Showing posts with label காலகொடுமை. Show all posts
Showing posts with label காலகொடுமை. Show all posts

Thursday, September 3, 2009

தமிழ்த் தேசியத்தை விழுங்க முயற்சிக்கும் சிங்கள தேசியம்.

[ ஆய்வு:தொல்காப்பியன் ]

image

இராணுவ ரீதியாகத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அடக்கிய சிங்கள அரசு, இப்போது வரலாற்று ரீதியாக அவர்களை அடிமைப்படுத்தி, தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேரே - வடக்கும் கிழக்கும் தமிழரின் மரபுவழித் தாயகம், தமிழர்கள் ஒரு தேசிய இனம், தமிழ் மக்களுக்கு தன்னாட்சி உரிமை உள்ளது ஆகிய விடயங்கள் தான்.

தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டைச் சிதைத்து, அவர்களின் தனித்துவமான தேசிய

அடையாளங்களை அழிப்பதன் மூலம் தன்னாட்சி உரிமைக்கான எழுச்சியையும் கோரிக்கையையும் பலவீனப்படுத்துவது தான் சிங்களத்தின் நாசகாரத் திட்டம். தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் சிதைத்துள்ள நிலையில் - எதிர்காலத்தில் புலிகளின் எச்சங்களே நாட்டில் இருக்காத வகையில் - சிங்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அடுத்த கட்டமாக ‘ஈழம்’ என்ற வார்த்தையையே இல்லாமல் செய்வதற்கு சிங்கள அரசாங்கம் குறிவைத்தி;ருக்கிறது. ஈழம், தமிழ், முஸ்லிம் போன்ற வார்த்தைகளை கொண்ட கட்சிகளின் பெயர்களைத் தடைசெய்ய அரசாங்கம் முயற்சிப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

இது எதிர்காலத்தில் ‘ஈழம்’ என்ற பெயரிலோ, அல்லது தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் தனித்துவமான கட்சிகள் - அமைப்புகள் இயங்குவதை, தோன்றுவதை முழுமையாகத் தடைசெய்ய எடுக்கப்படும் நடவடிக்கையாகும்.

தேர்தல் திணைக்களத்தின் ஊடாக அரசியல் கட்சிகளின் பெயர்களை மாற்றியமைக்கக் கொடுக்கப் படுகின்ற நிர்ப்பந்தமானது - தமிழ்த் தேசியத்தை அழிப்பதற்கு சிங்களத்தின் மீது அரசாங்கம் கொண்டிருக்கின்ற கரிசனையையே பிரதிபலிக்கின்றது. இதைச் செய்து விட்டால் நாட்டில் ஒருமைப்பாடு வந்து விடும், பிரிவினை ஏற்படாது என்று கருதுகிறது இலங்கை அரசு.

வடக்கே பருத்தித்துறை தொடக்கம் தெற்கே தெய்வேந்திர முனை வரைக்கும் ஒரே கொடி -சிங்கக்கொடி தான் பறக்கிறது

இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் தற்போது தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் கட்சிகள் எதுவுமே இப்போதைய பெயர்களில் இயங்க முடியாது. இனம் ஒன்றைப் பிரதிநிதித்துவம் செய்யும் அல்லது பிரதேசம் ஒன்றின் பிரதிநிதித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகள் செயற்படக் கூடாதென்று அரசாங்கம் சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதன் மூலம் எந்தவகையிலும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தி விடமுடியாது.

கட்டாயமாக – நிர்ப்பந்தத்தின் பேரில் செய்யப்படும் இத்தகைய எந்த நடவடிக்கையுமே சிறுபான்மை மக்களிடத்தில் இன்னும் அதிகமான வெறுப்பையும் பிரிந்து போகும் எண்ணத்தையுமே ஏற்படுத்தும். சிங்களம் மட்டும் ஆட்சிமொழி என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது எத்தகைய நிலையை ஏற்படுத்தியது என்பதை இலங்கை அரசு இன்னமும் புரிந்து கொள்ளவில்லைப் போலும். ஆனால், சிங்கள அரசின் நோக்கம் பிரிவினையைத் தடுப்பதோ ஒருமைப்பாட்டைப் பேணுவதோ அல்ல.

அதன் ஒரே நோக்கம் சிங்களத் தேசியத்துக்குள் அனைத்து இனங்களையும், அனைத்து மொழி பேசும் மக்களையும் உள்வாங்கிக் கொள்வது தான். பயங்கரவாதம் என்ற போர்வையில் தமிழர்களின் காப்பரணான விடுதலைப் புலிகளை வெற்றிகொண்ட பின்னர் நடத்திய விழாவில் பேசிய மகிந்த ராஜபக்ஸ - இனிமேல் நாட்டில் சிறுபான்மை இனங்கள் என்று எதுவுமில்லை என்று கூறியிருந்ததை மறந்து விடக்கூடாது.

அதாவது அனைத்து இனங்களையும் சிங்களத்துக்குள் உள்வாங்கி;க் கொள்வது தான் அவரது திட்டம். இது சாத்தியமானால் - தமிழ்த் தேசியமே இல்லாமல் போய், அனைவரும் சிங்களத் தேசியத்துக்குள் சிக்கிக் கொள்ள நேரிடும். இப்படியான நிலையில் இருந்து தனித்துவமான வகையில் தமிழ்த் தேசிய இனத்தால் போராட்டங்களை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்படும்.

இலங்கைத் தேசியம் அல்லது சிங்களத் தேசியத்துக்குள் அனைத்து மக்களையும் உள்வாங்கிக் கொண்டு தமி;ழ்த் தேசியத்தையும் முஸ்லிம் தேசியத்தையும் இல்லாது அழித்து விடுவதே அவர்களின் நோக்கம்.

இது வெறுமனே  மகிந்தவின் கனவு மட்டுமல்ல. ஐ.தே.க.வின் எண்ணமும் கூட. போர் முடிந்த சில நாட்களின் பின்னர் ஐ.தே.க.வின் தரப்பில் இருந்து இதுபோன்றதொரு கருத்து முன்வைக்கப் பட்டிருந்ததை மறந்து விட முடியாது. ஈழம் என்பது அரசியல் ரீதியாகத் தோற்கடிக்கப் படவில்லை. இன்னமும் ஈழம் என்ற பெயரில் அரசியல் கட்சிகள் இயங்குகின்றன. அனைத்;துத் தமிழ்க் கட்சிகளினது பெயர்களிலும் ஈழம் என்பது இருக்கிறது. எனவே, ஈழம் என்பதை அரசியல் ரீதியாகவும் தோற்கடிக்க வேண்டும் என்று கூறியிருந்தது ஐ.தே.க.

இது, இலங்கையின் இரு பெரும் சிங்களக் கட்சிகளினதும் பேரினவாதச் சிந்தனைகள் ஒன்றுபட்டிருப்பதை வெளிப்படுத்தும் விடயமாகும். தமிழ்த் தேசியத்தைச் சிதைத்து சிங்களத் தேசியத்துக்குள் தமிழ் மக்களின் வாழ்வை அடிமைப்படுத்துவதே சிங்களத்தின் திட்டம்.

புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா பிரிந்து சென்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை உருவாக்கினார். ஆனால், பின்னர் கருணாவைத் தனித்து இயங்க சிங்களத் தேசியம் விடவில்லை. வளைத்துப் போட்டு சிறி லங்கா சுதந்திரக் கட்சிக்குள் உள்வாங்கிக் கொண்டது. பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பெயரை மாற்றும்படி மகிந்தவும் அவரது சகோதரர்களும் கருணாவும் பெரும் நெருக்கடிகளைக் கொடுத்தனர்.

தந்தை செல்வாவும், பிரபாகரனும் தமிழ்த் தேசியத்துக்காகப் போராடி தோற்றுப் போனவர்களாம்: வன்னி மாவட்ட நா.உ.

ஆனால், அது சாத்தியமற்றதாகிப் போக, அந்தக் கட்சியையே இல்லாதொழிக்கும் வகையில் ஒவ்வொருவராக சிறி லங்கா சுதந்திரக் கட்சிக்குள் கொண்டு வரும் இரகசிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன. இந்த நடவடிக்கைகளின் இறுதிக் கட்டத்தில் பிள்ளையானும் சிறி லங்கா சுதந்திரக் கட்சிக்குள் உள்வாங்கப்படுவார். இது தான் சிங்களத் தேசியத்தின் சதி.

கிழக்கில் மோசடிகளின் மூலமும், கிழக்கைப் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொண்ட கட்சிகளின் முதுகில் சவாரி செய்தும் சிறி லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியைப் பிடித்தது. வெற்றிலையின் கீழ் பிராந்தியக் கட்சிகளைப் போட்டியிட வைத்து கிழக்கில் வெற்றி பெற்றது போன்று - வடக்கிலும் அழுத்தங்களைக் கொடுத்து தமிழ்க் கட்சிகளை அதேபோன்று போட்டியிட வைத்திருக்கிறார் மகிந்த ராஜபக்ஸ.

அரசாங்கத்தின் நிர்ப்பந்தங்களால், வடக்கில் ஈ.பி.டி.பி., சிறி ரெலோ, ஈரோஸ் போன்ற கட்சிகள் வெற்றிலைச் சின்னத்துக்குள் உள்வாங்கப் பட்டிருக்கின்றன. இந்தத் தேர்தலில் எப்படியாவது வெற்றிலையை வெற்றி பெறவைத்து தமிழ்த் தேசியம் சிதைக்கப்பட்டு விட்டது - சிங்களத் தேசியமே வடக்கிலும் கிழக்கிலும் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை சிங்கள மக்களுக்கும், வெளியுலகுக்கும் பிரகடனம் செய்வது தான் மகிந்தவின் திட்டம்.

வடக்கே பருத்தித்துறை தொடக்கம் தெற்கே தெய்வேந்திர முனை வரைக்கும் ஒரே கொடி -சிங்கக்கொடி தான் பறக்கிறது என்று கூறிப் பெருமைப்பட்ட சிங்களத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையே இது.

வடக்கில் யாழப்பாணத்தில் இருந்து தெற்கே தங்காலை வரைக்கும் சிறி லங்கா சுதந்திரக் கட்சி தான் ஆட்சி செய்கிறது என்ற சிங்களத் தேசியத்தை உசுப்பிவிடும் முயற்சியில் இறங்கியிருக்கிறது மகிந்தவின் அரசு. சிங்களத் தேசியத்தின் இந்த இரகசியச் சதிக்கு தமிழ் அரசியல் சக்திகள், ஊடகங்கள் பலவும் பலியாகிக் கொண்டிருப்பது தான் வேதனையான விடயம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகப் பலமமாக இருக்கும் வரைக்கும் அவர்களோடு இருந்து - அவர்களின் பின்னணியில் இயங்கிய இந்தச் சக்திகள் இப்போது சிங்களத் தேசியத்துக்கு வால் பிடிக்க முற்படுவது தான் வேடிக்கை.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அவசரகாலச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்திருக்கிறார். காரணம் கேட்டால், இடம்பெயர்ந்த வன்னி மக்களை குடியமர்த்த அரசின் உதவி தேவையாம். அதற்காகவே எதிர்க்கவில்லை என்று சப்பை நியாயம் சொல்கிறார்.

அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தித் தான் இலங்கை அரசு மூன்று இலட்சம் மக்களையும் ஆடு, மாடுகளைப் பட்டியில் அடைப்பது போன்று - முகாம்களுக்குள் அடைத்து வைத்திருக்கிறது என்பது அவருக்குத் தெரியாதா என்ன?

இதே அவசரகாலச் சட்டம் தான் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வுக்குத் தடையாக இருக்கிறதென்று புரியாதா என்ன?

ஆனாலும் இப்படியொரு நியாயத்தைச் சொல்லித் தப்பிக்க முனைகிறார் என்றால் தமிழ்த் தேசியம் தூங்கிக் கொண்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரா அவர்?

அதைவிட மோசமானது - தந்தை செல்வாவும், பிரபாகரனும் தமிழ்த் தேசியத்துக்காகப் போராடி தோற்றுப் போனவர்களாம் - இனியும் தமிழ்த் தேசியம் பேசிப் பயனில்லை என்று கொச்சைப் படுத்துகிறார்.

அரசுக்குக் கால் பிடிப்பதும் வால் பிடிப்பதும் தான் தமிழ் மக்களைப் பாதுகாக்கும் என்று புதிய வழிகாட்ட முனையும் இவர்களெல்லாம் எப்படித் தலையெடுத்தார்கள் என்று ஒருமுறை திரும்பிப் பார்க்கட்டும்.

அதைவிட தமிழ்த் தேசியத்துக்காகப் போராடி மடிந்தவர்கள் எல்லாம் மடையர்கள் போன்று குறிப்பிடும் அவர் ஒரு முறை சிங்களத் தேசியத்துக்கு கால் பிடித்து விட்டவர்களால் என்னத்தைக் கிழிக்க முடிந்ததென்று ஒரு கணம் நினைத்துப் பார்க்கட்டும்.

சிங்களத்துக்குக் கால் பிடிப்பவர்களால் - ஒரே ஒரு நிமிடம் மட்டும்,  அகதி முகாம்களுக்குள் அடைபட்டுக் கிடக்கும் மக்களை வெளியே கொண்டு வந்து விட முடியுமா?

அதையே செய்ய முடியாதவர்கள் - தமிழ்த் தேசியத்தைக் கொச்சைப் படுத்திக் கொண்டு –அரசுக்குப் பின்னால் நிற்கப் போகிறார்களாம். கூரையில் ஏறியே கோழி பிடிக்க முடியாதவர்கள் வானத்தில் ஏறி வைகுண்டம் போகப் போகிறார்களாம். இவர்களையெல்லாம் தமிழ்த் தேசியத்தின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்ததற்காக யாரை நோக முடியும்?

சிங்களத் தேசியத்துக்குள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்வாங்கிக் கொண்டு தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கின்ற சதி இப்போது உச்சகட்டமாக நடந்து கொண்டிருக்கிறது.

வடக்கில் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கைகள் தெற்கில் வலுப்பெறுகின்றன. கலப்புக் கிராமங்களை உருவாக்க வேண்டும் என்று கேட்கிறார்கள் சிங்களத்தின் காவலர்கள்.

வடக்கில் மீள்குடியமர்வுக்கு முன்னதாக அங்கு சிங்கள மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்களை கண்டறியும் புதைபொருள் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிறார்கள். இவையெல்லாம் வடக்கும் கிழக்கும் தமிழ் மக்களின் மரபுவழித் தாயகம் அல்ல என்று காண்பிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளே.

முப்பதாண்டுப் போரின் பின்பாதிக் காலத்தில் தமிழ் மக்களின் பலம்மிக்க தலைமைச் சக்தியாக விளங்கும் விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததால் தமிழ்த் தேசியத்தை வரலாற்று ரீதியாக அழிக்கின்ற முயற்சிகள் எதுவும் கைகூடவில்லை.

இந்த இடைவெளியை நிரப்பி சிங்களத் தேசியமே இலங்கைத்தீவு முழுவதும் ஆதிக்கம் செலுத்தியது என்று உறுதி செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. இந்தக் கட்டத்தில் தமிழ்த் தேசியம் சற்று உறங்கிப் போனாலும் அதை விழுங்கி ஏப்பம் விட்டுக் கொண்டு போய்விடும் சிங்களம்.

இதனைத் தடுப்பதற்கு தமிழ் மக்கள் அனைவரும் ஒரே குரலாக ஒலிப்பது அவசியம். எம்மிடையே உள்ள வேறுபாடுகள் பலவீனங்களைக் களைந்து ஒரே குரலாக ஒலிப்பது தான் தமிழ்த் தேசியத்தை காப்பாற்ற தமிழீழத் தேசியத்துக்காகப் போராடிய, களமாடிய மாவீர்களின் கனவுக்கு கொடுக்கும் மரியாதையாக அமையும்.

நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில்  எறிவதுண்டோ …..?

நன்றி: நிலவரம்.


Tuesday, July 28, 2009

தமிழ்நாட்டுத் தமிழனுக்கு... – நிர்மலா.

அன்று

வணிகக் கப்பல்கள்

வரிசையாய் அணிவகுத்த நின்ற

நம் தென்கடலில்,

இன்று-ltte-tamilan-eelam

நச்சு உலைகள்

நங்கூரமிட நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றன

நீ,

தாராளமாய்த் தாரைவார்த்துக் கொடுத்தத்

தமிழ் மண்ணில்

உன்னையே வேவுபார்க்க

உளவுக்கோபுரம் உயர்ந்து கொண்டிருக்கிறது

இங்கிருந்து

அமைதிப்படை புறப்பட்ட அன்றே

நம் கடல் பகுதியின்

அமைதி குலைக்கப்பட

அங்கீகாரம் வழங்கப்பட்டது.

