீரர்களினதும் "எனது வித்துடலைத் தாண்டித்தான் எதிரி எம் மண்ணை ஆக்கிரமிக்கமுடியும்" என இறுதிவரை உறுதியுடன் போரிட்டு வீழ்ந்த மாவீரர்களினதும், தாய் மண்ணின் இரகசியத்தைக் காப்பதற்காய் கடலிலும் தரையிலுமாக தம்மைத்தாமே மாய்த்துக்கொண்ட மாவீரர்களும் என மாவீரர்களின் தியாகப்பதிவுகள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை.

அந்த அத்தனை மாவீரர்களினதும் வீரச்சாவு நிகழ்ந்த நாட்களும் வேறுபாட்டவை. எனினும் ஓரே இலட்சியத்திற்காய் விதையாகிப்போன மாவீரர்களை நினைவுகொள்ள கார்த்திகை 27 தெரிவுசெய்த சம்பவமும் எமது விடுதலைப்போராட்டத்தில் தனிப்பதிவாய் அமைந்தது.ஒரு சில போராளிகளாய் உருவாகி பரந்திருக்கின்ற எதிரிகளின் கண்களில் மண்ணைத் திருக்கின்ற எதிரிகளின் கண்களில் மண்ணைத் தூவுp போராட்டப் பாதையை செப்பனிட்ட காலமது. அந்தக் காலப்பகுதியில் தான் விடுதலைப்போரின் முதல் வித்தொன்று 1982.11.27 அன்று லெப்.சங்கராக வீழ்ந்தது.

லெப்.சங்கரின் பின்னால் பலவடிவங்களில் மாவீரர்களின் தியாகப் பயணங்கள் பதிவாகி வருகின்றன. இலட்சியத்தில் மாற்றம்பெறுகின்ற எமது விடுதலைப்போரின் ஒவ்வொரு மாற்றங்களிலும் வித்தியாசமான தியாக வடிவங்கள் பிரசவித்திருக்கின்றன. 1987 ஆம் ஆண்டு யாழ்குடா வடமராட்சியை முற்றுமுழுதாய் ஆக்கிரமித்துவிடவேண்டுமென்ற துடிப்புடன் படைநடவடிக்கையை மூர்க்கமாக முன்னெடுத்த சிங்களப் படைகளுக்கு கரும்புலி கப்டன் மில்லர் நெல்லியடி மத்திய மகாவித்தியாலய படைமுகாமில் கொடுத்த கரும்புலித் தாக்குதல் அன்றைய கால சூழ்நிலையே மாற்றிப்போடும் அளவிற்கு வீரப்பதிவு ஒன்றை எமது போராட்டத்திற்கு தந்திருந்தது.

அந்த ஒரு மாவீரனின் உயிர்க்கொடை சிங்கள தேசத்தின் அத்தனை வீரிய இராணுவ மமதையையும் ஒரே நொடியில் அதலாபாதாளத்தில் வீழ்த்தியது. அந்த மாற்றத்தால் அப்போதைய ஜெ.ஆர்.அரசு இந்தியாவுடன் ஒப்பந்தம் ஒன்றிற்கு செல்லவேண்டி கட்டாயம் வந்தது என்பது வரலாறு.

அதன்பின் இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஒன்று உருவாக அமைதிப்படை என்ற பேரில் இந்திய இராணுவம் எமது தாயக மண்ணில் வந்திறங்கியது. தமிழர்களின் நிரந்தரத் தீர்விற்கு வழிகோலாத அந்த ஒப்பந்தம்குறித்தும், இங்குவந்திறங்கிய அமைதிப்படையின் சுயவடிவம் குறித்தும் தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்தியாகவேண்டிய தருணமது. அமைதிப்பேச்சுக்கள் உடன்பாடு நிர்ப்பந்தங்களென அமைந்த அந்த சூழலில் பொதிந்துகிடக்கும் பின்னிலை அபாயங்கள் தமிழ்மக்களுக்கு சாதகமற்றதாகவே இருந்தது.

