Tuesday, June 23, 2009

இந்து மதத்தில் ஆண் - பெண்ணின் வக்கரித்த உறவுகள் – பாகம்-3.

பிள்ளையார் வரலாறு பெண்கள் மீது சிவபெருமான் முதல் கொண்டு கடவுள்களின் சேட்டைகளால் உருவானதே. இந்தப் பிள்ளையாரைக் கொண்டே இன்று மதத்தின் பெயரில் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். பிள்ளையார் பிறப்பு வியக்கத்தக்க ஆணாதிக்கப் பாலியல் வக்கிரங்கள் பல கொண்டது, பலபிறப்பு வரலாற்றையும் கொண்டதாகும். அவைகளைப் பார்ப்போம்.

1. சிவமகாபுராணத்தில், பார்வதியார் குளிக்கப்போனபோது உள்ளே யாரும் வராது இருக்க, தனது உடலில் இருந்த ஊத்தையைப் (அழுக்கு) பிராண்டி அதற்கு உயிர் கொடுத்து, அதைக் காவல் வைத்துவிட்டுச் சென்றார். சிவபெருமான் வந்து உள்ளேபோக முற்பட்டபோது சிவபெருமானுக்கும், பிள்ளையாருக்கும் மோதல் ஏற்பட, அதில் பிள்ளையாரின் தலை வெட்டப்படுகின்றது. உமாதேவியார் தனது குழந்தையை வெட்டியதைக் கண்டு புலம்ப, சிவபெருமான் யானைத் தலையை வெட்டிப் பொருத்தியதாகப் பிள்ளையார் வரலாறு கூறுகின்றது. இங்கு தெய்வமான உமாதேவியாரின் குளிக்கும் அறைக்குள் போகும் அளவுக்குத் துணிவுள்ளவர்கள் யார்? இது ஆணாதிக்க ஆண் கடவுள்கள் என்பதும் தெளிவாகின்றது.

எனவே, கடவுள்கள் ஆணாதிக்கம் கொண்டவை என்பதையும், பெண் தெய்வங்கள் பாதுகாப்பற்ற எல்லையில் வாழ்ந்ததையும் காட்டுகின்றது. பெண்கள் தமது கற்புரிமையைப் பாதுகாக்க ஆண் கடவுள்களுடன் போராட வேண்டியிருந்ததை அம்பலப்படுத்துவதுடன், கடவுளின் பொய்மை, நீதி அம்பலமாகின்றது. இந்த ஆணாதிக்க ஆண் தெய்வங்களிடம் தமது பாதுகாப்பை வேண்டி வழிபடும் பெண்கள் எப்படிப் பாதுகாப்பைப் பெறமுடியும். ஏனெனில் அந்தத் தெய்வங்களே பல வக்கிரங்களில் பிறந்ததுடன், கற்பழிப்புகளும் கூடிய வன்முறைகளில் ஈடுபட்டவர்கள். பெண்கள் தமது உடுப்பை மாற்றும் அறையில் வைத்திருக்கும் ஆண் தெய்வங்களும் சரி, தூண்துரும்பில் இருக்கும் தெய்வங்களும் சரி, பெண்களின் நிர்வாணத்தை, ஆணாதிக்க இரசனையில் இரசிக்கின்றன அல்லவா? இதைத்தான் பிள்ளையார் கதை தெளிவாக்குகின்றது. கற்பழிப்பு முதல் கடவுள்களின் வக்கிரங்கள் எல்லையற்றவை. அவைகள் பலவற்றை இக்கட்டுரையில் தொடர்ந்து பார்ப்போம்.