உனக்கு ஏனோ

புரியாமல் போயிற்று

ஆன்றோர் அறிவுரை

உனக்கு

உறைக்காமல் போனது,

அன்று மட்டுமல்ல-

இன்று வரையிலும் தான்!

தமிழா!

ஈழ இளங்குருத்துக்களின்

குருதிக் கறை படிந்த

"கை"க்கும்

மானங்கெட்டு,

பிச்சைப் பாத்திரத்தினுள் கவிழ்ந்து

உதிக்க மறந்த "சூரியனு"க்கும்

நீ போட்டாயே ஓட்டு,

அவை திரும்பிவரும்...

பகைப்புலங்களின் ஆயுத வீச்சுகளாய்!

செய்தித்தாள்களில் மட்டுமே

நீ -

வாசித்தறிந்த வடபுலத்து யுத்தங்கள்

இன்று நம்

வாசற்கதவைத் தட்டிக் கொண்டிருக்கின்றன.

விண்மீன்களைக் கண்டால் கூட

வீறிட்டு அலறும்

ஈழக் குழந்தைகளின்

அவல அனுபவங்கள்,

நமது தலைமுறைகளுக்கும்

தயாராகிக் கொண்டிருக்கின்றன

நீயோ-

ஒலிம்பிக் விழாவில் சிதறும்

சீனப் பட்டாசுகளைப் பார்த்து

வாய்ப்பிளந்து கொண்டிருக்கிறாய்

ஈழத்திரு மண்ணில் -

பிணம் புதைக்கத் தோண்டப்பட்ட

குழிகளில் கூட

குருதி கொப்பளித்துக்கொண்டிருந்த

அக்கொடூரப் பொழுதுகளில்

நீ

"கவர்"களின் கனத்தக்

கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தாயே...

நினைவில் கொள்!

ஈராயிரம் ஆண்டுகளின் சாரம் ஊறி,

ஆறு பத்தாண்டுகளில் வைரம் ஏறி

உயிர் ஊற்றி வளர்த்திட்ட

ஈழமரம் -

வெட்டப் படுவதற்குக்

கோடாலி வார்க்கப்பட்டது

உனது உலைகளில்!

வெட்டப்பட்ட மரம்

நிச்சயமாய் துளிர்க்கும்;

ஆயிரமாயிரம் -

துவக்குகளாய் உயிர்க்கும்!

இங்கு நீயோ,

உன் வேர்களை வெட்டிக்கொண்டிருக்கிறாய்

எச்சரிக்கை!

நன்றி: http://www.thenseide.com


Thursday, July 9, 2009

எழுத்துலக மௌனம் - பா. செயப்பிரகாசம்.

Die-Press-Release

தமிழர்கள் இலங்கை பூமியின் பூர்வீகக் குடிகள். அமெரிக்கப் பூர்விகர்களான செவ்விந்தியத் தலைவன் ‘சியால்த்’ உணர்ந்து சொன்னது போல,

”இந்த பூமி எங்களின் தாய். நாங்கள் இந்த பூமியின் ஒரு அங்கம். அது எங்களில் ஒரு அங்கம். வாச மலர்கள் எங்கள் சகோதரிகள். மானும் குதிரையும், ராஜாளிப் பறவையும் எங்கள் சகோதரர்கள். பாறை, மலைமுகடுகள், புல்வெளிகளில் படிந்திருக்கும் பனித்துளிகள், மனிதன் எல்லாமும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. ஓடைகளிலும் ஆறுகளிலும் பளபளத்து ஓடும் நீர் வெறும் நீரல்ல. அது எங்கள் மூதாதையரின் ரத்தம். அது வெள்ளையனுக்குப் புரிவதில்லை”

அது போல…

”இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச் சுவடுகள், பதிந்திருக்கின்றன. அவர்களது மூச்சுக்காற்று கலந்திருக்கிறது. இந்த மண்ணிலேதான் எமது இனம் காலாதி காலமாக, கொப்பாட்டன், முப்பாட்டன், பாட்டன் என தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறது ” - அமெரிக்க பூர்விகக் குடிகளான செவ்விந்தியர்களினதும், இலங்கையின் பூர்வீகக் குடியினரான தமிழர்களினதும் மூல வரலாற்றுப் புள்ளிகள் ஒன்றாகவே இருக்கின்றன. செவ்விந்தியக்குடி ஒரு பழங்குடி இனமாகவே இருந்து கழிந்தது. ஆனால் தமிழர்கள் என்ற பூர்வீகக் குடியினர் ஒரு இனமாக வளர்ச்சி பெற்று தனெக்கென தனி அரசை நிறுவி, தனி இறையாண்மை கொண்டிருந்தனர்.

செவ்விந்தியத் தலைவன் “அது வெள்ளையனுக்குப் புரிவதில்லை” - என்று சொன்னது போலவே, தமிழருடைய வரலாற்று மேன்மையும் சிங்களருக்குப் புரிவதில்லை. வரலாற்று உண்மையை ஆதிக்க இனம் என்ற நிலையிலிருந்து முற்றிலும் அழித்திடவே முயற்சி செய்கின்றனர்.

”இலங்கை ஒரு பௌத்த சிங்கள நாடு, இது சிங்களருக்குச் சொந்தமானது“ ஓராண்டு பதவி நீட்டிப்புப் பெற்ற இலங்கை ராணுவத் தளபதி பொன் சேகா சொன்னார். ( இவர் அமெரிக்கக் குடியுரிமையும் பெற்றவராக வாழுகிறார் என்பது சிறப்புச் செய்தி )

”தமிழர்களுக்குப் போவதற்கு இன்னொரு நாடு இருக்கிறது. அதுபோல் இஸ்லாமியர்களுக்கும் இன்னொரு தேசம் உண்டு. சிங்களவர்களுக்கு இது தான் நாடு“ புத்தனுடைய சொல்லைப் புதைத்து விட்டு, அவனுடைய பல்லை வைத்து (அநுராதபுரம் புத்த விஹார்) ஆராதனை செய்கிற புத்த பிக்குகள் முதல் அதிபர் ராஜபக்க்ஷே வரை இந்த வாசகத்தை உதிர்க்கிறார்கள்.

1958 - ல் இனக் கலவரம் வெடித்து தலைநகர் கொழும்புவில் தமிழர் அதிகம் வாழும் பகுதிகளில் சிங்களக் காடையர்கள் தாக்குதல் நடத்தினர். பண்டார நாயகா தலைமையிலான அரசும் போலிசும், ராணுவமும் வேடிக்கை பார்த்ததோடன்றி ”பழி எடுங்கள்” என தூண்டியும் விட்டார்கள். அப்போது மே 26, தல் பவில சீவன் சதோரா என்ற புத்தத் துறவி “ஒரு சிங்களவன் உயிருக்கு ஆயிரம் தமிழர்கள் சமம்“ என்று ஒரு நிகழ்ச்சியில் பேசியதை கொழும்பு மாலைத் தினசரியான ஆங்கில அப்செர்வர் வெளியிட்டிருந்தது.

”தமிழர்கள் எந்தப் பகுதிகளில் வாழுகிறார்களோ அங்கு தங்களைப் பலப்படுத்திக் கொண்டு வருகிறார்கள் சிங்களவர்கள் தமிழர்களால் அழிக்கப்படும் ஆபத்து இருக்கிறது, இதற்கு இடம் கொடுக்கப் போகிறோமோ?”

என்று பொரணை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சாகர பலன சூரியா நாடாளுமன்றத்தில் கேட்ட நேரத்தில், அம்பாந்தோட்டை எம்.பி. - யான லக்ஷ்மன் ராஜபக்க்ஷே குறுக்கிட்டு “ அவர்களை அழித்து விடுங்கள் “ என்று கத்தினார். ஆனால் சாகர பலன சூரியா தெரிவித்ததற்கு மாறாக யதார்த்த நிலைமைகள் வேறொன்றைச் சித்தரித்துக் காட்டின.

இலங்கைப் பரப்பில் 29 விழுக்காடு தமிழ் வழித்தாயகப் பகுதியாகும். ஓரின ஒற்றையாட்சி முறையினால் தமிழ்ப் பகுதிகளில் திட்டமிட்டு சிங்களக் குடியேற்றம் நடத்தப்பட்டு, தமிழர் நிலம் பறிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. கிழக்கில் பெரும்பான்மையும், வடக்கில் முப்பது விழுக்காட்டுப் பரப்பிலும் சிங்களர் குடியேற்றப்பட்டனர். 1948 ஆம் ஆண்டில் கல்முனை மாவட்டத்தில் 4.5 சதவீதமாக இருந்த சிங்களர் 1950 ஆம் ஆண்டு முதல் அதிகரித்து, 1990 -ல் 38 சதவீதமாக உயர்ந்து பின்னர் அதுவே பெரிய சமுதாயமாகி கல்முனை மாவட்டத்தை ‘திகாமடுல்ல‘ என்று சிங்களப் பெயர் மாற்றுமளவுக்கு குடியேற்றப் பெருக்கம் நடத்தப்பட்டது.

அரசுப் பணிகள், இராணுவம் அனைத்திலும் சிங்களர் உயர்ந்து கொண்டே வர, இரண்டு விழுக்காட்டுக்கும் குறைவாக தமிழர்கள் கீழாகிக் கொண்டே போனார்கள். இலங்கைத் தீவில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்ற அடையாளமே இல்லாமால் செய்வதற்கு எத்தனிப்புகள் எடுக்கப்பட்டன. ஐ. நா அவையில் முதலில் தமிழ் பேசிய இலங்கை அதிபர் என்ற பெயரை வாங்கிக் கொண்ட, ராஜபக்க்ஷே கீபிர் விமானங்களால், பீரங்கிகளால், ஏவுகணைகளால் அக்னி அர்ச்சனை நடத்திக் கொண்டு வருகிறார். வன்னியிலிருந்து இடம் பெயர்ந்த அகதிகள் முகாமிற்கு அருகில் தடை செய்யப்பட்ட ‘கிளாஸ்டர்’ குண்டுகள் வீசப்பட்டன. இரண்டு குழந்தைகள் உட்பட மூவர் உயிரிழந்த இந்நிகழ்வில் அகதிகள் பலர் காயமடைந்தனர். நவம்பர் மாதத்தில் மட்டும் வன்னியில் ஐந்து முறை கிளாஸ்டர் குண்டுகள் வீசப்பட்டன. இந்த கிளாஸ்டர் குண்டுகள் இரண்டாம் உலகப் போரில் நாகஷாகி, கிரோஷிமா மீது வீசப்பட்ட அணுகுண்டுக்கு அடுத்தப்படியான பேரழிவு கதிர் வீச்சு ஆயுதம். இந்தக் குண்டுகள் வீசப்படுவது தடையில் இருந்த போதிலும் இலங்கை பயன்படுத்தியுள்ளது. இது யுத்த நெறிமுறைக்கு மாறானது. நூற்று ஏழு நாடுகள் கூடி 3 - ஆம் தேதி நார்வே தலைநகர் ஆஸ்லோவில் கிளாஸ்டர் குண்டுகள் பயன்படுத்துவதற்கு எதிரான உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.

வேறொங்கோ ஏழு கடல் தாண்டி, சத்தா சமுத்திரம் தாண்டி இந்த மானுட அவலம் கேட்கவில்லை. நமக்கு அருகேயுள்ள சிறு கடல் தாண்டிக் கேட்கிறது. நமது தோளில் வந்து உட்கார்ந்திருக்கிற அந்த அவலம், நமது தொப்புள் கொடி உறவாகவும் இருக்கிறது. தமிழகமெங்கும் எழுச்சிகள், எதிர் வினைகள் பெருகியுள்ளன. மாதம் அரைக்கோடி ரூபாய் ஊதியம் வாங்கும் கணினிப் பொறியாளர்கள் ( Tidel Park - 17-11-2008 ) உடல் ஊனமுற்றோர் அமைப்பு என சமூகத்தின் சகல பகுதியினரும் எதிர்வினை ஆற்றிக் கொண்டிருக்க - தமிழகத்திலுள்ள 221 ஓவியர்களும் 14.11.2008 முதல் 21.11.2008 வரை ஓவிய படையல் செய்து, ஓவியங்கள் விற்ற தொகையை ஈழ மக்களுக்கு உதவிட - திரையுலகினரின் ஆவேசம் நம்மைப் பிரமிக்க வைத்திட - அரவாணிகள் என்றழைக்கப்படும் திருநங்கையர் 08.12.2008 ஆம் தேதி ஒரு நாள் போராட்டம் நடத்துகின்றனர். கோவையில் அனைத்துக் கலை இலக்கிய அமைப்புகளின் கூட்டமைப்பு 22.11.2008 உண்ணா நிலை போராட்டத்தினை எடுத்தது. சென்னை புழல் சிறையில் கைதிகள் உண்ணா நிலைப் போராட்டம், 24.10.2008 அன்று கொட்டும் மழையில் சென்னையில் நடந்த மனிதச் சங்கிலி - என மக்களின் சகல பிரிவினரும் ஈழத் தமிழருக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர்.

மானுடம் எங்கெல்லாம் சிதைவுக்கு ஆளாக்கப்படுகிறதோ அங்கெல்லாம் போய் தாங்கி நிற்பது கலைஞனின் நெஞ்சம்.

கூப்பிடு தூரத்தில் இருக்கிறது ஈழம், ஆனால் தமிழ் எழுத்துலகில் மௌனம்…..

கலைஞர்கள், எழுத்தாளர்கள், சமகாலத்தில் நடப்பவற்றை கூர்மையாய் உள்வாங்கி, எதிரொலிப்புச் செய்ய வேண்டியவர்களாதலால் சமூக விஞ்ஞானிகளாகவும் இயங்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

நமக்கு அருகாமையிலுள்ள தேசத்தில் மானுட அவலமும் விடுதலை நோக்கிய ஒரு போராட்டமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிற போதும் - மானுட அவலம் மனசை உடைக்கிற போதும் - மௌனம் காக்கிற இந்த அறிவு ஜீவிகள் வரலாற்றுக்கு எதிர்த் திசையில் நடக்கிறார்களோ என்ற ஐயம் துளிர்க்கிறது. இந்த மௌனத்துக்கு என்ன பொருள்? உடன்படாமை அல்லது எதிர்திசை என்று தானே அர்த்தம்.

22.09.2008 அன்று சென்னையில் ஒரு நாள் தொடர் முழக்க ஆர்பாட்டத்தினை தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி ஏற்பாடு செய்து, தமிழகம் தழுவிய எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், திரையுலகத்தினற்கு அழைப்பு அனுப்பப்பட்டது. சிலர் பங்கேற்ற சிறிய கூட்டமாகவே முடிவு பெற்றது. எதிர்பார்த்த அளவுக்கு படைப்பாளிகள் வட்டத்திலிருந்து வந்தாரில்லை. தமிழ் எழுத்துலகில் அதிகமாகவே வாசிக்கப்படுகிற எழுத்தாளர்கள் அந்தத் திசைக்கே தென்படவில்லை.

”நாம் நாமாக இருப்போம், நமது படைப்புகளும் எழுத்துக்களும் அவ்வாறே இருக்கும்” தன் மோகக் கோட்பாட்டில் இயங்கும் சுய மோகிகள், தமது ஆற்றலின் உயரம் பற்றி அதீத எண்ணம் கொண்டோர்களாக இருக்கிறார்கள். தமது அறிவுத் திறன் பற்றிய பாராட்டுதலுக்காக காத்திருக்கும் இவர்கள், தமது படைப்புக்களின் விலைப் படுத்தலுக்கானதாக இந்தப் பாராட்டுதலை மாற்றிக் கொள்வார்கள்.

நவீன தமிழின் முதலிரண்டு தலைமுறை எழுத்தாளர்களுக்கு ஈழம் சந்தையாக இருந்தது. சமகால எழுத்தாளர்களுக்கு உலகப் பரப்பெங்கும் புகலிடம் அடைந்த ஈழத் தமிழர்களே சந்தையாகியுள்ளனர். புகலிடத் தமிழர்களை நோக்கியே இங்கு பதிப்பகச் செயல்பாடுகளைக் குவிக்கும் சிலரும் உருவாகியுள்ளனர்.

திரைக் கலைஞர்களின் உண்ணா நோன்பு நிகழ்வில் கவிஞர் தாமரையின் ஆவேசம், எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் நல்லதொரு கட்டுரை - என அங்கொரு இங்கொரு எதிர்வினைகள் போதுமானவை அல்ல, உணர்வு பூர்வ தொடர்ச்சியான செயல்பாடுகள் உருவாக்கப்பட வேண்டும்.

