Tuesday, May 26, 2009

தமிழ் இனப்படுகொலை அரங்கேறிய இடம்… சில படங்கள்!





மது ஈழத்து சொந்தங்கள் வாழ்ந்த, அவர்களின் இறுதி மூச்சு மிகக் கொடூரமாக அடக்கப்பட்ட இடத்தின் சில படங்கள். ஐநா பொதுச் செயலாளர் பான் கி மூனுன் ஹெலிகாப்டரில் சென்ற போது மீடியா எடுத்து வெளியிட்ட புகைப்படங்கள்…

இந்தப் பகுதியில்தான் ஆயிரக் கணக்கான உயிர்களை கேள்வி முறையின்றி கொன்றழித்தது இலங்கை ராணுவம். ஒரு பேரழிவின், மனித அவலத்தின் சாட்சியமாய் திகழ்கிறது இந்த இடம்.

இன்னும் சில தினங்களில் இந்த சுவடுகளே இல்லாத அளவுக்கு தங்கள் படுகொலைக்கான தடயங்களை துடைத்தழித்தும விடக்கூடும் இலங்கை. கடைசி படம் அப்படி துடைத்தழிக்கப்பட்ட ஒரு பகுதிதான்.

மற்ற பிரதேசங்களிலும் இது தொடரும். அதற்குத்தான் பேருதவி செய்ய நட்பு நாடுகள் தயாராக உள்ளார்களே… இனி எதையும் செய்வார்கள்!

இந்த கொடுமைகளையெல்லாம் நேரில் போய் பார்த்த பிறகும், அங்கு கனரக ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதற்கான அறிகுறி தெரியவில்லை என்று பான் கி மூன் கூறியிருப்பதை என்னவென்று சொல்வது!

நன்றி: http://www.envazhi.com/


1 comments:

Anonymous said...

???

Well, Ban Ki Moon did not see the use of heavy weaponry, fine. you have posted those pictures. So, when you see those pictures, you find the use of "kaNa raka aayuthangkaL" ? (Heavy weaponery)

Post a Comment