இந்நிலையில் இந்திய அரசின் உண்மைத்தோற்றத்தையும் தமிழீழ பகுதி எங்கும் ஆயுதங்களுகடன் குவிந்து கிடக்கும் இராணுவப் பிரசன்னத்தையும் வெளிச்சம் போட்டுக்காட்டும்தருணத்திற்காய் எமது ஆயுதம் தாங்கிய விடுதலைப்போராட்டம் அன்று அகிம்சைப் போராட்டம் ஒன்றை நடத்தவேண்டியதாயிற்று. நல்லூர் கந்தன் முன்றலில் லெப்.கேணல் திலீபன் தமிழ்மக்களின் பிரச்சினைத் தீர்விற்கான ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாநோன்பை தொடக்கினான்.

இலட்சக்கணக்கில் மக்கள் கண்ணீருடன் திரண்டிருந்த 12 நாட்கள் தொடர்ந்த அந்த அகிம்சைப் போருக்கு இந்தியா இறுதிவரை செவிசாய்க்கவில்லை. அந்த மக்கள் முன்னிலையிலேயே அந்த அகிம்சை நெருப்பு அணைந்துபோனது. ஆனால் தமிழர் மனங்களில் இலட்சிய நெருப்பு வேகமெடுத்தது. அந்தத் தியாக மரணம் எமது விடுதலைப்போராட்ட வீரர்கள், வல்லரசு ஒன்றுடன் பொருதும் மனஉறுதியை பெற்றுத்தந்தது. அச்சம்பவத்திற்குப் பின்னே இடம்பெற்ற இந்திய இராணுவத்துடனான மோதல் எமது விடுதலைப்போராட்டத்தின் முதல் பெண் மாவீரரை இந்த மண்ணில் விதையாக்கியது.

பெண் அடிமைத்தனத்தில் கட்டுண்டு கிடந்த எமது சமூக அமைப்பிலிருந்து போராடும் திறன்கொண்ட வல்லமைபடைத்த பெண்களை உருவாக்கிய வரலாற்றுக்கு சான்றாய் 10.10.1987 அன்று இந்திய இராணுவத்துடனான மோதலின்போது 02 ஆம் லெப்.மாலதி என்ற முதல்பெண் மாவீரர் தன் உயிரை ஈந்து வரலாற்றில் பதிவானாள். இவ்வாறாக எமது மாவீரர்களின் வீர தியாகப் பதிவுகள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை, அந்தவகையில் தமீழ விடுதலைப்புலிகள் என்ற போராளிக்கட்டமைப்பிற்கு அப்பால் மக்கள் படைக்கட்டுமானத்தால் எழுச்சிகொணட, எல்லைப்படை , சிறப்பு எல்லைப்படை, போர் உதவிப்படை, துணைப்படை போன்றவற்றின் ஊடாகவும் எமதுவிடுதலைப்போராட்டத்தின் மாவீரர் பதிவுகள் நீள்கின்றன.

அவை தவிர சிறப்புப்படை, காவல்துறை படைக@டாகவும் தமதுஉயிர்களைத் தியாகம் செய்து மாவீரர்களாய் உறங்கும் மகத்துவங்களையும் இந்த மண்பெற்றிருக்கிறது. இந்த அத்தனை மாவீரர்களுக்கும் தனிச் சிறப்பான பக்கங்கள் உண்டு. ஒவ்வொரு மாவீரர் குறித்த பதிவுகளையும் நாம் வரலாறாய் பார்கின்ற இச்சந்தர்ப்பத்தில் தாயகம் கடந்து எங்கெங்கோவெல்லாம் சென்று சாதனை படைத்துவிட்டு சரித்திரமாய் உறங்கும் முகம் காட்டா கரும்புலி மாவீரர்களின் தியாகங்கள்உச்சத்தைத் தொட்டு நிற்கின்றன.