எந்த அசைவுமில்லாமல் அமர்ந்திருக்கக் காணுகையில், சொந்த மக்களின் துயரத்தில் பங்கு கொள்ளாத மௌனிகள் கூட்டத்தால் எழுத்துலகம் சூழப்பட்டுள்ளோதோ என நினைக்கத் தோன்றுகிறது. எதிர்வினை - ஒரு படைப்பாக்கமாய் இருக்க வேண்டும் என்பதில்லை. அது ஒரு கருத்தறிவிப்பாக இருக்கலாம். பேச்சு வடிவத்தில் கூட வெளிப்படலாம்.

எரியும் ஈழப் பிரச்சனையிலிருந்து விலகியிருக்கும் இந்த மௌன கூட்டத்திற்குள் த. மு. எ.ச போன்ற கலை இலக்கிய அமைப்புகளும் அடக்கமாவதுதான் வேதைனையானது. இலக்கியவாதிகளின் சுதந்திரமான செயல்பாட்டை கட்டுக்குள் வைப்புதுதான் கட்சி ரீதியான அரசியல் எனபது உள்ளுக்குள் உலவிடும் உண்மை.

தமிழின் நவீன இலக்கிய முன்னோடி பாரதி போல் கவிதை, உரைநடை என சகல துறைகளின் இலக்கியப் பங்களிப்பில் பஞ்சாபி இலக்கியத்தின் முன்னோடியாக போற்றப்படுபவர் மாககவி பாய்வீர்சிங் ( 1872 - 1950 ) அவருடைய ஆயிரக்கணக்கான இலக்கியக் கொடைகளில் ஒரு பக்கத்தில் கூட இந்திய விடுதலைப் போராட்டம் பற்றியதான குறிப்பு ஒன்றும் இல்லை. பாய்வீர் சிங் அமிர்தரஸில் வாழ்ந்தவர். அங்கிருந்து கூப்பிடு தூரத்தில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி அவரது ஒரு எழுத்தும் இல்லை. ஒரு கண்டனப் பேச்சும் இல்லை. பொற்கோவிலைப் பற்றி படைப்புகளில் பேசியவரிடமிருந்து, கல்லெறி தூரத்தில் நடந்த கொலைச் சம்பவம் பற்றி சிறு பதிவும் இல்லை. பாய்வீர் சிங்கை வழிகாட்டியாகக் கொள்கிற இளைய தலைமுறையினர் ‘அவர் வரலாற்றின் எதிர்த் திசையில் நடந்தார்‘ என விரல் நீட்டி குற்றம் சுமத்துகின்றனர்.

இன்றைய தமிழினப் பிரச்சினைகளில் - குறிப்பாக ஈழப் போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள் எதிர்த் திசையில் நடந்தார்கள் என்ற வரலாற்றுப் பதிவும் பழியும் தேவைதானா ?

- பா. செயப்பிரகாசம்

நன்றி: www.appaaltamil.com


Tuesday, July 7, 2009

இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தில் 20 ஆயிரம் தமிழர்கள் கொலை: தி டைம்ஸ் தகவல்.

இலங்கை இராணுவத்தின் இறுதிக்கட்ட யுத்தத்தில் 20,000 தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்திருப்பதாக, த டைம்ஸ் குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்கம் மேற்கொண்ட எறிகணை வீச்சுக்களால் அவர்கள் கொல்லப்பட்டதாக த டைம்ஸ் மேற்கொண்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, அறிவிக்கப்பட்டதை விட, மூன்று மடங்கு அதிகம் என டைம்ஸ் தெரிவித்துள்ளது.
மோதல் தவிர்ப்பு வலயத்தில் இலட்சக்கணக்கான பொது மக்கள் இருந்த நிலையில் கடந்த ஏப்ரல் 27ம் திகதி கனரக ஆயுதங்களை பாவிப்பதை நிறுத்துவதாக அரசாங்கம் அறிவித்தது.
அத்துடன், அங்கு இடம்பெற்ற பொது மக்களின் உயிரிழப்புகளை, விடுதலைப்புலிகளின் மீது அரசாங்கம் சுமத்தியதாக டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், கிடைக்கப்பட்ட நிழற்படங்கள், உத்தியோகபூர்வ ஆவணங்கள், சாட்சியாளர்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்கள் என்பன மாறுபட்ட கதைகளை சொல்வதாக அது தெரிவித்துள்ளது.
சர்வதேச கண்காணிப்பாளர்களும், உதவி வழங்குனர்களும், ஊடகவியலாளர்களும் புறந்தள்ளப்பட்டு, இராணுவம் இறுதி மூன்று வாரங்கள் பாரிய தாக்குதல்களை முன்னெடுத்து யுத்தம் நிறைவடைந்து விட்டதாக அறிவித்தது.
ஆனால் அதற்கான விலைகளை அப்பாவி தமிழ் பொது மக்களே செலுத்த வேண்டியேற்பட்டதாக த டைம்ஸின் அந்த செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தமிழீழத் தலைவர் கொல்லப்பட்டதன் பின்னர், மே 19ம் திகதி மாத்திரம் 1000 பொது மக்கள் கொல்லப்பட்டதாகவும் த டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த பாதிப்புக்களை, தற்போது வெளியாகியுள்ள நிழற்படங்களின் ஊடாக பார்க்கும் போது தெளிவுபடுத்தப்படுகிறது.
இதற்கிடையில் தாக்குதல் கோணங்கள் இராணுவத்தினரால் நிர்ணயிக்கப்பட்டு, அதன் பின்னர், வான் மற்றும் நிலத்தாக்குதல்களை மேற்கொள்ளப்பட்டுள்ளமை சில புகைப்படங்களில் தெளிவாக தெரிவதாக பிரித்தானிய ஆயுதப்படை என்னும் சஞ்சிகையின் ஆசிரியர் சார்ல்ஷ் ஹெயின்மென் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் இலங்கையின் பிரேரணை வெற்றி பெற்றுள்ளது.
An aerial view of an abandoned vehicle is seen in the  devastation in the former conflict zone on the  north east coast of  Sri Lanka, Saturday, May 23, 2009. U.N. Secretary-General Ban Ki-moon visited the displacement camp packed with tens of thousands of Tamil civilians in northern Sri Lanka as he appealed Saturday to the triumphant government to "heal the wounds" after three decades of civil war.  (AP Photo/Kirsty Wigglesworth)
Image for Ian Whitbread - Catherine Philps Piece. Sri Lanka’s No-Fire Zone is a scene of such utter devastation it mocks its very name. It is a glimpse of hell unleashed in paradise. A glistening white beach packed with home-made bunkers where civilians huddled to protect themselves from the shells that the government denies launching in the final weeks of the offensive.
An aerial view of the former battlefront can be seen from the helicopter carrying U.N. Secretary-General Ban Ki-moon during his visit, which also included a visit to the refugee camp called Manik Farm, on the outskirts of the northern Sri Lankan town of Vavuniya May 23, 2009. Ban toured Sri Lanka's largest war refugee camp named Manik Farm, home to 220,000 refugees, in the north of the country on Saturday during a trip to press for wider humanitarian access and political reconciliation, and is the highest-level international visit Sri Lanka since the government declared victory on Monday over the Tamil Tiger rebels in a 25-year war.        REUTERS/Louis Charbonneau     (SRI LANKA CONFLICT MILITARY POLITICS)
An aerial view of a former battlefront can be seen from the helicopter carrying U.N. Secretary-General Ban Ki-moon during his visit, which also included a visit to the refugee camp called Manik Farm, on the outskirts of the northern Sri Lankan town of Vavuniya May 23, 2009. Ban toured Sri Lanka's largest war refugee camp named Manik Farm, home to 220,000 refugees, in the north of the country on Saturday during a trip to press for wider humanitarian access and political reconciliation, and is the highest-level international visit Sri Lanka since the government declared victory on Monday over the Tamil Tiger rebels in a 25-year war.        REUTERS/Louis Charbonneau (SRI LANKA CONFLICT MILITARY POLITICS SOCIETY IMAGES OF THE DAY)
An abandoned UN World Food Program vehicle lays amidst the devastation, seen in this aerial photo showing part of the former conflict zone on the north east coast on the Jaffna peninsula of Sri Lanka, Saturday, May 23, 2009.  Many thousands of Tamil people were displaced over the final months of fighting, leaving some areas largely deserted, with displaced people being housed in tented camps. (AP Photo/Kirsty Wigglesworth)
The abandoned devastation is seen in this aerial photo showing part of the former conflict zone on the north east coast on the Jaffna peninsula of Sri Lanka, Saturday, May 23, 2009. Many thousands of Tamil people were displaced over the final months of fighting, leaving some areas largely deserted, with displaced people being housed in tented camps. (AP Photo/Kirsty Wigglesworth)
The abandoned devastation is seen in this aerial photo showing part of the former conflict zone on the north east coast on the Jaffna peninsula of Sri Lanka, Saturday, May 23, 2009. Many thousands of Tamil people were displaced over the final months of fighting, leaving some areas largely deserted, with displaced people being housed in tented camps. (AP Photo/Kirsty Wigglesworth)
Image for Ian Whitbread - Catherine Philps Piece. Sri Lanka’s No-Fire Zone is a scene of such utter devastation it mocks its very name. It is a glimpse of hell unleashed in paradise. A glistening white beach packed with home-made bunkers where civilians huddled to protect themselves from the shells that the government denies launching in the final weeks of the offensive.


Friday, July 3, 2009

இனப் படுகொலையை மறைக்கும் ராஜ தந்திரம்.