2. ஒருநாள் ஆண் யானையும், பெண் யானையும் புணர்வதைக் கண்ட சிவனும் பார்வதியும், அந்த நினைவில் அவர்கள் புணர்ந்ததால் யானை முகத்துடன் பிள்ளையார் பிறந்தாராம். இதுபோல் மற்றொரு கதையில் சுவரில் ஆண் யானை, பெண் யானையைப் புணர்வது போன்று கீறியிருந்த காட்சியை பார்வதியும் கண்டு, அதுபோல் சிவனும் புணர்ந்ததால் பிள்ளையார் பிறந்தாராம். அருவருக்கத்தக்க புணர்ச்சி வக்கிரத்தில் தெய்வங்கள் திரிந்தன என்பதைக் கூறும்போது, இந்த மாதிரி கற்பனைகளை உருவாக்கிய நபர்களின் பிம்பம் பிரதிபலிக்கின்றது. மிருகங்களின் புணர்ச்சிகளை இரசிக்கும் மனிதப் பண்புகள் மிருகத்தைவிட இழிவானவை. இதில் இருந்துதான் வக்கிரமான நீலப்படங்கள் (புள+பிலிம்) மனிதப் புணர்ச்சியையும் மிருகத்துடன் மனிதன் கலந்த புணர்ச்சியையும் சட்டப்பூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் ஜனநாயகச் சந்தையில் மூலதனமாக்கிக் கொடிகட்டி பறகின்றது.

3. பார்வதி கருவுற்று இருக்கையில் சித்துரா அசுரன் (இந்தியாவின் ஆதி மக்களைக் குறிக்கும் சொல்) ஒருவன் காற்று வடிவில் கர்ப்பப் பைக்குள்; சென்று, பிள்ளையார் தலையை வெட்டி விட்டுவந்த நிலையில், பார்வதி யானைத் தலை கொண்ட கஜாசுரன் தலையை வெட்டி ஒட்டவைத்ததாகப் பிள்ளையார் வரலாறு கூறுகிறது. முட்டாள்களே நம்புங்கள்! இந்தப் புளுகு மூட்டையை! இறைவன் வாழும் உலகில் அசுரர்கள் எப்படி வாழ முடியும்? இது எப்படி மனிதனுக்குத் தெரிந்தது?

4. தக்கனுடைய யாகத்தை அழிக்க சிவன் தனது மூத்த மகனை அனுப்பியதாகவும், அங்கு தக்கன் பிள்ளையாரின் தலையை வெட்டி எறிந்த நிலையில், முருகன் சென்று பார்த்தபோது தலையைக் காணாததால், யானைத் தலை ஒன்றை வெட்டிப் பொருத்தியதால் பிள்ளையாரின் யானை முகம் பிறந்த கதை. பிறப்புகள் வக்கிரம் பிடித்துக் கிடப்பதைக் காட்டுகின்றது. யாரும் யாகம் செய்தால் அதை அழிப்பது அதர்மம் அல்லவா? என்ன சிவனுக்கு மட்டுமா யாகம் செய்யும் உரிமை உண்டு? இந்த உரிமையின் பிறப்பு எதன் அடிப்படையிலானது? யார் இந்த உரிமையைக் கொடுத்தது? எங்கு எப்போது இந்தப் பிறப்புகள் எல்லாம் நடந்தன?

5.

''பிடியதன் உருவுமை கொள மிகு கரியது

வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்

கடிகண பதிவர அருளினன் மிகுகொடை

வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே"

- என்ற திருஞானசம்பந்தர் தேவாரம் சிவன் ஆண் யானையாகவும், உமாதேவியார் பெண் யானையாகவும் மாறி புணர்ந்து உருவானவரே பிள்ளையார் என்று பிள்ளையார் பிறப்பை விளக்குகின்றது. இதையே சுப்ரபேத ஆகமம் என்ற நூலும் கூறுகின்றது. இந்தத் திருஞானசம்பந்தர் உமாதேவியாரின் பெண் உறுப்புகளைத் தனது தேவாரத்தில் பாடிய விதங்கள் பல வக்கிரத்தைக் கொண்டவை. இதனால்தான் அந்த மூன்று வயது குழந்தைக்கு மார்பில் அல்லாது கிண்ணத்தில் பால் கொடுத்தாரோ. இந்தத் திருஞானசம்பந்தன் சமணப் பெண்களைக் கற்பழிக்க அருள் கோரி ''பெண்ணகத்து எழில்சாக்கியப் பேய் அமன் தென்னற் கற்பழிக்கத் திருவுள்;ளமே" என்று ஆணாதிக்க இறைவனை வேண்டிப் பாடியவர் அல்லவா. இவர்தான் தனது சொந்த ஆணாதிக்க வக்கிரத்தை மிருக நிலையில் புணர்ந்து வெளிப்படுத்துகின்றார். மனிதப் புணர்ச்சியைவிட மிருகப்புணர்ச்சி தாழ் நிலை விலங்குக்குரிய தாழ்ந்த நிலையல்லவா? இதை இறைவன் செய்தான் என்பதும், அதைக் கற்பனை பண்ணிப் பாடுவதும் கேவலம்கெட்ட இழிந்த பண்பாடாகும்;. இந்தத் தேவாரத்தைச் சொல்லி நாம் பாடுவதும் எமது முட்டாள்த்தனத்துடன் கூடிய அறிவின்மையில்தான்.