சாதனைகளை மட்டுமே எமக்காய் சாற்றிவிட்டு சாதனைகளை மட்டுமே எமக்காய் சாற்றிவிட்டு சந்தனப்பேழையும் காணாது முகம்மறைத்து, முகவரி மறைத்து வெடியாகிப்போன அந்த மாவீரர்களின் தியாகம் பற்றியும் அவர்களின் உணர்வுகள் பற்றியும் யாரும் மதிப்பீடு செய்துவிட முடியாது.இவ்வாறாக இந்த மண்ணிற்காய் விதையாகிப்போன பல்லாயிரம் மாவீரர்களின் நினைவிடத்தின் முன்னின்று நாம் எதைப் பேசப்போகின்றோம்.

எதை நினைத்து சுடர் ஏற்றப்போகின்றோமென்ற கேள்விகளுக்கு விடைகாணவேண்டியவர்களாக நாமே உள்ளோம்இத்தனை விதைப்புகளுக்குமான அறுவடை எமக்கானது மட்டுமே. அந்த அறுவடையை நாம்தான் பெற்றாகவேண்டுமென்ற உறுதிப்பாடை ஒவ்வொரு தமிழனும் தமிழச்சியும் எடுத்தாகவேண்டும். இதுவே அந்த மாவீரர்களின் இலட்சியக்கனவை நிறைவேற்ற உதவும்.


ஏனைய நாடுகளில் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும், தமிழீழ மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும் பெரும் வேறுபாடுகளுண்டு.

ஏனைய நாடுகளில் எல்லாம் விடுதலைக்குப் பின் அமைந்த அரசுகளால் விழாக்கள் எடுக்கப்படுகின்றனவே தவிர போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலங்களில் விழாக்கள் எடுக்கப்படுவதில்லை.

ஆனால் விடுதலைப் போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் எதிரியின் அச்சுறுத்தல்கள், தாக்குதல்களுக்கிடையிலும் பல்வேறு நெருக்கடிகளுக்கிடையிலும் போராட்டத்தையும் நடத்திக் கொண்டு தமிழீழ மக்கள் மண்ணின் விடிவிற்காகத் தம் இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களை எழிற்சியோடு நினைவு கூர்ந்து வருகின்றனர். மாவீரர்களின் பெற்றோர்கள் குடும்பத்தினரை போற்றிச் சிறப்பிக்கப்படுகின்றனர்.

வீரச்சாவடையும் தமிழீழ மாவீரர்களது வித்துடல்கள் மாவீரர் துயிலுமில்லங்களில் கல்லறைகளில் விதைக்கப்பட்டும், நடுகற்கள் நாட்டப்பட்டும் வழிபாடியற்றப்படுகின்றது.

மாவீரர் நாளில் மாவீரரின் பெற்றோர், குடும்பத்தினர் மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டு அன்று தமிழீழ மக்களால் போற்றிமதிப்பளிக்கப்படுகின்றனர்.

உலகிலே எங்குமே மாவீரர் நாள் நிகழ்வுகள் போல மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள், அவர்களின் பெற்றோரும், குடும்பத்தினரும் போற்றப்பட்டு மதிப்பளிக்கப்படும் நிகழ்வுகள் நடைபெற்றதாகவோ, நடைபெறுவதாகவோ வரலாறுகள் இல்லை.

மாவீரர் எழுச்சி நாட்களின் நிகழ்வுகளும், நடைமுறை ஒழுங்குகளும்

1989
ஆம் ஆண்டில் நவம்பர் 27ஆம் நாளை மாவீரர் நாளாகவும் 1990ஆம் ஆண்டில் இருந்து 1994ஆம் ஆண்டுவரை நவம்பர் 21ஆம் நாளிலிருந்து 27ஆம் நாள் வரை மாவீரர் எழுச்சியாகவும்(வாரமாகவும்) தமிழீழ மக்கள் எழுச்சி நிகழ்வாக நடைபெற்று வந்த தமிழீழ மாவீரர் எழுச்சி நாள் நிகழ்வுகள் 1995ஆம் ஆண்டிலிருந்து நவம்பர் 25ஆம் நாள் முதல் 27ஆம் நாள்வரை மூன்று நாட்களில் எழுச்சி நாட்களாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.