vanni makkal
ஈழத் தமிழினத்தின் உரிமைப் போராட்டத்தை நசுக்க, எந்தக் கரிசனமும் இன்றி ஒரு மாபெரும் இனப் படுகொலையை நடத்தி முடித்த சிறிலங்க இன வெறி அரசை, தன்னாட்டு மக்களை பாதுகாக்கும் கடமையை (Responsibility to Protect – R2P) கைதுறந்த காரணத்திற்காக உலக நாடுகள் தண்டிக்க வேண்டும் என்று கோரிவரும் நேரத்தில், அது கடைபிடித்த அரச பயங்கரவாத வழிமுறைகளை நியாயப்படுத்தி, காப்பாற்றிடும் ராஜ தந்திர முயற்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன
ஈழத் தமிழர்களின் இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணும் பாதையை தன்னிச்சையாக முறித்துவிட்டு, இராணுவ ரீதியாக தீர்வு காணும் முடிவுடன், தெற்காசிய நாடுகளின் முழுமையான ஒத்துழைப்புடன் அது நடத்தி முடித்த இனப் படுகொலை, இன்று உலகின் கண்களை தாமதமாகத் திறந்ததினால் உருவான சர்வதேசச் சட்டச் சிக்கலில் இருந்து தன்னை காத்துக் கொள்ளும் முயற்சியில் சிறிலங்க அரசு இறங்கியுள்ளது. அதன் சீரிய முயற்சிகளின் ஒரு அங்கம்தான் சமீபத்தில் ‘பாரம்பரியமிக்க’ ஆங்கில நாளிதழ் ஒன்றில் சிலி நாட்டின் தூதராக இலங்கையில் பணியாற்றிய ஜார்ஜ் ஹீன் என்பவரின் ‘ஆழமான’ கட்டுரையாகும்.
“தங்கள் நாட்டை (சிறிலங்கா) கடந்த 25 ஆண்டுகளாக நாசப்படுத்திவந்த பயங்கரவாதத்தை போரின் மூலம் முடிவிற்கு கொண்டு வந்த சிறிலங்க அரசை பாராட்டுவதற்குப் பதிலாக, அதன் மீது தனது நாட்டு மக்களை பாதுகாக்கும் பொறுப்பை கைவிட்டதாக குற்றம் சாற்றுவது முறையான செயல் அல்ல” என்று சிறிலங்க அரசை சர்வதேச சட்டங்களின் கீ்ழ் தண்டிக்க முயன்றுவரும் ஐரோப்பிய நாடுகளை குறை கூறியுள்ளார் ஜார்ஜ் ஹீன்.
இனப் படுகொலையை மறைக்க…
இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டுப் போரின் (சிறிலங்க அரசு குறிப்பிடும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்பதையும் பயன்படுத்துகிறார்) இறுதிகட்டத்தில் பல பத்தாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் சிறிலங்க‌ப் படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது அங்கு சென்று வந்த ஐ.நா.வின் பொதுச் செயலர் பான் கீ மூன், அவருடைய அலுவலகத் தலைமை அதிகாரி விஜய் நம்பியார் ஆகியோராலும், அநதப் படுகொலை நிகழ்த்தப்பட்ட இடத்தை செயற்கைக் கோள் எடுத்த படங்களின் வாயிலாகவும் உறுதி செய்துகொண்ட நிலையிலேயே, தன்னாட்டு மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பை கைவிட்ட குற்றத்தை சிறிலங்க அரசின் மீது உலக நாடுகள் சுமத்தி வருகின்றன.
இதனை தவறென்று வாதாட முற்பட்டு, ராஜபக்ச ஆதரவு ஆங்கில நாளேட்டில் எழுதியுள்ள ஜார்ஜ் ஹீன் (Jorge Hein), தன்னாட்டு மக்களை பாதுகாக்கும் பொறுப்பை (Responsibility to Protect) சிறிலங்க அரசு தட்டிக் கழிக்கவில்லை என்று கூறி தனது வாதத்தை துவக்கியிருக்க வேண்டும் அல்லது போரின் இறுதிக் கட்டத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுவது தவறு என்றோ அல்லது உறுதிச் செய்யப்படாதது என்றோ கூறி துவக்கியிருக்க வேண்டும். ஆனால் அப்படியெல்லாம் அவர் துவக்கவில்லை. சந்திரிகா குமாரதுங்கா சிறிலங்க பிரதமராக இருந்தபோது அந்நாட்டு அயலுறவு அமைச்சராக இருந்த லக்ஷ்மண் கதிர்காமரின் திறமைகளையெல்லாம் பட்டியலிட்டுவிட்டு, அவர் படுகொலை செய்யப்பட்டதையும், அவ்வளவு துல்லியமாக அவரை படுகொலை செய்யும் திறன் இதுவரை காணாத பயங்கரவாத இயக்கமான விடுதலைப் புலிகளால் மட்டுமே முடியும் என்பது பொதுவாக ஒப்புக்கொள்ளப்படும் விடயம் என்று கூறி ஆரம்பித்து பிரச்சனைக்கு வருகிறார்.
எந்தப் பிரச்சனைக்கு வருகிறார் என்றால், இறுதி கட்ட இனப் படுகொலை நடந்ததா இல்லையா என்பது பற்றியல்ல, மாறாக எப்படிப்பட்டது விடுதலைப் புலிகள் இயக்கம் என்பதை விவரிக்கத் துவங்குகிறார். சிறிலங்க அரசு திட்டமிட்டு, தெற்காசிய நாடுகளின் உதவியுடன் நடத்தி முடித்த இனப் படுகொலையை மறைக்க முற்படும் ஜார்ஜ் ஹீன், உண்மையில் இப்படிப்பட்ட ‘உள்நாட்டுப் போருக்கு’ காரணமான இனப் பிரச்சனையை விவரமாக விளக்கிவிட்டு, அதற்கு அரசியல் ரீதியான தீர்வு காண சிறிலங்க அரசு ‘எடுத்த’ முயற்சிகளையெல்லாம் பட்டியலிட்டுவிட்டு, பிறகு அதிபர் ராஜபக்ச மேற்கொண்ட இராணுவ ரீதியிலான தீர்வுத் திட்டத்தை ஆதரித்து எழுதியிருப்பாரேயானால், அங்கு பணியாற்றிய ராஜ தந்திரியின் கருத்தாக அதனை கருதியிருக்கலாம்.
அவ்வாறு செய்யாமல், ராஜபக்ச அரசு மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைக்கு உதவிய இந்தியா, சீனா, பாகிஸ்தான், இரஷ்யா ஆகிய நாடுகள் என்ன காரணத்தை கூறினவோ அதனையே இவரும் கூறி – பயங்கரவாதத்திற்கு எதிரான போர் – தமிழர்களுக்கு எதிரான போரை நியாயப்படுத்துகிறார்! ஏனெனில் அங்கு விடுதலைக்காக போராடியவர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரையிட்டால்தான், அவர்களுக்கு ஆதரவளித்த மக்களையும் ஒட்டுமொத்தமாக துடைத்தொழிப்பதற்கு நியாயம் கற்பிக்க முடியும். இந்த வித்தையை ராஜபக்ச அரசு – குறிப்பாக அந்நாட்டு அரசின் பாதுகாப்புச் செயலர் கோத்பய ராஜபக்ச கையாண்டுள்ளார். அதனால்தான், பாதுகாப்பு வலயத்திலிருந்த மருத்துவமனையை இராணுவ இலக்குதான் (legitimate military target) என்று கூறி அதன் மீது சிறிலங்க இராணுவம் குண்டு வீசியதை நியாயப்படுத்தினார்!
எனவே போரில் பாதிக்கப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அல்லது அவர்களுக்கு துணை போனவர்கள் என்று கூறிவிட்டால், அதன்பிறகு ‘உள்நாட்டுப் போரில்’ கொல்லப்பட்டவர்களைப் பற்றி எந்தக் கேள்வியும் எழுப்ப முடியாது அல்லவா? அப்படித்தானே இராக்கிலும், ஆஃப்கானிஸ்தானிலும் அமெரிக்காவும் அதன் நேச நாட்டுப் படைகளும் செய்தன! இல்லாவிட்டால் ஈராக்கில் மட்டும் 11,50,000 பேர் கொல்லப்பட்டதற்கு என்ன நியாயம் கூற முடியும்? எனவே அந்த ‘சட்டபூர்வமான’ வழிமுறையை கொண்டு பல பத்தாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டதை மறைக்க முயன்றுள்ளார் ஜார்ஜ் ஹீன். நல்ல ராஜ தந்திரி.
கால் நூற்றாண்டிற்கு மேலாக அங்கு நிலவிவருவது அந்நாட்டின் பூர்வீக‌க் குடிகளின் சம உரிமைப் போராட்டத்தின் அடுத்தக் கட்ட வளர்ச்சியான விடுதலைப் போராட்டம் என்பதையும், அதற்கு அரசியல் ரீதியான தீர்வு காண்பதற்கு அடுத்தடுத்து வந்த சிறிலங்க அரசுகள் தவறிவிட்டன என்பதையும் மிகச் சாதுர்யமாக மறைத்துள்ளார் ஜார்ஜ் ஹீன்.
தீர்வுத் திட்டத்தை தூக்கி எறிந்த சிறிலங்கா
2004 முதல் 2007ஆம் ஆண்டு வரை சிலி நாட்டின் தூதராக ஜார்ஜ் ஹீன் கொழும்புவில் பணியாற்றியுள்ளார்.
இந்த காலகட்டத்தி்ல்தான் இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் பேச்சுவார்த்தைகள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும், சிறிலங்க அரசிற்கும் இடையே நார்வேயின் அனுசரணையுடன் நடந்துவந்து, அதன் உச்சக் கட்டமாக நிரந்தர அரசியல் தீர்வை எட்டுவதற்கு வகை செய்யும் நோக்கில் இடைக்கால சுய நிர்வாக அதிகார அமைப்பை (Interim Self Governing Authority _ ISGA) நிறுவுவதற்கான திட்டத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் சிறிலங்க அரசிற்கு அளிக்கிறார்கள்.
தாங்கள் அளித்த தீர்வுத் திட்டத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள் என்று புலிகள் வற்புறுத்தவில்லை. மாறாக, இதனை ஒரு அடிப்படையாக்கி இறுதியான அரசியல் தீர்வை உருவாக்க பேச்சுவார்த்தையின் மூலம் முயற்சிப்போம் என்று அறிக்கையும் விடுகிறார்கள்.
இலங்கைத் தமிழர்களின் இனப் பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண தயார் என்று கூறிவந்த சிறிலங்க அரசு, இத்தீர்வு திட்டத்தை ஆராய்ந்து பார்க்கிறோம் என்று கூட சொல்லாமல் கிடப்பில் போட்டது. அமைதிக்கான முன்னெடுப்புகளை ஓரளவிற்கு மேற்கொண்டு வந்த, அப்போது பிரதமராக இருந்த ரனில் விக்கிரசிங்கே அரசின் அதிகாரத்தை பறித்தார் அதிபராக இருந்த சந்திரிகா. இவர் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக அமைதித் தீர்வு காண்பேன் என்று கூறி (1995இல்) தமிழர்களின் பேராதரவுடன் ஆட்சிக்கு வந்தவர். இரண்டு முறை அதிபராக இருந்தார், அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதை விட, அதற்குத் தயாராக இருந்த விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று சித்தரிப்பதற்கான முயற்சிகளை சர்வதேச ரீதியில் மேற்கொண்டார். அதற்குத்தான் இவருக்கு ‘தமிழரான’ லக்ஷ்மண் கதிர்காமர் பெரிதும் உதவினார்.
அவருடைய ராஜ தந்திர திறனைத்தான் ஜார்ஜ் ஹீன் வெகுவாகப் புகழ்ந்து புளங்காகிதம் அடைகிறார். விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று சித்தரிக்க எத்தனையோ காரணங்களை அடுக்கும் ஜார்ஜ் ஹீன், ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லட்டும். உலகில் எந்த பயங்கரவாத இயக்கம் ஒரு விரிவான அரசியல் திட்டத்தை – சர்வதேச சட்ட விதிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட – திட்டத்தை முன்வைத்தது?
ஒரு மூன்றாம் நாட்டின் அனுசரணையுடன் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில், தங்களை இன ரீதியாக ஒடுக்கிவரும் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய பயங்கரவாத இயக்கம் எது?
விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக ஒழித்துக்கட்டுவதே தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு தரும் என்று கூறி கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்களை கொன்று குவித்ததே சிறிலங்க இராணுவம், அதற்கு எதிராக போராடிய விடுதலைப் புலிகள் இயக்கம் பதிலடி கொடுத்து பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினரை கொன்றது, காயப்படுத்தியது. ஆனால், அவர்களால் கொல்லப்பட்ட சிப்பாய் அல்லாத சிங்களவர் யாராவது உண்டா? அப்படி ஒரு செய்தியை இப்படிபட்ட ராஜ தந்திர புலிகளால் காட்ட முடியுமா? ஒரு சிங்களப் பெண் கற்பழிக்கப்பட்டார் என்று கூற முடியுமா?
இரண்டரை ஆண்டுகளாக நடந்த இந்தப் போரில் சிறிலங்க இராணுவ இலக்குகளை குறிவைத்து 6 முறை விமான தாக்குதல் நடத்தினார்களே விடுதலைப் புலிகள், அதில் ஒன்றாவது சிங்கள மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்டதா?
ஆனால், பாதுகாப்பு வலயம் என்று அறிவித்து அங்கு அப்பாவி மக்களை வரவழைத்து, அவர்கள் அங்கு தஞ்சமடைந்த பிறகு, அங்கிருக்கும் மருத்துவமனை, சிறுவர்கள் கூடம் என்று குறிவைத்து தாக்குதல் நடத்தியதே சிறிலங்க இராணுவம்? அது அரச பயங்கரவாதமல்லாவா? சொந்த நாட்டு மக்களை பாதுகாத்திட வேண்டும் என்ற கடமையில் இருந்த வழுவிய குற்றமாகதா இது? இது சிறிலங்க அரசின் அரச பயங்கரவாத நடவடிக்கையா இல்லையா?
சிறுவர்களை தங்கள் படைகளில் சேர்த்த குற்றங்களைச் செய்த பயங்கரவாத இயக்கம் என்கிறார். தமிழ் சிறுவர்களையும், சிறுமிகளையும் சிறிலங்க இராணுவத்தினர் உச்சி மோந்து அன்பு காட்டினரோ? இப்பொழுது கூட, சிறிலங்க இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் இளம் வயதினர் ஒவ்வொரு நாளும் கடத்தி பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுகின்றனரே? சிறுவர்கள் கடத்திச் செல்லப்படுகின்றனரே? படிக்கச் சென்ற சிறுவர்கள், சிறுமிகள் மீது இப்படிப்பட்ட அரச பயங்கரவாதம்தானே 1974 முதல் சிறிலங்க அரச படைகளால் கட்டவிழ்த்து விடப்பட்டது? மறுக்க முடியுமா? புகைப்படங்களும், ‌வீடியோ காட்சிகளும் இந்தக் கதைகளைத் தானே இன்றுவரை பேசுகின்றன.
கொழும்பு நகரில் சிறிலங்க நாடாளுமன்றத்திற்கு முன்னால் சம உரிமை கேட்டு சாத்வீக வழியில் போராடிய தமிழர் தலைவர் செல்வநாயகம் உள்ளிட்டோர் மீது சிறிலங்க காவலர்களும், காடையர்களும் தாக்குதல் நடத்தவில்லையா? அமைதியாக கூடி தமிழ் மாநாடு நடத்திய மக்கள் மீது காவல் துறையினரே வன்முறை செய்து 9 பேரைக் கொல்லவில்லையா?
இதையெல்லாம் பார்த்தப் பிறகுதானே உருவானது ஆயுதப் போராட்டம்? சும்மாவா சுட்டார்கள் ஆல்பிரட் துரையப்பாவை? இந்த வரலாற்றையெல்லாம் கவனமாக மறைத்துவிட்டு (மூன்றாண்டுக் காலம் கொழும்புவில் பணியாற்றியவருக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும்), தனது நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக எழுந்த பிரிவினைப் போராட்டத்தை ஒடுக்க அந்நாட்டு அரசிற்கு சட்டப்பூர்வமான சுய காப்பு உரிமை உள்ளது என்று கூறுகிறார் ஜார்ஜ் ஹீன்! தனது எழுத்தோவியத்தை முடிக்கும் போது தமிழர்களின் சட்டப்பூர்வமான குறைகளை நிறைவேற்ற சர்வதேச நாடுகள் உதவ வேண்டும் என்றும் கூறுகிறார்! என்னே முர‌ண்பாடு! Legitimate Grievances of the minority Tamils என்பதை ஒப்புக் கொள்ளும் இந்த ராஜ தந்திரி, அது என்ன? எவ்வாறு உருவானது? அதற்கான தோற்றவாய் எது? உருவான காலம் எது? எப்படி பெரிதானது? அது ஆயுதப் போராட்டமாக உருவெடுக்கக் காரணம் என்ன? என்பதை நியாயமாக ஆராய்ந்திருப்பாரெனில் யார் பயங்கரவாதி என்பதும், அரச பயங்கரவாதம் எது என்பதும் தெளிவாகியிருக்கும் இவர் எழுத்தை படிப்பவர்க்கு.
தங்களை தனது முழு சக்தியையும் கொண்டு ஒடுக்கும் வலிமை வாய்ந்த எதிரியை வீழத்த ஆயுத வலிமையை ஏற்பதும், தங்கள் இன்னுயிரை ஈந்து தம்மக்களை அப்படிப்பட்ட கொடுமையிலிருந்தும் காப்பதுதான் தற்கொலைத் தாக்குதல். கொடுமையான எதிரியை ஒழித்துவிட்டு, அவனின் படையிடம் சிக்காமல் தங்களையே அழித்துக் கொள்வதும், தங்களையே கருவியாக்கி, தமது இனத்தை அழிக்கும் எதிரிகளை அழிப்பதும் நாகரீக மானுடத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட போராட்ட வழிமுறைகள்தான். இது தவறென்றால் நாம் வாஞ்சிநாதனையும், உத்தம் சிங்கையும் கொண்டாட முடியாது. பகத் சிங்கை நமது நாட்டின் பெருமையாக கருதி சிறப்பு தபால் தலையையும் வெளியிட முடியாது. ஒரு இனத்தின் மீட்சிக்காக தங்களையே தியாகம் செய்வோரை எப்படி அழைப்பது என்பது அந்த இனத்தின் உரிமை. அதே நேரத்தில் அரச பயங்கரவாதத்தை சகித்துக் கொண்டு, ஏதோ ஒரு அரசியல் தீர்வை ஏற்றுக் கொண்டு, அமைதி காத்து வாழ் என்று கூறுவதற்கு உலகிற்கு உரிமை கிடையாது.
ஈழத் தமிழினத்தின் போராட்டத்திற்கான அடிப்படையை விளங்கிக் கொள்ள வேண்டும், அதன் மீது தீர்வை பற்றி விவாதிக்க அனைவருக்கும் உரிமை உண்டு, ஆனால் தங்களுடைய போராட்டத்திற்கான தீர்வு எது என்பதை இறுதியாக தீர்மானிக்கும் பொறுப்பு அந்த மக்களுக்கு மட்டுமே உரியது.
இதனை உணர்ந்து கொண்டவர்கள் மனிதாபிமானிகள் – அவர்கள் ராஜ தந்திரிகளாக இருந்தாலும் – சிறிலங்க அரசு நடத்தி முடித்த போரில் பல பத்தாயிரக்கணக்கில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் உயிர்களுக்காக அந்நாட்டு அரசு தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறுவார்கள். த‌ங்களுடைய ராஜ ‌வி‌சுவாச‌த்தை‌க் கா‌ட்ட ‌விரு‌ம்புவோ‌ர் எழு‌தினா‌ல் மட்டுமே உண்மையையும், நியாயத்தையும் மறைத்து ராஜ தந்திர நியாயம் கற்பிக்க முடியும்.
- இணைய உலகம்.
நன்றி: http://www.nerudal.com


தமிழ்த் தேசியத்தை விழுங்க முயற்சிக்கும் சிங்கள தேசியம் – தொல்காப்பியன்.

 