6. பார்வதி தன் உடல் அழுக்கைக் கழுவி அதைக் கங்கா நதியின் முகத்துவாரத்தில் உள்ள இராட்சஷி (அரக்கி) மாலினியைக் குடிக்க வைத்ததாகவும், இதன் காரணமாக மாலினி கர்ப்பம் அடைந்து பிறந்த குழந்தையே பிள்ளையார் என்று ஒரு கதை. எவ்வளவு அருவருப்பைத் தரும் பிறப்புகள். இந்த மாதிரி உருவாக்கிய பிறப்புகள் எல்லாம் ஓரினச் சேர்க்கையில், அதாவது ஒரு பால் உறவில் பிறந்ததாக அல்லவா இருக்கின்றது. ஓரினச் சேர்க்கையாளர்கள் இறைவனில் இருந்தும், இயற்கைக்குப் புறம்பான தமது வக்கிரத்தை நியாயப்படுத்தலாம். ஆனால் இந்தப் பிறப்புகளின் வக்கிரம் எல்லையற்ற இழிவுகளாக இருப்பது சகிக்க முடியாதவை.

7. ஒருநாள் பார்வதி தனது உடல் அழுக்கைப் பிராண்டி உருட்டி விளையாடியதாகவும், அப்போது அந்த உடல் அழுக்குக்கு அன்பு சொரிந்து உயிரூட்டியதாகவும் (சிறுபிள்ளைகள் போல்) அதுவே பிள்ளையார் ஆனதாக ஒரு கதை. எப்படி சிவபெருமான் அந்த ஊத்தைக்குத் தந்தையாக முடியும்;? ஒருபால் உறவில் குழந்தை பிறக்கும் அதிசயம் உலகின் அதிசயங்களாகப் பதியாத குற்றத்தை இந்து ஆட்சி நிறைவு செய்யுமோ! மூக்கை நோண்டி, இரசித்து உண்ணும் பண்புபோல் அல்லவா இந்தப் பிறப்புகள் அசிங்கம் நிறைந்து கிடக்கின்றன.

8. பிரம்மாவின் வர்த்தப் புராணத்தில் கணபதி பிறப்பைப் பற்றி, சனிப்பார்வை தோஷத்தால் தலை இல்லாது பிறந்ததால், துயரமுற்ற உமாதேவியாரின் துன்பத்தைத் துடைக்க விஷ்ணு யானைத் தலையை வெட்டி ஒட்டினாராம்;. இது போல் மற்றொரு கதையில் உமாதேவியாருக்குக் குழந்தை பிறந்ததை அறிந்து, அவரைப் பார்க்க எல்லாத் தேவரும் வந்தனராம். அதில் சனி தேவனும் ஒருவராம்;. சனி, தான் பார்த்தால் குழந்தைக்குத் தீது, உண்டாகும் என்று எண்ணி பார்க்காது தவித்ததாகவும், உமாதேவியார் அதை அவமதித்ததாக எண்ண, அதைத் தவிர்க்க சனி பகவான் குழந்தையைப் பார்க்க, குழந்தையின் தலை எரிந்து போனதாம். இதனால் உமாதேவியார் சினம் கொள்ள, கான்முகன் போன்ற தேவர்கள் சமாதானப்படுத்தி சிவன் துணையுடன் யானை முகத்தைப் பொருத்தியதால் பிள்ளையாரானார். எப்படியிருக்கிறது இந்தப் பிறப்பின் பல்வேறு கற்பனைப் பிதற்றல்கள்?

