Friday, July 31, 2009

கறுப்பு ஜீலை 1983 ல் இருந்து மே 2009 வரையில்…

கறுப்பு ஜீலையில் காணமல் போன உறவுகளுக்கு கண்ணீர் வணக்கம் செய்தபடியே நெருப்பு நினைவுகளை அள்ளிவரமுயல்கின்றேன். புகை எழுந்த கொழும்பு மாநகரத்தின் மத்தியில் எரிந்து கொண்டிருந்த தமிழர் வீடுகளும், வணிப நிறுவனங்களுக்கே தமிழர் உடல்களும் வெந்து கொண்டிக்க சிங்களம் எகத்தாளமிட்டு கூச்சலிட்டு கும்மாளம் கொண்டாடியது.

கறுப்பு ஜீலையில் நாம் ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்தோம், பல்லாயிரம் பேர் அகதிகளாகி இன்று வரை மாற்றான் தேசங்களின் அலைகின்றனர். அதை விடவும்  பல மில்லியன் கணக்கான சொத்துக்கள் அழிந்து நாசமாய் போனது.

கறுப்பு ஜீலையின் நினைவுகளை ஈழத்தமிழனுக்கு யாருதம் சொல்லித்தர தேவையில்லை என்ற ரீதியில் அதன் வடு ஈழத்தமிழர் வாழ்வியலில் ஒரு அங்கமாகிவிட்டது.

ஜீலை மாதம் 83ம் மூன்றான் ஆண்டின் பின் எழுந்த தமிழர் வரலாற்று எழுச்சியானது தொடர்ந்து அவ்வாறனதொரு கலவரத்தை, சிங்கள் ஆளும் வார்க்கமும் காடையர் கூட்டம் நடாத்த அனுமதிக்கவில்லை. அதற்க்கு சாதகமான சூழல் தென்னிலங்கையிலும் சரி எந்த பிரதேசத்திலும் எழுந்திருக்கவில்லை.

தமிழீழ விடுதலைப்போரின் உச்சக்கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினர் கொல்லப்பட்ட போதும் அதன் தாக்கம் தென்னிலங்கை தமிழர்களை பாதிக்கவில்லை. அவர்களது அந்த அமைதிக்கு காரணம் சிங்கள இனத்துடனான ஒன்றிணைவு அல்ல. மாறாய் சிங்கள இனத்துக்கும் ஆளும் சமூகத்துக்கும் தமிழர் தலைமை மீது கொண்ட அச்ச உணர்வே.!

இத்தனைக்கு பின்னர் இன்று நாம் நட்டாற்றில் நிற்பதாய் பலரும் நம்ப தலைப்பட்டுள்ளனர். கறுப்பு ஜீலையை நினைவு கூரும் நாம் இன்னோரு கறுப்பு கறைந் படிந்த ஒரு “மே” யையும் நினைவு கூரத்தலைப்பட்டுள்ளோம். தமிழீழ போரின் எழுச்சியை கறுப்பு ஜீலையும் தமிழீழ விடுதலை;  போரின் பின்னடைவை கறுப்பு மே தீர்மானித்திருக்கின்றது.

கறுப்பு ஜீலையில் 2000 வரையிலான தமிழர் கொல்லப்பட்ட போது எமது இனம் பெற்ற எழுச்சியும், அந்த அழிவிலிருந்து மீள வேண்டும் என்ற எண்ணமும்  மே மாதம் இருபதினாயிரம் போது மக்கள் கொல்லப்பட காரணமான சிங்கள இனவாத அரசின் போருக்கு எதிரான போராடவோ அல்லது அந்த போரின் போது சிதைவடைந்து போன எமது சில கட்டமைப்புகளை சீர் செய்யவோ இந்த மக்கள் தயாராய் இல்லை.

சிதைந்து போன கட்டமைப்புகளை சீர் செய்ய வேண்டிய காலத்தில் சிதைவுகளை மென்மேலும் வளர்ப்பதில் சிங்களத்தின் ஆதரவுக்குழுக்களை விடவும் தமிழ் மக்கள் மத்தியில் இயங்கிய கட்டமைப்புக்கள் செயல்ப்படுவது வருந்தத்தக்கது.

கறுப்பு ஜீலையில பிரசவித்த எத்தனையோ கண்மனிகளை விடுதலையின் விலையாய் தாய் மடியின் உரமாய் நாம் இட்ட போதும் விடுதலையை வெறும் அரசியலாய் மட்டும் பார்க்கும் கேவலமானவர்களுடன் நாம் வாழ நிர்பந்திக்கப்ட்டிருப்பது வேதனையான விடயமாகும்.

செய் அல்லது செத்து மடி என்று எம் தலைவன் காட்டிய பாதையில் நடந்த அந்த உன் வீரர்களின் கனவுகளை கலைத்து நம் சுயத்தை வெளிப்படுத்த முனைவோர் கறுப்பு ஜீலை ஒன்றில் கனடா ஓடி வந்தவர்களாகவே இருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.

கறுப்பு ஜீலையில் எம் தமிழன் சிந்திய குருதி எப்படி எழுச்சியை உண்டாக்கி ஈழ விடுதலையின் வாசலை அடைந்தததோ அவ்வாறு மே மாதம் எம் விடுதலைப் போரை அணைக்க, அழிக்க சிங்கள தேசம் மேற்க்கொண்ட அழிவு நடவடிக்கைகளிலிருந்து நாம் மீண்டும் எழ வேண்டும். நாம் மீண்டிட எமது கட்டமைப்புக்கள் மீண்டும் சரி செய்யப்பட வேண்டும் என்ற ஆவல் எல்லாத் தமிழ் மக்களின் மத்தியிலும் இருக்கத்தான் செய்கின்றது.

அதை தமிழீழ விடுதலை; போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல விளையும் பெருந்தகைகள் புரிந்து கொண்டு தமது அடுத்த கட்ட நகர்வுகளுக்கு செல்ல வேண்டும் அல்லது அடுத்த கட்டம் தொடர்பான ஆக்க பூர்வமான செயற்ப்பாடுகளுக்கு வழி விட வேண்டும்

கனடாவிலிருந்து ஆதவன்.


0 comments:

Post a Comment