NILAVARAMஇராணுவ ரீதியாகத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அடக்கிய சிங்கள அரசு, இப்போது வரலாற்று ரீதியாக அவர்களை அடிமைப்படுத்தி, தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேரே – வடக்கும் கிழக்கும் தமிழரின் மரபுவழித் தாயகம், தமிழர்கள் ஒரு தேசிய இனம், தமிழ் மக்களுக்கு தன்னாட்சி உரிமை உள்ளது ஆகிய விடயங்கள் தான்.
தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டைச் சிதைத்து, அவர்களின் தனித்துவமான தேசிய அடையாளங்களை அழிப்பதன் மூலம் தன்னாட்சி உரிமைக்கான எழுச்சியையும் கோரிக்கையையும் பலவீனப்படுத்துவது தான் சிங்களத்தின் நாசகாரத் திட்டம். தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் சிதைத்துள்ள நிலையில் – எதிர்காலத்தில் புலிகளின் எச்சங்களே நாட்டில் இருக்காத வகையில் – சிங்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அடுத்த கட்டமாக ‘ஈழம்’ என்ற வார்த்தையையே இல்லாமல் செய்வதற்கு சிங்கள அரசாங்கம் குறிவைத்தி;ருக்கிறது. ஈழம், தமிழ், முஸ்லிம் போன்ற வார்த்தைகளை கொண்ட கட்சிகளின் பெயர்களைத் தடைசெய்ய அரசாங்கம் முயற்சிப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன.
இது எதிர்காலத்தில் ‘ஈழம்’ என்ற பெயரிலோ, அல்லது தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் தனித்துவமான கட்சிகள் – அமைப்புகள் இயங்குவதை, தோன்றுவதை முழுமையாகத் தடைசெய்ய எடுக்கப்படும் நடவடிக்கையாகும்.
தேர்தல் திணைக்களத்தின் ஊடாக அரசியல் கட்சிகளின் பெயர்களை மாற்றியமைக்கக் கொடுக்கப் படுகின்ற நிர்ப்பந்தமானது – தமிழ்த் தேசியத்தை அழிப்பதற்கு சிங்களத்தின் மீது அரசாங்கம் கொண்டிருக்கின்ற கரிசனையையே பிரதிபலிக்கின்றது. இதைச் செய்து விட்டால் நாட்டில் ஒருமைப்பாடு வந்து விடும், பிரிவினை ஏற்படாது என்று கருதுகிறது இலங்கை அரசு.
இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் தற்போது தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் கட்சிகள் எதுவுமே இப்போதைய பெயர்களில் இயங்க முடியாது. இனம் ஒன்றைப் பிரதிநிதித்துவம் செய்யும் அல்லது பிரதேசம் ஒன்றின் பிரதிநிதித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகள் செயற்படக் கூடாதென்று அரசாங்கம் சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதன் மூலம் எந்தவகையிலும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தி விடமுடியாது.
கட்டாயமாக – நிர்ப்பந்தத்தின் பேரில் செய்யப்படும் இத்தகைய எந்த நடவடிக்கையுமே சிறுபான்மை மக்களிடத்தில் இன்னும் அதிகமான வெறுப்பையும் பிரிந்து போகும் எண்ணத்தையுமே ஏற்படுத்தும். சிங்களம் மட்டும் ஆட்சிமொழி என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது எத்தகைய நிலையை ஏற்படுத்தியது என்பதை இலங்கை அரசு இன்னமும் புரிந்து கொள்ளவில்லைப் போலும். ஆனால், சிங்கள அரசின் நோக்கம் பிரிவினையைத் தடுப்பதோ ஒருமைப்பாட்டைப் பேணுவதோ அல்ல.
அதன் ஒரே நோக்கம் சிங்களத் தேசியத்துக்குள் அனைத்து இனங்களையும், அனைத்து மொழி பேசும் மக்களையும் உள்வாங்கிக் கொள்வது தான். பயங்கரவாதம் என்ற போர்வையில் தமிழர்களின் காப்பரணான விடுதலைப் புலிகளை வெற்றிகொண்ட பின்னர் நடத்திய விழாவில் பேசிய மகிந்த ராஜபக்ஸ – இனிமேல் நாட்டில் சிறுபான்மை இனங்கள் என்று எதுவுமில்லை என்று கூறியிருந்ததை மறந்து விடக்கூடாது.
அதாவது அனைத்து இனங்களையும் சிங்களத்துக்குள் உள்வாங்கி;க் கொள்வது தான் அவரது திட்டம். இது சாத்தியமானால் – தமிழ்த் தேசியமே இல்லாமல் போய், அனைவரும் சிங்களத் தேசியத்துக்குள் சிக்கிக் கொள்ள நேரிடும். இப்படியான நிலையில் இருந்து தனித்துவமான வகையில் தமிழ்த் தேசிய இனத்தால் போராட்டங்களை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்படும்.
இலங்கைத் தேசியம் அல்லது சிங்களத் தேசியத்துக்குள் அனைத்து மக்களையும் உள்வாங்கிக் கொண்டு தமி;ழ்த் தேசியத்தையும் முஸ்லிம் தேசியத்தையும் இல்லாது அழித்து விடுவதே அவர்களின் நோக்கம்.
இது வெறுமனே  மகிந்தவின் கனவு மட்டுமல்ல. ஐ.தே.க.வின் எண்ணமும் கூட. போர் முடிந்த சில நாட்களின் பின்னர் ஐ.தே.க.வின் தரப்பில் இருந்து இதுபோன்றதொரு கருத்து முன்வைக்கப் பட்டிருந்ததை மறந்து விட முடியாது. ஈழம் என்பது அரசியல் ரீதியாகத் தோற்கடிக்கப் படவில்லை. இன்னமும் ஈழம் என்ற பெயரில் அரசியல் கட்சிகள் இயங்குகின்றன. அனைத்;துத் தமிழ்க் கட்சிகளினது பெயர்களிலும் ஈழம் என்பது இருக்கிறது. எனவே, ஈழம் என்பதை அரசியல் ரீதியாகவும் தோற்கடிக்க வேண்டும் என்று கூறியிருந்தது ஐ.தே.க.
இது, இலங்கையின் இரு பெரும் சிங்களக் கட்சிகளினதும் பேரினவாதச் சிந்தனைகள் ஒன்றுபட்டிருப்பதை வெளிப்படுத்தும் விடயமாகும். தமிழ்த் தேசியத்தைச் சிதைத்து சிங்களத் தேசியத்துக்குள் தமிழ் மக்களின் வாழ்வை அடிமைப்படுத்துவதே சிங்களத்தின் திட்டம்.
புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா பிரிந்து சென்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை உருவாக்கினார். ஆனால், பின்னர் கருணாவைத் தனித்து இயங்க சிங்களத் தேசியம் விடவில்லை. வளைத்துப் போட்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் உள்வாங்கிக் கொண்டது. பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பெயரை மாற்றும்படி மகிந்தவும் அவரது சகோதரர்களும் கருணாவும் பெரும் நெருக்கடிகளைக் கொடுத்தனர்.
ஆனால், அது சாத்தியமற்றதாகிப் போக, அந்தக் கட்சியையே இல்லாதொழிக்கும் வகையில் ஒவ்வொருவராக சிறி லங்கா சுதந்திரக் கட்சிக்குள் கொண்டு வரும் இரகசிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன. இந்த நடவடிக்கைகளின் இறுதிக் கட்டத்தில் பிள்ளையானும் சிறி லங்கா சுதந்திரக் கட்சிக்குள் உள்வாங்கப்படுவார். இது தான் சிங்களத் தேசியத்தின் சதி.
கிழக்கில் மோசடிகளின் மூலமும், கிழக்கைப் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொண்ட கட்சிகளின் முதுகில் சவாரி செய்தும் சிறி லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியைப் பிடித்தது. வெற்றிலையின் கீழ் பிராந்தியக் கட்சிகளைப் போட்டியிட வைத்து கிழக்கில் வெற்றி பெற்றது போன்று – வடக்கிலும் அழுத்தங்களைக் கொடுத்து தமிழ்க் கட்சிகளை அதேபோன்று போட்டியிட வைத்திருக்கிறார் மகிந்த ராஜபக்ஸ.
அரசாங்கத்தின் நிர்ப்பந்தங்களால், வடக்கில் ஈ.பி.டி.பி., சிறி ரெலோ, ஈரோஸ் போன்ற கட்சிகள் வெற்றிலைச் சின்னத்துக்குள் உள்வாங்கப் பட்டிருக்கின்றன. இந்தத் தேர்தலில் எப்படியாவது வெற்றிலையை வெற்றி பெறவைத்து தமிழ்த் தேசியம் சிதைக்கப்பட்டு விட்டது – சிங்களத் தேசியமே வடக்கிலும் கிழக்கிலும் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை சிங்கள மக்களுக்கும், வெளியுலகுக்கும் பிரகடனம் செய்வது தான் மகிந்தவின் திட்டம்.
வடக்கே பருத்தித்துறை தொடக்கம் தெற்கே தெய்வேந்திர முனை வரைக்கும் ஒரே கொடி -சிங்கக்கொடி தான் பறக்கிறது என்று கூறிப் பெருமைப்பட்ட சிங்களத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையே இது.
வடக்கில் யாழப்பாணத்தில் இருந்து தெற்கே தங்காலை வரைக்கும் சிறி லங்கா சுதந்திரக் கட்சி தான் ஆட்சி செய்கிறது என்ற சிங்களத் தேசியத்தை உசுப்பிவிடும் முயற்சியில் இறங்கியிருக்கிறது மகிந்தவின் அரசு. சிங்களத் தேசியத்தின் இந்த இரகசியச் சதிக்கு தமிழ் அரசியல் சக்திகள், ஊடகங்கள் பலவும் பலியாகிக் கொண்டிருப்பது தான் வேதனையான விடயம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகப் பலமமாக இருக்கும் வரைக்கும் அவர்களோடு இருந்து – அவர்களின் பின்னணியில் இயங்கிய இந்தச் சக்திகள் இப்போது சிங்களத் தேசியத்துக்கு வால் பிடிக்க முற்படுவது தான் வேடிக்கை.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அவசரகாலச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்திருக்கிறார். காரணம் கேட்டால், இடம்பெயர்ந்த வன்னி மக்களை குடியமர்த்த அரசின் உதவி தேவையாம். அதற்காகவே எதிர்க்கவில்லை என்று சப்பை நியாயம் சொல்கிறார்.
அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தித் தான் இலங்கை அரசு மூன்று இலட்சம் மக்களையும் ஆடு, மாடுகளைப் பட்டியில் அடைப்பது போன்று – முகாம்களுக்குள் அடைத்து வைத்திருக்கிறது என்பது அவருக்குத் தெரியாதா என்ன?
இதே அவசரகாலச் சட்டம் தான் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வுக்குத் தடையாக இருக்கிறதென்று புரியாதா என்ன?
ஆனாலும் இப்படியொரு நியாயத்தைச் சொல்லித் தப்பிக்க முனைகிறார் என்றால் தமிழ்த் தேசியம் தூங்கிக் கொண்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரா அவர்?
அதைவிட மோசமானது – தந்தை செல்வாவும், பிரபாகரனும் தமிழ்த் தேசியத்துக்காகப் போராடி தோற்றுப் போனவர்களாம் – இனியும் தமிழ்த் தேசியம் பேசிப் பயனில்லை என்று கொச்சைப் படுத்துகிறார்.
அரசுக்குக் கால் பிடிப்பதும் வால் பிடிப்பதும் தான் தமிழ் மக்களைப் பாதுகாக்கும் என்று புதிய வழிகாட்ட முனையும் இவர்களெல்லாம் எப்படித் தலையெடுத்தார்கள் என்று ஒருமுறை திரும்பிப் பார்க்கட்டும்.
அதைவிட தமிழ்த் தேசியத்துக்காகப் போராடி மடிந்தவர்கள் எல்லாம் மடையர்கள் போன்று குறிப்பிடும் அவர் ஒரு முறை சிங்களத் தேசியத்துக்கு கால் பிடித்து விட்டவர்களால் என்னத்தைக் கிழிக்க முடிந்ததென்று ஒரு கணம் நினைத்துப் பார்க்கட்டும்.
சிங்களத்துக்குக் கால் பிடிப்பவர்களால் – ஒரே ஒரு நிமிடம் மட்டும்,  அகதி முகாம்களுக்குள் அடைபட்டுக் கிடக்கும் மக்களை வெளியே கொண்டு வந்து விட முடியுமா?
அதையே செய்ய முடியாதவர்கள் – தமிழ்த் தேசியத்தைக் கொச்சைப் படுத்திக் கொண்டு –அரசுக்குப் பின்னால் நிற்கப் போகிறார்களாம். கூரையில் ஏறியே கோழி பிடிக்க முடியாதவர்கள் வானத்தில் ஏறி வைகுண்டம் போகப் போகிறார்களாம். இவர்களையெல்லாம் தமிழ்த் தேசியத்தின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்ததற்காக யாரை நோக முடியும்?
சிங்களத் தேசியத்துக்குள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்வாங்கி;க் கொண்டு தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கின்ற சதி இப்போது உச்சகட்டமாக நடந்து கொண்டிருக்கிறது.
வடக்கில் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கைகள் தெற்கில் வலுப்பெறுகின்றன. கலப்புக் கிராமங்களை உருவாக்க வேண்டும் என்று கேட்கிறார்கள் சிங்களத்தின் காவலர்கள்.
வடக்கில் மீள்குடியமர்வுக்கு முன்னதாக அங்கு சிங்கள மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்களை கண்டறியும் புதைபொருள் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிறார்கள். இவையெல்லாம் வடக்கும் கிழக்கும் தமிழ் மக்களின் மரபுவழித் தாயகம் அல்ல என்று காண்பிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளே.
முப்பதாண்டுப் போரின் பின்பாதிக் காலத்தில் தமிழ் மக்களின் பலம்மிக்க தலைமைச் சக்தியாக விளங்கும் விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததால் தமிழ்த் தேசியத்தை வரலாற்று ரீதியாக அழிக்கின்ற முயற்சிகள் எதுவும் கைகூடவில்லை.
இந்த இடைவெளியை நிரப்பி சிங்களத் தேசியமே இலங்கைத்தீவு முழுவதும் ஆதிக்கம் செலுத்தியது என்று உறுதி செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. இந்தக் கட்டத்தில் தமிழ்த் தேசியம் சற்று உறங்கிப் போனாலும் அதை விழுங்கி ஏப்பம் விட்டுக் கொண்டு போய்விடும் சிங்களம்.
இதனைத் தடுப்பதற்கு தமிழ் மக்கள் அனைவரும் ஒரே குரலாக ஒலிப்பது அவசியம். எம்மிடையே உள்ள வேறுபாடுகள் பலவீனங்களைக் களைந்து ஒரே குரலாக ஒலிப்பது தான் தமிழ்த் தேசியத்தை காப்பாற்ற தமிழீழத் தேசியத்துக்காகப் போராடிய, களமாடிய மாவீர்களின் கனவுக்கு கொடுக்கும் மரியாதையாக அமையும்.
நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில்  எறிவதுண்டோ …..?
நன்றி: http://www.nerudal.com/


'தமிழா... உன் கதி இதுதானா?'- ஜூனியர் விகடன்.

 