இந்தப் பிள்ளையார் இன்று மதத்தின் ஆதிக்கச் சின்னமாகியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்களைப் படுகொலை செய்யும் பலவிதமான கொண்டாட்டங்களைத் தோற்றுவித்துள்ளது. இந்தக் கொண்டாட்டம் ஆணாதிக்க வெறியர்களின் காமப்பசியைத் தீர்க்கும் கற்பழிப்புகளைச் செய்யும் ஊடகமாகியுள்ளது. பிள்ளையாரின் பெயரில் செய்யும் சதுர்த்தி இன்று மதக் கலவரத்தின் தூண்டுகோலாக மாறியுள்ளது. சதுர்த்தி நான்காவது திதி (நாலாம் சடங்கு) என்பது திருமணத்தின் பின் மணமகனும் மணமகளும் உடலுறவைக் குறித்துக் கூடும் நாளைக் குறித்து உருவானது. ஆனால் இன்று, மதத்தின் பெயரில் நடக்கும் கலவரத்தில் நிகழும் கற்பழிப்புகள் பிள்ளையாரின் பிறப்பைப் போல் வக்கரித்N;த நிகழ்கின்றது.

இந்தியாவில் சிதம்பரம் கோயிலிலும், பிற ஊர்த் தேர் சிற்பங்களிலும் பிள்ளையார் தனது தும்பிக்கையை ஒரு பெண்ணின் பெண் உறுப்பினுள் விட்டு, தூக்கி வைத்திருப்பது போன்ற காட்சிகளின் பின் எழும் ஆணாதிக்க வக்கிரம், மனிதப் பண்பாட்டையே வக்கரித்துக் கேலி செய்கின்றது. இதற்கு ஒரு கதையாக அசுர ஸ்திரி, அசுரர்களை அழிக்க, அழிக்கத் தொடர்ந்து உற்பத்தி செய்ததால், அதைத் தடுக்க தும்பிக்கையை விட்டுக் கர்ப்பத்தை உறிஞ்சி எடுத்ததாகப் பார்ப்பனிய வக்கிரம் கூறுகின்றது. இந்தியாவின் பழங்குடி மக்களை வந்தேறு குடிகளான பார்ப்பனர்கள் அழித்தபோது, நடந்த ஈவிரக்கமற்ற கொலைகளை நியாயப்படுத்துவதே இந்தக் கதை. இன்று உலகில் வெள்ளையின மக்களின் எண்ணிக்கை குறைந்து செல்லும் எல்லையில், வறுமையைக் காரணம் காட்டித் திட்டமிட்டுக் கருத்தடை, கருஅழிப்பு செய்வது எல்லாம் இது போன்ற கோட்பாட்டு அடிப்படையில்தான். பெண்ணின், பெண் உறுப்புக்குள் புகுவதே ஆணாதிக்கத்தின் ஒரே நோக்கம் என்பதை, இந்தச் சிற்பங்கள் தனது சொந்த வக்கிரத்தினூடாக நிர்வாணப்படுத்துகின்றது.

லிங்கம் (சிவலிங்கம்) பிறப்பினூடான வழிபாடு ஆணாதிக்க ஆபாசத்தின் தோற்றமாகும். பத்மப் புராணம், சரஸ்வதி காண்டம் அத்தியாயம் 17 இல், பிரம்மா நடத்திய வேள்விக்குச் சென்ற சிவபெருமான் குடிபோதையில் காம விகாரத்தோடு நிர்வாணமாக மாறி ஆபாசமாக நடந்து கொண்டாராம். இதைக் கண்டு ரிஷி பத்தினிகள் சிலர் வீடு நோக்கிச் சென்றனராம். சிலர் சிவபெருமானுடன் உடலுறவு கொண்டனராம். இதைக் கண்ட ரிஷிகள் மயங்கி விழுந்தனராம். மயக்கம் தெளிந்த ரிஷிகள் சபிக்க, சிவபெருமானின் ஆண் உறுப்பு அறுந்து விழ, வானம் - பூமி அதிர்ச்சியினால் கிடுகிடுத்ததாம். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியைத் தடுக்க உமாதேவியார் தனது பெண் உறுப்பில் ஆண் உறுப்பை ஏந்தி அமைதிப் படுத்தினாராம். இதனால் அந்த ஆணாதிக்க லிங்கத்தை வழிபடுகின்றனர், ஆணாதிக்கப் பக்திமான்கள்.