eelam "உன்னதமானவர்கள் வீழ்ந்துவிட்டனர்.ஆளரவமற்ற இருட்புலத்தில்
அவர்கள் புதைக்கப்பட்டனர்.
யாரும் கண்ணீர் சிந்தவில்லை.
யாரோ அவர்களைக்
கல்லறைக்கு எடுத்துச் சென்றனர்.
அவர்தம்
புகழ்வாய்ந்த பெயர் கூறிட
அங்கே சிலுவையோ...
சமாதியோ... மண்டபமோ
ஏதுமில்லை.
புல் முளைத்திருக்கிறது அங்கே.
தாழ்ந்திருக்கும் புல்லிதழ் ஒன்று
அந்த இரகசியத்தைத் தாங்கியிருக்கிறது.
கரை மீறிச் சீறியடிக்கும்
அலைகள் மட்டுமே சாட்சியம்.
வல்லமை வாய்ந்த
அவ்வலைகள் கூட
தொலைதூர இல்லத்துக்கு
செய்தியைக் கொண்டுபோக முடியாது..."
என்ற வி.என்.ஃபிக்னரின் கவிதை ஒன்று, வன்னிப் பகுதியில் நிகழ்ந்து விட்ட சோகத்தைச் சொல்வதற்காகவே எழுதப்பட்டது போல் இருக்கிறது..!
விடுதலைப் புலிகளை ஒட்டு மொத்தமாக அழித்து விட்டதாக ராஜபக்சவின் இராணுவம் அறிவித்துவிட்டது. பிரபாகரனை கொன்றுவிட்டதாக இலங்கை அரசு எக்காளமிடுகிறது. பிரபாகரன் செத்துவிட்டதாக ஒரு சான்றிதழ் பெற நாராயணனும், சிவசங்கர மேனனும் புதுடில்லியிலிருந்து கொழும்புக்குப் பறந்தனர். ராஜபக்சவின் வெற்றிச் சிரிப்பில், இருவரும் முகமலர்ந்து நிற்பதை செய்தித்தாள்கள் படமாக்கின. ஒரே நாளில் பல்லாயிரம் தமிழர் படுகொலை செய்யப்பட்டது, நம் பிரதமரின் தூதுவர்களைத் துளியும் பாதிக்கவில்லை. தமிழினத்தின் உயிர் அவ்வளவு அற்பமாகப் போய்விட்டது!
சிங்களர்கள் அனுராதபுரத்திலும், கொழும்பிலும் ஆடிப் பாடி மகிழ்ந்தனர். இதயத்தை அழுத்தும் சோகத்தைக் கூட வெளிப்படுத்த முடியாமல் தமிழ்க் குடும்பங்கள் ஒடுங்கின. இனி எல்லாம் நலமாக நடந்தேறும் என்று இந்திய அரசும், உலக நாடுகளும் 'நாடி ஜோசியம்' சொல்வதை நாம் நம்ப முயல்வோம்!
ஹிட்லரின் இன அழிப்புப் படையால் ஆஸ்விட்ச் வதை முகாமிலும், புச்சன்வால்ட் மரண முகாமிலும் சொற்களில் இறக்கிவைக்க முடியாத சோகங்களை அனுபவித்த, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற எலீ வீஸல் தன், 'இரவு' என்ற படைப்பில் வெளிப்படுத்திய உணர்வுகள் இங்கே நினைவுக்கு வருகின்றன.
'என் வாழ்க்கையையே சபிக்கப்பட்ட ஒரு நீண்ட இரவாக மாற்றிய அந்த நாளை நான் என்றுமே மறக்கமாட்டேன். அந்தப் புகையை, மௌனமான நீலவானத்தின் கீழ் புகை வளையங்களாக மாறிய அக்குழந்தைகளின் சிறிய முகங்களை என்னால் மறக்க முடியாது.
என் நம்பிக்கையை முற்றிலும் விழுங்கிய அத்தீச்சுவாலைகளை, வாழும் ஆசையை முற்றாகப் பறித்துவிட்ட, ஆதியும் அந்தமும் அற்ற அந்த இருண்ட அமைதியை எப்படி மறப்பேன்? எனது கடவுள் நம்பிக்கையையும் ஆன்மாவையும் கொன்று, எனது கனவுகளை சாம்பலாக்கிய அந்தக் கணங்களை நான் என்றும் மறக்கமாட்டேன். கடவுளைப் போல் நான் வாழ விதிக்கப்பட்டாலும், அந்த நாளை என்றென்றும் மறக்கமாட்டேன்!' என்று அவர் வெளிப்படுத்திய அதே உணர்வுகளுடன்தான் ஒவ்வொரு ஈழத்தமிழரும் இறுதி வரை இருப்பர் என்பது நிஜம். 'பிரபாகரன் தலைமையில் இயங்கிய விடுதலைப் புலிகளால்தான் ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் நிறைவேறாமல் போனது. அது மட்டும் நிறைவேறியிருந்தால், இன்று ஈழத் தமிழர்களுக்கு எல்லா உரிமைகளும் வந்துசேர்ந்திருக்கும்!' என்று சொல்லிவந்தவர்களுக்கு இப்போது நல்ல வாய்ப்பு கனிந்திருக்கிறது. பிரபாகரனை கொன்றுவிட்டதாகவும் விடுதலைப் புலிகளை வென்றுவிட்டதாகவும் பிரகடனம் செய்திருக்கும் இலங்கை அரசு, சிங்களருக்கு சமமாக அனைத்து உரிமைகளையும் எஞ்சியிருக்கும் ஈழத்தமிழருக்கு வழங்க, இப்போது இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?
இலங்கை இறையாண்மைக்கு உட்பட்டு இப்போது நடைமுறையில் இருக்கும் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் தமிழருக்கு சம உரிமை சாத்தியமா? இலங்கை முழுவதும் சிங்களத்துடன் தமிழும் ஆட்சி மொழியாக இதயசுத்தியுடன் அங்கீகரிக்கப்பட்டு, தமிழ் வழி கற்றவர்கள் அரசு நிர்வாகத்தின் சகல துறைகளிலும் அமர்ந்து பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படுமா? முழுமையான கூட்டாட்சி மலராமற்போனாலும், தமிழக அரசுக்குரிய ஆட்சியுரிமைகளாவது வடக்கிலும் கிழக்கிலும் அமைக்கப்படும் அரசுகளுக்குக் கிடைக்கக்கூடுமா? கிழக்குப் பகுதியில் திருகோணமலைப் பக்கம் திட்டமிட்டு சிங்களரைக் குடியேற்றி தமிழர் நிலங்களை அபகரித்தது போன்று, வடக்கில் வன்னிப் பகுதியில் சிங்களக் குடியேற்றம் நடக்காமல், தமிழரின் வரலாற்று வாழ்வாதாரப் பகுதிகள் பாதுகாக்கப்படுமா? இராணுவத்திலும் காவல்துறையிலும் தமிழர் கணிசமாக இடம்பெற சிங்களப் பேரினவாதப் பௌத்த வெறியர்கள் அனுமதிப்பார்களா? இந்த வினாக்களுக்கெல்லாம் இவர்கள் முதலில் விடை காணட்டும்.
"பிரபாகரன்தான் வன்முறையை வளர்த்தெடுத்தார். விடுதலைப் புலிகளால்தான் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. ஈழம் அமைதி இழந்ததற்கு இவர்களுடைய இரத்த வெறியே காரணம்!" என்று இங்குள்ள காங்கிரஸ் நாட்டாமைகள் கிளிப்பிள்ளைபோல் இன்று வரை கூறி வருகின்றனர். நூறு எலிகளை விழுங்கிய பூனை தீர்த்த யாத்திரை போன கதைதான் சிங்கள வெறியர்களின் செயல் என்பதை இவர்களுக்கு யார்தான் புரியவைப்பது?
சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று 1956 இல் அறிவிக்கப்பட்டதும், நாடாளுமன்றத்துக்கு முன்னால் காலிமுகத் திடலில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட தமிழினத் தலைவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி, கொழும்பில் தமிழர் சொத்துகளைச் சூறையாடியது யார்? பண்டா - செல்வா ஒப்பந்தத்தை நிறைவேற்றும்படி 1958 இல் அறப்போரில் ஈடுபட்டபோது, தமிழர் பலரைப் படுகொலை செய்து, தமிழ்ப் பெண்களிடம் பாலியல் பலாத்காரம் நடத்தி, அவர்களுடைய உடைமைகளைத் தீக்கிரையாக்கியது யார்? தென்னிலங்கையிலிருந்து பல்லாயிரம் தமிழர் தமிழகத்துக்கும், ஈழ நிலத்துக்கும் புகலிடம் தேடி ஓடச்செய்தது யார்? யாழ்ப்பாணத்தில் 1974 இல் தமிழாராய்ச்சி மாநாடு நடந்தபோது, வெடிகுண்டு வீசி மோசமான தாக்குதலை முன்நின்று நடத்தியது யார்? மலையகத் தமிழர் மீதும், தெற்கில் வாழ்ந்த அப்பாவித்தமிழர் மீதும் 1977 இல் வெறித் தாக்குதல் நடத்தி, இனக்கலவரத்தை வளர்த்தது யார்? பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவந்து 1970 ஜூலையில் தமிழ் இளைஞர்கள் மீது நரவேட்டை நடத்தியது யார்? 'தமிழரின் அறிவுக்கோயில்' என்று கொண்டாடப்பட்ட யாழ். நகர் நூலகத்தின் 95 ஆயிரம் நூல்களை எரித்துச் சாம்பலாக்கியது யார்? 1983 ஜூலை 25 அன்று வெலிக்கடை சிறையில் 37 தமிழ் இளைஞரும் 27 ஆம் நாள் 18 தமிழரும் குரூரமாகக் கொல்லப்பட்டது யாரால்?
சிங்கள வெறியர்களின் படுபாதகச் செயல்களை ஒரு பட்டியலில் முடித்துவிட முடியாது. புத்த பூமியை இரத்த பூமியாக்கியவர்கள் சிங்களர்கள். அவர்களுடைய வன்கொடுமைக்கு எதிராக வந்து நின்றவர்கள் விடுதலைப் புலிகள். இதுதான் வரலாறு.
எள் முனை உரிமையும் பெறாமலேயே ஏராள மான இழப்புகளைச் சந்தித்துவிட்டது ஈழத் தமிழினம். தமிழீழம் காணும் கனவில் பல்லாயிரம் வீர இளைஞர்கள் களத்தில் பலியாகிவிட்டனர். வான்படை, கடற்படை, தரைப்படையென்று முப்படைகளை உருவாக்கி... ஒரு வலிமை மிக்க, கட்டுப்பாடான இராணுவத்தைக் கட்டமைத்த பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா என்பது கேள்விக்குறியாகிவிட்டது. வீடிழந்து, உறவிழந்து, மன அமைதியை முற்றாக இழந்து, மூன்று லட்சம் தமிழர்கள் வதை முகாம்களில் இரக்கமற்ற இராணுவத்தின் முன் மார்பெலும்பு தெரியும் மழலைகளுடன் கையேந்தி நிற்கின்றனர். போதும் இந்தப் போர்!
சிங்களருக்கு சமமான உரிமைகளுடன் தமிழரை வாழ வைக்க முடியும் என்று சர்வதேச நாடுகள் நம்புகின்றன. நிறைவேறாத முயற்சி அது என்று அந்த நாடுகளின் அதிபர்களுக்கு விரைவில் புரிந்துவிடும். 'புத்த மதத்துக்கு முக்கியத்துவம் தராமல் தமிழரோடு ஒப்பந்தம் போடுகிறாயா?' என்று பண்டாரநாயகாவை சுட்டுக்கொன்ற புத்த சந்நியாசிகளின் பூமியில், தமிழருக்குக் குறைந்தபட்ச உரிமைகள் கொடுக்க ராஜபக்சவே முன்வந்தாலும் ஒன்று கொல்லப்படுவார்... அல்லது அதிகார நாற்காலியிலிருந்து அகற்றப்படுவார். பிரபாகரன் இல்லாத நிலையில், கொழும்பில் இருக்கும் ஆறு லட்சம் தமிழர் வாழ்வில் எந்த நேரத்திலும் அமைதி பறிக்கப்படும். காலம் பின்னாளில் நடத்தவிருக்கும் பாடம், நம் பிரதமருக்கும் சர்வதேசத் தலைவர்களுக்கும் உரிய ஞானம் தரும்.
இலங்கை இறையாண்மைக்கு உட்பட்டு, ஈழத் தமிழருக்கு இந்தியா அரசியல் அதிகாரங்களை இனி வாங்கித் தரும் என்று நாம் நம்புவோமாக! அதற்குமுன்பு வதை முகாம்களில் ஆடு-மாடுகளைப் போல் அடைக்கப்பட்டிருக்கும் மக்களுக்குப் போதிய உணவும் குடிநீரும் மருந்தும் கிடைக்க வழி செய்ய வேண்டும். இருப்பிடங்களை இழந்து நிற்கும் பத்து லட்சம் பேரும் மிக விரைவில் தங்கள் சொந்தக் குடியிருப்புகளுக்குத் திரும்ப வழி காணவேண்டும். நிவாரண உதவிகளை நேரடியாக சர்வதேச நாடுகளின் மனித உரிமை அமைப்புகள் வழங்க அனுமதிக்க வேண்டும். ராஜபக்ச வாக்களித்தபடி, ஆறு மாதங்களில் ஈழத் தமிழரின் இதய ரணங்கள் ஆறும் வகையில் அரசியல் தீர்வை அளிக்க வேண்டும்.
பிரபாகரன் மீது பழியைப் போட்டு நம் சொந்தங்களை சாவுப் பள்ளத்தில் தள்ளியதை வேடிக்கை பார்த்த இந்திய அரசு, இனியாவது செயலில் இறங்க வேண்டும். ஆனால், மன்மோகன் அரசோ ராஜபக்ச சகோதரர்களின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக உலக நாடுகள் நடவடிக்கை எடுப்பதைத் தடுப்பதில் தீவிரமாக இருக்கிறது. தமிழினம் எங்கே போய், யாரிடம் தன் விதியை நொந்து கொள்வது?!
இரண்டாம் உலகப் போரின் இறுதியில் அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் யூனியன், பிரான்ஸ் ஆகிய நான்கு நாடுகளின் முயற்சியில் ஹிட்லரோடு இணைந்து மனித உரிமைகளைக் குழிதோண்டிப் புதைத்தவர்களுக்கு எதிராக 'நூரம்பர்க் விசாரணை' நடத்தப்பட்டு, தூக்கு தண்டனையும், ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.
போர்க் குற்றங்களுக்காகவும் மனிதகுல உரிமைகளுக்கு மாறான அத்துமீறல்களுக்காகவும் யாரையும் விசாரணைக் கூண்டில் நிறுத்தி, தண்டிப்பதற்காக சர்வதேச நாடுகள் முன்வந்தன. 'சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம்' உருவானது. 'உலகின் நீதிக்கும் அமைதிக்கும் அடித்தளம், மனித குலத்தின் கண்ணியம் காக்கப்படுதலே' என்று தெளிவுபடுத்துகிறது. 'சித்ரவதை, வன்கொடுமை, இழிவாக நடத்தப்படுதல் ஆகியவை மனித உரிமை மீறல்' என்கிறது அந்தப் பிரகடனத்தின் ஐந்தாவது பிரிவு.
'ஒரே நாளில் பல்லாயிரம் தமிழரைப் படுகொலை செய்த ராஜபக்ச அரசைக் கண்டித்து ஐ.நா. சபையின் மனித உரிமை அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பிரிட்டனும் ஐரோப்பிய நாடுகளும் வேண்டின. டென்மார்க் முயன்று 17 நாடுகளின் ஆதரவைத் திரட்டி மனித உரிமை சபையைக் கூட்டச் செய்தது. ஆனால், இலங்கை அரசு நிராயுதபாணிகளைக் கொன்று குவித்ததை நியாயப்படுத்தி, கம்யூனிச வரலாற்றில் களங்கத்தை ஏற்படுத்திய ரஷ்யாவும் சீனாவும் கியூபாவும், இந்தியத் தமிழரின் எதிர்ப்பு வருமே என்று சிறிதும் கவலைப்படாமல் மன்மோகன் அரசும், ராஜபக்சவைக் காப்பாற்றக் களம் அமைத்தன!
வியன்னாவில் ஒரு சீக்கிய மதகுரு படுகொலை செய்யப் பட்டதும், பஞ்சாப் பற்றி எரிந்தது. மன்மோகன் சிங் பதறுகிறார். வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வியன்னாவுடன் பேசுகிறார். ஆனால், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத் தமிழரின் பிணங்கள் விழுந்து மண் முழுவதும் மயானமானது. இந்திய அரசின் இதயம் மட்டும் இரங்கவில்லை. மன்மோகனின் மனம் பதறவில்லை; சோனியாவிடமிருந்து ஒரு சொல் வரவில்லை!
'சகோதரன் ஒருவனை விலங்கு பிணைத்திருப்பது உங்களை வருத்தாவிட்டால், நீங்கள் உண்மையில் இழிந்த அடிமைகளாகத்தான் இருக்க வேண்டும். வல்லமையற்றவர்க்கும் வாயில்லாதவர்க்கும் பரிந்து பேச அஞ்சுவோர் அனைவரும் அடிமைகளே!' என்றார் ஜேம்ஸ் ரஸ்ஸல். இங்குள்ள தமிழர்கள் இனவுணர்வற்ற அடிமைகள். ஐந்நூறு ரூபாய்க்குத் தங்கள் வாக்கை விற்பவர்கள். வாய்வீரம் பேசுவதில் மட்டும் வல்லவர்கள். பதவி தரும் சுகத்துக்காக ஏங்குபவர்கள். சொந்த நலனுக்காக இனநலனை இழப்பவர்கள்.
ஈழத்தில் வாடும் தமிழரும், புலம்பெயர்ந்து வாழும் தமிழரும் தாயகத் தமிழரை இனி நம்ப வேண்டாம். ஆயுதத்தை மறந்து விடுங்கள். அகிலம் முழுவதும் அறப்போரை நடத்துங்கள். 'அகிம்சையே வலிமை மிக்க ஆயுதம்' என்று போற்றிய புரட்சியாளர்கள் மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலாவை நெஞ்சில் நிறுத்துங்கள். பிரபாகரனே வெளிப்பட்டாலும் அகிம்சை வழியில் புரட்சியைத் தொடர்வதே உகந்தது. ஆயுதப் போரில் இனியும் எம் தமிழினம் அழியக்கூடாது.
முல்லை பெரியாறு, காவிரி, பாலாறு, ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் என்று எந்த உரிமை மறுக்கப்பட்டாலும் உறக்கத்திலிருந்து எழாத தமிழரையும், பல்லாயிரம் ஈழத் தமிழர் பலியான நாளில் குடும்ப உறவுகளை மத்திய அமைச்சர்களாக்க புதுடில்லி புறப்பட்ட தமிழினத் தலை வரையும், நம் இந்திய அரசு சரியாகவே இனம் கண்டு வைத்திருக்கிறது. அதனால்தான் அது ராஜபக்சவுக்கு அரியணை தாங்கி ஆலவட்டம் வீசுகிறது. தமிழினத்தின் புறநானூற்று வீரத்தில் புழுதி படிந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன.
'பாண்டியனின் வழி நீயா? இமயக்கோட்டில் பறந்திருந்தது உன் கொடியா? இலங்கை நாட்டை ஆண்டவர்கள் உன்னவரா? கலிங்கர் மண்ணை அதிரடித்தது உன்குலமா? கடல்கள் மூன்றைத் தாண்டியவர் பரம்பரையா? புட் பகத்தில், சாவகத்தில் கொடி போட்டான் பிள்ளையா நீ? மாண்ட வரலாற்றினுக்கும் உன்றனுக்கும் மயிரளவும் தொடர்பில்லை, எதற்கு வார்த்தை?' என்று சரியாகத்தான் சொன்னார் கண்ணதாசன்!
- தமிழருவி மணியன்.


Thursday, July 2, 2009

நம் சொந்தங்களின் வாழ்வுரிமைக்காக நாம் என்ன செய்யப்போகிறோம்?

"ஒவ்வொரு பேரழிவுமே வளர்ச்சிக்கானதொரு வாய்ப்பை அளிக்கிறது" - மகிந்த ராஜபக்சேயிடம், ஜூன் 9 ஆம் தேதியன்று 'இந்திய வேளாண் விஞ்ஞானி' எம்.எஸ்.சுவாமிநாதனால் உதிர்க்கப்பட்ட வார்த்தைகள்தாம் இவை.
பசுமைப்புரட்சி என்ற பெயரில் இந்திய வேளாண் விளைநிலங்களை எதற்கும் உதவாத தரிசுநிலங்களாக மாற்றி, உலகுக்கு உணவளித்த இந்திய விவசாயிகளை இலட்சக்கணக்கில் தற்கொலைக்குத் தள்ளிய சூத்திரதாரியான எம்.எஸ்.சுவாமிநாதனின் வாயிலிருந்து இந்த வார்த்தைகள் வெளிவந்திருப்பதில் வியப்பொன்றுமில்லை.
சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தோமானால் ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு முன்னதாகவே மேற்கண்ட வார்த்தைகள் உதிர்க்கப்பட்டிருக்கின்றன. அந்த அறிவார்த்தமான வாக்கியத்தை முதன்முதலில் கூறியவர் டாக்டர்.ஜோசப் மெங்கெல் (Joseph Mengele) என்ற ஜெர்மானியர்.
பல்வேறு நபர்களின் தாடை எலும்புகளின் வடிவத்தைப் பரிசோதிப்பதன் மூலம் அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கண்டறியும் ஆராய்ச்சியை கலாநிதிப் படிப்பிற்காக 1930-களின் இறுதியில் மேற்கொண்டவர் இவர். மானுடவியலிலும், மருத்துவத்திலும் பட்டம் பெற்ற ஜோசப் மெங்கெல், ஹிட்லரின் நாஜி இராணுவத்தின் மருத்துவராக 1940 இல் சேர்ந்தார்.

 

 

 

 

 

 

 

 

 

1943 ஆம் ஆண்டு மே 24 ஆம் தேதியன்று ஆஸ்விட்ச் - பிர்கானாவ் சித்திரவதைக் கொட்டடியில் இருந்த "நாடோடிகளுக்கான முகாமில்" (Gypsy Camp) மருத்துவராக நியமிக்கப்பட்டார். 1945 ஜனவரி 25 ஆம் திகதிவரை அம்முகாமில் பணியாற்றினார். அந்தக் காலத்தில் அவரால் சிறைக் கைதிகளின் மீது மருத்துவப் பரிசோதனை என்ற பெயரில் நடத்தப்பட்ட வதைகள் கேட்போர் நெஞ்சம் கலங்கும் குரூரத்தன்மை பொருந்தியவை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

உயிருள்ள மனிதர்களின் மீது மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வது அவருக்குப் பிடித்த ஒன்று. இரட்டையர்கள் மீது அவருக்குத் தனிப்பட்ட ஆர்வமிருந்தது. அதுபோல, குள்ள மனிதர்களும் அவரது பரிசோதனைகளுக்கு உவப்பான 'எலிகளாக'வே கணிக்கப்பட்டார்கள். அவரது ஆய்வுக்காக சுமார் 1500 இரட்டை ஜோடிகள் பயன்படுத்தப்பட்டனர்.

 

 

 

 

 

 

 

 