இதையே லிங்கப்புராணத்தில் ரிஷி ஒருவர் வீடு சென்ற சிவன், அங்கு ரிஷி இல்லாத நிலையில், அங்கிருந்த பெண்ணைக் கட்டாயப்படுத்தி கற்பழித்தாராம். இந்தநேரம் வீடு திரும்பிய ரிஷி கற்பழிப்பில் ஈடுபட்ட சிவனின் ஆண் உறுப்பு அறுந்து விழக் கடவ எனச் சாபம் இட, அது அறுந்து விழ, இதனால் உலகம் அழிந்துவிடும் என்று பயந்த பார்வதி, தனது யோனியில் தாங்கிய அந்தப் பிண்டத்தையே வழிபடும் மானம் கெட்டவர்கள் இந்துக்கள். கற்பழிப்பை நியாயப்படுத்தி வழிபடும் ஆணாதிக்க இந்து வடிவங்கள், அதிலும் மீண்டும் வக்கிர புணர்ச்சியை உருவாக்கி வழிபடும் பண்பாட்டுக் கோயில்கள் இருக்கும் வரை ஆணாதிக்கம் இந்து இராஜ்ஜியத்தின் பொதுவான ஒழுக்கமாக, சட்டத் திட்டமாக இருப்பது தவிர்க்கமுடியாது அல்லவா?

ஐயப்பனின் பிறப்பு விசித்திரமானது. இரண்டு ஆண் கடவுள்களுக்கிடையில் நடந்த ஓரினச் சேர்க்கையில் பிறந்த கடவுளே ஐயப்பன் ஆனான். கடவுள்களின் ஓரினச் சேர்க்கைக் கூத்தை, இன்றைய ஓரினச் சேர்க்கையாளர்கள் ஜனநாயகம் சார்ந்த பெண்ணியக் கூறாகக் கொண்டாடலாம். ஆனால் அந்த ஆணாதிக்க வரலாற்றைப் பார்ப்போம்.

பத்மாசூரன் என்பவன் சிவனை நோக்கிக் கடும் தவமிருந்ததால், சிவன் அவன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் எனக் கேட்டாராம். அவன், நான் யார் தலையில் கைவைத்தாலும், அவர்கள் எரிந்து சாம்பல் ஆகவேண்டும் என வேண்டினாராம். சிவன் ஆகட்டும் என்று வரத்தை வழங்கினாராம். உடனே வரம் பலிக்கின்றதா என்று பார்க்க சிவனின் தலையில் கைவைக்கப் போவதாகக் கூற, சிவன் ஓடத் தொடங்கினாராம். இதைத் தொடர்ந்து சிவன் அழிந்து விடுவாரோ என்ற நிலையில், மைத்துனர் மகாவிஷ்ணு அழகிய பெண் மோகினி வடிவம் எடுத்து அவன் முன்தோன்றினாராம். மோகினியைக் கண்ட பத்மாசூரன் அவளை மோகித்து புணரத் துடித்தானாம். அதற்கு மகாவிஷ்ணு நீ சுத்தமாக இல்லை, குளித்துவிட்டு வா என்று கூற, அவன் குளிக்கத் தண்ணீர் தேடி அலைந்து தண்ணீர் இல்லாத நிலையில், என்ன செய்ய என்று கேட்ட போது, சிறு குழியொன்றில் தண்ணீர் உள்ளது, அதில் கையை நனைத்து உன் தலையில் வைத்துவிட்டு வா என்று கூறினாராம். அவன் அப்படி செய்ய அவன் எரிந்து போனான்.