தான் மேற்கொள்ளப்போகும் பரிசோதனைகளில் ஈடுபடுத்தப்படவிருக்கும் பல்வேறு இரட்டைக் குழந்தைகளுக்கு அவர் நல்ல துணிகளையும், உணவையும் கொடுப்பார். இதனைப் பல மாதங்கள் தொடர்வார். "மெங்கெல் மாமா.... மெங்கெல் மாமா....!" என்று குழந்தைகள் அவரை வளைய வளைய வரும் ஒரு நாளில் அவர்களைத் தன் பரிசோதனைக் கூடத்திற்கு அழைத்துச் செல்வார். மயக்கமேற்படுத்தும் சாக்லேட்டைக் கொடுத்து அவர்களை மயக்குவார்.
மயங்கிக் கிடக்கும் குழந்தைகளின் இருதயத்தில் அவர்களை உடனே கொல்லும் விஷத்தை ஊசியின் மூலம் செலுத்துவார். குழந்தைகள் அனைவரும் இறந்த பின்னர் அவர்களின் உடல்களை உடற்கூறு பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களின் அவயங்களுக்கு இடையில் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப் பொறுமையாகப் படித்தறிவார்.
இரட்டையர்களை ஒன்றாக வைத்துத் தைத்து, அவர்களால் உயிர்வாழ முடிகிறதா என்ற 'மகத்தான' ஆய்வையும் அவர் மேற்கொண்டார். குழந்தைகளின் கண்களின் நிறத்தை மாற்றுவது எப்படி என்ற கேள்வி அவருக்கு எழுந்தது. இதற்காக, பல்வேறு ரசாயனப் பொருட்களை ஊசிமூலம் அவர்களின் கண்களுக்குள் அவர் செலுத்திப் பார்த்தார்.
அதன் விளைவுகளை அவர் ஊன்றிப் படித்தார். இப்படிப்பட்ட ஆய்வினை மேற்கொள்வதற்கான வாய்ப்புள்ள ஒரு இடமாக ஆஸ்விச் சித்திரவதைக் கொட்டடி உள்ளது என்பதை அறிந்தவுடன் பிறந்த உற்சாகத்தில் அவரது உதடுகளிலிருந்து உதிர்ந்த வார்த்தைகளே " "ஒவ்வொரு பேரழிவுமே வளர்ச்சிக்கானதொரு வாய்ப்பை அளிக்கிறது" என்பது.
யூத இனத்திற்கு மெங்கெல் செய்த கைங்கரியத்திற்குச் சற்றும் குறையாத அன்றேல் அதற்கிணையான ஒன்றை ஈழத் தமிழினத்திற்கு எம்.எஸ்.சுவாமிநாதன் ஜூலையில் இருந்து செய்யவுள்ளார்.
எம்.எஸ்.சுவாமிநாதனின் ஆய்வுகளுக்கு சோதனைச்சாலை எலிகளாகப் பலியாகவிருக்கும் வன்னிப் பெருநில மக்களின் நிலைதான் என்ன?
வட ஈழ மக்களும், அவர்தம் அவலமும்:
இலங்கை இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட நான்காம் ஈழப்போரினால் வன்னிப் பெருநில மக்கள் அனுபவித்த - அனுபவிக்கும் துன்பங்களைச் சொல்ல முயலும்போது மொழியும் நம்மைக் கைவிட்டுவிடுகிறது.
2007 இறுதியில் வட ஈழத்தின் மீது இலங்கை அரசு போர் தொடுத்தது. 2008 ஏப்ரலில் அது மன்னார் பகுதியை அடைந்தது. அப்போது வன்னிப் பெரு நிலத்தில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை சுமார் 4 இலட்சத்து 3 ஆயிரம் ஆகும். இவர்களில் சுமார் 38% பேர் வேளாண் தொழிலையும், 18% பேர் உற்பத்தித் துறையையும், 45% பேர் சேவைத் துறையையும் தமது வாழ்வாதாரமாகக் கொண்டிருந்தனர்.
2005 ஆம் ஆண்டின்போது வன்னிப் பெருநிலத்தின் ஒட்டுமொத்தப் பொருள் உற்பத்தி மதிப்பில் (Gross Domestic Product - GDP) வேளாண் துறையில் ஈடுபட்டிருந்த 38% மக்கள் 24.5% பொருள் உற்பத்தி மதிப்பிற்குக் காரணமாயிருந்தனர். உற்பத்தித் துறையில் ஈடுபட்டிருந்த 18% மக்கள் 7% மதிப்பிற்கும், சேவைத் துறையில் ஈடுபட்டிருந்த 45% மக்கள் 68% மதிப்பிற்கும் காரணமாக இருந்தனர்.
போர் தொடங்கும் முன்பு - அதாவது 2004 ஆம் ஆண்டில் - வன்னிப்பெருநிலத்தின் 38% குடும்பங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த நெல் உற்பத்தியில் 13 % நெல்லை விளைவித்தன. இலங்கையின் 20% வெங்காயம் அவர்களால் விளைவிக்கப்பட்டது. 7% மிளகாய் உற்பத்தி அவர்களிடம் இருந்தே வந்தது. சுமார் 1000 டன் புகையிலையையும் அவர்களே அந்த ஆண்டில் உற்பத்தி செய்திருந்தனர்.
இலங்கையில் இருந்த ஒட்டுமொத்த செம்மறி ஆடுகளில் சுமார் 20% வன்னிப் பெருநிலத்திலேயே இருந்தன. 60% வெள்ளாடுகள் அங்குதான் இருந்தன. சுமார் 2 கோடி லிட்டர் பால் (இலங்கையின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 10%) இங்கு உற்பத்தியானது. 6 கோடி முட்டைகள் உற்பத்தியாயின.
போர் முடிந்த இன்றைய தேதியில், 2008 ஏப்ரலில் வன்னிப் பெருநிலத்தில் வாழ்ந்திருந்த 4 லட்சத்து 3 ஆயிரம் மக்களில் வெறும் 2,62,632 பேருக்கு மட்டுமே கணக்கு உள்ளது. 35% பேருக்கு என்ன ஆயிற்று என்பதற்கு கணக்கு இல்லை.
கடந்த 13 மாதங்களில் 1,40,368 பேர் காணாமல் போனதற்கான காரணம் என்ன என்பதற்குத் தெளிவான விடையில்லை. மே 27 ஆம் தேதியன்று அளிக்கப்பட்ட ஐ.நா.சபையின் மனித உரிமை நிறுவனத்தின் கணக்கின்படி அனைத்து அகதிகள் முகாம்களிலும் இருந்த வன்னிப் பெருநில மக்களின் எண்ணிக்கை 2,90,130 ஆகும். ஆனால், அந்த நிறுவனத்தால் மே 30 ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் அது 2,77,000 ஆகக் குறைந்து போயிருந்தது. ஜூன் 15 ஆம் தேதியன்று இலங்கை அரசால் வெளியிடப்பட்ட அறிக்கையில் அது 2,62,632 என மேலும் குறைந்து போயிருந்தது.
மே 27-க்கும் ஜூன் 15-க்கும் இடைப்பட்ட 19 நாட்களில் மட்டுமே முகாம்களில் இருந்த 27,498 பேர் காணாமல் போயுள்ளனர். இத்தனை குறுகிய காலத்தில் இவ்வளவு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இல்லாமலடிக்கப்படுவதென்பதன் பின்னணியிலுள்ள பயங்கரம் உறையவைப்பதாக இருக்கிறது. இன்று முகாம்களில் உள்ளவர்களில் 11,873 பேர் படுகாயமடைந்த நிலையில் உள்ளனர். 3,968 பேர் ஊனமுற்றோர்.
இவர்களுள் 57, 293 பேர் குழந்தைகள். அவர்களில் 7,894 பேர் தம் தந்தையரை இழந்தவர்கள். சுமார் 3,100 பெண்கள் கர்ப்பிணிகள். சுமார் 700 பேர் 70 வயதைத் தாண்டிய வயோதிகர்கள்.
எனவே, முகாம்களில் உள்ள மக்களில் 76,934 பேரினால் எவ்விதப் பணியிலும் ஈடுபட முடியாது. 1,85,698 பேரினால் மட்டுமே பணியில் ஈடுபட முடியும். இவர்களில் பெண்களின் எண்ணிக்கை 1,34,464 ஆகும். கர்ப்பிணிகளின் எண்ணிக்கையை இதிலிருந்து கழித்து விட்டால் பணியில் ஈடுபடக்கூடிய பெண்களின் எண்ணிக்கை 1,31,364 ஆகும். வேலை செய்யக்கூடிய வலு நிலையில் உள்ள ஆண்களின் எண்ணிக்கை வெறும் 51,234 மட்டுமே.
அவர்களில் பலர் இன்றும் இராணுவத்தால் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, வதைமுகாம்களுக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். முகாம்களில் உள்ளவர்கள் பட்டினியாலும், நோய்களாலும் கடுமையான துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். மே 23 ஆம் திகதியயன்று வவுனியாவின் மெனிக் முகாமில் உள்ள மக்களை ஐ.நா.சபையின் தலைவர் திரு.பான் கீ மூன் சந்தித்தார். "என் வாழ்வில் இதுவரை இப்படிப்பட்டதொரு பேரவலத்தை நான் கண்டதில்லை" என்று கூறி அவர் பெரிதும் வருந்தினார்.
சில நாட்களுக்கு முன்னதாக இதே மக்களை சந்தித்த இலங்கையின் தலைமை நீதிபதி திரு. சரத் நந்தா சில்வா " இந்த மக்களுக்கு நாம் மிகப்பெரும் தீங்கினை இழைத்துக் கொண்டிருக்கிறோம்" என்றார். ஐ.நா.சபைத் தலைவர் மெனிக் முகாமுக்கு சென்ற மே 23 ஆம் திகதியன்றே, வவுனியாவில் உள்ள செட்டிகுளம் முகாமில் 66 பேர் மரணமடைந்தனர்.
அவர்களில் 60 பேர் வயோதிகர்கள். 6 பேர் குழந்தைகள். மே 25 ஆம் திகதியில் இருந்து ஜூன் 9 ஆம் திகதிவரை முகாமில் இருந்து வவுனியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களில் 62 பேர் மரணமடைந்தனர்.. இவர்களில் 51 பேர் வயோதிகர்கள்.. 11 பேர் பச்சிளம் குழந்தைகள்.செட்டிகுளம் முகாமில் மட்டுமே ஜூன் 7 ஆம் திகதியன்று 14 பேரும், ஜூன் 8 ஆம் திகதியன்று 7 பேரும் இறந்து போயினர்.
இவ்வாறு இறந்தவர்களனைவரையும் பொதுச் சவக்குழியில் புதைப்பதை இலங்கை இராணுவம் தன் வழக்கமாகக் கொண்டிருக்கிறது. இந்த அவலம் ஏற்படக் காரணம் என்ன?
மக்களை கிராமங்களில் இருந்து விரட்டியடித்த இராணுவம்:
2007 இறுதியில் வன்னிப் பெருநிலத்தை ஆக்கிரமிப்பதற்கான போரை இலங்கை இராணுவம் தொடங்கியது. போர் தொடங்கிய நாளிலிருந்தே மக்களையும் அவர்களது வளர்ப்புப் பிராணிகளையும் அவர்தம் ஊர்களில் இருந்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவை நோக்கி விரட்டுவதே இலங்கை இராணுவம் மற்றும் விமானப்படையின் போர் உபாயமாக இருந்திருக்கிறது.
2008 ஜூன் மாதத்திற்குள்ளாக மன்னார் மாவட்டத்தின் பெரும்பகுதி மக்களை கிளிநொச்சியை நோக்கி விரட்டி அடிப்பதில் இலங்கை இராணுவம் வெற்றி கண்டது. வட ஈழத்தின் கீழிருந்த வவுனியா மாவட்டத்தின் ஒருபகுதியின் மக்களும் கிளிநொச்சியை நோக்கி விரட்டியடிக்கப் பட்டனர். இராணுவத்தால் விரட்டியடிக்கப்பட்ட மக்களின் உணவு மற்றும் மருத்துவத்திற்கு முற்றுமுழுதான பொறுப்பாளிகளான நிலைக்கு இதன்வழியாக விடுதலைப்புலிகள் தள்ளப்பட்டனர்.
புலிகள் தங்கள் பலத்தின் பெரும்பகுதியைத் தமது மக்களின் பாதுகாப்பிற்கும் அவர்களது உணவுத்தேவைக்கும் இருப்பிடத்திற்கும் செலவழிக்கவேண்டிய நிர்ப்பந்தத்தினுள் அவர்களைத் தள்ளுவதன் மூலமாக நெருக்கடியை அதிகரித்து, புலிகளின் போரிடும் வலுவைக் குறைப்பதே இராணுவத்தின் திட்டமாக இருந்தது. 2009 ஜனவரி 2 ஆம் தேதியன்று கிளிநொச்சி வீழ்ந்தது. வன்னிப் பெருநில மக்கள் அனைவரும் இந்த காலகட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் கிழக்குப் பகுதிக்குள்ளும், முல்லைத்தீவு மாவட்டத்திற்குள்ளும் இலங்கை இராணுவத்தால் வெற்றிகரமாகத் துரத்தி அடைக்கப்பட்டிருந்தனர்.
தென்னிலங்கையில் இருந்து வட ஈழத்திற்கு செல்ல வேண்டிய உணவுப் பொருட்களும், மருந்துகளும் இலங்கை அரசால் தடுத்து நிறுத்தப்பட்டது. உணவுப் பற்றாக்குறை காரணமாக இந்த மக்களுக்கு இலைக் கஞ்சியைத் தவிர வேறு எதையும் கொடுக்க இயலாத நிலைக்கு விடுதலிப்புலிகள் நிர்வாகம் தள்ளப்பட்டது.
அப்பாவி மக்களின் மீதான இராணுவ எறிகணை மழை:
கிளிநொச்சி வீழ்ந்த பிறகு கிளிநொச்சிக்கும் புதுக்குடியிருப்புக்கும் இடையே உள்ள உடையார்கட்டு கிராமத்தில் கிளிநொச்சியின் மருத்துவமனை இயங்க வேண்டி வந்தது. இந்த மருத்துவமனை மீதும், புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீதும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளின் மீதும் 30 கிலோமீட்டர் தூரத்திலிருந்து 20 விநாடிகளில் 40 எறிகணைகளை வீசும் திறனுள்ள பல்குழல் எரிகணை பீரங்கிகளைக் கொண்டும், மிக், கிபிர் மற்றும் எப்-7 விமானங்களைக் கொண்டும் 2009 பிப்ரவரி மாதத்தில் இலங்கை இராணுவம் தாக்குதலைத் தொடங்கியது.
அப்பாவி மக்களின் மீதான இந்தத் தாக்குதலை நிறுத்தச் சொல்லிப் பல்வேறு சர்வதேச நாடுகளும், ஐ.நா.சபையும் கேட்டுக்கொண்ட பின்னரும் இலங்கை அரசு நிறுத்தவில்லை. இதனைத் தடுக்க இந்திய அரசும் எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.
அகதிகள் முகாம் உருவாக்கமும், வெளியான இராணுவ உண்மைகளும்
போரில் தான் வெற்றி அடைவது உறுதி என்பதை இலங்கை இராணுவம் 2009 ஏப்ரல் மாதத்தில் உறுதி செய்துகொண்டது.. இதன் பிறகே விடுதலைப்புலிகளின் பராமரிப்பில் இருந்துவந்த வன்னிப் பெருநில மக்களுக்கு அகதிகள் முகாம் அமைப்பது என்ற பேச்சை இலங்கை அரசு எடுத்தது.
இதன் பிறகே, புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் இருந்து அப்பாவி மக்களை வெளியேற அது அனுமதி அளித்தது. இலங்கை இராணுவத்தின் இந்த ந்டவடிக்கையில் இருந்து, அது போரின் போது அப்பாவி மக்களை எவ்வாறு கையாளுவது என்பதற்காக வகுத்திருந்த திட்டம் வெட்ட வெளிச்சமானது:
1.. அப்பாவி மக்களை விடுதலைப் புலிகளின் பிரதேசத்திற்குள் விரட்டியடிப்பது
2.. விரட்டியடிக்கப்பட்ட மக்களைப் புலிகளைக் கொல்லும் சாக்கில் குண்டுவீசி அழிப்பது; தான் வீசிய குண்டுகளால் இறந்துபோன மக்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயமாகப் பயன்படுத்திக் கொன்று விட்டார்கள் என்று பரப்புரை செய்வது.
3.. குண்டுவீச்சில் இருந்து தப்பிய மக்களைப் போரின் இறுதி நாட்களில் புலிகளின் 'பயங்கரவாதத்திலிருந்து' மீட்கிறோம் என்ற சாக்கில், முதல் முறையாக வன்னிப் பிரதேசத்திலிருந்து வெளியேற அனுமதிப்பது
4.. வெளியேறிய மக்களை முகாம்களில் அடைத்து வைப்பது.
5.. அவர்களில் பணியாற்றும் வலுவுள்ள ஆண்கள் அனைவரையும் புலிகளெனக் குற்றஞ்சாட்டி வதை முகாம்களில் அடைப்பது.
6.. இவ்வாறாக, போரினுள் சிக்கிய தமிழினத்தை ஆண்களற்றதொரு சமூகமாக மாற்றுவது
7.. பெண்களையும், குழந்தைகளையும், வயோதிகர்களையும் அவரவர் ஊர்களில் மீளக் குடியமர்த்தி, உலகத்திடம் நற்பெயர் பெறுவது.
ஏப்ரல் 24 ஆம் தேதியன்று, அகதிகள் முகாம்களுக்குத் தலைவராக, 2006-2008 ஆம் ஆண்டுவரை யாழ்ப்பாணத்தில் இலங்கை இராணுவ சேனையின் தலைவராக இருந்த- யாழ் குடா மக்களைத் துன்புறுத்துவதில் பெயர்போன மேஜர்.ஜெனரல்.சந்திரஸ்ரீ நியமிக்கப்பட்டார்.
முடிந்தவரையில் தமிழர்களை வன்னிப்பெருநிலப்பரப்பினுள் வைத்தே அழித்துவிடுவதன் மூலம் அகதிகளாக வெளியேறுபவர்களைக் குறைத்துவிடலாமென்று இலங்கை அரசும் இராணுவமும் திட்டமிட்டன. அத்திட்டத்திற்கிணங்க, ஏப்ரல் 24 ஆம் திகதியில் இருந்து, அப்பாவி மக்களின் மீதான தாக்குதலை இலங்கை இராணுவம் பன்மடங்காக்கி அழித்தொழிப்பைத் துரிதப்படுத்தியது.
இந்த வெறித்தனமான தாக்குதலில் மக்கள் வகைதொகையின்றிக் கொன்றொழிக்கப்படுவதைக் கண்ட விடுதலைப் புலிகள் இயக்கமானது, ஏப்ரல் 26 இல் போர் நிறுத்தத்தை தானே முன்வந்து அறிவித்தது. இலங்கை அரசு அதையும் நிராகரித்தது.
போரை நிறுத்துவதற்கு எதுவும் செய்யாமல் அதை மறைமுகமாக நடத்திய இந்திய அரசு, இலங்கை அரசின் அகதிகள் மறுவாழ்வுத் திட்டத்திற்கு ஏப்ரல் 27 ஆம் தேதியன்று 100 கோடி ரூபாய் உதவியை அளிப்பதாக அறிவித்தது. ஆனால் அதன் பின்னரே - அதாவது ஏப்ரல் 27 ஆம் தேதியில் இருந்து மே 6 ஆம் தேதிவரை உள்ள கால கட்டத்தில்தான் - வரலாறு காணாத எறிகணைத் தாக்குதல் வன்னிப் பெருநில மக்களின் மீது மேற்கொள்ளப்பட்டது.
பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.. பல்லாயிரக்கணக்கானோர் ஊனமாக்கப்பட்டனர். ஊனமாக்கப்பட்ட, படுகாயப்படுத்தப்பட்ட எண்ணற்ற அப்பாவி மக்களுக்கு மருத்துவம் செய்யத்துணிந்த மருத்துவமனைகளும் இலங்கை இராணுவத்தால் தாக்கி அழிக்கப்பட்டன.
முதன்முறையாக, போர்ப்பகுதியில் இருந்து மக்கள் அகதிகளாக வெளியேற இலங்கை இராணுவத்தால் இதன் பின்னரே அனுமதிக்கப்பட்டனர். வவுனியா, புல்மோட்டை, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய இடங்களை நோக்கி இதுவரை புலிகளின் பிரதேசத்தை நோக்கி இராணுவத்தால் விரட்டப்பட்டிருந்த அப்பாவி மக்கள் செல்லத் தொடங்கினர்.
வவுனியாவில் இயங்கும் பன்னாட்டு மருத்துவ இயக்கமான " எல்லைகளுக்கு அப்பாலான மருத்துவர்" இயக்கத்தின் இந்த கலகட்டத்திற்கான மருத்த்துவ அறிக்கைகளை படித்தால் இந்த மக்கள் எப்பேர்ப்பட்ட துன்பத்திற்கு இலங்கை இராணுவத்தின் தாக்குதல்களால் உள்ளாக்கப்பட்டிருந்தார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
'வடக்கின் வசந்தம்' என்ற வஞ்சகத் திட்டம்:
மே 7ஆம் திகதியன்று இலங்கை அரசு வன்னிப் பெருநிலத்தினை மீட்டுருவாக்கம் செய்வதற்கான செயற்குழு ஒன்றை அமைத்தது. 19 பேரை உறுப்பினர்களாகக் கொண்ட அந்தக் குழுவிற்கு இலங்கை அதிபரின் ஆலோசகரும், சகோதரரும், இனவாதக் கருத்துக்களை அள்ளிவீசுவதில் முன்னணியில் நிற்பவருமாகிய பசில் ராஜபக்சே தலைவராக நியமிக்கப்படடார்..
மீதமுள்ள 18 பேர்களில் அதிபரின் மற்றொரு சகோதரரும், 'மருத்துவமனைகளின் மீது குண்டுவீசுவது சரியான செயலே' என்று திருவாய் மலர்ந்தருளியவரும், இலங்கை இராணுவத்தின் செயலாளருமாகிய கோத்தபாயா ராஜபக்சேவும் ஒருவராவார்.
உறுப்பினர்களில் 7 பேர் இராணுவம் மற்றும் காவற்துறையைச் சேர்ந்தவார்களாகவும் ( இதில் இலங்கை இராணுவத்தின் தளபதியான சரத் பொன்சேகாவும் அடக்கம் ), 10 பேர் இலங்கை அரசின் நிர்வாகத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளாகவும் இருந்தனர். இவர்களில் 18 பேர் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் இஸ்லாமியர் ஆவார்
1. Senior Presidential Advisor Basil Rajapaksa - Chairman of the Taskforce
2. S.B.Divarathne - the Secretary
3. Secretary to the President, Lalith Weeratunge,
4. Secretary, Defence, Public Security Law and Order, Gotabaya Rajapaksa,
5. Secretary, Ministry of Finance and Planning, Sumith Abeysinghe,
6. Secretary, Ministry of Resettlement and Disaster Relief Services, U L M Haldeen,
7. Secretary, Ministry of Nation Building and Estate Infrastructure Development, W.K..K.Kumarasiri,
8. Secretary, Ministry of Highways and Road Development, S.Amarasekera,
9. Secretary, Ministry of Power and Energy, M M C Ferdinando,
10. Secretary Ministry of Land and Land Development, J R W Dissanayake,
11. Secretary, Ministry of Health Care and Nutrition, Dr. Athula Kahandaliyanage,
12. Chief of Defence Staff, Air Chief Marshal G D Perera,
13. Commander of the Army Lt.Gen.Sarath Fonseka,
14. Commander of the Navy, Vice Admiral Wasantha Karannagoda,
15. Commander of the Air Force, Air Marshall, W D R M J Gunatillake,
16. Inspector General of Police, Jayantha Wickremarathne,
17. Director General\Department of Civil Defence, Rear Admiral S P Weerasekera,
18. Chief of Staff of the Sri Lanka Army\Competent Authority for the Northern Province Maj.Gen..G A Chandrasiri, and
19. Former Director General\National Planning Dept. B.Abeygunewardena .
வன்னிப் பெருநிலத்தை மீட்டுருவாக்கம் செய்வதற்கான தம் திட்டத்திற்கு இவர்கள் இட்ட பெயர் 'வடக்கின் வசந்தம்'. தமிழர்கள் யாருமற்ற இந்தக் குழுவினால் தமிழர்களுக்காக உருவாக்கப்படவிருக்கும் 'வசந்தம்' எத்தகைய மலர்ச்சியை யாருக்குக் கொண்டுவரும் என்பது நாம் சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லை.
இலங்கை தலைமை நீதிபதி சில்வாவின் நேர்மை:
ஜூன் 5 ஆம் திகதியன்று இலங்கையின் தலைமை நீதிபதியான திரு. சரத் நந்தா சில்வா அவர்கள் அகதிகள் முகாமில் உள்ள மக்களின் உரிமைகளைப் பற்றி பேசியது உண்மை நிலையை உணர்த்துவதாக இருந்தது: "நம் நாட்டில் உள்ள சட்டப் பாதுகாப்புகளுக்கு அப்பாற்பட்டே அந்த மக்கள் உள்ளார்கள்.
அவர்கள் மீது இழைக்கப்படும் தீமைகளை எதிர்த்து அவர்களால் இலங்கை நீதிமன்றங்களில் நீதி கேட்க முடியாது. இதன்மூலம் அந்த மக்களுக்கு நாம் மிகப் பெரும் தீங்கை இழைத்துக் கொண்டிருக்கிறோம். இதை நான் வெளிப்படையாகவே கூறுகிறேன். இவ்வாறு கூறுவதற்கான விளைவுகளையும் சந்திக்க நான் தயாராகவே உள்ளேன்" என்று அவர் கூறினார்.
ஏதுமற்ற மக்களும், இந்திய அரசின் வஞ்சகமும் :
இலங்கையின் தலைமை நீதிபதியின் இந்தக் கூற்றுக்குப் பிறகும் கூட இந்திய அரசு இலங்கை அரசுடன் தான் இதுவரை கொண்டிருந்த உறவை மாற்றிக்கொள்ள முன்வரவில்லை. மாறாக, உறவுகளையும், உடலின் பாகங்களையும், வாழ்வாதாரங்களையும் இழந்து நிற்கும் மக்களிடம் கடைசியாக மிஞ்சி நிற்கும் மானத்தையும் பறிக்க முயலும் ராஜபக்சேவின் கொடுங்கோல் திட்டத்தை ஆதரிக்கவும், அதனை முன்னெடுத்துச் செல்லவுமே அது முனைந்து நிற்கிறது.
ஏப்ரல் 27 ஆம் தேதியன்று அகதிகளின் மறுவாழ்விற்காக 100 கோடி ரூபாயை இலங்கை அரசுக்கு இந்திய அரசு அளிக்க முன்வந்த பின்னரே பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் இலங்கை இராணுவத்தின் எறிகணைகளுக்குப் பலியாகினர். இதற்கு இந்திய அரசு எந்தவிதக் கண்டனமும் தெரிவிக்கவில்லை. மே 7ஆம் திகதியன்று "வடக்கின் வசந்தம்" என்ற பெயரில் வட ஈழத்தின் மீளுருவாக்கத்திற்காக இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட- தமிழர் தரப்பில் பிரதிநிதிகளைக் கொண்டிராத - 'கொடுங்கோல்' குழுவிற்கு இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் தம் எதிர்ப்பினைத் தெரிவிக்கவில்லை.
மாறாக, மே 27 ஆம் திகதியன்று, இந்திய அரசு அதிரடி அறிவிப்பொன்றினை வெளியிட்டது. அதாவது, அகதிகள் மீள்வாழ்வுத் திட்டங்களுக்காக, இலங்கை அரசுக்கு வழங்குவதாகச் சொன்ன 100 கோடி ரூபாவை 500 கோடியாக அதிகரித்திருப்பதாக அறிவித்து இலங்கை அரசினைக் களிகொள்ளவைத்தது.
மே 22ஆம் திகதி அறிவிப்புக்கும் 27ஆம் திகதி அறிவிப்புக்கும் இடையில் பெருகிய கோடிகளை, வன்னிப் பெருநிலத்தை மீளுருவாக்கம் செய்யப்போகும் கொடுங்கோல் குழுவிற்கு இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் அளித்திருக்கும் அங்கீகாரமாகவே கருத முடியும்.
வடக்கின் வசந்தத்திற்காக எம்.எஸ்.சுவாமிநாதன் முன்வைத்துள்ள 'போல் போட்' வேளாண் திட்டம்
'அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பும் பணியை 180 நாட்களுக்குள் முடிப்போம்' என்று ஜூன் மாத துவக்கத்தில் இலங்கை அதிபர் முழங்கினார். அதை அவர் எவ்வாறு நிறைவேற்றப் போகிறாரோ என்று உலகம் பார்த்திருக்க, 'அதற்குத்தான் நான் இருக்கிறேனே' என்று நம்மூர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பிணந்தின்னிக் கழுகாக, இலங்கை அதிபரின் இரட்சகனாக முன்வந்திருக்கிறார்.
ஜூன் 9 ஆம் தேதியன்று இலங்கை அதிபர் ராஜபக்சாவை இந்திய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் சந்தித்தார். அவர்கள் 'வடக்கின் வசந்தம்' திட்டம் குறித்து கலந்துரையாடினர். அந்தக் கலந்துரையாடலின்போது வடக்கு மாகாணத்தின் வேளாண் துறையைச் சீரமைப்பது குறித்து விவாதித்தனர். அப்போது, "இலங்கையின் வேளாண் ஆராய்ச்சி மற்றும் பயிற்சியை வலுவாக்க இந்தியாவின் உதவி இன்றைய காலத்திற்கு இன்றியமையாதது. இந்த உதவியை இலங்கை உடனடியாக எதிர்பார்க்கிறது.
இலங்கை மற்றும் இந்தியாவில் உள்ள அரசு நிறுவனங்களால் இவ்வளவு துரிதமாக செயல்படமுடியுமா என்பது சந்தேகமே," என்று இலங்கை அதிபர், சுவாமிநாதனிடம் கூறியிருக்கிறார். "இதுகுறித்து இந்தியாவும் இலங்கையும் ஜூலை மாதமே கலந்துரையாட வேண்டும்" என்றும் அவர் கோரியுள்ளார். "வடக்கின் வசந்தத் திட்டத்தின் கீழ் முன்வைக்கப்படவுள்ள வேளாண் மீட்டுருவாக்கத்தில் ஈடுபட இந்தியாவையும், இலங்கையையும் சேர்ந்த தனியார் நிறுவனங்கள் ஜூலை மாதத்திலேயே தம் கலந்துரையாடலைத் தொடங்க வேண்டும்" என்பதே ராஜபக்சே, சுவாமிநாதனிடம் கூறிய கூற்றின் சாரம்.
ராஜபக்சேவின் கூற்றை எம்.எஸ்.சுவாமிநாதன் அப்படியே ஏற்றுக்கொண்டார். "தமிழ் மக்களின் பிரச்சினை அரசியல் ரீதியாகத்தான் தீர்க்கப்படவேண்டும். என்றாலும் கூட இன்றைய உடனடித் தேவை அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டுருவாக்கம் செய்வதுதான்" என்று அவர் கூறியிருக்கிறார். அதோடு அவர் நிற்கவில்லை. வேளாண் மீட்டுருவாக்கத்திற்கான வழிமுறைகளையும், அதற்கான கால அட்டவணையையும் அவர் முன்வைத்திருக்கிறார்.
-தமிழ்க்கதிருக்காக சீமான்