மகிழ்ச்சியடைந்த மோகினி அப்படியே சிவனிடம் செல்ல, ஆணாதிக்கச் சிவனுக்கு அவள் மேல் ஆசைப்பட்டு, புணரத் துடித்தாராம். உடனே மகாவிஷ்ணு மோகினி வேஷத்தில் ஓடத் தொடங்க, சிவன் துரத்திச் சென்று விஷ்ணுவின் கையைப் பிடித்தாராம். விளைவு கையில் குழந்தை ஒன்று உருவானதாம். அதாவது வழக்கமான ஆணாதிக்க மொழியில் கையில் போட்டதால் கையப்பன் பிறந்து, அதுவே பின்னால் ஐயப்பன் ஆனான்.

இதையே வேறுவிதமாகக் கூறும் இந்துக் கதைகளில், ஹரியும் ஹரனும் ஓரினச் சேர்க்கையால் உருவான கடவுள்தான் ஐயப்பன். இது கேரளத்தில் நடந்த அருவருப்பான ''அற்புதம்"

ஆணாதிக்க வக்கிரத்தில் உருவான ஓரினப் புணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்துக் கதைகளும், கடவுள்களையும் சுய அறிவற்ற மனிதர்கள் போற்றி வழிபடலாம். ஆனால் இந்த ஆணாதிக்க வக்கிரமான ஓரினச்சேர்க்கையின் பண்பாடுகளை ஈவிரக்கமற்ற வகையில் தோலுரித்து போராடவேண்டிய நிலையில் நாம் உள்ளோம்.

இங்கு சிவனின் ஆணாதிக்க வெறியைக் கேள்விக்கு இடமின்றி இந்து வழிபாடு அங்கீகரிக்கின்றது. ஒரு பெண்ணைப் புணர்வதற்;குப் பெண்ணின் அனுமதி அவசியமில்லை, ஆணாக இருந்தால் அதுவே அங்கீகாரமாகிவிடும் என்றளவுக்கு, இந்து வழிபாட்டுக் கோட்பாடு நிஜ விளக்கத்தைக் கொடுக்கின்றது. அத்துடன் அழகான பெண் தனது பாலியல் வடிவத்தைக் கொண்டு, எதையும் சாதிக்க முடியும் என்ற விபச்சாரப் பண்பாடு, ஆணாதிக்கப் பெண்ணியல் கண்ணோட்டத்தில் நியாயப்படுத்தப்படுகின்றது. இதை நாம் சகித்துக் கொண்டு வாழமுடியுமா?

தேவகுருவாக இருக்க என்ன தகுதி வேண்டும்? மனு இதை அழகாகவே இந்து மனுதர்மத்தில் கூறுகின்றார்.

''ஸீத்ருகொ மதனாவஸம் ப்ரஜபேன்மனும்;

அயுதம் ஸோசிராதேவ வாக்பதே; ஸமதாமியாத்"

அதாவது ஓர் அழகிய பெண்ணின் பெண் உறுப்பைப் பார்த்துக் கொண்டு பத்தாயிரம் முறை மந்திரம் சொல்லுபவன் தேவகுருவுக்குச் சமமாவான் என்கிறது இந்து மதம். ஆணாதிக்க வக்கிரம் கொப்பளிக்கின்ற போது, எல்லா ஆணாதிக்கக் கூத்துகளுமே இந்து மத ஆன்மீகமாகும். விரும்பிய பலன்கள் கிடைக்க நிர்வாணமாக இரவில் தலைமயிரை அவிழ்த்து விட்டபடி, பதினாயிரம் முறை ஜெபம் செய்யவேண்டும் என்று இந்துமத ஸ்மிருதிகள் கூறுகின்றன. இவர்கள் தான் சாதியினதும், ஆணாதிக்கத்தினதும் தலைசிறந்த கொடுங்கோலராவர்.

நன்றி: www.tamilcircle.net

- தொடரும்.


3 comments:

Anonymous said...

Really good. People should think over it. Nice man

வால்பையன் said...

அப்படி போடு அருவாளை!

எல்லா மத்ததுக்கும் இதே மாதிரி ஆப்பு உண்டா, இல்லை நீங்க வேற எதவாது மதத்துக்கு ஆதரவாளரா?

மு.இரா said...

நான் மத எதிர்பாளன் அய்யா...

நன்றி வால்பையன்.

Post a Comment